
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார். அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.
நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும், ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி ழுப்பினார். அத்தோடு விட்டபாடில்லை. கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகை யாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது....