Thursday, December 24, 2015

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை

வழக்கமாக சிகரெட் புகைப்பவராக இருப்பினும் சாப்பிடவுடன் சிகரட் பிடித்தால் சாதாரண நேரங்களில் புகைப்பதை விட மிகப் பெரிய கெடுதல் ஏற்படும்.


சாப்பாட்டின் இறுதியில் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) உருவாகும். எனவே சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன் அல்லது பின் பழங்கள் சாப்பிடும் பழக்கமே உகந்தது.


சாப்பிட்டவுடன் தேநீர் அருந்துதல் கெடுதியானது. ஏனெனில் தேயிலைத் தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவிலுள்ள புரதச்சத்தினைக் கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


சாப்பிட்ட உடன் சிலருக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. குளிக்கும் போது, கை, கால், உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரைப்பைக்கு செரிமானத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் குறையும் நிலை ஏற்படும்.


மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக்கூடாது. உணவுக்குப்பின் குறைந்தது அரைமணி நேரமாவது கழிந்த பிறகே உறங்கச் செல்லவேண்டும்.

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

 எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.

மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!

அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!

அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.

எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.

ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.

சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!

'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,

“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.

அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!

பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

சனி பகவான் பற்றி அறிந்துக் கொள்வோம்

தந்தை     :       சூரியன்
தாய்             :       சாயா தேவி
உரிய பால்     :       அலிக் கிரகம்.
உரிய நிறம்     :       கருமை.
உரிய இனம்     :       சூத்திர இனம்.
உரிய வடிவம்     :       குள்ள உயரம்.
உரிய அவயம்     :       தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம்     :       இரும்பு.
உரிய மொழி     :       அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம்     :       நீலம்.
உரிய ஆடை     :       கறுப்பு.
உரிய மலர்     :       கருங்குவளை.
உரிய தூபம்     :       கருங்காலி.
உரிய வாகனம்     :       காகம், எருமை.
உரிய சமித்து     :       வன்னி.
உரிய சுவை     :       கைப்பு.
உரிய தான்யம்     :       எள்.
உரிய பஞ்ச பூதம்     :       ஆகாயம்.
உரிய நாடி     :       வாத நாடி.
உரிய திக்கு     :       மேற்கு.
உரிய அதி தேவதை     :       யமன், சாஸ்தா.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் )     :       உபயக் கோள்.
உரிய குணம்     :       தாமசம்.
உரிய ஆசன வடிவம்     :       வில்.
உரிய தேசம்     :       செளராஷ்டிரம்.
நட்புப் பெற்ற கோள்கள்     :       புதன், சுக்கிரன், இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள்     :       சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள்     :       குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு     :       ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம்     :       பத்தொன்பது ஆண்டுகள்.
சனியின் மறைவு ஸ்தானம்     :       லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு     :       ரிஷபம், மிதுனம்.
பகை வீடு     :       கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம்     :       மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம்     :       மேஷம்.
உச்சம் பெற்ற இடம்     :       துலாம்.
மூலதிரி கோணம்     :       கும்பம்.
உரிய உப கிரகம்     :       குளிகன்.
உரிய திசை     :       மேற்கு
மனைவியர்     :       வேஷ்டா, மந்தா, நீலா
மகன்     :       குளிகன்
சகோதிரர்கள்     :       யமன்
வேறு பெயர்கள்     :       சனீஸ்வரன், ஆயுள்காரகன், நீதிமான்
உரிய காரகத்துவம்     :       ஆயுள் காரகன்.

சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவர் தான் இந்த சனி பகவான். இவர் தோற்றத்தில் குள்ளமானவர். அறிவியல் கூற்றுப் படி, சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள். வியாழனுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு சுமார் 73 ஆயிரம் மைல். பூமிக்கும் சனிக்கும் உள்ள தூரம் 75 கோடி மைலாகும். இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக 1610 பார்த்தார். (குறிப்பு: இந்து மதத்தில் அதற்கு பல யுகங்களுக்கு முன்பே சனியைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளது வியப்பு)

சனிக்கு ஒருகால் கிடையாது என்பார்கள். அவர் நொண்டியாக இருக்கும் காரணத்தினால் அவர் மெதுவாக வலம் வருகிறார். இதனால் இவரை “மந்தன்” என்றும் கூறுவார்கள். சனி நொண்டியானதற்கு ஒரு கதை சொல்வார்கள். இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்கமுடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.

இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவா30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

சனி பகவான், நீலமணித் தேரில் நீலப் பட்டுத் துணியுடன் காற்றில் பறக்க, தேரை எட்டு கரு நிறக் கழுகுகள் இழுத்துக் கொண்டு வர வான்வெளியில் பவனி வருகிறார் என்பது ஐதீகம். இருகரம் உடைய இவர் வலது கரத்தில் தண்டம் ஏந்தியிருப்பார். இடது கரத்தால் வரத முத்திரை காட்டுவார். தாமரை மலர் போன்ற பீடத்தில், காக்கை வாகனத்தில் அமர்ந்திருந்திருப்பார். சனி பகவானின் மகனாகிய குளிகன் பெயரில் தினமும் ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் எது செய்தாலும் விருத்தியாகும் எனவே அந்நேரத்தில் நல்லதே செய்ய வேண்டும்.

பூலோகம்" - அகிலம் போற்றும் தரமான தமிழ் படம்! லாஜிக் குறைகள் இருந்தாலும்..

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், புதியவர் என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி - த்ரிஷா ஜோடி நடிக்க, வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பூலோகம் .

