Thursday, December 31, 2015

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.


அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!)


எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.


பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.


ஒன்று போட்டு நூறு சைபர்.


எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.


 ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

சிம்பு தம்பிக்கான 2016 ராசிபலன் எப்படியிருக்கு..!

பேச்சாயி அம்மனின் அருளைப் பெற முடியாத துர்பாக்கியசாலி நீங்கள்தான். அதனால் சுமார் ஆறு வருடங்களுக்கு பேசவோ, பாடவோ, முணுமுணுக்கவோ, கூடாது. முக்கியமாக முக்கால் கிலோ எடையுள்ள நண்பர்கள் வந்தால் முற்றிலும் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது ‘குண’சந்திரிகா யோகத்தை கொடுக்கும். நாட்டு மருந்து கடையில் ‘மண்டை’ வெல்லத்தை வாங்கி தூள் தூளாக அரைத்து செல்போனுக்கு அபிஷேம் செய்து வந்தால் துர் சக்திகள் விலகும். நந்தி காதில் தொடர்ந்து ஓதிவர, ரகசியங்கள் கசியாமல் காக்கப்படும். பிடித்த நிறம் வெள்ளை. திசை – புழலாகவும் இருக்கலாம், வேலூராகவும் இருக்கலாம்!

அழகான குழந்தை தன்னுடையதுதான்-போலிசாரிடம்-பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் பரபரப்பு

 அழகான குழந்தை தன்னுடையதுதான் என்று போலிசாரிடம் நிரூபிக்க ஒரு பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கேரளாவின் கோலிகோடு மாவட்டத்தில்,  நாடபுரம் என்று ஊருக்கு அருகில் உள்ள கலாச்சி என்னும் பகுதியில், கடந்த திங்கள் கிழமை, ஒரு பிச்சைச்காரி காண்பவரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் ஒரு அழகான 4 மாத குழந்தையை வைத்திருந்தார்.
  அதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில் தாயின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும், குழந்தையின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது. 

  எனவே அக்குழந்தையை அவர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்தனர்.

ஆனால் அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று வாதாடினார். போலிசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. 
  அதன் பேரில், போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.

அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று அழுது புரண்டிருக்கிறார். அவரின் உறவினர்கள் சிலர், அதே பகுதியில் வசிப்பதாக கூறியதால், போலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்தார்கள்.
  அப்போது அவரின் உறவினர்கள், ஒரு ஏழு வயது சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அந்த சிறுமி, அக்குழந்தையின் சகோதரி என்று கூறப்பட்டது. அவர்களும், அந்த குழந்தை அவருடையதுதான் என்று கூறினர். 
  மேலும் அந்த குழந்தை அவரின் சகோதரியிடமும், உறவினர்களிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதை பார்த்த போலிசார், கொஞ்சம் இறங்கி வந்தனர்.

அதன் பின், அவரையும், அக்குழந்தையும் அவரின் உறவினரோடு அனுப்பி வைத்தனர். 
  தான் பெற்ற குழந்தை தன்னுடையதுதான் என்று நீரூபிக்க அந்த தாய் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

ராதிகா பேசியதைக் கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருதாம் விஷாலுக்கு..!

விஷால் நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் வெற்றி பெற்றுவிட்டார். இந்நிலையில் இன்று கதகளி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் படத்தின் ட்ரைலரில் காண்டம் குறித்து ஒரு பெண்ணிடம் பேசியதை ராதிகா சுட்டிக்காட்டி குறை கூறினார், இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை, இதை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது’ என மிக கூலாக பதில் அளித்தார்.

ஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சனம்

ஸ்டார் வார்ஸ் படங்கள் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய முந்தைய பாகங்களின் சாதனையை ஸ்டார் வார்ஸ் 7 முறியடிக்குமா? என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அறிவியல் புனைகதைப் படமான ஸ்டார் வார்ஸ் 7-வது பாகம்.

இந்த கதையானது சூரிய குடும்பத்தை தாண்டிய மற்றொரு கேலக்ஸியில் நடைபெறுகிறது. கதையின் ஹிரோவான போ டேமரோன் ஒரு மிகச் சிறந்த பைலட். தீயவர்களை அழிக்கும் கடைசி ஜெடாய் வீரரான லூக் ஸ்கைவாக்கர் 30 ஆண்டுகளாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்தின் மேப் வேண்டும். ஆனால் வில்லனான ஸ்னோக்கும் மேப்பை கண்டுபிடித்து லூக் ஸ்கைவாக்கர் அழிக்க முயற்சிகிறான்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் ரே வில்லனிடம் சிக்கிக்கொள்கிறாள். வில்லன் கிரகங்களையே அழிக்கும் ஆயுத்தை கண்டுபிடிக்கிறான். ஹிரோவுக்கு வில்லன் படையை சேர்ந்த போர் வீரன் ஒருவன் உதவுகிறான்.

கடைசியில் ஹீரோ கேலக்ஸியை காப்பாற்றினாரா?, போரில் யார் வென்றது? லூக் ஸ்கைவாக்கர் ஏன் மறைந்து வாழ்கிறார்? போன்ற கேள்விகளுக்கு சுவராசியாமாக மிரட்டலான கிராப்பிக்ஸ் காட்சிகளுடன் பதில் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் அப்ராம்ஸ்.

வழக்கமான ஸ்டார் வார்ஸ் படங்களில் இருந்து இந்த படத்தின் விஷுவல்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், கதாபாத்திரங்கள்தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே உரிய குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரங்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் மனதை வெல்லும் பல காட்சிகள் படத்தில் உள்ளன.

மொத்தத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ மின்னுகிறது.

நீரிழிவு இருக்கா? இந்த காய்கறிளை சாப்பிடுங்க...

 தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

. . . . உலகோர்க் கெல்லாம் காரமா

மூலியடா பங்கம்பாளை கொண்டு

. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

. . . . அன்றான ஆகாசகருடன் மூலி

அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

மறக்க முடியுமா - தமிழ் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

 தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவரைப் போல் பணம், புகழில் புரண்டவர்களும் இல்லை, பசி, பிணியில் வாடியவர்களும் இல்லை.

பத்திரிகை என்ற பலமான ஆயுதத்தை பணம் பிடிங்கும் ஏடிஎம் எந்திரமாக கருதிய ஒரு சுயநலமியால் வீழ்த்தப்பட்ட முதல் தமிழ் நடிகரும் பாகவதர்தான்.

* எம்.கே.தியாகராஜ பாகவதரின் முழுப்பெயர், மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் என்பதாகும். மார்ச் 1, 1910 -ஆம் ஆண்டு மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) பிறந்தார்.

* பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள்.

* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய தியாகராஜ பாகவதர் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.

* பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஓடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை
அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.

* இந்துநேசன் பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாகவதர் அவரின் திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர்.

* லட்சுமி காந்தன் இந்துநேசன் பத்திரிகையில் பாகவதரை நடிகைகளுடன் இணைத்து அடிக்கடி கிசுகிசு எழுதி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும், பக்ஷிராஜா பட நிறுவனருமான ஸ்ரீராமுலு நாயுடுவும் லட்சுமி காந்தனை மிரட்டினார்கள். இதற்கிடையில் லட்சுமிகாந்தன் யாரோ சிலரால் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகத்தின் பேரில் பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் ஸ்ரீராமுலுவையும் சிறையிலடைத்தார்கள். ஸ்ரீராமுலுவை உடனே விடுதலை செய்துவிட்டார்கள். பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

* பாகவதர் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின.

* பாகவதரை ஒரு படத்தில் புக் செய்வதற்கு முன் பாபநாசம் சிவனையும் புக் செய்து கொள்வார்கள். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி அதை என்ன ராகத்தில் பாடவேண்டும் எனவும் கூறிவிடுவார்.

* அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் கண்ணைக் குத்தும் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர்.

* அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும், ஹரிதாஸ் படத்தில் கால்களை இழப்பது போலவும், நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும், அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது.

* பி.யு.சின்னப்பாவும், தியாகராஜ பாகவதரும் சமகாலத்தவர்கள் என்பதால் இவர்களுடைய ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும்.

* ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ  பாடல் பிரசித்தி பெற்றது. இந்த ஒரு பாடலைப் பார்ப்பதற்காகவே பலர் தியேட்டருக்கு வருவார்களாம். இந்தப் பாடல் முடிந்ததும் தியேட்டரை விட்டுக் கிளம்பிவிடுவார்களாம்.

* தங்கத் தட்டில் சாப்பிட்டு அரண்மணையில் வாழ்ந்த பாகவதர் கடைசி காலத்தில் வீட்டு வாடகை கூட கொடுக்க வழியில்லாத ஓர் அவலமான சூழலில் ஈரல் நோய் வந்து இறந்து போனார் (1959).

சிம்பு ரசிகர்களுக்கு இன்று ஒரு சப்ரைஸ் விருந்து

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா’. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைந்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துயுத்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவது படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை துண்டியுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிம்பு ரசிகர்களுக்கு இன்று இரவு ’’அச்சம் என்பது மடமையடா’’ படத்தின் டிரைலர் ‘சப்ரைஸ்’ ஆக  வெளியாகிறது. இதனை  அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :

அறிகுறி 1 :
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2 :
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3 :
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4 :
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5 :
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6 :
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7 :
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8 :
ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9 :
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10 :
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.


பாலாவின் 'தாரை தப்பட்டை'யில் டிஸ்கவரி தமிழ் கேமரா குழு

 பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியின் கேமரா குழு இடம் பிடித்துள்ளது.

பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.

இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியிருக்கும் 1000வது படம் 'தாரை தப்பட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் உள்ள கரகாட்டக்கார இசை மற்றும் நடனக்குழுவினர் பற்றிய படம் இது. இப்படத்துக்காக பாலாவின் 'பி' ஸ்டூடியோஸ் மற்றும் சசிகுமாரின் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்களோடு முதன் முறையாக கை கோத்திருக்கிறது டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்.

இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தில் டிஸ்கவரி தமிழ் சேனலின் கேமரா குழு இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் வரும் காட்சிகளில் டிஸ்கவரி தமிழ் சேனல் குழு ஒன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனக்கலைகள் பற்றி ஆய்வு செய்வது போலவும். அந்தக் குழு சுவாமி புலவர் என்ற பிரபல பாடகரை தேடுவது போலவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரின் உட்பகுதிகளில் தேடித்திரிந்து ஒருவழியாக சுவாமி புலவரை கண்டுபிடிக்கும் டிஸ்கவரி தமிழ் சேனல் குழுவானது, அவரது மகன் சன்னாசியையும் அவர் நடத்தி வரும் சுவாரஸ்யமான கரகாட்டக் குழுவையும் கண்டு கொள்கிறது.

பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்துடன் டிஸ்கவரி தமிழ் சேனலின் இணைப்பு குறித்து டிஸ்கவரி நெட்வொர்க்ஸ் ஆசியா பசிபிக்கின் தெற்காசிய பிராந்தியத்துக்கான் பொது மேலாளர் ராகுல் ஜோரி கூறும்போது, "டிஸ்கவரி சேனல் இந்திய கலாச்சாரங்களை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் தனக்கென தனி முத்திரை கொண்டுள்ளது. இதேபோல் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் கதைக் களமும் பாரம்பரிய கலையை கொண்டாடும் விதமாக இருப்பதால் இந்த இணைப்பு இயல்பாக சாத்தியமானது" என்றார்.

இயக்குநர் பாலா கூறும்போது, "நவீன உலகில் மறைந்து வரும் அரிய தமிழ் நடனக் கலைகள் குறித்த தகவல்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல டிஸ்கவரி தமிழ் சேனல் ஒரு சிறந்த தளம். டிஸ்கவரி தமிழ் சேனலுடன் இணைந்து பணி புரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.

சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்!


 சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.

முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.

பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள்.

சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும். பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.

சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்


செர்ரி பழங்கள்:

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:

நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:

ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.

அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.

“தற்காப்பு” – ‘திரைவிமர்சனம்-என்கவுன்டர்’ பிரச்சனையை இருபக்கமும் அலசல் – காவல் துறைக்கு மரியாதை தரும்!

கோலாலம்பூர் – இந்தியாவில், ஏன் மலேசியாவில் கூட காவல் துறையைப் பொறுத்தவரையில் முக்கியமான சர்ச்சைக்குரிய அம்சமாக விவாதிக்கப்படுவது ‘என்கவுன்டர்’ எனப்படும் குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களை விசாரணையின்றி காவல் துறையினர் திட்டமிட்டுக் கொல்லும் பிரச்சனையாகும். அந்தப் பிரச்சனையை எல்லா முனைகளில் இருந்தும் மிக விரிவாக, நுணுக்கமாக அலசுகின்றது ‘தற்காப்பு’.

இதற்கு முன் வந்த தமிழ்ப்படங்களில் சில காட்சிகளாக மட்டுமே வைக்கப்பட்டிருந்த என்கவுன்டர் அம்சம், இந்தப் படத்தில் முழுமையாகப் பேசப்படுவதோடு, மனித உரிமை ஆணையத்தின் கோணத்திலிருந்தும் விவாதிக்கப்படுகின்றது என்பது வித்தியாசமான அணுகுமுறை.

படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், மலேசியாவின் டாக்டர் எஸ்.செல்வமுத்து என்பவரின் கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருப்பதுதான். படத்தில் காவல் துறை உயர் அதிகாரியாக சில காட்சிகளில் அவரும் பொருத்தமாகவே நடித்திருக்கின்றார்.

மற்றொரு சிறப்பம்சம் முதல் முறையாக ஆஸ்ட்ரோவும், டிஜிவி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை மலேசியாவில் வெளியிடுகின்றனர் என்பதாகும்.

கதை-திரைக்கதை

tharkappu_1441021831100ஒரு நாள் அதிகாலையில் 5.00 மணிக்கு பெங்களூர் சாலையின் பேருந்து நிறுத்தம் ஒன்றில் காவல் துறையினர் ஒரு எண்கவுன்டருக்குத் திட்டமிடும் புள்ளியில் இருந்து தொடங்குகின்றது படம்.

படத்தின் கதாநாயகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வாசுவையே என்கவுன்டர் செய்வதற்கு ஏன் போலீசாரே திட்டமிடுகின்றனர் என்பதைப் பின்னோக்கிச் செல்லும் காட்சிகள் (பிளாஷ்பேக்) விவரிக்கின்றன.

அதே வேளையில் இன்னும் இரண்டு கிளைக் கதைகளில் இரண்டு ஜோடி காதலர்கள் வீட்டுக்குத் தெரியாமல் தப்பிச் சென்று திருமணம் புரிவதற்காக அதே நாளில், அதே அதிகாலை நேரத்தில், அதே பேருந்து நிறுத்தத்தில் சந்திப்பதாகச் சொல்ல, அவர்களின் பின்னணிக் கதைகளும் கூறப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் என்கவுன்டர் குறித்த விசாரணையை மேற்கொள்ளும் மனித உரிமை ஆணையர் சமுத்திரகனியின் பின்னணிக் கதையும் கொண்டு வந்து இணைக்கப்படுகின்றது.

இறுதியில் அனைவரும் அதிகாலை 5.00 மணிக்கு அந்த இடத்தில் வந்து சேர, அங்கு என்ன நடக்கின்றது, என்கவுன்டரில் கொல்லப்படுபவர்கள் யார், என்பதையெல்லாம் உச்சகட்டப் பரபரப்போடு சொல்லி முடிக்கின்றது தற்காப்பு.

திரைக்கதையின் பலம்-பலவீனம்

மிகவும் சிரமப்பட்டு, மூளையைக் கசக்கி, முடிந்தவரையில் கடும் உழைப்பை வழங்கி ஒரு வித்தியாசமான திரைக்கதையைத் தர இயக்குநர் முயற்சி செய்திருக்கின்றார்.

ரியாஸ்கானை என்கவுன்டர் செய்ய, சக்திவேல் வாசு யாருடனும் சொல்லாமல் தனியாகத் திட்டமிடுவதும், பின்னர் அதைச் செயல்படுத்தும் காட்சிகளும் படத்தொகுப்பாளரின் கைவண்ணத்தில் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், சில குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். கதை நடப்பதாக ஒரு நாளையும், நேரத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அடிக்கடி காட்சிகள் பின்னோக்கிச் செல்வதும் பின்னர் முன்னோக்கி வருவதும், அளவுக்கதிகமான கிளைக் கதைகளும் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்கின்றன.

ஒரு பரபரப்பான என்கவுன்டர் நடக்கப் போகின்றது எனக் காட்டிவிட்டு, இரசிகர்களை அதே பரபரப்பில் வைத்திருக்காமல், இரண்டு காதல் கதைகளை இணைத்திருப்பது, அதைப் பற்றி பின்னோக்கிச் சென்று விரிவாகக் காட்டுவதும், வழக்கமான சினிமாத்தனமாகவும்,  கூடுதல் திணிப்பாகவும் படுகின்றது. ஒரே ஒரு காதல் கதையை மட்டும் இணைத்து, இதைவிடக் கூடுதலாகப் பரபரப்பையும் சுவாரசியத்தையும் காட்டியிருக்க முடியும்.

34824-017என்வுன்டர், மனித உரிமை ஆணையம் என வித்தியாசமான களங்களுக்குள் இரசிகர்களை நுழைத்துவிட்டு, வழக்கமான காதல் காட்சிகளுக்கும், மதம், அந்தஸ்து பிரச்சனைகளால், காதலர்கள் கல்யாணத்துக்கு மறுத்து வீட்டை விட்டு ஓடுவது என்பது போன்ற கதைப் பகுதிகள் படத்தின் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் வெகுவாகக் குறைத்து விட்டன.

இருப்பினும், கதாநாயகனுக்கு, காதல் காட்சிகள் வைக்காமல், பாடல் காட்சிகள் வைக்காமல், (ஒரே ஒரு ஹீரோயிசம் பாடல் மட்டும் உண்டு) திரைக்கதை அமைத்திருக்கும் துணிச்சலுக்கு இயக்குநரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

அதே வேளையில், காதலர்களின் பின்னணிக் கதைகளின் களங்கள் சற்றே வித்தியாசமாக இருந்தாலும், காதலர்களாக நடித்திருக்கும் இரண்டு ஜோடிகளும் சொதப்பி விட்டனர் என்றுதான் கூறவேண்டும்.

இரயிலில் புதிதாக திருமணம் செய்தவர்களுக்கான சிறப்பு முதலிரவு அறையில் நடப்பதான காட்சிகள் புதுசு என்றாலும், இந்திய இரயில்வேயில் இவ்வளவு அற்புதமான அமைப்போடு உண்மையிலேயே ‘ஹனிமூன் கூப்பே’ இருக்கின்றதா அல்லது வெறும் அரங்க அமைப்பா என சந்தேகப்பட வைத்திருக்கின்றார்கள். உண்மையென்றால், விலை என்ன? விசாரிக்க வேண்டும்!

அந்த இரயில் பயணத்தின்போது, தேநீர் விற்கும் பையன் பேசும் வசனங்கள், சிரிக்க வைத்தாலும், வயதுக்கு மீறிய ஆபாசம்!

மற்றொரு காதல் ஜோடியின் கதையில் காதலன், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் அதன் தொடர்பிலான வசனங்களும் இரசிக்க வைக்கின்றன.

இறுதிக் காட்சியில், துப்பாக்கிச் சூடுகள் கொஞ்சம் நீநீநீநீ…..ளமாகவே போய்க் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.

நடிப்பு

படத்தின் உயிர்நாடி சமுத்திரகனிதான். அண்மையக் காலங்களில் எந்த வேடம் கொடுத்தாலும், தனது தனிக் குரலாலும், வசன உச்சரிப்பாலும், உடல் மொழியாலும் பின்னி எடுத்து விடுகின்றார். இதிலும் அவர் வந்த பிறகுதான் படம் இன்னொரு வகையில் சூடுபிடிக்கின்றது.

Actor Samuthirakani in Tharkappu Movie New Stills

ஆனால், படத்தின் ஆச்சரியப்படத்தக்க முன்னேற்றம் சக்திவேல் வாசு. முதலில் வெளிவந்த படத்தின் முன்னோட்டங்களில் இவரா என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என யோசிக்க வைத்தவர், படம் முழுக்க கடுமையாக உழைத்திருக்கின்றார். நடை,உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டு முடிந்தவரையில் தனது கதாபாத்திரத்திற்கு கம்பீரத்தைச் சேர்த்திருக்கின்றார்.

ஆனால், முன்பே குறிப்பிட்டதுபோல், காதலர்களாக வரும் இரண்டு ஜோடிகளின் நடிப்பு, பாவனைகள் மட்டும் படத்தைக் கொஞ்சம் அமெச்சூர்தனமாக ஆக்கிவிடுகின்றது. அதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவுகளா?

என்வுன்டர் அம்சத்தின் பன்முகங்களையும் ஆராயும் திரைக்கதை பாராட்டப்பட வேண்டும் என்றாலும், இயக்குநர் சொல்லுகின்ற முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை.

வழக்கம்போல் எல்லா என்கவுன்டர்களும் அரசியல்வாதிகளாலும், பெரிய வர்த்தகர்களாலும்தான் நடத்தப்படுகின்றன என்பதும் அவர்களின் தூண்டுதலாலும், தவறான நோக்கத்திற்காகவும்தான் காவல்துறையினர் என்கவுன்டர்களை மேற்கொள்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

tharkappu-movie-stills-33பல என்கவுன்டர்கள் பொதுமக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கின்றன, மக்களாலேயே பாராட்டப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மைதானே!

இருந்தாலும், இரண்டு பக்கத்திலும் யாருக்கும் யாருடைய உயிரையும் எடுப்பதற்கு அதிகாரமில்லை- அனுமதிக்கக்கூடாது என்பதுதான் இயக்குநரின் இறுதி வாதமாக முடிகின்றது.

