Wednesday, December 9, 2015

வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை: நாசா விளக்கம்

 வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்று சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின் இ - மெயில் கடிதத்திற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டு இருந்தது.சென்னையில் நவம்பர் 21, 22ல் மிகக் கன மழை பெய்யும் என, அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது. மற்றொரு தகவலில் டிசம்பர் 7, 8ல் சென்னையை சுற்றி மிகக் கன மழை பெய்து, சென்னை நகரமே மூழ்கும் அபாயம் உள்ளது என, நாசா எச்சரித்துள்ளது என்ற வதந்தி பரவியது. இந்த தகவல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்...

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும். தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர்....

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா: கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு."அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச்...

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். வௌவால் வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும்...

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று. அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும். ஆகவே...

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒருநபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கி விடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில்மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.எவ்வாறு செய்வது:ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்...

ரஜினி வெள்ள நிவாரணத்திற்கு 10 கோடி கொடுத்தாரா? கசிந்தது உண்மை!!!

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திரையுலகினர் பலரும் தாமாகவே முன்வந்து பெரும்உதவிகள் செய்துகொண்டிருக்கின்றனர். வெள்ளபாதிப்பின் தொடக்கத்திலேயே நடிகர்சங்கம் சகநடிகர்களிடம் நிதி திரட்டியது. சூர்யா குடும்பம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நிதி கொடுத்தார்கள். அப்போது நடிகர் ரஜினியும் தன் பங்காக பத்துஇலட்சம் ரூபாயைக் கொடுத்தார். அதன்பின் அவர் கோவாவில் நடக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் இன்னும் சென்னைக்கு வரவில்லை. அதற்குள் அவர் வெள்ளநிவாரணநிதியாக பத்துகோடி கொடுத்தார் என்கிற செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக ரஜினி தரப்பில் கேட்டபோது, அந்தச் செய்தி உண்மையில்லை என்று சொல்கிறார்கள்....

அமுல் பேபி கூட அம்மா ஸ்டிக்கரை எப்படி கிண்டல் செய்திருக்கு பாருங்க!

அமுல் நிறுவனம் அதிமுகவினர் நிவாரணப் பொருட்கள் மீது அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டியதை கிண்டல் செய்து கார்டூன் வெளியிட்டுள்ளது. வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் 90 சதவீதம் கூடுதல் மழை பெய்யும் என்று அக்டோபர் மாதம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 130 சதவீதம் மழை பெய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நல் உள்ளம் படைத்தவர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் தட்டிப் பறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில் பங்கு கேட்டு அதிமுகவினர் அடாவடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் அமுல் நிறுவனம்...

அடுப்பில்லாமலும் சமையல் செய்யலாம்

 பேரீச்சைச் சாறு:பேரிச்சம் பழத்தைக் கழுவி, குறைந்தது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், பின்னர் பிசைந்து வடி கட்டிக் கொள்ள வேண்டும். அளவு: 200 மி.லி. தண்ணீருக்கு (ஒரு டம்ளர்) 3 பேரீச்சம்பழம்.எலுமிச்சை பானகம்:ஓர் எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 டம்ளர் தண்ணீர் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் 50 கிராம் சேர்த்து அத்துடன் வாசனைக்காக 4 ஏலக்காய்களைத் தூள் செய்து போட்டுக் கொள்ளலாம்.அவல் பாயசம்:அவலைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, கனிந்த மொந்தன்பழம் சேர்த்துப் பிசைந்து தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். சிறிது ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சை சேர்க்கலாம். அளவு: 5 பேர்க்கு அவல் 100 கிராம், தேங்காய்1, மொந்தன் பழம் 3, சர்க்கரை 50 கிராம், முந்திரிப் பருப்பு 10, காய்ந்த திராட்சை 15, ஏலக்காய் 5.கேரட் கீர்:கேரட் துருவலை கிரைண்டர் அல்லது மிக்ஸியில்...

எந்திரன் 2 வில்லன் இவரா?

ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கின்றதுஇப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மோதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த தகவலின் படி பாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.கத்தி படத்தில் விஜய்யுடன் மோதிய நீல்நிதின் முகேஷ் தான் இதில் இரண்டாவது வில்லனா...

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம்...

ஒட்றா ரெண்டாவது வார போஸ்ட்டர…! பாபி சிம்ஹா படத்துக்கு மவுசு!

கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை. ஜனங்களும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குய்யோ முய்யோ… அந்த நேரத்தில்தான் ‘உறுமீன்’ ரிலீஸ். கடந்த 4 ந் தேதி வெளியாவதாக இருந்த ரஜினி முருகன், ஈட்டி ஆகிய இரு படங்களும் ‘ஆளை விட்றா மழைப்பயலே’ என்று அடுத்தடுத்த தேதிகளுக்கு ஓடிவிட, வேறு வழியில்லாமல் திரைக்கு வந்தது உறுமீன். “இவ்ளோ மழையடிக்குது. உங்களுக்கு அவ்வளவு தைரியமா? ஜனங்களோட கஷ்டத்தை நினைச்சு பார்த்தீங்களா?” என்று நேருக்கு நேர் சுடு சொல் வீசிய அத்தனை கேள்விகளையும் மிக நாசுக்காக தவிர்த்துவிட்டு ரிலீஸ் வேலையை பார்த்தது படத்தை வெளியிட்ட தேனான்டாள் பிலிம்ஸ்.“நாங்க இந்த மழையை எதிர்பார்க்கல. முன்னாடியே வெளிநாட்டு ரிலீசுக்கான...