பூலோகம் படத்தில் பூலோகமாகவே நடித்திருக்கும் ஜெயம் ரவி இதில், குத்துசண்டை வீரர் என்பதும், பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தன் சிஷ்யர் புதியவர் என்.கல்யாண கிருஷ்ணனுக்காக இப்படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது!

வட சென்னையின் சந்து, பொந்துகளில் கூட புகழ்வாய்ந்த பாக்ஸிங் எனும் குத்துசண்டை விளையாட்டில் கலக்கும் வட சென்னை வாசியான ஜெயம்ரவிக்கு ஒரே ஒரு ஆசை. பாக்ஸரான தன் அப்பாவை பாக்ஸிங்கில் சாக காரணமான பரம்பரை வீரனை பாக்ஸிங்ரிங்கில் வைத்து தீர்த்து கட்டவேண்டும் என்பது தான் அது. ரவியின் ஆசைப்படியே ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட நாட்டு வைத்தியர் பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தியும், விதவிதமான விளம்பரங்கள் மூலமும் பணம் பண்ணுகிறார் பிரபல சேனல் அதிபரான பிரகாஷ்ராஜ். ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி, இனி குத்துசண்டை வேண்டாம் என விலகி ஒதுங்க, அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ், அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.

பிரகாஷ்ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி, அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க, அதில் வெகுண்டெழும் - பிரகாஷ்ராஜ், ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில் விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன், ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி, பூலோகத்தை வித்தியாசமாக, விறுவிறுப்பாக படைத்திருக்கின்றனர் பூலோகம் படக்குழுவினர்.

ஜெயம் ரவி, பூலோகம் எனும் இளம் குத்துச் சண்டை வீரராக கச்சிதமாக நடித்திருக்கிறார். குத்துசண்டை காட்சிகளில் நிஜ பாக்ஸிங் வீரர்களே தோத்துப் போகுமளவிற்கு ரிஸ்க் எடுத்திருக்கும் ரவி, அமெரிக்காவில் இருந்து ஆஜானுபாகுவாக வந்த பாக்ஸர் ஸ்டீபன் ஜார்ஜூக்கு பெண் உடை கொடுத்து செய்யும் குறும்பு, த்ரிஷாவை பிரித்து மேய துணியும் துணிச்சல், இப்படி தகுதியே இல்லாதவனை செலக்ட் செய்து அனுப்புறதால தான் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு பித்தளை கப் கூட வாங்குறதில்லை... என மீடியாக்கள் முன் பெங்கும் ஆவேசம்! தன் தந்தை சாவுக்கு காரணமான பரம்பரையை பழி தீர்த்து விட்டு, பின் பரிதவிப்பது... என சகலத்திலும் சக்கைப்போடு போட்டிருக்கிறார்.

நாயகி த்ரிஷா, லோக்கல் ஹோட்டல் அதிபராக செமயாய், மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் ஜெயம் ரவியின் உருவத்தை உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு பண்ணும் கிளாமர் கலாட்டா செம கலர்புல்.

பிரகாஷ் ராஜ், வில்லதனத்தில் வழக்கம் போலவே அமைதியாக, அசால்ட்டாக தன் இயல்பான நடிப்பை வழங்கி, பேஷ் , பேஷ் வாங்கியிருகிறார். அதிலும், என்ன பூலோகம் எம்ஜிஆர் மாதிரி பேசுறே... என நக்கலாக பேசுவதும் அதற்கு, ரவி நீ... நம்பியார் மாதிரி பேசறது நியாயமா ? எனக் கேட்பதும் தியேட்டரில் கரகோஷத்தை ஏற்படுத்துகிறது.

பொன்வண்ணனும், தன் பங்கிற்கு, ரவியின் குருநாதராக பொளந்து கட்டியிருக்கிரார். க்ளைமாக்ஸில் வரும் அந்த ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸூம் கச்சிதம்! பாலா சிங், சண்முகராஜன், ரவி மரியா, சாம்ஸ், வட இந்திய சாம்பியன் தயாள், உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஸ்டீபன் ஜார்ஜ்.... உள்ளிட்டோர் ஜெயம் ரவி - த்ரிஷா - பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் நல் நடிப்பு மாதிரியே, எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் பளிச் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில், சாவுக்குத்துப்பாடல், நாட்டு வைத்தியப் பாடல், மயானக் கொல்லைப்பாடல்... என ரகத்திற்கு ஒரு ராகத்தில் அசத்தியிருக்கிறார்.

"ஒரு வரலாறை வளரவிடாமல் தடுக்காதீங்க... , பூலோகம், அவன், சொன்ன மாதிரி தோத்தவனா உன்னை பார்க்கவும் முடிய... துரோகியா என்னால வாழவும் முடியலை... என்பது உள்ளிட்ட எஸ்.பி. ஜனநாதனின் நறுக் - சுருக் வசனம்... உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், என்.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து, இயக்கத்தில் பூலோகம் படத்தை தமிழ் படவுலகம் மற்றுமின்றி இந்திய சினிமா உலகமே போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையல்ல!

ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும், நிச்சயம் , பூலோகம்" - அகிலம் போற்றும் தரமான தமிழ் படம்!

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?

எப்படித் தேர்ந்தெடுப்பது?

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது;
அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை;
நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

*அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சி* என்ன விலை மெஷினே?

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.
ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன.
4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள்.

செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, ‘சுவிட்ச் ஆன்’ செய்ய வேண்டும். துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்- துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ? குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்றாலோ? செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.
* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

அதிர்ச்சி* பயன்படுத்துவது எப்படி?

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ணீரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு ‘ஃபஸ்ஸி லாஜிக்’ என்று பெயர்.

மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு ‘நியூரோ ஃபஸ்ஸி’ என்று பெயர்.

இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

எந்திரன் 2.Oவில் வெடித்ததா பிரச்சனை? சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இணையும் மூன்றாவது படம் எந்திரன் 2.O. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கவுள்ளார்.

மேலும், ஷங்கரின் ஆதர்ஸ இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் ஈழத்துக் கலைஞர்கள் மூவருக்கு வாய்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியானது.

ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்றில் ஐங்கரன் கருணாமூர்த்தி ஈழத்து கலைஞர்களை எப்படியாவது இந்த படத்தில் பாட வைத்து விட வேண்டும் என முயற்சி செய்ததாகவும், லைகா குழுமத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஒரு செய்தி Lyca Production என்ற பெயரிலேயே ஊடகங்களுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து லங்காசிறியிலிருந்து எந்திரன் 2.O தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டது.

இதற்கு சுபாஷ்கரன் பதிலளிக்கையில், இது லைகா குழுமத்தின் போட்டி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வதந்தி செய்தியாகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் யாரைப் பாட வைக்க வேண்டும் என்பதை இயக்குனர் ஷங்கர் கூட முடிவு செய்ய முடியாது. அப்படியிருக்க நான் முடிவெடுக்க வாய்ப்பேயில்லை. நான் தயாரிப்பாளர் மட்டுமே.

ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் ஈழத்துக்கலைஞர்களை இப்படத்தில் பாடவைக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் எனக்கு 100 சதவிகிதம் சம்மதம் தான். அதை மகிழ்ச்சியோடு நாங்களே அறிவிப்போம் என்று இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் இப்படத்தைப் பற்றி லைகா குழுமத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி பேசுகையில், லைகா நிறுவனம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம், சிரஞ்சீவி நடிக்கும் கத்தி தெலுங்கு ரீமேக், அக்ஷய்குமார் நடிக்கும் கத்தி ஹிந்தி ரீமேக், ஜிவி பிரகாஷ் படம், விசாரணை உள்ளிட்ட பல படங்களின் மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி முதலீடு செய்துள்ளோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத போட்டி நிறுவனங்கள் தான் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். கத்தி படத்திலும் இதே மாதிரியாக பல தடைகளை எங்களுக்கு உருவாக்கினர் என்று கூறினார்.

இப்படத்தின் தலைப்பு பற்றி நிலவும் குழப்பத்திற்கு, எந்திரன் படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம். இதன் பெயர் 2.O(ஓ) தான். முதல் பாகத்தை தயாரித்தது வேறு நிறுவனம் என்பதால் நிலவும் சில சட்டசிக்கலால் நாங்கள் எந்திரன் என்ற பெயரை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த செய்தியில் கூறப்பட்ட MC Sai, Arjun ஆகிய ஈழத்துக் கலைஞர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, Lyca Productionலிருந்தோ, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலிருந்தோ தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, இந்த செய்தியை ஊடகங்களிலிருந்து மட்டும்தான் நாங்கள் படித்தோம் என்று கூறியுள்ளனர்.

பசங்க 2 அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஹைக்கூ கவிதை!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது அரிது. அதிலும் குழந்தைகளின் பிரச்சனைகளை கூறும் படங்கள் அரிதிலும் அரிது. அந்த வகையில் பசங்க, மெரீனா படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் குழந்தைகளுக்கான ஒரு புது உலகத்தை இந்த பசங்க-2 படத்தின் மூலம் படைத்துள்ளார்.

படத்திற்கு கூடுதல் பலமாக முன்னணி நடிகர் சூர்யாவே இப்படத்தை தயாரித்து நடித்திருப்பது படத்திற்கு எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.

கதைக்களம்

குறும்புத்தனத்திற்கு உருவம் கொடுத்தார்ப்போல் இரு குழந்தைகள். எப்படி நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியாதோ அதுபோல் குறும்பு செய்யாமல் இருக்கவே முடியாது, ஒரு கட்டத்தில் இவர்களின் குறும்பின் காரணமாக இவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், இதனாலயே பல பள்ளிகள், பல அப்பார்ட்மெண்ட்டுகள் மாற நேர்கிறது! இதன் இடையில் குழந்தைகள் மன நல மருத்துவரான சூர்யா மூலம் இவர்களுக்கு ADHD (Attention deficit hyperactivity disorder ) இருக்கிறது என தெரியவருகிறது, இதன் பின் அக்குழந்தைகளுக்கு என்னவானது என்பது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஹைக்கூவான மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி, இரு குழந்தைகளுக்கு பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. குறும்பின் உச்சத்தை காட்டும் போதும் ரசிக்கவைக்கும் இவர்கள் , தங்களுக்கே உரிய பாணியில் தங்கள் சோகத்தை வெளிக்காட்டும் போது கண்களை குளமாக்குகிறார்கள். சூர்யாவை தவிர இந்த கதாப்பாத்திரத்தை யாரும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவிற்கு தன் கைதேர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

டீச்சராக வரும் அமலா பால் வைஷ்ணவியின் அம்மாவாக வரும் பிந்து மாதவி இவர்கள் இது போன்ற கதையில் நடிக்க சம்மதித்தற்காகவே பாராட்டலாம். இவர்களை தவிர முனீஷ்காந்த், கார்த்திக், வித்யா எல்லோரும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் முன்னோடத்தை பார்த்து விட்டு இது ஏதோ சிறுவர்களுக்கான படம் என நினைத்து விட வேண்டாம் இப்படம் கட்டாயம் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.