திரைக்கதை அமைப்பு – போலீசாரின் என்கவுன்டர் பின்னணியில் என்ன நடக்கின்றன என்பது போன்ற சுவாரசியங்கள் – மனித உரிமை ஆணையத்தின் கண்ணோட்ட விவாதங்கள் – சக்திவேல் வாசு, சமுத்திரகனியின் நடிப்பு – வழக்கமான மசாலா அம்சங்கள் இல்லாத விறுவிறுப்பான கதை நகர்வு – இப்படியாக பல காரணங்களுக்காகக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக அமைகின்றது தற்காப்பு.

அதைவிட முக்கியமாக, நமது மலேசியர் ஒருவர் துணிந்து இத்தகைய கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டு தமிழகத்தையும், மலேசியாவையும் இணைக்க முற்பட்டிருக்கும் கலைத் துறை முயற்சியைப் பாராட்டுவதற்காகவும், அந்த நோக்கங்கள் வெற்றியடைவதற்காகவும் நாம் பார்த்து ஆதரவளிக்க வேண்டிய படம் ‘தற்காப்பு’.

மாபெரும் தோல்விகளுக்குப் பிறகும் எழுந்து நிற்கும் சூர்யா

தமிழின் முன்னணிநாயகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு 2015 ஆம் ஆண்டு கலவையான ஆண்டாக அமைந்திருக்கிறது. நடிகராக அவருக்கு இந்தஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாசுஎன்கிறமாசிலாமணி (மே 29, 2015) படம் மட்டும்தான் வெளியானது.

அந்தப்படத்தில் அவருக்கு இரட்டைவேடம், அவற்றில் ஒன்று ஆவி என்று சமகாலத்திற்கேற்ற கதையாக அமைந்தும் அந்தப்படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. சிலபடங்கள் நல்லவிமர்சனங்களைப் பெறும், வசூலில் குறைவாக இருக்கும். இந்தப்படம் விமர்சனரீதியாகவும் சரியாக இல்லை. இதற்கு முந்தைய படமான 2014 இல் வெளியான அஞ்சான் (ஆகஸ்ட் 15, 2014) படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இப்படி தொடர்ந்து இரண்டுபடங்கள் பெரிதாகப் போகவில்லை என்பது ஒரு நாயகனாக சூர்யாவுக்கு இது வருத்தத்தைத் கொடுத்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. அதுவும் அவை இரண்டும் மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் பொருள் இழப்பும் பெரிதாக இருந்திருக்கும். ஆனால் இவ்விரு பெரியதோல்விகளையும் அவரும் மறந்து மக்களும் மறக்கிற வகையில் தயாரிப்பாளராக 2015 இல் பெரியவெற்றியையும் மிகுந்த மரியாதையையும் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா திரும்பவும் நடித்த 36 வயதினிலே மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க2 ஆகிய இரண்டுபடங்களையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இவ்விரு படங்களுமே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் வெற்றி பெற்றன என்கிறார்கள். குடும்பத்துப்பெண்களின் உணர்வுகளையும் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் ஊக்கத்தையும் கொடுத்தவகையில் 36 வயதினிலே படமும், கல்விமுறையை விமர்சனம் செய்வதோடு நகரமக்களின் வாழ்க்கைமுறையையும் விமர்சனம் செய்த படமாக அமைந்தது.

திரைப்படக்கலையை வியாபாரமாக மட்டும் பார்க்காமல் அதன்மூலம் நம்மாலியன்ற நல்லகருத்துகளைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தினால் சூர்யா மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அதேசமயம் அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள். 

2015-ல உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டோம் பாஸ்!

இந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன்.

ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே...

குறிப்பு:  பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது!

மாரி


'செஞ்சிருவேன் செஞ்சிருவேன்'னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டார் இந்த மாரி. மாமனாரின் ஸ்டைலை காப்பி அடித்தாலும்,  அடிதாங்கியுடனும் சனிக்கிழமையோடும் தனுஷ் செய்யும் ரகளைகள் ஓகே. அவங்களே நல்லா காமெடி பண்ணும்போது  எதற்கு அர்ஜுன் சாரும், ‘பேர்ட்’ ரவியும்.

மாரியில் நம்மை ஏமாற்றியது வில்லன்களின் காஸ்டிங்கும், கதையே இல்லாத ஸ்கிரிப்டும்தான். படத்தில் லாஜிக்கைக் கூட நல்லா செஞ்சுடுச்சு இந்தக் கூட்டணி. முக்கியமா நாம குறிப்பிட வேண்டிய கேரக்டர் – விஜய் யேசுதாஸ். டைட்டில் கார்டிலேயே புறா ரேஸ் பற்றிச் சொன்னார்கள். படத்தில் வரும் ஈகோ பிரச்னையும் அதனால்தான் எழுகிறது. பட், கூண்டுப் புறாவையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நாங்களும் முழிச்சிட்டு இருக்கும்போது கொசு அடிப்போம் என்று நிரூபித்து விட்டார்கள் ரசிகர்கள்.

10 எண்றதுக்குள்ள

டிரான்ஸ்போர்ட்டர் + ஆதி பகவன் = 10 எண்றதுக்குள்ள. டிரான்ஸ்போர்ட்டர் படத்தில் ஜேசன் ஸ்டேதம் செய்யும் அதே வேலை இங்கு விக்ரமிற்கு. ஆதி பகவனில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இதில் சமந்தாவுக்கு. இரண்டையும் சேர்த்து மிக்சியில் அடித்து கொஞ்சம் வடக்கத்திய சாதிச் சண்டையைச் சேர்த்தால் படம் ரெடி. என்னென்னவோ மாற்றங்கள் கண்டுவிட்டு,  தானாகவே தன் அழகோடு நடித்துள்ள விக்ரமை மறைக்கின்றன மோசமான கதையும் திரைக்கதையும். பயங்கரமான வில்லனிடம் தொடங்கும் கிரிமினல் நெட்வொர்க்,  காமெடி செய்யும் பசுபதியிடம் முடிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமான கார் சேசிங் காட்சிகள் ஏமாற்ற, ஒரு கோலி சோடா அடித்துவிட்டு இயக்குநர் புதுத் தெம்புடன் வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

உத்தம வில்லன்


நியூயார்க்கில் பல விருதுகளை வென்ற படம், சொந்த நாட்டில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு பேர் வாங்காதது சோகம். இந்தியாவின் ஆகச் சிறந்த கலைஞனான கமல் இன்னும் திரைக்கதையில் சொதப்புவதுதான் ஏனென்று தெரியவில்லை. படத்திற்குள் படம் எடுக்கிறார்கள். ‘கலைஞர்களே சாகாவரம் பெற்றவன்’ என்பதனை அவர்கள் எடுக்கும் அந்த காமெடி படம் அழுத்தமாய் சொல்லத் தவறுகிறது. அதே சமயம் கேன்சர் நோயாளியாக வரும் நடிகர் கமல், அவருக்கு நிகர் அவர்தான் என்பதை நிரூபித்து விட்டார்.

கே.பி க்கான குருதட்சணையையும் கொடுத்துவிட்டார். கமல் படத்தில் ஆக்சன், கட் சொல்வது மட்டுமே வேலை என்பதால் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. சில நேரங்களில் அற்புதமான கதைகளை வீக்கான திரைக்கதையுடன் படைக்கிறார் கமல். அதைச் சரி செய்திருந்தால் உண்மையிலேயே வில்லன் வென்றிருப்பான்.

இஞ்சி இடுப்பழகி

அனுஷ்காவின் மோஸ்ட் வான்டட் மூவி ஆஃப் த இயர். ஆனால் அனுஷ்காவுக்கு அதனால் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. “பொண்ணுங்க குண்டானா கல்யாணம் பண்ண மாட்டீங்க. கல்யாணத்துக்கு அப்பறம் குண்டான டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?” என்று அனுஷ்கா பேசும் ஒரே இடம்,  ரசிகர்களை கைதட்ட வைத்தது. மிக நீண்ட பயணம் போன்ற சலிப்பை உண்டாக்கிய திரைக்கதை. உடல் எடையை கூட்டி குறைக்க அனுஷ்கா மெனக்கெட்டதில், பாதி அளவாவது திரைக்கதையில் மெனெக்கெட்டிருக்க வேண்டும். அதிலும் படத்தில் முக்கால்வாசிப் பேர் தெலுங்கு தேசத்து நடிகர்களாக இருக்க, தமிழ் படம் என்ற உணர்வே ஆர்யாவையும், ஊர்வசியையும் பார்க்கும் போதுதான் ஏற்படுகிறது.  'எடை குறைப்பதற்கு குறுக்கு வழிகள் வேண்டாம், குண்டா இருந்தாலும் நாம அழகுதான்' என்ற மெசேஜை 2 மணி நேரம் எப்படி எப்படியோ சொல்ல முயற்சிக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. அனுஷ்காவின் உழைப்பிற்கு சற்றும் உயிர் சேர்க்கவில்லை இப்படம்!

புலி

என்னை அறிந்தால் சன் மியூசிக்கிற்கு என்றால், புலி சுட்டி டி.வி க்கு. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என மொத்தக் குழுவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் விஜய் ரசிகர்களே மீம்ஸ் போடும் அளவிற்கு கடுப்பைக் கிளப்பியது புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி... என நீளும் கதையில்,  சிரிப்பு வராத காமெடிகளையும் ஹாலிவுட் தந்த கேரக்டர்களையும் இணைத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி, கிச்சா சுதீப் போன்ற ஸ்டார் பெர்ஃபார்மர்களின் நடிப்பை அணுவளவும் பயன்படுத்தவில்லை இந்த ஸ்கிரிப்ட். பிரேமுக்கு பிரேம் விஜய்யே வர, வேலையே இல்லாத வேலைக்கு இரண்டு நாயகிகள். பீரியட் மூவிக்கு விஜய்யின் மேனரிசங்கள் பொருந்தவில்லை. படத்தின் முக்கிய அங்கமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸும் சொதப்பல். ஏதோ கல்லூரி விழாவுக்கு பவர் பாயின்ட் பிரசண்டேஷன் பண்ணியது போலவே இருந்தது கிராஃபிக்ஸ் காட்சிகள்.

படம் சொதப்பியதெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஆடியோ விழாவில் பேசிய டி.ஆரின் " இது அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி...!' வசனமும்,  இப்படம் கோலிவுட்டின் பாகுபலி என்று கிளப்பப்பட்டதுமே படம் பேரடி வாங்கியதற்கு பிள்ளையார் சுழி போட்டவை!

