Monday, December 28, 2015

மக்கள் இனிமேல் விஜயகாந்தை விஜயகாந்’தூ’ என்றே அழைப்பார்கள் : அன்புமணி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார்.    அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.   அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார்.   உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.

 நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும்,  ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி ழுப்பினார்.  அத்தோடு விட்டபாடில்லை.   கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகை யாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது.

இது குறித்து தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.  அவர்,  ‘’  மக்கள் இனிமேல் விஜயகாந்தை ‘விஜயகாந்தூ’ என்றே அழைப்பார்கள் என கூறினார்.

அவர் மேலும், ’’கலைஞர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு  ஒரு கோரிக்கை.  விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் தூரமாக நின்றே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

0 comments:

Post a Comment