பல வெடிகுண்டு சத்தங்களுக்கு இடையே அழகான மெல்லிசைப்போல் வந்திருக்கும் படம். இக்கால குழந்தைகளின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் மீது பெற்றோர்களால் திணிக்கப்படும் பல சமுதாய பிரச்சனைகளையும் கண்ணாடி போல் பிரதிபலித்திருக்கிறது. தனது முதல் படமான பசங்க படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பாண்டிராஜ் இப்படத்தின் மூலம் அழுத்தமாக முத்திரை பதித்திருக்கிறார்.

க்ளாப்ஸ்:

படத்தின் கரு, வசனங்கள், நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு. ஒரு படத்திற்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்தளவிற்கு தன் பங்கை தெளிவாக கொடுத்த தொழில்நுட்ப கலைஞர்கள்.

சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இதுப்போல் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து தயாரிப்பது தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆரோக்கியம்.

பல்ப்ஸ்:

தாரே ஜமின் பர் படத்தில் வரும் காட்சிகளை தவிர்க்க முடியவில்லை, ஒரு சில இடங்களில். அது மட்டுமின்றி குழந்தைகள் சில இடங்களில் கவுண்டர் கொடுப்பது சொல்லிக்கொடுத்து நடித்தது தெரிகின்றது. மற்றப்படி ஏதும் இல்லை.

மொத்ததில் பசங்க 2 அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஹைக்கூ கவிதை!

மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை


1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்


 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு
 நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

விஸ்வரூபம்-2 ரிலிஸ் செய்தி- ரசிகர்கள் உற்சாகம்

கமல் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் விஸ்வரூபம். இப்படம் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து திரையரங்கு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் படம் வெளிவராமலேயே இருந்து வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என கூறப்படுகின்றது.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்
 கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள
 வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
 கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த
 கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
 பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
 தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
 ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
 ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
 என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
 காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
 மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
 சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
 அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
 கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
 செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
 எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
 போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
 செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
 எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
 ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
 எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
 அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
தை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும்
 காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த
 உடம்பை புண்ணியமாக்க; மீதி இரண்டு சொட்டு உங்கள்
 உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
 இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
 போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக
 எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
 ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
 அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
 போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம்
 இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில்
 சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய
 நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
 கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார்
 சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
 இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
 எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில்
 ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
 சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
 மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
 அது மிகையாகது..

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
 கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட
 லைட்னிங் அரெஸ்டர்ஸ்..

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
 இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
 இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
 கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
 எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும்
 ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர்..

இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
 சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. சில கோயில்களில்
 இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
 எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற
 மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

ஜெயம் ரவியின் “‘மூவுலகம்’ போற்றும் ‘பூலோகம்!”

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்க, த்ரிஷா அவரது ஜோடியாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படமே ‘பூலோகம்’ .

பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் கோலோச்சி வரும் வட சென்னை பகுதிவாசி ஜெயம்ரவி. பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி பணம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ்., ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி., இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்க., அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.

பிரகாஷ் ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி., அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க., அதில் வெகுண்டெழும் – பிரகாஷ்ராஜ்., ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில், விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா ? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன்., ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி பூலோகத்தை புதுமைலோகமாக படைத்திருக்கின்றனர். பலே பலே!

ஜெயம் ரவி, இளம் குத்துச் சண்டை வீரராக கச்சிதமாக நடித்திருக்கிறார். குத்துசண்டை காட்சிகளில் நிஜ பாக்ஸிங் வீரர்களே தோத்துப் போகுமளவிற்கு ரிஸ்க் எடுத்திருக்கும் ரவிக்கு நிச்சயம் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆகவேண்டும்!

த்ரிஷா, லோக்கல் ஹோட்டல் அதிபராக செம கலக்கல்.

பிரகாஷ்ராஜ் , சைலண்ட் வில்லதனத்தில் வழக்கம் போலவே சக்ஸஸ்புல் நடிப்பை வழங்கி சபாஷ் வாங்கி விடுகிறார்.

பொன்வண்ணனும் , தன் பங்கிற்கு., ரவியின் குருநாதராக பொலந்து கட்டியிருக்கிரார். க்ளைமாக்ஸில் வரும் அந்த ஹாலிவுட் பாக்ஸரும் கச்சிதம்!

ஜெயம் ரவி – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் நல் நடிப்பு மாதிரியே., S.R. சதீஷ்குமாரின் ஒவிய ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இனிய இசை , S.P. ஜனநாதனின் ‘நறுக்’வசனம் … உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்., N.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து , இயக்கத்தில் பூலோகம் படத்தை மூவுலகமும் போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையல்ல!

நிச்சயம் , “‘மூவுலகம்’ போற்றும் ‘பூலோகம்!” 

எட்டமுடியாத இடத்தில் 'மன்னாதி மன்னன்' எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவை உலக அரங்கமே திரும்பிப் பார்ப்பதற்கும், திரும்பிப் பார்த்ததற்கும் காரணமானவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் தான். தன் நடிப்பால் உலகையே வியக்க வைத்தவர் சிவாஜி. தனது அழகான சிரிப்பால் தமிழக சிம்மாசனத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் சிம்மாசனத்தையும் இன்றளவும் ஆட்சி செய்து வருபவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்., தான்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் பிறந்து, 24 டிசம்பர் 1987ம் நாள் இயற்கை எய்திய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சாதாரண மனிதர்களால் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்று. 1936ல் சதிலீலாவதி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தனது திரை வாழ்வை தொடங்கிய ராமச்சந்திரன், பின்னர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.

ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, மன்னாதி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைபெண், அன்பே வா என அவர் நடித்த படங்கள் எல்லாமே சினிமா உள்ளவரை அழியாது நிற்கும் அளவிற்கு இன்றும் சின்னத்திரைகளிலும், சில வெள்ளித்திரைகளிலும் ஹவுஸ்ஃபுல்லாகி ஓடுவது எம்.ஜி.ஆர் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கே உரிய மேஜிக்.

தனது வாழ்நாளில் மொத்தம் 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி, நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டார். 'வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லை நான் நாடோடி' என்று சவால் விட்டே அந்த படத்தை அவர் வெளியிட்டு வெற்றியும் பெற்றது இன்றளவும் தமிழக மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக விளங்குகிறார்.

1977 முதல் 1987 வரை (1984-1985 தவிர்த்து) தமிழக முதல்வராக தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த ஒரே தமிழக முதலமைச்சரும் அவரே. தனது படங்களில் இடம்பெறும் தத்துவ பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவமே அவரது அரசியல் செல்வாக்கையும் மக்கள் செல்வாக்கையும் அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழ்நாட்டில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று எத்தனை திறமை வாய்ந்த நடிகர்கள் வந்தாலும் எம்.ஜி. ஆரின் சிம்மாசனம் என்றுமே அவருக்காகவே காத்திருக்கும் என்பதே உண்மை.

எம்.ஜி. ராமச்சந்திரனின் 28வது நினைவு தினமான இன்று தமிழ் திரையுலகமே தனது மூத்த நடிகருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறது.

பீப் பாடல் விவகாரத்தில் கமலை சீண்டிப்பார்த்த ராதிகா

பீப் பாடலால் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபப்பட்டு, பின் அவை சர்ச்சைக்கு ஆனது தான் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று ராதிகா ரசிகர்களுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் பேசினார். அப்போது சிம்புவிற்கு எதிராக ஒருவர் கருத்து தெர்வித்தார்.

உடனே ராதிகா, நேத்து ராத்திரி அம்மா என்ற பாடலை கூட குழந்தைகள் பாடுகிறார்கள், அதை என்னவென்று சொல்வது என கேட்டார். இது கமல் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்

வங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன் பல இடங்களுக்கு மாற்றலாகி செல்வது இவர்களது குடும்பத்தின் வழக்கமாகிவிடுகிறது.

இந்நிலையில், தாம்பரம் அருகில் இருக்கும் பள்ளியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்கிறார் முனீஸ்காந்த். அந்த குடியிருப்புக்கே கார்த்திக் குமாரும் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர்கள் குடிவரும் அதே அபார்ட்மெண்டில் குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக இருக்கும் சூர்யா, தனது மனைவி அமலாபால் மற்றும் குழந்தைகள் இருவருடனும் வசித்து வருகிறார்.

வெவ்வேறு இடங்களில் சுட்டித்தனம் செய்துகொண்டிருந்த குழந்தைகள் ஒரே அபார்ட்மெண்டுக்கு வந்ததும் நண்பர்களாகிறார்கள். இங்கு இவர்களது சுட்டித்தனம் இன்னும் அதிகமாகிறது. இதனால், அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரும் அவர்களை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், முனீஸ்காந்தும், கார்த்திக் குமாரும் தங்களது குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.

இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிந்ததும், டாக்டரான தான் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து கூறுகிறேன் என்று முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் இருவரிடமும் கூறுகிறார். ஆனால், சூர்யாவின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்காமல், குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஹாஸ்டலிலும் தங்களது சுட்டித்தனத்தால் அங்கிருந்து தப்பித்து, தங்களது வீடுகளுக்கே வருகிறார்கள் குழந்தைகள்.

பின்னர் சூர்யாவுடன் அந்த குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில், அந்த குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை எப்படி வெளிக்கொண்டுவந்தார்? குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி எப்படி சரியானது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் பேபி வைஷ்ணவி, நயனா, நிஜேஷ், அபிமன் ஆகிய குழந்தைகளே நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கேமரா முன் எந்தவித பயமுமில்லாமல், பல படங்கள் நடித்தவர்கள்போல் மிகவும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, முனீஸ்காந்த்-கார்த்திக் குமார் ஆகியோரின் பிள்ளைகளாக வருபவர்கள் குழந்தைகளுக்குண்டான சுட்டித்தனத்துடன் நடித்து அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

முந்தைய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த முனீஸ்காந்த், இந்த படத்தில் கோட் சூட்டுடன் ஒரு உயரதிகாரியாகவும், அதேநேரத்தில் பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். பெரிய அதிகாரியாக இருந்தும், சிறுசிறு பொருட்களை திருடும்போது காமெடியில் ரசிக்க வைக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் வித்யா பிரதீப் அழகாக இருக்கிறார். ஒரு குழந்தைக்கு அம்மாவாக பாசம் காட்டுவதிலும், அவர்களை பிரியும் நேரத்தில் கண்ணீர் விடுவதுமாக நடிப்பில் அழுத்தம் பதித்திருக்கிறார்.

அதேபோல், கார்த்திக் குமார் - பிந்து மாதவி ஆகியோரும் இளம் தம்பதிகளாக நம் மனதில் அழகாக பதிகிறார்கள். இவர்களுடைய நடிப்பும் மெச்சும்படியாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு வரும் சூர்யா, மனநல மருத்துவராகவும், குழந்தைகளை கவரும்படியும் அழகாக நடித்திருக்கிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், இந்த படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதேநேரத்தில் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறியிருக்கிறார் என்பது திரையில் அழகாக பளிச்சிடுகிறது. இவருக்கு மனைவியாக வரும் அமலாபாலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசிரியராக வரும் இவர் குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்கும்விதம் ரசிக்க வைக்கிறது.