இசை



வாலியையும் குஷியையும் எதிர்பார்த்து போன ரசிகன்.... நிறையவே ஏமாந்துதான் போனான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, கதை, திரைக்கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாடர்ன் டி.ஆராகவே மாறி ‘ஐ ஏம் பேக்’ சொல்கிறார். முதல் படத்திற்கு இந்த இசை ஓகே. ஆனால் ஒரு மியூசிக்கல் படத்திற்கு கண்டிப்பாக இது வொர்த் இல்லை. பல வருஷம் தேடிப் புடிச்சு சாவித்திரினு பேரெல்லாம் மாத்தி வச்சு கொண்டாந்த அந்தப்புள்ள..ப்ச்..! நல்ல கதை; திரைக்கதை கூட ஓகே. ஆனால் ஒவ்வொரு சீனும் இழு இழுவென்று இழுப்பதுதான் படத்தை தோல்வியை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டன. சத்யராஜின் கேரக்டர்தான் மாஸ்டர் ஸ்டிரோக். ஆனால் அவர் ஒரு இயக்குநரை கொலை செய்யும் இடத்தில் அத்தனை லாஜிக் ஹோல்ஸ். அதுபோல ஆங்காங்கே உதைக்கும் லாஜிக்கை மறக்கடிக்க கிளைமாக்ஸில் எஸ்.ஜே.சூர்யா கனவிலிருந்து எழுவதெல்லாம் டூ மச்!

மாசு என்கிற மாசிலாமணி

சினிமா சிரிக்க வைக்கவே என வெங்கட் பிரபுவும், சிந்திக்க வைக்கவே என சமுத்திரக்கனியும் ஒரு தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமன்றத்தில் போரிட்டார்கள். இவர்கள் இருவரும் இணைந்து எப்படியான படத்தைக் கொடுத்துள்ளார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. எல்லோரும் பேய் படத்தில் காமெடி செய்தால், பேய்களை வைத்தே காமெடி செய்தார்  மங்காத்தா மேன் வெங்கட் பிரபு.  படத்தின் கதையை பல ஹாலிவுட் படங்களோடு கம்பேர் செய்து வறுத்து விட்டார்கள் நெட்டிசன்கள். நயன்தாரா, பார்த்திபன், ரியாஸ் கான் என ஸ்க்ரீனை ரணகளப்படுத்தும் ஆர்டிஸ்டுகளுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸே இல்லை. நயன்தாரா டூயட்டிற்குக் கூடப் பயன்படுத்தப்படாததே உச்சக்கட்ட கொடுமை. சூர்யாவைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பிரேம்ஜி உடனான அவரது கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை!

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

ஹாட்-ட்ரிக் வெற்றி கண்ட ராஜேஷ் – சந்தானம் கூட்டணி கொடுத்த படமா இது?!  குடியும் குடி சார்ந்த மனிதர்களுமாக பயணிக்கும் இக்கூட்டணியிடம் உஷாராகிக் கொண்டது தமிழ் சினிமா. ழைய படங்களில் பார்த்த அதே மேட்டர்தான். லொகேஷனும் ஹீரோயின்களும் மட்டுமே மாறுகின்றன. பெண்களை மட்டம் தட்டிப் பேசும் வசனங்களை மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் வண்டியை ஓட்ட முடியும் ராஜேஷ் ஜி?

தமிழ்நாடு அரசே டாஸ்மாக்கை மூடினாலும் ராஜேஷ் படத்திலிருந்து அதை நீக்க முடியாது. பெண்களுக்கு எதிரான போராட்டம், கணவனின் அல்லோகலம் என ஆண்களை குஷிப்படுத்தும் ஏரியாக்கள் சில இருந்தாலும் ஏனோ எதையுமே ரசிக்க முடியவில்லை. விஷால் கெஸ்ட் ரோலில் வரும் அந்த கிளைமாக்ஸில் அவர் தத்துவம் கூற,  இவர்களது ஞானக்கண் திறப்பதும்….அட போங்கப்பா…!

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை


தூக்குத் தண்டனை தேவையா எனக் கேட்கும் ஜனநாதனின் இப்படத்தில்,  கம்யூனிசத்தோடு சேர்ந்து சினிமாத்துவமும் சற்று தூக்கலாகாவே இருந்தது. இது போன்ற படங்களுக்கு தேவையான  எதார்த்தம் இதில் மிஸ்ஸிங். எமலிங்கம் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு,  பல விசயங்களை வெடித்துச்  சிரிக்க வைக்கும் காமெடியாகவும் விமர்சனம் செய்து,  ஜனரஞ்சகப்படுத்தவும் மறக்கவில்லை ஜனநாதன். டாஸ்மாக் பாரில் வாங்கித் தின்ற சைடு டிஷ்கான கடன் அக்கவுண்டு நோட்டில், எமலிங்கம் கையெழுத்து போடப் போகும்போது அவன் கையைப் பிடித்து போலீஸ் இழுக்க,  அவன் கேட்கும்  “இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இல்லையா ?” என்ற கேள்வி அரசாங்கத்திற்கான அடி. ஆனால், ஆர்யா கதாபாத்திரம் விஜய் சேதுபதி, ஷாம் கதாபாத்திரங்கள் போல் அழுத்தமாக இல்லை. ஏதோ ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது திரைக்கதையின் வேகம்.

தலைப்பை கேட்டவுடன் கொடுத்த லாரன்ஸ்- படத்தின் பெயரை மாற்றினார்

ராகவா லாரன்ஸிற்கு சுக்ர திசை தான் போல. அவர் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா-2 என இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து இவர் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் கேட்டதற்காக அந்த டைட்டிலை கொடுத்துவிட்டாராம்.

தற்போது இப்படத்திற்கு பைரவா என்று தலைப்பு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ்...

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

உதடுகளை பாதுகாப்பது எப்படி..?

சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாயிண்ட் பிரேக் - படம் எப்படி?

தலை சுற்ற வைக்கும் பாறை முகடுகள், கப்பலையே சுழற்றி அடிக்கும் ராட்சத அலைகள் இதற்குள் நடக்கும் திக் திக் திக் நிமிடங்கள் தான் பாயின்ட் பிரேக்.

ஹீரோ ஜானி தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்துகொண்டிருக்கும் வேளையில் எதிர்பாரா விதமாக நண்பன் தவறி விழுந்து இறக்க, அதோடு சாகச விளையாட்டுகளை விட்டுவிட்டு துப்பறியும் நிபுணராக வேலை செய்கிறார். இந்நேரத்தில் தான் அரசாங்கத்தின் சொத்துகள், விலைமதிப்புடைய பொருட்கள் என மூன்று சாகச வீரர்கள் கொண்ட குழு கடத்தி அதை ஏழை மக்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

இவர்கள் யார் என கண்டறியும் பொறுப்பு ஹீரோ வசம் வருகிறது. தேடுதல் வேட்டையில் குறிப்பிட்ட குழுவிலேயே ஒருவராக மாறி அவர்களுடன் இணைந்து சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டே அவர்களைக் கண்காணிக்கிறார் ஹீரோ ஜானி. எதிரி டீம் வைக்கும் ஒவ்வொரு சவாலும் மயிரிழையில் உயிர் போகும் சாகசங்களாக திக்குமுக்காட வைக்கிறது. இதற்கிடையில், தான் வந்த வேலையை சற்றே மறந்து சாகச டீமில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க காவல் துறை உஷார் ஆகி ஹீரோவுக்கு இன்னும் நெருக்கடி தருகிறது.

திருட்டுக் கும்பலை பிடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ஹீரோ களத்தில் இறங்கி அவர்களுடன் இணைந்து செயல்பட்ட பழக்கத்தால் சுலபமாகவே இருப்பிடத்தைப் அடைந்து விடுகிறார். எனினும் சாகச வீரர்களின் நோக்கமே பயத்தை உடைத்து மரணத்துக்கே சவால் விடுவது என்ற ரீதியில் ஒவ்வொருவராக வீபரீத விளையாட்டில் மரணத்தை அடைய கடைசியாக மிஞ்சுகிறார் குழுவின் தலைவன். பல அரசாங்க அதிகாரிகளை கொலை செய்து, அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய வில்லனை ஹீரோ பிடித்தாரா இல்லையா என்பது மீதி கதை.

’இது என்னோட பாதை , என்னை முடிக்க விடு’ என சொல்லி விட்டு துணிச்சலாக ராட்சத அலைகளுக்குள் ஸர்ஃபிங் செய்வது, ரெடியா எனக் கேட்டு விட்டு மலை உச்சியில் இருந்து அப்படியே பறப்பது, உயரமான பனிப்பள்ளத்தாக்குகளில் முரட்டுத்தனமாக சறுக்குவது என ஆக்‌ஷன் சாகசங்களை 3டி அனுபவத்தில் பார்க்கும்போது மெகா பரவசம்.

ஒவ்வொரு முறையும் உயரமான மலைகளில் இருந்து நாமே எட்டிப்பார்த்தால் எப்படி இருக்குமோ அந்த உணர்வுகள் அவ்வப்போது நமக்கு எட்டிப்பார்ப்பதும் நமக்கு பயம் உண்டாவதையும் தடுக்க முடியவில்லை எனலாம்.

மூவர் குழு இணைந்து விமானத்தில் கொண்டு செல்லப்படும் பணத்தை அப்படியே காற்றி பறக்க விடுவது 3டி அட்டகாசம். பயங்களின் புள்ளிகளை சர்வசாதாரணமாக உடைத்து தயவு செய்து யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் என நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு 3டி அனுபவங்களை கொடுத்து எண்டு கார்டு போடுகிறது பாயிண்ட் பிரேக்.

எனினும் இதன் ஒரிஜினல் வெர்ஷனான கீனு ரீவ்ஸ், பேட்ரிக் ஸ்வெய்ஸி நடித்த பழைய பாயிண்ட் பிரேக்கை பார்த்தவர்களுக்கு இந்தப் படம் சின்ன ஏமாற்றத்தைத் தரலாம்!

வெள்ளத்துல கார்கள் போச்சே! ஜிவி.பிரகாஷ், ஹாரிஸ்-நாடு முழுக்க நஷ்டக் கணக்கா இருக்கும் போது..?

போட்டு போட்டு புரட்டியெடுத்த வெள்ளம், பங்களாவாசிகளையும் கூட விட்டு வைக்கவில்லை. ஏழைக்கு ஈராயிரத்து சொச்சம் என்றால், பணக்காரர்களுக்கு பல லட்சங்கள் லாஸ். சிலருக்கு கோடிகளை தாண்டியும் நஷ்டம். கண்ணீரை அடக்கிக் கொண்டு, “கஷ்டம் எல்லாருக்கும்தானே?” என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறவர்கள் ஓ.கே. ஆனால் எழவே முடியாமல் போனவர்கள்தான் ஏராளம் ஏராளம்.

நாடு முழுக்க நஷ்டக் கணக்கா இருக்கும் போது, நாம எங்கய்யா போய் புலம்பறது? என்று கர்சீப்பால் வாயை அடைத்துக் கொண்டு விசும்புகிறார்களாம் ஜி.வியும் ஹாரிசும். ஏன்? இவர்கள் இருவருமே கார் பிரியர்கள். ஒரு காரோடு திருப்தியடையாமல் நான்கு அல்லது அதற்கு மேலும் என்று ஆசைப்பட்டவர்கள். அதனால்தான் இப்போது கண்ணீர். ஜி.வி.பிரகாஷின் விலை உயர்ந்த நான்கு கார்கள் முழுவதுமாக மூழ்கி ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டதாம். இன்ஷியூரன்ஸ் நிறுவனங்கள்தான் பேரதிர்ச்சியில் இருக்கிறதே… ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களுக்கு சேதம் என்றால், அவர்களும் என்ன செய்வார்கள்? முடிந்தவரை கொடுத்துவிட்டு மிச்சத்தை ஏப்பம் விட பார்க்கிறதாம் அவை!

