Saturday, December 19, 2015

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா? கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASSTrial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங் களால் கால் செய்ய முடியாது.

இருவழி கண்ணாடி என் பது நம்மால் கண்ணா டிக்கு பின்புறம் இருப்ப வரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம் மை பார்க்க முடி யும்.நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ கண்ணாடி இருப்பதை கண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் கண் களால் வித்தியாசத்தை உணர முடியாது.

உங்கள் விரல் நகத்தைக் கொ ண்டு கண்ணாடியைத் தொடவு ம். உங்கள் நகத்திற்கும் கண் ணாடியில் தெரியும் உருவத்திற் குமிடையில் இடைவெளி இரு க்குமெனில் அது சாதாரண ஒரு வழி கண்ணாடி. ஏனெனில் சாதா ரண கண்ணாடியின் பின்பக்கம் சில்வர் பொருத் தப்பட்டிருக்கும்.
இருவழி கண்ணாடியில் சில்வர் பின்புறமிருக்காது. ஆகவே இடை வெளி இல்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள் உங்களை கண் ணாடியின் பின்புறமிருந்து யாரேனும் பார்க்கவும் செய்யலாம்

அனிருத் மீது ரஜினி கடும் கோபம்... 'அவனை சேர்க்காதீங்க'... மகள்களுக்கு அறிவுரை!

ரஜினியாக இருப்பது ரொம்பவே கஷ்டம் என்பார்கள். காரணம் அவர் அமர்ந்திருக்கும் இடம் அப்படி.

ரஜினி இப்படி ஒரு சிகரத்தில் இருக்கிறார்... அவரது நெருங்கிய உறவினர்களான நாம் செய்யும் எந்த செயலும் அவரைக் கடுமையாக, அதுவும் உடனடியாக பாதிக்குமே என்ற நினைப்பு அவரது உறவினர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பல தீவிர ரசிகர்களுக்கு ரஜினியின் குடும்பத்தார் செய்யும் பல செயல்களில் உடன்பாடு இருப்பதில்லை.

உதாரணம், தனுஷ், அவர் தந்தை கஸ்தூரிராஜா, இப்போது ரஜினியின் மைத்துனர் மகன் அனிருத்.

முதல் முதலில் அனிருத் கேவலப்பட்டது, தன்னைவிட பல வயது மூத்த நடிகை ஆன்ட்ரியாவின் உதட்டோடு உதடு வைத்து போஸ் கொடுத்த படங்களை வெளியிட்ட போதுதான். அப்போதே அனிருத்தை அழைத்து, 'பெரிய அளவுக்கு வரவேண்டிய பையன் நீ... பாத்து நடந்துக்கோ' என்று அட்வைஸ் பண்ணதாக செய்தி வெளியானது.

அடுத்து ஒரு படுமோசமான ஆங்கிலப் பாட்டு ஒன்றை அவரே வெளியிட்டார். இந்த பீப் பாட்டை விட மோசமான ஆபாசப் பாட்டு அது. வார்த்தைக்கு வார்த்தை 'Fu...g' என்று ஒலித்த அந்தப் பாடலை வெளியிட்டதே அனிருத்தான். உடனடியாக போலீஸ் சம்மன் பறந்தது. ஓடோடி வந்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ரவி ராகவேந்தர். கமிஷனரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து பையனை மீட்டு வந்தார்.

அன்றே அனிருத்தை அழைத்த ரஜினி, 'நான் முன்பே சொல்லிவிட்டேன். நாளை என் படத்துக்கே கூட இசையமைக்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கலாம். ஒழுக்கமாக நடந்து கொள்ளாவிட்டால் இப்போது கிடைத்துள்ள வாழ்க்கையே பாழாகிவிடும்' என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

அதெல்லாம் இந்த பீப் பாய் காதில் ஏறவே இல்லை என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

இந்த பீப் பாட்டு விவகாரம் பரபரப்பு கிளப்பிய போது ரஜினி சென்னையில்தான் இருந்தார். லைகா தயாரிக்கும் 2.ஓ படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றவர், பீப் விஷயம் கேள்விப்பட்டு கடும் கோபமடைந்ததாராம்.

