
தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை… ஜென்ம பகை… என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி. மீனின் ருசி அபாரம்!சரித்திர காலத்தில் துவங்குகிறது கதை. கூடவே இருந்து குழி பறிக்கும் கருணாவால் (?) தண்டனைக்குள்ளாகும் புரட்சி வீரன், (பாபி சிம்ஹா) தூக்கு மேடையிலிருந்து தப்பி ஓடுகிறான். பின் தனது பராக்கிரமங்களையும், துரோகி கருணாவை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி, அதை தன்னுடனே சேர்த்து புதைத்தபடி உயிரை மாய்த்துக் கொள்கிறான். மறுஜென்மம் துவங்குகிறது. எப்படியோ அந்த புத்தகம் அங்கும் வந்து சேர்கிறது....