இன்ஷியூரன்சும் முறையாக பெற முடியாமல் தவித்து வரும் இருவருக்கும் இந்த கார் போன வகையிலேயே சில கோடிகள் வரைக்கும் லாஸ் ஆகும் என்கிறது தகவல்கள். ஜிவிக்கு நான்கு கார்கள். ஹாரிசுக்கு இரண்டு கார்கள். வெளியே சொல்ல முடியாமல் வேதனைப்படும் இவர்களை போல எத்தனை சினிமா பிரபலங்களோ, யார் கண்டது?

தாரை தப்பட்டைக்கு ஏ! 18 இடங்களில் கட்? என்ன பாலா இப்படி..?

“ஏனென்றால் சப்ஜக்ட் அப்படிங்க?” என்கிறது ஏ-ரியா! ஒரு கரகாட்டக்காரிக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் நடுவேயிருக்கும் லவ்தான் கதை. ஏற்கனவே தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நாம் பார்த்த லவ்தான் இந்த படத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஊரே ஒரு மாதிரி சிந்தித்தால், பாலாவின் மூளைக்குள் மட்டும் வேறொரு ரசவாதம் நடந்திருக்கும். ஆக, தாரை தப்பட்டை வேறொன்றை சொல்லும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

கரகாட்டம் என்பதே நள்ளிரவு ஆட்டம்தானே? ஊர் அடங்கி, குழந்தை குட்டிகளெல்லாம் தூங்கிய பின் தெரு தெருவாக ஆடிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் சில டயலாக்குகள் கூடியிருக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயாக்ராவை ஊட்டி ஊட்டி வீட்டுக்குள் அனுப்பும். இப்படி கால காலமாக நடந்து வரும் வழக்கத்தை இந்த படத்தில் பாலா எப்படி கையாண்டிருப்பார்?

அதைதான் லேசு பாசாக உணர்த்தியிருக்கின்றன மேற்பட் கட்டுகள்! சென்சார் அமைப்பினர் சில வசனங்களை நீக்க சொல்லி கேட்டார்களாம். அப்படி நீக்கினால் படத்திற்கு யு சான்றிதழ் தருவதாகவும் சொன்னார்களாம். பாலாதான் பிடிவாதமாக, ஒரு இடத்திலும் கை வைக்க விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அப்படியிருந்தும் 18 இடங்களில் கட் என்கிறார்கள். இந்த கட்டுகள் அத்தனையும் காட்சியிலிருந்த ஆபாசத்திற்காக.

நிலைமை ஓரளவு ‘கட்’டுக்குள் அடங்கிவிட்டது. இருந்தாலும் படம் பார்க்கிற ரசிகர்களுக்கு விட்டு விட்டு கொதித்தால் அதற்கு சென்சார் மட்டும் பொறுப்பல்ல!

தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு


1. இளமைப் பருவம்

காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர்.

வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை.

வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்தார். உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகள் உடைத்துக் கொடுத்தார். ஆமணக்கு விதையினின்று எண்ணெய் எடுத்து அதைக் காசாக்கினார். தம்பதிகள் இருவருமே சோம்பல் இன்றிப் பாடுபட்டார்கள். ஓய்வு இன்றி உழைத்தார்கள். நாளடைவில் கொடிகட்டிப் பறந்தார். சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் வறுமை அவர்களை விட்டு அகன்றது. செல்வமும் செழிப்பும் சேர்ந்தது.

உழைப்பினால் உயர்ந்த உன்னத தம்பதிகள் அவர்கள்.

வணிகப் பெருந்தகை வைணவ மத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பக்திப் பெருக்கினால் இராமாயணம், பாகவதம் போன்ற கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தமது இல்லத்திலேயே பாகவதர்களுக்கும், சாதுக்களுக்கும் விருந்து அளித்து அவர்களை வணங்கி மகிழ்ந்தார்.

திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தைபேறு கிட்டவில்லை. கோயில்களுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டார்கள். இருவரும் விரதங்கள் மேற்கொண்டார்கள். அவர்களது பக்தி மேலும் வளரலாயிற்று.

இந்தச் சூழலில் 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு அகமகிழ்ந்தார்கள். அதன் பிறகு 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரண்டாவது மகன் பிறந்தான். அந்த மகனுக்கு இராமசாமி என்று பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

இராமசாமிக்கு இரண்டு தங்கைகள் உண்டு. அவர்கள் பொன்னுத்தாய -ம்மாள், கண்ணம்மாள் ஆவார்கள்.

இராமசாமி சின்னபாட்டி வீட்டில் வளர்ந்தான். பாட்டி அவனை தத்துப்பிள்ளையாக தந்துவிடுமாறு வெங்கட்ட நாயக்கரிடம் கேட்டார். அவர் தர மறுத்துவிட்டார். என்றாலும் இராமசாமி அந்தப் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.

பாட்டி வீட்டில் இராமசாமி அடித்த லூட்டிகள் ஏராளம். பாட்டி கண்டிப்புடன் வளர்க்காமல் கனிவுடன் மட்டுமே வளர்த்தார்கள். தாய்ப்பால் கிடையாது. தினமும் இராமசாமி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தான். பாட்டி வீட்டில் பெரும்பாலும் பழையதும், சுண்டக்கறியும்தான். உணவாக்க் கிடைத்தது. தின்பண்டம் வாங்கித்தின்பதற்கு வழி போதாது.

இராமசாமிக்கு ஆறுவயது நிரம்பியது. பாட்டியின் வீட்டில் வாழ்ந்த பையன் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றித் திரிந்தான். யாருக்கும் அடங்காதவனாக மாறினான். பெற்றோர்கள் மனம் வருந்தினர். எனவே இராமசாமியை சின்னப்பாட்டி வீட்டினின்று அழைத்து வந்துவிட்டார்கள்.

இராமசாமியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான்.

இராமசாமியைத் திருத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் அவனிடம்,

“இனி பிள்ளைகளை அடிப்பதில்லை” என்று ஆயிரம் தடவை எழுதிவா என்று தண்டனை வழங்குவார். இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல நூற்றுக்கணக்கான தடவைகள். இராமசாமி தண்ட எழுத்து வேலை (இம்போசிசன்) எழுதியது உண்டு.

இராமசாமி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இடைவேளையின் போது தண்ணீர் குடிப்பதற்காக ஆசிரியர் வீட்டுக்கு போவதுண்டு. அவர்கள் வீட்டில் தண்ணீரை அண்ணாந்து குடிக்கச் சொல்வார்கள். அப்படிக் குடிக்கும்போது மூக்கில் தண்ணீர் சிந்தி இருமல் வந்துவிடும். சட்டை முழுவதும் நனைந்துவிடும். அதுமட்டுமல்ல, அவன் தண்ணீர் குடித்த தம்ளரை கழுவி எடுத்துச் செல்வார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் அவன் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் செல்வதில்லை.

பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் சிறுவன் இராமசாமி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள். மற்றவர்கள் மாமிச உணவு சாப்பிடுபவர்கள். எனவே அங்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தடை போட்டிருந்தனர் பெற்றோர். முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டில் தண்ணீர் குடித்தது அவன் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்த திண்பண்டங்களையும் அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான்.

செய்தி அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. செந்தேளை கொட்டியதுபோல் அவர்கள் துடித்துப் போனார்கள். கோபத்தால் முகம் சிவந்து போனார்கள். சிறுவன் இராமசாமியை அடித்தார்கள். மேலும் கடுமையாக தண்டனை வழங்கினார்கள்.

இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டது. இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன. இதைத் தூக்கிச் சுமந்து அவன் பள்ளி செல்ல வேண்டும். இப்படி பதினைந்து நாட்கள் விலங்கு பூட்டப்பட்டு துன்பத்திற்கு ஆளானான் இராமசாமி.

இராமசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தான். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பள்ளியில் படித்தான். படிப்பறிவு வளரவில்லை; பகுத்தறிவு வளர்ந்தது.

பத்தாவது வயதிலேயே பகவானைப் பணிபவர்களைப் பார்த்து பரிகசிக்கத் தொடங்கினான் அவன். ஆனால், தந்தையைப் போல் தொழிலில் நாட்டம் இருந்தது. பார்த்தார் தந்தை; சிந்தித்தார். பிறகு சிறுவனின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவனைத் தொழிலில் பழக்கினார். பன்னிரண்டாவது வயதிலேயே ‘தரகு’ வர்த்தகத்தில் அவன் தலைசிறந்து விளங்கினான்.

கடையில் அவன் சுறுசுறுப்பாக வேலை செய்தான்.

மூட்டைகளுக்கு விலாசம் போடிவது, சரக்குகள் ஏலம் போடிவது இவைதான் இராமசாமி செய்த வேலை ஆகும்.

சிறுவன் பேச்சில் குறிப்பாக வியாபாரப்பேச்சில் கெட்டிக்காரன். யாரிடமும் விவாதம் செய்து வெற்றி பெறுவான். அவன் வீட்டில் எப்போதும் சாமியார்கள், புராணக்கதை சொலுபவர்கள். பிராமணர்கள், சமயப் புலவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் மகிழும் வண்ணம் விருந்து தடபுடளாக நடந்துகொண்டேயிருக்கும. இது சிறுவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் அவர்கள்மீது வெறுப்பு வளர்ந்தது. அதன் காரணமாக கடவுள்மீது வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது. கடவுள் இல்லை. ஆனால் இந்தக் கூட்டம் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணினான்.

எல்லாம் கடவுள் செயல். தலைவிதிப்படிதான் நடக்கும் என்பதை அவன் எதிர்த்தான். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்வது அவன் வழக்கமாயிற்று.

இராமசாமி தன் கடைக்குச் செல்லும் வழியில் இராமநாத ஐயர் என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைகொண்டவர். இராமசாமி அவரை மடக்க எண்ணினான். ஒரு நாள் அவர் கடையின் முன்பக்கம் நிழலுக்காகப் போடப்பட்டிருந்த தட்டியின் மூங்கில் காலைத் தட்டிவிட்டான். மூங்கில் தட்டி ஐயரின் தலையில் விழுந்துவிட்டது.

“ஏன் இப்படி செய்தாய்?” என்று இராமநாத ஐயர் கோபித்துக் கொண்டார்.

இராமசாமி புன்னகை செய்தான். தலைவிதிப்படி நடந்துள்ளது, எனவே தட்டி உங்கள் தலையில் விழுந்துவிட்டது. அப்புறம் “என்னை ஏன் திட்டுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிட்டான் பன்னிரண்டு வயது சிறுவன் இராமசாமி.

பள்ளியில் படிக்கும்போது பிற மத்த்தினர் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காகவும், தின்பண்டங்கள் சாப்பிட்டதற்காகவும் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சுயமரியாதைச் சுடராக, பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடுப்பதற்காக அன்று அந்தச் சிறுவயதில் விலங்கு பூட்டப்பட்டாரோ என்னவோ?