அடுத்து தன் குடும்பத்தினருக்கு அவர் போட்ட உத்தரவு.. 'எக்காரணம் கொண்டும் அனிருத்தை வீட்டுப் பக்கம் வரவிடாதீர்கள்' என்பதுதான். இதை அனிருத் வீட்டுக்கும் சொல்லிவிட, அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்களாம்.

அடுத்து தன் மகள்களை அழைத்து, 'அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதைத் தவிருங்கள். வேறு இசையமைப்பாளர்களை அமர்த்திக் கொள்ளுங்கள்' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம்.

இதில் ரஜினி மருமகன் தனுஷுக்குதான் பெரும் சங்கடமாம். அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு அனிருத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

மாமனார் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனிருத்தை மாற்றுவாரா... அல்லது பீப் பாயை கட்டிக் கொண்டு அழுவாரா.. பார்க்கலாம்!

ஒரு 'பீப்' ஒரு மாசம் டைம் கேக்குது... இன்னொரு 'பீப்' நான் அவனில்லைங்குது!

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று ஆஜராகாமல் பொய்யான காரணங்களைக் கூறி கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த இரு பீப் பிரதர்களின் சார்பில் அவர்களது தந்தைகள் காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சிம்பு பிசியாக (?!) இருப்பதால் 30 நாள் அவகாசம் கேட்டு அவரது தந்தை டி.ராஜேந்தரும், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தமே இல்லை என அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் விளக்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடிய ஆபாச பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருவருக்கும் எதிராக மாதர் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பினர். டிசம்பர் 19-ம் தேதி ( இன்று ) காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்மனை கொடுக்க சென்னை வந்த கோவை போலீசார், சிம்பு வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர்.

இதனிடையே, கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சிம்பு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதையடுத்து, சிம்பு, அனிருத் இருவரும் இன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

எதிர்ப்பார்த்தது போலவே இன்று சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. சிம்புவின் சார்பில் அவரது தந்தை டி.ராஜேந்திரரும், அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில், 'சிம்பு கொஞ்சம் வேலையில் பிசியாக இருப்பதால், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து 30 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும்,' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல் அனிருத்தின் தந்தை ரவிராகவேந்திரர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'சர்ச்சைக்குரிய அந்த பாடலுக்கு அனிருத் இசையமைக்கவே இல்லை. இதை ஏற்கனவே மீடியாக்கள் மூலம் தெரிவித்து விட்டோம். இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமே இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அனிருத்தை விடுவிக்க வேண்டும்,' என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அனிருத் சார்பில் அவரது வழக்கறிஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி அனிருத் தரப்பு விளக்கத்தை தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 'சிம்பு தரப்பில் கோரப்பட்ட 30 நாள் அவகாசம் என்பதை கொடுக்க முடியாது. அதேபோல் விசாரணையின்றி அனிருத் தரப்பு வாதத்தையும் ஏற்க முடியாது. எனவே இருவருக்கும் மீண்டும் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளோம்,' என போலீசார் தெரிவித்தனர்.

'விஐபி வீட்டு பையன்கள் என்பதால் இவ்வளவு நிதானம் காட்டும் போலீசார், இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? இருவர் சொல்வதும் பொய் என்று தெரிந்தும் எப்படி போலீசார் சும்மா இருக்கிறார்கள்? இருவரையும் மறு யோசனையின்றf உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்டுக் கொள்ளலாம்', என்று மக்கள் சமூகத் தளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிக்கு எந்திரன் 2 தலைப்பு கொடுக்க மறுத்த சன் நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிக்க உள்ளது கத்தி படத்தை எடுத்த லைகா நிறுவனம். ஷங்கர் இப்படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கவுள்ளாராம்.