முழுக்க முழுக்க பசங்களை வைத்து ஒரு படத்தை இயக்குவது என்பது பாண்டிராஜூக்கு ஒன்றும் புதிதல்ல. இந்த படத்திலும் தான் ஒரு திறமையான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதிகமாக சேட்டை செய்யும் குழந்தைகள் நோயாளிகள் அல்ல... அவர்களுக்குள்ளும் நிறைய திறமைகள் இருக்கின்றன. அவற்றை பெற்றோர்கள் சரியான முறையில் கண்டறிந்து, அவர்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். மாறாக, அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார். இன்றைய நகரத்து குழந்தைகளின் உலகம், அவர்கள் பயிலும் கல்வி முறை பற்றியும், அதில் எந்த கல்வி முறை சிறந்தது என்பது பற்றியும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கான ஒரு அடையாளமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அளவான கதாபாத்திரங்கள், அழுத்தமான வசனங்கள் என படத்தை அழகாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

கதைக்கு பக்கபலமாக பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. இவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கச்சிதமாக இருக்கின்றன. ஆரோல் கொரெல்லி இசையில் மென்மையான பின்னணி இசை கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களும் ரசிக்கும்விதமாக இருக்கின்றன.

மொத்தத்தில் ‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.

தொப்பை குறைய இயற்கை வழிகள்..!

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் .

பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்

பூலோகம் - திரை விமர்சனம்

தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியுள்ளது.

எம்.குமரன் வெற்றிக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குனர் கல்யான் இயக்கத்தில் பூலோகம் படத்தின் மூலம் பாக்ஸிங் உறையை கையில் எடுத்து மாட்டியுள்ளார் ஜெயம் ரவி.

கதைக்களம்

வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஒரு சண்டை வெள்ளைக்காரனுடன் கிளைமேக்ஸில் மோதி முடிகிறது இது தான் படத்தின் ஒன் லைன். வட சென்னையில் இருக்கும் இரண்டு பரம்பரைகளுக்குள் காலம் காலமாக பாக்ஸிங் சண்டை தொடர்கிறது.

இதில் ஜெயம் ரவி அப்பா எதிர் பரம்பரை ஆள் ஒருவருடன் மோதி தோற்று அவமானத்தால் தூக்கு மாட்டி இறக்கிறார். இதைக்கண்ட ரவி அடுத்த தலைமுறைக்கு பிரச்சனையை எடுத்து வந்து தன் அப்பாவை தற்கொலை செய்ய வைத்தவனின் மகன் ஆறுமுகத்தை பாக்ஸிங்கில் அடித்தே கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்.

இவர்களின் இந்த வெறியை காசாக மாற்ற விளையாட்டு சேனல் உரிமையாளர் பிரகாஷ்ராஜ் பெரிய பாக்ஸிங் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இந்த போட்டியில் ரவி, ஆறுமுகத்தை கோமோ ஸ்டேஜ் செல்லும் அளவிற்கு அடிக்க, பின்பு தான் தன் தவறை உணர்ந்து பாக்ஸிங்கே வேண்டாம் என ஒதுங்குகிறார்.

ஆனால், பிரகாஷ் ராஜ் பணத்திற்காகவும் தன் சேனல் TRPக்காகவும் எப்படியாவது இந்த போட்டியை நடத்த வேண்டும் என, சில சதி வேலைகள் செய்து ரவியை சண்டைப்போட வைக்கிறார். இதற்கிடையில் ரவியின் மாஸ்டர் பொன்வண்ணணும் இறக்கிறார். அவர் இறப்பிற்கான காரணத்தை அறிந்து மீண்டும் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார், பிரகாஷ் ராஜுக்கும் அவரின் பணத்திமிருக்கும் பதிலடி தந்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவி எம்.குமரனை விட பல மடங்கு ரியல் பாக்ஸராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். உடம்பை ஏற்றுவது மட்டுமில்லாமல் ஒரு பாக்ஸருக்கான அத்தனை மேனரிசங்களும் காட்டி அசத்தியுள்ளார். அதிலும் பாக்ஸர் என்றால் மிகவும் வெறப்பாக இல்லாமல் ஜாலியாக எதிராளியை கிண்டல் செய்து ரசிக்க வைக்கின்றார். குறிப்பாக கிளைமேக்ஸில் ஹாலிவுட் வில்லன் நேதன் ஜூன்ஸுடன் மோதும் காட்சியில் அப்படி ஒரு வில்லனுக்கு இப்படி ஒரு ஹீரோ தான் சமம் என்று சொல்ல வைக்கின்றது.

த்ரிஷா ஜெயம் ரவியை விழுந்து விழுந்து காதலிக்கிறார், ரவியை தன் உடலில் டாட்டூவாக பதிக்க, அதை ஜெயம் ரவி தேடும் காட்சிகள் சென்ஸார் விழுந்திருப்பது நன்றாக தெரிகின்றது. கிளைமேக்ஸில் ரவிக்கு பாக்ஸிங் கோச்சிங் எல்லாம் கூட கொடுக்கிறார். மற்றப்படி பெரிதாக ஈர்க்கவில்லை.

இத்தனை நாள் இந்த பிரகாஷ் ராஜ் எங்கு சென்றார்,சில நாட்களாக இவரை ரொம்ப நல்லவராகவே பார்த்து பார்த்து நமக்கே சலித்து போக ’செல்லம் நான் வந்துட்டேன்னு’ வில்லனாக கலக்கியுள்ளார். அதிலும் ‘இவர்கள் எல்லோரும் குரங்குகள், அவர்கள் செய்யும் சேட்டைக்கு தான் பணம், அந்த குரங்குகளுக்கு இல்லை’ போன்ற வசனங்களின் மூலம் தன் அதிகாரத்திமிரை காட்டும் இடத்தில் சபாஷ். ஆனால், இத்தனை கோடிஸ்வரர் 10 ரூ சிகரெட்டை பிடிக்கும் இடத்தில் தியேட்டரே சிரிக்கின்றது. என்ன கல்யான் சார் கவனிக்கலையா? இல்லை அதிலும் ஏதும் குறியீடா???.