எப்போதும் பஜனையும், பக்திப் பாடல்களும், ஆழ்வரார் பாசுரங்களும், கதா காலட்சேபங்களும் நிறைந்த இல்லத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கேட்டு மக்களை சிந்திக்கச் செய்த சமூக சீர்திருத்தவாதியாக அந்தச் சிறுவன் பரிணாமித்தான்.

அந்தச் சிறுவன்தான் ‘வெண்தாடி வேந்தர்’ என்று போற்றப்பட்டவர். விவேகமும், வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

தேரோடும் வீதிகளில் சுற்றித் திரிந்த அந்தப் பையன்தான்
ஊரோடு ஒத்துப்போகாமல், உயரிய சிந்தனைகளை
முன்வைத்து தமிழர்களின் தலைவராய்
உயர்த்தான் – அவர்தான் பெரியார்; ஈவெ.ரா. பெரியார்.

பள்ளி வாழ்க்கையைப் போல் அவரது பகுத்தறிவு வாழ்க்கையும் சுவையானது.

2. இல்லற வாழ்கை



“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.

பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.

“சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.

வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.

வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.

கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.

வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.

விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.

இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.

நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.

நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.

“மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.

வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.

போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.

அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!

பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.

கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.

பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.

ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.

அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.

பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.

நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.

பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.

சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.

நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.

இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!

பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.

திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் -

வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.

பெரியார் துறவியானார்!

இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

எந்தக் குறையும் இல்லை.

செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்

அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

விஜய் அவர்களே-அடுக்குமொழி பேசுகிறவர்களை சேர்க்காமலிருப்பது -மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்!

போன வருஷத்தில் புலியடித்து அதனால் கிலியடித்துப் போயிருந்தீர்கள். ராசிநாதன் சற்று பலமாக இருப்பதால் இந்த வருடம் தெறிக்க விடுகிற யோகம் வரும். பயண காலங்களில் பெண் தெய்வங்கள் சில உங்களுக்கெதிராக உக்கிர கதியில் இயங்கி வருவதால், அந்த தெய்வங்களின் காந்த பலம் அதிகம் வீசும் போயஸ் பகுதியை தவிர்ப்பது நல்லது. அடுக்குமொழி பேசுகிறவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது உங்களை பார்த்து மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்! இந்த வருஷமாவது கட்சிக் கொடி தைக்கலாம் என்று கவர்ச்சி திட்டத்துடன் அழைக்கும் டெய்லர்களின் சகவாசத்தை இன்னும் நாலைந்து வருஷத்துக்கு ஒத்திப் போடுவது நலம். ஜல ராசிப்படி உங்களுக்கு தோஷம் வந்து சில வாரங்கள் ஆகியிருப்பதால், கோட்டூர்புரம், அடையார், முடிச்சூர் பகுதிகளை காரில் சுற்றி வந்தாவது வணங்கி பாவம் நீக்கிக் கொள்ளலாம். தோஷ நிறம் மஞ்சள் கருப்பு. தவிர்க்க வேண்டிய திசை வண்டலூர்.

நாய்க்கு எப்படி பேண்ட் போடணும்.... நெட்டைக் கலக்கும் ஒரு 'அடடே.. அயயே' விவாதம்!

நாய்க்கு எப்படி பேண்ட் போட வேண்டும் என்பது தான் தற்போது இணையத்தில் 'பயங்கர' பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் கருத்து என்றால் நம்புவீர்களா..? நீங்கள் நம்பாவிட்டாலும் அது தாங்க உண்மை... பேசாம நம்பிருங்க.

ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் எனச் சொல்வதுண்டு. அதுபோல், நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது, சமயங்களில் அவற்றில் இருந்து விலகி நெட்டிசன்கள் வித்தியாசமாக எதையாவது பேசி, வாதம் (சில நேரங்களில் வதம்) செய்து கொண்டிருப்பார்கள்.

இப்போதும் அப்படித்தான், நான்கு கால்களைக் கொண்ட நாய்க்கு எப்படி பேண்ட் போட்டு விடுவது என்பது அவர்களது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

செல்லப்பிராணி...

நான்கு கால் உயிரினமான நாய், பல வீடுகளில் செல்லப்பிராணிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மனிதர்களை விட நாய்க்கு பலர் முக்கியத்துவம் அளிப்பதும் உண்டு.

ஆடை அணிவித்து...

செல்லப் பிராணிகள் மீது கொண்ட அளவில்லாத பாசத்தால் அதற்கு உடை போட்டுப் பார்த்து அழகு பார்ப்பவர்களும் உண்டு. அவர்களுக்குத் தான் தற்போது இந்த முக்கியமான சந்தேகம் வந்துள்ளது.

நாலு காலுக்கும்...

அதாகப் பட்டது, நாய் நான்கு கால் உயிரினம் தான். எனவே, அதன் நான்கு கால்களுக்கும் சேர்த்து பேண்ட் அணிவிக்க வேண்டும் என்கிறது ஒரு குரூப்.

2 காலுக்குப் போதும்...

ஆனால், நான்கு கால் உயிரினமாக இருந்தாலும் நாய் மனிதர்களைப் போலவே பின்னங்கால்களால் நேராக நடக்கும் திறமை கொண்டது. எனவே அதன் பின்னங்கால்களுக்கு மட்டும் பேண்ட் போட்டால் போதும் என்கிறது மற்றொரு குரூப்.

புதிய போட்டோக்கள்...

இப்படியாக அனல் பறக்கும் விவாதம் ஒன்று இணையத்தில் நடந்து வருகிறது. நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருபவர்கள் சிலர் தங்கள் நாய்க்கு ஆடை அணிவித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இப்படிப் போட்டா...

அதில் ஒருவர் கமெண்ட் பகுதியில் மனிதனுக்கு பேண்ட் எப்படிப் போடுவீங்க. அதுபோலத்தான் நாய்க்கும் என்று படத்தோடு போட்டு கலகலப்பைக் கூட்டியுள்ளார்.

அடிக்கடி ஆய் போனா..

இன்னொருவர் உங்க நாய் அடிக்கடி ஆய் போவதாக இருந்தால் இப்படிப் போட்டா பெஸ்ட் என்று பேன்ட்டை சற்று பின்னால் இறக்கியபடி படம் போட்டு காட்டி பயமுறுத்தியுள்ளார்.

தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார்-மேற்கத்திய இசை குரு- தன்ராஜ் மாஸ்டர்

ஒரு படத்திற்கு கூட இசை அமைக்காத  தன்ராஜ் மாஸ்டரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா...
சென்னை மயிலாப்பூரை ( பூர்வீகம் தஞ்சாவூர் ) சேர்ந்த தன்ராஜ் மாஸ்டர் தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் எனப்படும் மேற்கத்திய இசை குரு.
இளையராஜா ,கங்கை அமரன் , AR ரஹ்மான் , தேவா , வித்யாசாகர் , மலையாள இசை அமைப்பாளர் ஷ்யாம் ... எல்லோரும் அவரின் பெருமைக்குரிய சீடர்கள்...
இவர்கள் அனைவரும் திரை இசைக்கான அடிப்படை பயிற்சி  , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றார்கள். தன் முதன்மை சீடர் ராசையாவை ராஜா என்றே அழைத்தார். பிறகு அன்னகிளியின் போது பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என மாற்றினார்.ரஹ்மான் இவரிடம் அடிப்படை இசை பயின்ற பிறகு லண்டன் ட்ரினிடி இசை பள்ளியில் மேல் படிப்பை படித்தார்.

இசை குறித்து இவர் எழுதியுள்ள இரண்டு நூல்கள் இன்று இசை பயிலும் அனைவருக்கும் பால பாடம் ஆகும். இசை விதி 180 டிகிரி ,  பிரம்ம மேள பிரமாணம்’ என்ற அந்த இரு நூல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

தன்ராஜ் மாஸ்டர் சார்பாக அவரின் சிஷ்யர் இளையராஜாவின் இசையில் இருந்து ஒரு பாடல் ..
_______________________________

 பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசை கிளியே
வந்தாயே பண்ணோடு ...

நான் பிறந்த நாளில்
இது நல்ல நாளே ..

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...

கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ

கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ ... தூதானதோ... .
_____________________________________


படம் : கிழக்கே போகும் ரயில்
பாடல் : கண்ணதாசன்
பாடகர் : மலேசியா வாசுதேவன்,S .ஜானகி

'துப்பாக்கி'யை தொடர்ந்து‘அகிரா’விலும் கலக்கப்போகும் - முருகதாஸ்

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றிபெற்றது. மும்பையில் படமான துப்பாக்கியில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.

இன்னமும் மும்பை செண்டிமெண்டை மறக்காத முருகதாஸ், அடுத்து மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ள படத்தையும் மும்பையிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இப்போது சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், ராய் லட்சுமி அகியோர் நடிக்கும் ‘அகிரா’ படத்தை இயக்கிவரும் முருகதாஸ், இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மகேஷ்பாபு படத்தை தொடங்குவார் என தெரிகிறது.

துப்பாக்கியில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தான் இந்த படத்திலும் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை வருஷமானாலும் திருந்தாத தமிழ்சினிமா காட்சிகள்!!!

தமிழ் சினிமாவுக்கென்று தவிர்க்க முடியாத சில காட்சிகள் உண்டு. கொஞ்சம் ரீல் ஓட்டலாமா?

உருட்டுக் கட்டை அடி காட்சிகள்:

தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு காட்சியைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை சுந்தர்.சி அவர்களையே சேரும். ஆமா பாஸ், தலையில் உருட்டுக் கட்டையால் அடித்தால் மயக்கம் வரும் என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாச்சே அவர். கல்யாணத்தை நிறுத்தும் காட்சியில் மாப்பிள்ளையை கடத்தணுமா அல்லது பெண்ணைக் கடத்தணுமா என பக்காவா ஸ்கெட்ச் போட்டு, எடுடா அந்த உருட்டுக் கட்டையை என்று ஆளாளுக்குக் கட்டையும் கையுமாகக் கும்பல் கும்பலா சுத்துவாங்க. போற போக்கைப் பார்த்தா க்ளோராஃபார்முக்கு வேலையே இருக்காது போல!

மொட்டை மாடிக் காட்சிகள்:

ஹீரோ மொட்டை மாடியில் நின்னுக்கிட்டு காத்தாடிக்கு மாஞ்சா போடுறதோட சேர்த்து தன் லவ்வுக்கும் மாஞ்சா போடுவார். மணிக்கணக்கா கடலை போடுவதற்கு ஹீரோ, ஹீரோயினுக்கு ஏற்ற இடமும் அதுதான். ஒருவேளை அந்த ஹீரோ தனுஷா இருந்தா புறாவை வைத்தே மொட்டை மாடியிலிருந்து லவ்வை டெவலப் பண்ணுவார். பெரும்பாலும் பாட்டுப் பாடும் ஹீரோக்களுக்கு மட்டும்தான் மொட்டைமாடி வாடகைக்கு விடப்படும். முன்பு முரளி, சின்னிஜெயந்த், தாமு போன்றவர்கள் தங்கியிருந்தாங்க. அவங்க காலி பண்ணிட்டுப் போனதுக்கு அப்புறம் சந்தானம், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் போன்ற புதிய பேச்சுலர்கள் வாடகைக்கு வந்திருக்காங்க. சந்தானம் குடியிருந்தா, அங்கே குடி குடியைக் கெடுக்கும் ஸ்க்ரோலிங், சென்ஸார் போர்டைக் கேட்காமல் ஆட்டோமேட்டிக்கா அதுவாகவே ஓடும் பாஸ்!