மேலும் முதலில் இப்படத்துக்கு 2.0 என்று தான் பெயர் வைத்தனர். திடிரென்று நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயரை 2.o (ஓ) என்று குறிப்பிட்டுள்ளனர்.ஏன் கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் என்று விசாரித்தால் எந்திரன் படத்தை தயாரித்த சன் நிறுவனத்திடம் எந்திரன் 2 தலைப்பு கொடுக்க கேட்டுள்ளது படக்குழு.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் கடைசி நேரத்தில் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அவ்ளோ கோவமா லிங்கா மேல?

பொறுத்து பொறுத்து பார்த்து படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் லிங்காரவேலன்! லிங்காவால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சனையை ஐ.நா சபை வரை ஒலிக்க வைத்த மாவீரன்! தலைவர் லிங்காவை ஊற்றி மூடிவிட்டு கபாலிக்கு போன பின்பும், இவரது கோபம் தீரவில்லை போலிருக்கிறது. ‘அட்றா மச்சான் விசிலு’ என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். படம் என்ன டைப்? ஸ்பூப் வகைதான். அதாவது முன்பு வந்த படங்களை கிண்டல் செய்து எடுப்பது.

இவருக்கும் ரஜினிக்கும் ஏற்கனவே பிரச்சனை. இவர் எடுக்கும் படமோ ஸ்பூப் டைப். அப்படியென்றால் ரஜினி உள்ளே வருவார்தானே? வந்துவிட்டார்.

‘அட்றான் மச்சான் விசிலு’ படத்தில் ஒரு சீன்.

படத்தில் கபாலி என்ற பெயருடன் உலா வரும் ஹீரோவான பவர் ஸ்டார் சீனிவாசனை ஒரு தூணில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். சொல்றா… சொல்றா… என்று முதுகுத் தோலை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் வேடிக்கை பார்த்த ஒரு பொதுஜனம், “ஏன் சார் இந்தாளை போட்டு அடிக்கிறீங்க? காரணத்தை சொல்லுங்க” என்று கேட்க, அடிப்பவர்களின் லீடர் பதில் சொல்கிறான் இப்படி.

“இவன் தங்கச்சி போன வாரம் வந்து டாக்டர் சீட் கேட்டுச்சு. நாங்க இல்லேன்னு சொல்லியணுப்பிட்டோம். அதுக்கப்புறம் இவன் வந்தான். என் தங்கச்சிக்கு டாக்டர் சீட் கொடுன்னு கேட்டான். நாங்க முடியாதுன்னோம். உனக்கு என்னை பற்றி தெரியாதுன்னு இவன் பேரை சொன்னான். அப்படியே எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு சொன்னான். நாங்களும் எவ்வளவோ அடிச்சு மிதிச்சு கேட்கிறோம். அந்த இன்னொரு பேரை சொல்லவே மாட்டேங்குறான்…”

ஸ்பூபில் சிக்கியது என்ன படம்? என்ன சீன் என்று புரியுதா?

அட்றா மச்சான் விசிலு திரைக்கு வந்து அஞ்சு வருஷத்துக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை ஓப்பன் பண்ண முடியாதே? பக்தர்களின் உருளல் புரளல் ஜாஸ்தியாக இருக்குமே?

அந்த இம்சைக்காகவே ப்ளீஸ் கூல், கொயட், லிங்காரவேலரே…!

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!

லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் Wi-Fi (வை-ஃபை) பற்றி சில தகவல்கள்:

WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.

NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

வடிவேலு இடத்தில் மொட்டை ராஜேந்திரன்

வடிவேலுவுக்குப் பிறகு அவர் அளவுக்கு காமெடி செய்யக்கூடிய நடிகர்கள் வரவில்லை என்று கூறிய போதும் அதன்பிறகு சந்தானம், சூரி என இளவட்ட நடிர்களும் என்ட்ரியாகி ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டுள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து வில்லன், அடியாள் என்று நடித்து வந்த நான் கடவுள் ராஜேந்திரனும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அவர் காமெடியால் மிகவும் ரசிக்கப்பட்டார்.

