Friday, December 4, 2015

உறுமீன் திரை விமர்சனம் -திமிங்கலத்தை காட்டி மிரட்றாய்ங்கப்பா!

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்!சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் (?) தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன், (பாபி சிம்ஹா) தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின் தனது பராக்கிரமங்களையும், துரோகி கருணாவை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி, அதை தன்னுடனே சேர்த்து புதைத்தபடி உயிரை மாய்த்துக் கொள்கிறான். மறுஜென்மம் துவங்குகிறது. எப்படியோ அந்த புத்தகம் அங்கும் வந்து சேர்கிறது....

போயஸ் தோட்டத்தின் புதிய இளவரசன்

போயஸ் தோட்டத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒருவர் கோலோச்சுவார். இப்போது கார்டனின் இளவரசன், விவேக் ஜெயராமன். சசிகலாவின் அண்ணியான இளவரசியின் மகன். 25 வயதாகும் விவேக் ஜெயராமன், போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார மட்டத்தில் `விவேக் ஜெயராமன்' என்ற பெயர் பயபக்தியுடன் உச்சரிக்கப்படுகிறது. `லக்ஸ்' திரையரங்கை நடத்திவரும் `ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி விவேக். `அங்கே மட்டும் அல்ல, கார்டனிலும் இவர்தான் முதன்மை செயல் அதிகாரி’ என்கிறார்கள்.காதில் சிறிய கம்மல், ஃபேஸ்புக்கில் அரட்டை, விலை உயர்ந்த டுகாட்டி பைக், ஏராளமான நண்பர்கள்... என விவேக்கின் உலகம் இந்தத் தலைமுறைக்கானது. இவை எல்லாம் 2014-ம் ஆண்டு...

உறுமீன் - இந்த உறுமீனை ஒருமுறை ருசிக்கலாம்

பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், மெட்ராஸ் கலையரசன் வில்லனாகவும் நடித்துள்ள படம் உறுமீன்.ஓடு மீன் ஓட உறுமீன் வருமென காத்திருக்குமாம் கொக்கு. இந்த வரிகளுக்கேற்ப தலைமுறைகள் கடந்தும் பழி வாங்கும் கதை தான் இப்படம்.இதில் ஜிகர்தண்டாவில் வில்லனாக மிரட்டி தேசிய விருது பெற்ற பாபி முழு நேர கதாநாயனாக நடித்துள்ளார். இரண்டு விதமான காலகட்டத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மெட்ராஸ் படத்தில் புரட்சிகர இளைஞனாக நடித்த கலையரசன் இதில் மிரட்டும் வில்லனாக நடித்து இந்த வருடத்தில் கவனிக்கப்படும் வில்லனாக கலக்கியுள்ளார்.கதாநாயகி ரேஷ்மி மேனன் வழக்கமான கதாநாயகிகளை போல பாடலுக்கும், சில காட்சிகளுக்கும் மட்டுமே வந்து போகிறார். இப்படத்தில் நடித்த போது தான் பாபிக்கும்,...

கருப்பட்டி சீனி மிட்டாய்

சிறு வயதில் நாம் சீனி மிட்டாய் சாப்பிட்டிருப்போம். தற்போது அது கிடைப்பது மிகவும் அரிது. அப்படி சிறு வயதில் சுவைத்த சீனி மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு பதிலாக, ஆரோக்கியத்தை வழங்கும் கருப்பட்டி சேர்த்து சீனி மிட்டாய் செய்தால், உடலுக்கு எவ்வித அபாயமும் ஏற்படாது.இங்கு கருப்பட்டி சீனி மிட்டாயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள்:இட்லி அரிசி - 1 கப்உளுத்தம் பருப்பு - 1/4 கப்எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவுகருப்பட்டி - 2 கப்ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்தண்ணீர் - 1 கப்செய்முறை:முதலில்...