படம் முழுவதும் கம்னியூசம் வசனங்களும், வெளிநாட்டு பொருட்களின் ஆதிக்கம் எந்த அளவில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, சில தொலைக்காட்சிகள் தங்கள் TRPக்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள் போன்ற விஷயங்களை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார். ஹிம்ம்...ஜனநாதன் உதவி இயக்குனர் ஆச்சே கல்யான் கிருஷ்ணன்.

ஆனால், படம் தாமதமாக வந்ததால் ஏதோ பழைய படம் பார்ப்பது போலவே ஒரு உணர்வு, சில இடங்களில் லாஜிக் அத்து மீறல், ஒரு இந்திய பாக்ஸர் நம்மூர் மார்க்கெட் எல்லாம் வந்து ரவியை சீண்டுவது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். படத்தின் முதல் பாதியில் அழுத்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் அத்தனை நாள் வெறி என்றாலும் ரவி அடியே வாங்க மாட்டாரா என்ன?

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, அந்த பிரமாண்ட் வில்லன் நேதன் ஜூன்ஸை தன்னுடன் மோத வைக்க அவர் செய்யும் கலாட்டாக்களில் விசில் பறக்கின்றது. அதிலும் அவரின் 7 அடி உயரம், ரவியை அவர் இடத்திலேயே வந்து மிரட்டுவது என நேதனும் அசத்தியுள்ளார்.

குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி, குறைந்தது 20 நிமிடம் என்றாலும் சலிப்பு தட்டவில்லை.

படத்தின் வசனம் நமக்கே தெரியாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நம்மை நசுக்குகிறார்கள் என ஜெயம் ரவி கிளைமேக்ஸில் பேசும் ஒவ்வொரு வசனமும் சூப்பர். அதிலும் பிரகாஷ் ராஜுடன் அக்ரிமெண்ட் போடும் காட்சி கலாட்டா.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி, மாற்றி மாற்றி அடித்துக்கொள்கிறார்கள், இடையில் பிரகாஷ் ராஜ் பேசுகிறார், த்ரிஷாவுடன் ஒரு சில காதல் காட்சி என செல்ல படம் கதைக்குள் செல்லவே கொஞ்சம் தடுமாறுகிறது.

வட சென்னை என்பதால் கானா பாடல்கள், ஒப்பாரி பாடல்கள் தான் இருக்கும் என்பதற்காக ஸ்ரீகாந்த் தேவா அதெல்லாம் நன்றாக இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில் எம்.குமரன் அளவிற்கு ஒரு போர்ஸ் இல்லை.

படத்தின் முதல் பாதியில் எடிட்டிங் பிரச்சனையா? இல்லை சென்ஸார் பிரச்சனையா? என்று தெரியவில்லை, காட்சிகள் கோர்வையாக இல்லாதது போல் உள்ளது.

மொத்தத்தில் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் கண்டிப்பாக எம்.குமரனை நாக் அவுட் செய்திருப்பார் இந்த பூலோகம்.

தனிஒருவன் பாகம் 2 உருவாகிறது - ஜெயம் ரவி

 இந்த வருடம் மிக பெரிய வெற்றி லிஸ்டில் உள்ள படம் தனி ஒருவன். இப்படம் பல தரப்பு மக்களை கவர்ந்து இன்றளவும் திரையரங்கில் ஓடி வருகிறது. தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளி வருகிறது என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ராஜா.

"அண்ணன் தனி ஒருவன் இரண்டாம் பாகம் கருவை என்னிடம் சமீபத்தில் சொன்னார், எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோசமாக இருந்தது நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வந்துடுறேன், முடிந்தால் கதை விவாதத்தில் கூட வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் என்றார். இதன் மூலம் தனி ஒருவன் 2 உருவாவது உறுதியாகியுள்ளது.

பீப் பாடல் விவகாரம், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் - சிம்பு தாயார் கண்ணீர் பேட்டி

பீப் பாடல் பிரச்சனை தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் சேனலுக்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

சிம்பு தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி பேசுவது தவறு. ஒருவர் அவரை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறார், சிம்பு சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம். தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார்.

வள்ளலார் அருளிய காயகல்பம் உங்களுக்காக..!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

2. சிவக்குமார் - ஓவியர்

3. விஜயகாந்த் - அரிசிக் கடை

4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

5. ரகுவரன் - உணவு விடுதி

6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

8. மோகன் - வங்கி ஊழியர்

9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர

முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்!! சிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல்! அதுவும்

தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல் பற்றி ஒரு கருத்தை தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சற்றேறக்குறைய சிம்புவுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

‘யூ டூ ப்ரூட்டஸ் பதிவு ‘இது:

ஆம் சாட்சாத் பீப் பாடல் விவகாரம் தான். இதன் வெறும் ஒரு சினிமா பாடல் விவகாரம் என்பதை தாண்டி நமது சமூக விழுமியங்களின் மீதான கண்ணோட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முதல் மாற்றமோ என்று ஒரு சின்ன நப்பாசை எட்டி பார்ப்பதை தடுக்க முடியவில்லை. ஏன் இதற்கு முன் எழுதாததா? காட்டாததா? என்று வீம்பு கேள்விகளை நாம் நிராகரித்து விட முடியாது. கிழ நரை எய்திய ரிக்‌ஷாக்கார ஹீரோ பதினாறைக் கூட தாண்டியிருக்காத பெண் குழந்தையை (இந்தியாவின் தற்போதைய வயது வரம்பை எடுத்து கொள்கிறேன்) மடியில் அமர்த்தி தொடையை தடவிய ஒருவகை fetish கலா ஸ்ருஷ்டியை பார்த்து புரியாமல் கைத்தட்டியவர்கள்,

கோவில் திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒரு/பல பெண்களின் அரை நிர்வாணத்தை ஆர்பரித்து (அட,வீட்டு பெண்களுக்கும்,பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாமல் தான்) பார்த்தவர்கள், இன்றளவும் கூட டவுன் பஸ்ஸில் ஏறினால் சத்தமாய் ஒலிக்க விடும் காது கூசும் சினிமா பாடல்களை கள்ள மவுனத்துடன் பயணத்தை கடப்பவர்கள்,

நம் வீட்டு குழந்தைகள் , ‘மன்மத ராசா என்ன கணக்கு பன்னேன் டா’ என்று பாடிய போது , என்னமா உச்சஸ்தாயில பாடுறாப்பா என்று வாரியணைத்து கொண்டவர்கள் , ‘அடிடா அவள, ஒத டா அவள’ சுத்துது ‘சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீர் ல’ என்று அலறும் பாடல் நம் வீட்டு இளசுகளின் ரிங்டோன் ஆனபோது பொறுத்தவர்கள் , இவ்வளவு ஏன்? தொப்புளில் பம்பரம் விட்ட போதும், பெண்ணின் பின்புறத்தில் ரப்பர் பந்தை அடித்த போதும்,வயசு பெண்ணை தண்ணீர் தொட்டியில் முக்கி அங்கங்களை தெரிய விட்டு ‘மறைச்சாலும் தெரியாதா இளமாங்காய் முன்னே’ என்று பாட்டு பாடி ஹீரோயிஸத்தை காட்டிய போதும் சகிப்பு தன்மையை காத்தவர்கள் நாம்.

அறுபதுகளின் மாஸ் திரைப்படங்கள் தொடங்கி இன்று வரை நாம் குழந்தையின் இருப்பு பற்றி சலனமும் இன்றி தலையில் இரசித்த விஷயங்கள் தான் இவை. இன்று ஏனோ உங்கள் கண்களை உறுத்துகிறது. அல்லது உங்கள் கண்களை உறுத்த இத்தனை காலம் ஆகி இருக்கிறது என்றும் கூறலாம். வீடு முற்றுகை, கைது என்று இந்த அதிதீவிர எதிர்வினையை பார்க்கும் போது உங்கள் சமூக பொறுப்புணர்வை எல்லாம் காட்டும் ஒரே வடிகாலாக இதை பிரயோகித்து விட்டு ஓய்ந்து விடுவீரோ என்ற அச்சம் தான் எழுகிறது.

இது சினிமா என்பது சூப்பர் மார்கெட் போல ஆகிவிட்ட காலம். உங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு உங்களுக்கு ஆகாதவை (பெரும்பாலும்)என்று நினைப்பதை புறக்கணிக்கலாமே ஒழிய உற்பத்தியாளரை தாக்குவது வேண்டாத வேலை. யார் எந்த பொருளை நுகரலாம் என்பதை விட எந்த வயதினரை இது போன்ற நுகர் எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் கட்டுபாடுகள் இறுக்கமாகும் போது இது போன்ற சீரழிவு அபத்தங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது. நான் சினிமாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை . நான் சொல்ல வருவதெல்லாம் சினிமா எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. உங்கள் உணர்திறன் இந்த பாடலில் தூண்டபட்டு இருக்கிறது. அவ்வளவே!

கெட்டது செய்தால் சாமி கிராஃபிக்சில் வந்து சாமியாடிய படியே கண்ணை குத்தி கொல்லும் திரைப்படங்களை பார்த்து எப்படி யாரும் திருந்தி விடவில்லையோ அதேபோல் இந்த பாடலால் ஒரு சமூகம் வீழ்ந்திடாது. வீழ்ச்சியின் நிஜமான வேர் ‘ பாட்டில்’ அல்ல “பாட்டிலில்” உள்ளது என்றே நினைக்கிறேன். என் வீட்டு குழந்தையின் விழுமியம் ,கபடமின்மை பாதிக்கிறது என்று முழங்கும் திடீர் சீர்திருத்தவாதிகளே, தயவு செய்து அப்படியே உங்கள் எதிர்ப்பை ,கதாநாயகன் எதிரிகளை ஓட ஓட வெட்டி, சுட்டு , ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சத்தமாக பேசி, அடித்தே கொன்று பழிவாங்கும் இரத்தம் தெறிக்கும் திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரிடமும் காட்டுங்கள். அடுத்த தலைமுறை உங்களுக்கு கடன்பட்டதாய் இருக்கட்டும்!!

நான் முன்பு குறிப்பிட்டது போல சினிமா என்பது ஒரு பல்பொருள் அங்காடி. அதில் சாக்லெட் பாக்கெட்டுகளும் கிடைக்கும் , காண்டம் பாக்கெட்டுகளும் கிடைக்கும் . உங்கள் குழந்தைகள் கையில் எடுப்பது என்ன என்பதை கண்காணிக்கும் கடமை உங்களுக்கு உண்டு!!

நன்றி – சரண்யா சுந்தர்ராஜ் முகப்புத்தகத்திலிருந்து…

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.

அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...

அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.

விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

“அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.