அதனால் இப்போது அவரும் முக்கிய காமெடியனாகி விட்டார். மேலும் தெனாலிராமன், எலி படங்களில் நடித்த வடிவேலு அடுத்து காமெடியனாகவும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து அவருக்காக காமெடி காட்சிகளை உருவாக்கிய சில இயக்குனர்கள், தற்போது வடிவேலு மதுரையிலேயே செட்டிலாகி விட்டதால், இப்போது அவருக்கான வேடங்களில் நான்கடவுள் ராஜேந்திரனை புக் பண்ணிவருகின்றனர்.

அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் கூட வடிவேலுதான் நடிக்க வேண்டியது. அவர் ஒத்துவராமல் போகவே இப்போது அந்த வேடத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன் படம் முழுக்க வரும் வேடம் என்பதால் மொத்தமாக 3 மாதங்கள் அவரிடம் கால்சீட் பேசியுள்ளனர்.

நரம்புகளை சுத்தம் செய்யும் சித்தாசனம்

நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது.

செய்முறை :

முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தில் 20 நிமிடம் அமர வேண்டும். பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக  ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும்.

பயன்கள் :

இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும். மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்: கங்கை அமரன் காட்டம்

 'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கருத்து கேளுங்கள் என்று கங்கை அமரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடல் குறித்து இளையராஜாவிடம் கருத்துக் கேட்டு, அவருடைய பதிலும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

இந்நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் 'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேட்குமாறு காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் பதிவில், "இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.

அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை. இந்த பசங்க போட்ட பாடல் பற்றி அவர்கிட்ட கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. ஏன் ரஜனி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத். அவரிடம் கேளுங்கள்.

ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடுகிறாராரே சிம்புவின் அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்கள். என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சீசனுக்கு சீசன் மாறும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவிற்கு என்று அவ்வபோது ஒரு சீசன் வந்து போகும். அந்த வகையில் 90களில் இருந்து 2000 வரை வந்த படங்களில் பெரும்பாலும் காதல் கதை படங்கள் தான்.

ஹீரோ ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்வார், முதலில் முடியாது என்று சொல்லும் பெண், டார்ச்சர் செய்யும் ஹீரோவையே காதலிக்க தொடங்குவார், பின் வீட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மாப்பிள்ளை வரவு, கிளைமேக்ஸில் அவரே ஹீரோ-ஹீரோயினை சேர்த்து வைத்து சொந்த காசிலேயே டிக்கெட் போட்டு அமெரிக்கா சென்று விடுவார்.

முதன் முதலாக இதுப்போன்ற கதையில் வெளிவந்த படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பாலிவுட் படமான dilwale dulhania le jayenge என்ற படம் தான். ஷாருக், கஜோல் நடிப்பில் இப்படம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் திரையரங்கில் ஓடியது.

இதன் வெற்றி காரணமாகவே இதே ஜோடி மீண்டும் இணைந்து நேற்று வெளிவந்தது. இப்படத்தின் பாதிப்பு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் இப்படியான படங்கள் வந்தது.

பின் 2000க்கு மேல் கத்தி, துப்பாக்கி கலாச்சாரம் தலை துக்கியது. இதுவரை ஹீரோ என்றால் கண் தெரியாதவர்களுக்கு சாலை கடக்க பயன்பட்டு வந்தவர், அதன் பிறகு கையில் ஆயுதம் ஏந்தி அடிதடி செய்ய ஆரம்பித்தார். இதற்கு ரசிகர்கள் மாஸ் என்று ஒரு சாயம் பூசி ரசித்தனர். இதே பாணியில் திருமலை, சிவகாசி, திருப்பதி, பரமசிவன் இன்றைய தமிழ் சினிமாவை ஆளும் விஜய், அஜித்தே பல படங்கள் நடித்தனர்.