தூக்குப் போட்டு சாகும் காட்சிகள்:

அது ஏன் பாஸ், தூக்குப் போடுறவங்க எப்போதும் ஒழுங்கா கதவை சாத்தவே மாட்டேங்கிறாங்க. காப்பாத்த யாராவது வந்து இரண்டு தட்டு தட்டினாலே உடனே படக்குனு திறந்திடுது. இனிமேலாவது கவனமா பூட்டிட்டு ட்ரை பண்ணுங்க. அப்படியும் சில படங்களில் கதவைத் திறக்க முடியாதபோது கேமராவைக் கொண்டுபோய் அவருடைய காலுக்கு அடியில் வைத்து கால் துடிப்பதை டெர்ரர் பேக் ரவுண்ட் மியூஸிக்கோடு காட்டி பார்க்கிறவங்க பி.பி-யை எகிற வைப்பாங்க.

விஷம் குடிக்கிற காட்சிகள்:

இதுதான் செம காமெடி பாஸ். பாட்டில் மேலேயே விஷம்னு சிகப்பு கலர்ல தமிழ்லேயே எழுதியிருக்கும். ஹீரோயின்களுக்கு மட்டுமே இது கொடுக்கப்படும். ஆனா அதை அவ்வளவு சீக்கிரமா வில்லன்கள் கொடுக்க மாட்டாங்க. சேர்ல உக்கார வெச்சு ஏன் இந்த விஷத்தை உனக்குக் கொடுக்கிறோம்னு ஒரு காரணத்தைச் சொல்லி அரைமணி நேரம் ஃப்ளாஷ்பேக் போயிட்டு வந்துதான் வாயிலேயே ஊத்துவாங்க. அந்த விஷத்தை வேணாம் வேணாம்னு சொல்லிக்கிட்டே சப்புக்கொட்டிக் குடிப்பாங்க நம்ம ஹீரோயின்கள்!

துப்பாக்கிச் சண்டைக் காட்சிகள்:

இது இல்லாத தமிழ் சினிமாவா? ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஹீரோ சுடும் தோட்டாக்கள் அனைத்தும் குறி தவறாமல் வில்லன்கள் மேலே படும். ஆனால் வில்லன்கள் என்னதான் கிலோ கணக்கில் தோட்டாக்களை லோடு செய்து சுட்டாலும் ஒரு தோட்டாகூட ஹீரோ மேலே படாது. ஹீரோ முதலில் நான்கு பேரை மட்டும் அப்படி சுட்டுக் கொன்றுவிட்டு. மீதி இருப்பவர்களைக் கைகளாலேயே அடித்து உதைப்பார். க்ளைமாக்ஸ் நெருங்கும்போது மீண்டும் துப்பாக்கியைக் கையில் எடுத்து விடுவார். வில்லனும் துப்பாக்கியோடு அவர் எதிரே நிற்க இரண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் சுடுவார்கள். இருவர் துப்பாக்கியிலும் தோட்டா இருக்காது. உடனே ஹீரோ ‘உன்னைக் கொல்ல எனக்கு எதுக்குடா துப்பாக்கி என் கையே போதும்’ என முஷ்டியை முறுக்குவார். கோ இன்சிடென்டுங்கிறது இதுதானா பாஸ்!

கோர்ட் காட்சிகள்:

இந்தக் காட்சிகளில் ஜட்ஜ், வக்கீல்களைவிட முக்கியமானவர்கள் கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்க்க உட்காந்திருக்கும் பொதுமக்கள் என்கிற ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள்தான். வக்கீல் காமெடியா பேசும்போது கூட்டமா சேர்ந்து சிரிக்கணும். அதுக்கு ஜட்ஜ் ஐயா ஆர்டர் சொல்லும்போது எல்லாரும் ஒரே நேரத்தில் அமைதியாகணும். வக்கீல் முக்கியமான ஒரு பாயின்ட்டைப் பிடிச்சு எதிரணியை கலா மாஸ்டர் ரேஞ்சுக்கு கிழி கிழினு கிழிக்கும்போது ‘சூப்பர் தலைவா’ என கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் எழுந்து நின்று கத்த வேண்டும். இப்படி ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கு பாஸ் அவங்களுக்கு. எத்தனை ஷங்கர் படம் பாத்திருப்போம்!

மீடியாக்கள் வரும் காட்சிகள்:

நடந்த சம்பவம் பற்றி விளக்கமாக, விரிவாக மீடியாவிடம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பார் போலீஸ் கமிஷனர். இடையில் ஒரு பத்திரிகைகாரர் வீம்புக்கு ஒரு கேள்வியைக் கேட்டு அவரை வம்புக்கு இழுக்க, கேப்டன் மாதிரி அவர் கடுப்பாகி நோ மோர் கொஸ்டீன்ஸ் என்று மைக்கை தூக்கியடித்துவிட்டுக் கிளம்புவார். இருந்தாலும் அவர் பின்னாடியே மைக்கோடு ‘சார் சார்’னு துரத்திக்கிட்டே ஓடுவாங்க மீடியா பீப்பிள்ஸ். ஆனா அதுக்கு முன்னாடிதான் அரைமணி நேரம் அந்த விஷயத்தைப் பற்றி விளக்கமா சொல்லியிருப்பார் கமிஷனர். இருந்தாலும் விடாம அவரைத் துரத்துவாங்க. அப்படியே பழகிட்டாங்க பாஸ்!

ரயில்வே லெவல் கிராஸிங் காட்சிகள்:

தமிழ் சினிமா, ஹாலிவுட்டையே மிஞ்சிவிடும் அளவுக்கு அதிசயங்கள் நடக்கும் இடம் பாஸ் இது. வில்லன்கள் முதலில் ஓட ஹீரோ அவர்களை விரட்டிக்கொண்டு பின்னாலேயே வருவார். வில்லன்கள் முதலில் லெவல் கிராஸிங்கைத் தாண்டி விடுவார்கள். அடுத்து ஹீரோ தாண்ட நினைக்கும்போது திடீரென எந்தப் பக்கத்திலாவது இருந்து ஒரு ரயில் வந்து குறுக்கே பாயும். ரயில் வந்தா நம்ம ஹீரோ சும்மா இருப்பாரா, அவர்தான் ஆக்‌ஷன் ஹீரோவாச்சே. பக்கத்துல நிற்கிறவன் பைக்கைக் கடன் வாங்கி ஒரே தாவா தாவி இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவே பாய்ந்து மைக்ரோ செகண்டில் அடுத்த பக்கத்தில் வெளிவந்து விடுவார். சில சமயங்களில் ரயிலுக்கு மேலே அந்தரத்தில் பறந்து குரளி வித்தை காட்டவும் செய்வார்!

தழும்புகளை மறைக்க வேண்டுமா..? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க..

தழும்புகளை மறைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை கொண்டு மாஸ்க் போடுங்க...

நம் உடலில் உள்ள மிகவும் மோசமான மற்றும் தேவையற்ற பகுதிகளாகவே தழும்புகள் உள்ளன. உடலில் காயம் அல்லது வெட்டு ஏற்பட்ட இடமம் என எங்கு வேண்டுமானாலும் தழும்புகள் ஏற்படும். விபத்து, தொற்று அல்லது அரிப்பினால் பாதிக்கப்பட்டு காயம் உருவாகி தோல் புதிதாக உருவாகி இருக்கும் இடம் தான் தழும்பு என்று அழைக்கப்படுகிறது. புதிதாக தோல் வளர்ந்த இடத்தில் புரோட்டினின் அமைப்பு மாறுபட்டு இருப்பதால், அந்த இடம் மட்டும் வித்தியாசமாகவும், சொரசொரப்பாகவும் தோன்றும்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தழும்புகள் சற்றே சாதாரணமாக காட்சியளிக்கத் துவங்குகின்றன. ஆனால், காலம் செல்லச் செல்ல இவை வளருவதில்லை. இங்கு தான் நீங்கள் சில சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். தழும்புகளை நீக்குவதற்காகவே பல இரசாயன மருந்துகள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே பலனளிக்கும் மற்றும் பக்க விளைவுகளும் தோலில் ஏற்படும். எனவே, இயற்கையான வழிமுறைகளை கையாண்டு இந்த தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

பல்வேறு மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு தழும்புகளுக்கு சிகிச்சை செய்யலாம். இன்று, நாம் பழ ஜூஸ்களைக் கொண்டு எப்படி தழும்புகளை நீக்கலாம் என்று படிக்கப் போகிறோம். தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், தோலுக்கு மிகவும் உகந்ததாகவும் பழங்கள் உள்ளன. அதே போல, பழ இரசங்களும் மிகவும் நன்மை தருபவையாகவும் மற்றும் தழும்புகளை நீக்குவதற்கு உதவுபவையாகவும் உள்ளன. அது போன்ற சில ஜூஸ்களைப் பற்றி இங்கே காண்போம்.

தக்காளி ஜூஸ்

சிவந்த, சாறும், சுவையும் மிகுந்த தக்காளி ஜூஸ் தழும்புகளை திறனுடன் நீக்கவல்லது. தக்காளி சாற்றினை பிழிந்து தழும்புகள் உள்ள இடத்தில் பூசவும். 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அந்த இடத்தை கழுவவும். தோலை சமநிலைக்கு கொண்டு வரும் குணம் இயற்கையாகவே தக்காளிக்கு உண்டு. தோலில் தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்து வருவது தழும்புகளை விரட்டி விடும். மேலும், தக்காளியை பயன்படுத்துவதால் தழும்புகள் மறைவது மட்டுமல்லாமல், தோல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

எலுமிச்சை

பல்வேறு உடல் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு எலுமிச்சையில் தீர்வு உண்டும். இந்த பழத்தால் தழும்புகளையும் நீக்க முடியும். எலுமிச்சையில் உள்ள இயற்கையான பளிச்சிடச் செய்யும் ப்ளீச்சிங் தன்மை தோலை மிருதுவாக்கி, தழும்புகளை மறையச் செய்யவும், தோலை பளபளக்கச் செய்யவும் செய்கிறது. எலுமிச்சை சாற்றை நேரடியாகவும் மற்றும் முகத்தில் ஃபேஸ் ஃபேக் அல்லது பேஸ்மாஸ்க்-உடனும் சேர்த்து பயன்படுத்தலாம். எலுமிச்சை சாற்றில் இயற்கையாகவே அமிலத்தன்மை உள்ளது. எனவே இதனை உங்கள் கைகளில் எடுத்து தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து தழும்புகளை நீக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

தோலுக்கு நன்மை பயக்கும் குணத்தை கொண்டதாக ஆரஞ்சு உள்ளது. ஆரஞ்சு சாற்றை தழும்புகளில் தடவும் போது அது தோலை அந்த பகுதியில் சரி செய்து மீண்டும் அழகு பெறச் செய்கிறது. உங்கள் உடலில் ஆரஞ்சு சாற்றைத் தடவி 10-15 நிமிடங்களுக்குப் பின்னர், அதனை மிதவெப்பமான தண்ணீரில் கழுவவும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி சாற்றை சமநிலையற்ற தோல் பகுதிகளை சரி செய்வதற்கான தீர்வாக பயன்படுத்த முடியும். பிற பழச் சாறுகளை விட இது சற்றே பலன் குறைந்த முறையாக இருக்கும். எனினும், தழும்புகளை நீக்குவதில் ஸ்ட்ராபெர்ரியும் சிறந்த பலனளிக்கும் என்பதில் ஐயமில்லை. ஸ்ட்ராபெர்ரி சாற்றை தோலில் தேய்க்கும் போது அது தழும்புகளில் செயல்பட்டு, தோலை மென்மையாகவும், சுத்தமானதாகவும் மாற்றுகிறது.