சென்னை மக்களுக்கு உதவ 15 இளைஞர்கள் சேர்ந்து அமைத்துள்ள 'கன்ட்ரோல் ரூம்'

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருபவர்களுக்கு உதவி செய்ய 15 இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்கி பணியாற்றி வருகிறார்கள்.ஈவு, இரக்கமில்லாமல் பெய்த மற்றும் பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். பொது மக்களே சக மக்களுக்கு உணவு, தங்க இடம் அளித்து உதவி செய்து கொண்டிருக்கின்றனர்.அரசு அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கும் வரை பசியால் பொறுத்திருக்க முடியாது என்று சக மக்கள் உணவு சமைத்து பொட்டலங்கள் போட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருகிறார்கள்.இந்நிலையில் தான் ஃபேஸ்புக்கில் கண்ணில் பட்ட இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து...

செல்ஃபி எடுத்தபோது ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்கள் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பாலாற்று மேம்பாலம் அருகில் நின்று வெள்ளத்துடன் சேர்த்து தங்களை செல்ஃபி எடுத்த மூவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 4 மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பாலாற்று பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இளைஞர்கள் சிலர் அதை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக அதோடு, அதன் அருகே நின்று, செல்போனில் செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துதள்ளுகின்றனர்.இந்நிலையில் வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், விஜி மற்றும் பாரதி ஆகிய மூன்று மாணவர்கள் அப்பகுதியில் நின்று தங்கள் செல்போனில் செல்ஃபி...

ராமாவரத்தில் 'எம்.ஜி.ஆர். வீட்டில் கிராமபோன், பரிசுப் பொருட்கள் அனைத்தையும் வாரிசுருட்டிய வெள்ளம்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்தில் 20 அடியரத்துக்கு அடையாறு ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் வெள்ளம் வாரிச் சுருட்டு கொண்டுபோய்விட்டது.சென்னை புறநகரான ராமாவரத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் எம்.ஜி.ஆர் வசித்த வீடு உள்ளது. அங்கு காது கேளாத குழந்தைகளுக்கு பள்ளி ஒன்றும் நடத்தபட்டு வருகிறது.செம்பரம்பாக்கம் ஏற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க, அடையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் சென்னை நகரின் தென்பகுதியை அப்படியே மூழ்கடித்தது.சென்னை புறநகரான ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சுமார் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது. அங்கு இருந்த குழந்தைகள்...

5 கோடி நிவாரண நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னையை உலுக்கி எடுத்த கனமழையால் தலைநகரம் சென்னை தற்போது வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதல் அண்டை மாநிலங்கள் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.இளைய தளபதி விஜய் சென்னையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் 5 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மக்களின் அர்த்தியாவசியான பொருட்களுடன் இருப்பதாகவும் மக்களை அங்கே வந்து தங்குமாறு விஜய் ரசிகர்கள் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

சென்னை அழியப்போவதாக வாட்ஸ்சப்பில் பரவும் வதந்தி.. நம்பாதீர்கள் மக்களே!

மழை நின்றாலும் தூவானம் நிற்காத கதையாக, சென்னையே அழியப்போகிறது என்கிற வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. தற்போது சென்னைக்கு ஆபத்து ஏதும் இல்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம். இந்த தகவலை முடிந்த அளவுக்கு வெள்ள பாதிப்புள்ள மக்களிடம் பரப்பி அவர்களின் பீதியை குறையுங்கள்.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை நின்றுவிட்ட நிலையில், வாட்ஸ்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக ஒரு தகவல் மும்முரமாக பரப்பப்படுகிறது.எச்சரிக்கை... என்று ஆரம்பிக்கும் அந்த மெசேஜில், "நண்பர்களே! நீங்கள் சென்னையில் இருந்தாலோ, உங்கள் நண்பரோ, உறவினரோ இருந்தாலும் உடனே வெளியேற சொல்லுங்க, ஏன்னா அடுத்த 72 மணிநேரத்திற்க்கு இப்போ...

வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட ரமணன்!!!!

சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணனை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருக்கும் எஸ்.ஆர்.ரமணனின் வீடு, தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தியாகராய நகர் பகுதியில் புதன்கிழமை வெள்ளம் சூழந்தது. இதில் ரமணனும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் சிக்கிக் கொண்டனர்.இதையடுத்து உடனே ரமணன், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு உதவி கோர அவர்கள் விரைந்து வந்து ரமணன் குடும்பத்தினரையும் அந்த குடியிருப்பில் இருந்த பிற குடும்பங்களையும் மீட்டுச் சென்றுள்ளனர். இந்த விஷயம் இப்போது தான் வெளியில் வருகிறத...

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் மீட்டுள்ளனர்.டிசம்பர் மாதம் பிறந்ததும் பிறந்தது முதல் தேதியிலேயே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சென்னையில் வெள்ளப்பெருக்கு எடுத்தது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் கனெக்டிவிட்டி இல்லாததால் அங்கு சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்...

மழை வெள்ளத்தில் ஆவணங்கள் தொலைந்து விட்டதா? உடனே கூப்பிடுங்க 7667100100

மழை வெள்ளத்தில் சொத்துப்பத்திரங்கள் ஆவணங்களை தொலைத்தவர்கள் உடனடியாக 7667100100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்காக கால் சென்டரை அவர்கள் தொடங்கியுள்ளனர்.உயிரை மட்டும் விட்டு விட்டுவீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் கபளீகரம் செய்து கொண்டு போய்விட்டது மழை வெள்ளம். வண்டி, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றாலும், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வீட்டு சொத்து பத்திரங்கள் என ஆவணங்களை தொலைத்தவர்கள் அவற்றை எப்படி மீட்பது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கின்றனர். கழுத்தளவு வெள்ள நீரில் தவிப்புடன் வெளியேறும் மக்களிடம் மைக்கை நீட்டி அவர்களின் அவலங்களை வெளி உலகிற்கு ஊடகங்கள்...

இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பாகம் 2

 இந்திய திரையுலகில் அதிக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தராகதான் இருப்பார். கவிஞர் வாலியை நடிகராக்கியதும் அவர்தான். அந்த நடிகழ்வை வாலியே விவரிக்கிறார்."அடிப்படையில் நான் ஒரு நாடகக்காரன். நான் திருச்சியில நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன்.என்னோட நாடகத்துல மனோரமா எல்லாம் நடிச்சிருக்காங்க. நீங்க ஒண்ணு வச்சுக்குங்க. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞன் அடிப்படையில் ஒரு நடிகன். ஒருநாள் பாலசந்தர் எனக்கு போன் பண்ணி, நான் படம் எடுக்குறேன். அதுல நீங்க நடிக்கணும்னு சொன்னாரு. அடுத்த வாரம் போன் பண்ணுங்க நான் சொல்றேன்னு சொல்லிட்டேன். அடுத்த வாரம் அவரே போன் பண்ணினார். "உடனே நான், நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அதற்கு பாலசந்தர், என்னவோய் போன வாரம் கேட்டபோது...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்டநிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்தநாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில் தங்கள் நாட்டு மாணவர்களின்கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்குPISA-Programme for international students assessment என்று பெயர்.மற்ற நாடுகள் விருப்பப்பட்டால்...

மழை வெள்ளத்தால் தங்க வசதியில்லாத சென்னை வாழ் சகோதர சகோதரிகளே

நடிகர் அஜித் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட் அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் தொண்டு நிறுவனம் திருமணம் மண்டபம் அவரது இல்லம் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதறகு உபயோகித்து கொள்ளும்படி நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். உணவு, உடை, சாப்பாடு பராமரிப்பு அவரே செய்கிறார் ...

வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டார்

சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். கண்ணாடி அணிந்து கைப்பையுடன் அவர் படகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் தத்தளித்த 62 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கத...