பிறகு பக்கம் பக்கமாக பன்ச் வசனம், எதிர்களிடமிருந்து இந்தியாவை பலமுறை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்றுவது போன்ற படங்களே திரைக்கு அதிகம் வந்தது. இதற்கிடையில் வன்முறை கதை என்றாலும் பருத்தீவிரன், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை என ஒரு சில நல்ல படங்களும் வந்து சென்றது.

ஆனால் இதையெல்லாம் விட கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா அமானுஷிய சக்தியிடம் சிக்கி தவிக்கின்றது. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் இன்னும் பேய் பிடிக்கவில்லை, ஆனால், திரையில் எல்லோரும் பேய் பிடித்து தான் ஆடுகிறார்கள். பேயே வந்து ’போதும்டா இனிமே என்ன வச்சு படம் எடுக்காதீங்க’ என்று கேட்கும் அளவிற்கு எடுத்து ரசிகர்களை சலிக்க வைத்து விட்டனர்.

ஆனால், இந்த வருடம் இவை ஏதுமே இல்லாமல் குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளிவந்த பாபநாசம், வேதாளம் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் புரட்சி செய்தது. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விஷயம் என்பதால் பலரும் இனி குடும்ப செண்டிமெண்ட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

நேற்று ரிலிஸான தங்கமகன் முதல் அடுத்து ரிலிஸாகும் பசங்க-2, ரஜினிமுருகன் என பல படங்கள் செண்டிமெண்டிற்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களே. இதுவும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை...ஏனெனில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களும் அவ்வபோது தாறுமாறு ஹிட் அடிப்பது குறிப்பிடத்தக்கது.

பீப் பாடல் விஷயத்தில் நடிகர் சங்க தலைவரை வம்புக்கு இழுத்த சரத்குமார்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று, நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சரத்குமார் தன் அரசியல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பீப் பாடல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, ‘பெண்களை பற்றி தவறாக யார் பாடினாலும் கண்டிக்கத்தக்கது தான்.

மேலும், சிம்பு இதை நீதிமன்றம் வாயிலாக சந்திப்பதாக கூறிவிட்டார். ஆனால், நான் நடிகர் சங்க தலைவராக இருந்த போது சின்ன பிரச்சனைக்கு கூட சரத்குமார் என்ன செய்கின்றார் என கேட்டார்கள், தற்போதைய நடிகர் சங்க தலைவர் என்ன செய்கின்றார், அவரிடம் நீங்கள் கேட்டீர்களா?’ என்று பேசினார்.

இளையராஜா...எப்பவுமே இப்படியா? இல்ல… இப்ப மட்டும்தான் அப்படியா?

“எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?”

சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படியல்ல. தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. கூவ மறந்தால், ஓட்டு போடும்போது அவர்களை மறந்துவிடும் பொதுஜனம்.

இதில் கலையுலகம் எப்படி? சினிமாக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிக்குரிய லட்சணங்கள் வேண்டும். அரசியல்வாதிக்கு கிடைக்கிற எல்லா மரியாதைகளும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டுமல்லவா? அதுதான் நடக்காது. சந்திப்பதேயில்லை. அப்புறம் எப்படி கேள்வி கேட்பது?

விமான நிலையங்களுக்கு வரும் அவர்களை மறித்து கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டுக்கு வந்தாலும் சரி. சடங்கு வீட்டுக்கு வந்தாலும் சரி. இங்க விட்டுட்டா முடியாது என்கிற ஆவேசத்தோடு கேட்கிறார்கள். ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல்லாண்டுகளாகிறது. அவரிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. எங்கு கேட்பது? எப்படி கேட்பது? எங்காவது பார்க்கிற இடத்தில் வழிமறித்துதான் கேட்கிறார்கள். அதுவும் மின்னல் நிமிடத்தில் முடிந்துவிடுகிறது. ரஜினி நின்றால்தானே கேட்பதற்கு? ஆனாலும் பார்க்கிற இடங்களிலெல்லாம் கேட்பதும் தொடர்கிறது. இனிமேலும் தொடரும்.