தர்பூசணி

தர்பூசணி கோடைக்கு குளுமை தரும் பழம் மட்டுமல்ல, தழும்புகள் தொடர்பான தோல் பிரச்னைகளையும் தீர்க்கும் பழமாகும். நிறைய தண்ணீர் உண்ண சுவையான தர்பூசணியை தோலில் சில நிமிடங்களுக்கு நேரடியாக தடவவும். இந்த பழம் தோலில் உள்ள தழும்புகளை நீக்குவதில் சிறந்த பங்காற்றுகிறது

திரு. கமல் அவர்களே-வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால்..


நட்சத்திர பலன்கள் 2016
வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும் கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர் மூலமாகவோ கூட பேசாமலிருப்பது நல்லது. பின்பு அது பேட்டியாக வந்துவிட்டதே என்று புலம்புவதை கணிசமாக குறைக்கும். நீண்ட வருஷங்களாக பரணில் போட்டு வைத்த பழசு பட்டுகளுக்கு திடீர் மரியாதை கிடைக்கும். வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு, வாசலில் தேங்கியிருந்த குப்பை கூளங்கள் அகலவில்லையே என்று கடந்த வருஷத்தில் நீங்கள் பட்ட கவலை ராசிநாதனின் அமைதி காரணமாக மெல்ல மெல்ல மறையும். பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து சந்திரனை வழிபட்டால், நீங்கள் பேசுவதை நீங்களே புரிந்து கொள்கிற அளவுக்கு வாக்கில் நலம் கூடும்! ராசி நிறம் கருப்பு. திசை- ஈரோடு

தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்ற இளையராஜா

எல்லா வாத்தியங்களையும் வாசிக்கத் தெரிந்தவரும், பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவருமான தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா இசை பயின்றார்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

"திருச்சியில் நான் இசை அமைத்த நாடகமான ஓ.ஏ.கே. தேவரின் "மாசற்ற மனம்'' அரங்கேறிய பின், சென்னைக்குப்

புறப்பட்டோம்.அப்போது, திருமதி கமலா அவர்களிடம், "கர்நாடக இசை அல்லது வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொடுக்க யாராவது இருந்தால் சொல்லுங்கள். நான் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றேன்.

"கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. மேற்கத்திய இசை கற்றுத்தரும் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவருடைய மாணவர் ஒருவரை எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன்'' என்றார், கமலா.

அடுத்த நாள், நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மூத்த மகன் சாய்பாபா (எம்.எஸ்.வி.யிடம் கிட்டார் வாசிப்பவர்) என் ரூமிற்கு வந்தார். கமலா அவர்கள் சொன்னதன் பேரில் வந்திருப்பதாகச் சொன்னார். இசையில் புகழ் பெற்ற மாஸ்டர் தன்ராஜிடம் அழைத்துப் போவதாகக் கூறினார்.

அவசரம் அவசரமாக உடை மாற்றிக்கொண்டு அவருடன் புறப்பட்டேன். மைலாப்பூர் சாயிலாட்ஜ் 13-ம் நெம்பர் அறையில், பியானா மற்றும் பல இசைக் கருவிகள், இசை பற்றிய புத்தகங்களுடன் தன்ராஜ் மாஸ்டர் இருந்தார். இரண்டு மூன்று மாணவர்களுக்கு கிட்டாரில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில், மாணவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, என்னை மாஸ்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சாய்பாபா.

"இரண்டு நாள் கழித்து, காலை பத்து மணிக்கு வரச்சொல். பாடத்தை ஆரம்பிக்கலாம். வரும்போது, ஒரு நோட்டுப் புத்தகம், ஊதுபத்தி, தேங்காய், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிவர வேண்டும்'' என்று சாயிபாபாவிடம் தன்ராஜ் மாஸ்டர் கூறினார்.

`சரி' என்று கூறிவிட்டு, நானும், சாய்பாபாவும் அங்கிருந்து புறப்பட்டோம்.

நான் ரூமுக்குச் சென்றதும், பாரதி, பாஸ்கர் இருவரிடமும் நடந்ததைக் கூறி, "இனி இசை கற்பதற்கான பீஸ், நமது பட்ஜெட்டில் சேருகிறது. அதற்கு வேண்டிய நிதி ஒதுக்க வேண்டியது தலைவர்களின் பொறுப்பு'' என்றேன், சிரித்துக்கொண்டே.

பாடம் தொடங்கும் நாள் வந்தது. நோட்டுப்புத்தகம், பூ, தேங்காய் - பழம், ஊதுபத்தி, கற்பூரம் எல்லாம் வாங்கிக்கொண்டேன். குருதட்சணையாக பணம் வைக்க வேண்டும் என்று சாய்பாபா கூறியிருந்ததால், தட்டில் 25 ரூபாய் வைத்து, மாஸ்டரிடம் கொடுத்தேன்.

தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டவுடன், "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார், மாஸ்டர்.

"ராஜையா'' என்றேன்.

"அதென்ன ராஜையா! இன்று முதல் உன் பெயர் ராஜா!'' என்றார், தன்ராஜ் மாஸ்டர்.

பெயர் மாற்றத்தை இவ்வாறு வெகு எளிதாகச் செய்துவிட்டார்.

பிறகு நோட்டுப் புத்தகத்தை திறந்து, "7'' என்ற எண்ணை, பட்டையடிக்கும் ஒரு பேனாவால் பச்சை மையில் எழுதினார். அதன்பின் ஏழுசுரங்களை எழுதிக் காட்டினார்.

என் முதல் ஆசானின் கால்களைத் தொட்டு வணங்கினேன். அப்போது, என்னை அறியாது என் சுயமரியாதைக் கொள்கை விலகிவிட்டிருந்தது.

சரி; மேலே என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் வந்துவிட்டார்கள்.

மாஸ்டர் என்னைப் பார்த்தார்.

"இன்றைக்கு என்ன கிழமை?''

"வியாழன்!''

சரி; நீ போய்விட்டு, ஞாயிற்றுக்கிழமை வா!'' என்றவர், சற்று யோசித்துவிட்டு, "வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை ரொம்பக் கூட்டமாக இருக்கும். திங்கட்கிழமை வந்துவிடு!'' என்றார்.

`அடடா! இன்னும் நமக்கு நேரம் வரவில்லை போலிருக்கிறதே!' என்றபடி திரும்பினேன்.

அவர் கூறியபடி திங்கட்கிழமை போனேன். `இன்றைக்காவது நிறைய பாடம் எடுப்பார்' என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அன்றைக்கும் அரை மணி நேரம்தான். மீண்டும் அடுத்த வாரம் வருமாறு சொன்னார்.

"சார்! எனக்கு ஒரு வேலையும் இல்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறேனே!'' என்றேன்.

"ஊகூம். அது ரொம்ப கஷ்டம். தினமும் ஒவ்வொரு வாத்தியத்திற்கும் நிறைய மாணவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு இடையில், உனக்கு மட்டும் தினமும் பாடம் எடுக்க முடியுமா? .... நான் பிறகு யோசித்துச் சொல்கிறேன்!''

"சார்! நான் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே!''

"உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?''

"மாதம் 25 ரூபாய்?''

"சரி! சரி!''

- இவ்வாறு கூறிய மாஸ்டர் பிறகு என்ன நினைத்தாரோ! "சரி நீ வேண்டுமானால் தினமும் வந்து போ! பாடத்திற்காக அல்ல. சும்மா, எனக்கு வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டார்.

"ஓ! சம்மதம் சார்!'' என்றேன்.

பொதுவாக, சினிமா உலகில் உள்ள எந்த இசைக் கலைஞரிடமும், "யாரிடம் பாடம் கற்றுக்கொண்டாய்?'' என்று கேட்டால், "தன்ராஜ் மாஸ்டரிடம்!'' என்றுதான் கூறுவார்கள். அவ்வளவு திறமை பெற்றவர். அவர் பெயரைச் சொல்லாதவர்கள் எவரும், எந்த இசை அமைப்பாளர் குழுவிலும் இடம் பெறமுடியாது.

"மங்கம்மா சபதம்'', "சந்திரலேகா'' முதலான ஜெமினியின் படங்களின் வாத்தியக் குழுவில் முக்கிய இடம் வகித்தவர்.

தன்ராஜ் மாஸ்டரிடம் வயலின், கிட்டார், பியானோ, ஹார்மோனியம், புல்லாங்குழல், பேஸ் கிட்டார், அக்கார்டின் முதலான வாத்தியங்களை கற்றுக்கொள்ள பல மாணவர்கள் வருவார்கள். எனக்குப்பாடம் இல்லாத நேரத்தில்கூட இவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்த்து, அந்தந்த வாத்தியங்களின் தனித்தன்மையைத் தெரிந்து கொண்டேன்.

ஒருநாள், நானும், மாஸ்டரும் மட்டும் இருந்தோம்.

"நீ ஹார்மோனியம் வாசிப்பேன் என்று சொன்னாய் அல்லவா? எங்கே, இந்த பியானோவில் ஏதாவது வாசி!'' என்று கூறினார், மாஸ்டர்.

எனக்கு ஒரு நிமிடம் ஷாக். என்றாலும், அவர் இல்லாத நேரங்களில் சில சினிமாப் பாடல்களை பியானோவில் பிராக்டிஸ் செய்து வைத்திருந்தேன். எனவே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எம்.எஸ்.வி. அவர்கள் இசை அமைத்திருந்த "என்ன என்ன வார்த்தைகளோ...'' என்ற பாடலை பியானோவில் வாசித்தேன்.

நான் வாசித்துக்கொண்டிருந்தபோதே சில மாணவர்கள் வந்துவிட்டார்கள். வாயைத் திறந்தபடி, ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள்.

அவர்கள் முக பாவத்தை கவனித்த மாஸ்டர், அவர்கள் என் வாசிப்பை ரசிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டார். அந்த மாணவர்களோ, என்னை மாஸ்டருக்கு வேண்டியவன் என்றும், அதனால்தான் சினிமாப்பாடல்களை எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார் எ ன்று நினைத்தார்கள்.