சரி… இளையராஜா விஷயத்திற்கே வருவோமே! முன்பெல்லாம் ரஜினி போல ஒதுங்கியே இருந்தவர் இப்போதெல்லாம் அதிசயமாக பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் சொல்கிறார். ஆனால் எப்படியென்று நினைக்கிறீர்கள்?

இளையராஜாவின் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு மாலை நாளிதழ் நிருபர் இப்படியொரு கேள்வி கேட்டார். “ஐயா. ஆயிரம் படத்துக்கு இசையமைச்சுட்டீங்க. எவ்வளவோ ஹிட் பாடலை கொடுத்திருக்கீங்க. அந்த பாடல்களிலெல்லாம் நம்ம ஊர் இசைக் கலைஞர்களின் பங்களிப்புதான் இருந்தது. ஆனால் இப்பவெல்லாம் ஹங்கேரியிலிருந்து இசைக்கலைஞர்களை அழைச்சுட்டு வந்து பயன்படுத்திறீங்களே, அதுக்கு விசேஷ காரணம் எதும் உண்டா?

இந்த கேள்வியில் பொதிந்து கிடக்கும் நியாயம் எல்லாருக்கும் புரியும். எவ்வளவோ ஹிட் பாடல்களில் உறுதுணையாக இருந்தவர்கள் நமது ஊரிலேயே இருக்கும்போது ஏன் இவர்கள் பிழைப்பை கெடுத்துவிட்டு எங்கிருந்தோ வருகிற சிலருக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. அதற்கு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா?

“நான் சொல்லிடுவேன். அதை புரிஞ்சுக்குற அளவுக்கு உனக்கு அறிவிருக்கா? சங்கீத ஞானம் இருக்கா?”

சுப்புடுவுக்கு சங்கீதப்புலமை உண்டு. சங்கீத கச்சேரிகளை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். ஆனால் “நீ வந்து பாடு” என்றோ, “நீ வந்து ஆடு” என்றோ” என்று எந்த வித்வானும் சொன்னதில்லை. எந்த நாட்டியத் தாரகையும் கோபித்துக் கொண்டதில்லை. நிருபர்கள் எல்லாரும் சுப்புடு இல்லைதான். ஆனால் மேலே கேட்ட கேள்வியில் தவறில்லை அல்லவா? அதுமட்டுமல்ல, அந்த நிருபர் இளையராஜாவின் பதிலை எழுதி, அவர் மட்டுமே படிக்கப் போவதில்லை. அதை சங்கீதம் தெரிந்த பலரும் படிப்பார்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி படிப்பார். கற்றறிந்த பேராசிரியர் படிப்பார். இளையராஜாவின் வார்த்தைகளை அப்படியே பிரதியெடுக்கும் நிருபருக்கு கூட அது புரியாமல் போகட்டும். படிப்பவர்களுக்கு புரியும் அல்லவா? அதற்கப்புறம் நிருபர் பேசவில்லை.

இதுபோல கேள்வி கேட்ட பலருக்கும் இளையராஜா சொன்ன பதில்… “நான் உன் எதிர்ல வந்து உட்கார்ந்துட்டா என்ன வேணும்னாலும் கேட்ருவியா? நீயும் நானும் சமம் ஆகிடுவோமா?”

அவ்வளவு ஏன்? “இளையராஜா இசையமைத்த சிம்பொனி இசை இன்னும் வெளியிடப்படவில்லை. அதை கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாக இருக்கிறான். அதை சீக்கிரம் வெளியிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது ஒரு முன்னணி வார இதழ். உடனே அந்த இதழின் மீது வழக்கு போடப்பட்டது. இன்னும் கூட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இளையராஜாவிடம் கேள்வி கேட்கும் ஒவ்வொரு நிருபருக்கும் ஒவ்வொரு விசித்திர அனுபவம் இருக்கிறது. ஒரு பெண் நிருபர். “முன்பெல்லாம் நீங்க இசையமைச்சா அத்தனை பாடலும் ஹிட்டாகும். இப்போ அஞ்சு பாடல்கள் ஒரு படத்தில் வந்தால், அதில் ஒன்ணுதான் ஹிட்டாவுது?” என்றார்.

இப்படியெல்லாம் இளையராஜா போன்ற உலகம் போற்றும் இசையறிஞரிடம் கேட்கக் கூடாதுதான். ஆனால் 80களில் இருந்த இளையராஜாவின் பாடல்களுக்கு ஆசைப்படும் ரசிகர்களின் பார்வையில்தான் அந்த கேள்வியை கேட்டார் அவர். இதற்கு பதில் சொல்வது சங்கடமான விஷயம்தான். “நெக்ஸ்ட்?” என்று அடுத்த கொஸ்டீனுக்கு போயிருக்கலாம். ஏனென்றால் கேள்வியில் தவறில்லையே?

இளையராஜா என்ன செய்தார் தெரியுமா? “இதை கேட்கதான் இங்க வந்தியா? எந்திருச்சு போம்மா…!”

‘நந்தலாலா’ சமயத்தில் ஒரு பெண் நிருபர் கேட்டார். “மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறீங்க? அவர் வித்தியாசமான டைரக்டர். இந்த படத்தில் உங்க இசையில் வித்தியாசமா எதும் ட்ரை பண்ணியிருக்கீங்களா?”

“இதையேன் எங்கிட்ட கேட்கிற. போய் மிஷ்கின்கிட்ட கேளு…” என்றார் ராஜா. “என்ன சார் இப்படி பதில் சொல்றாரு?” என்று அந்த நிருபர் மிஷ்கினை தொடர்பு கொண்டார். “அவர் அப்படிதான். கோவிச்சுக்காதீங்க” என்றார் மிஷ்கின்.

இப்படி எல்லா பந்துகளையும் திருப்பி அடித்தே பழக்கப்பட்டவர் இளையராஜா. ஆனால் அவர்களெல்லாம் சற்றே சுரணை கெட்ட சினிமா நிருபர்களாக இருந்ததால், மறு பேச்சு பேசாமல் எழுந்து வந்திருக்கிறார்கள். ஆனால் அரசியல் நிருபர்கள் அப்படியல்ல. பல சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவையும், கலைஞரையும், விஜயகாந்தையும், இன்னும் பல அரசியல் தலைவர்களையும் விரட்டி விரட்டி கோபப்படுத்தியிருக்கிறார்கள். அது இன்றளவும் தொடர்கிறது.

ஆரம்பகாலத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிய அத்தனை லெஜன்ட் டைரக்டர்களும் அவரை விட்டு ஓடியதற்கு என்ன காரணம்? இசைஞானிக்கு அந்த தனியார் தொலைக்காட்சி நிருபரும் ஒன்றுதான். தன்னிடம் வரும் இயக்குனர்களும் ஒன்றுதான்.

முன்பெல்லாம் நிருபர்கள் மட்டும இருந்தார்கள். இப்போது நிருபர்கள் கூட்டத்தில் ரசிகர் மன்ற தலைவர்களும் ஊடுருவிட்டார்கள். தப்பி தவறி வருகிற சிலரை ‘கேள்வி கேட்டதே குற்றம்’ என்று மட்டம் தட்டுகிற வேலை நடக்காமல் இருக்குமா என்ன? ஆனால் முன்பு போல பெரிய கலைஞர்களிடமும் மூத்த அறிஞர்களிடமும் மற்றவர்கள் வைத்திருந்த பயமும் பக்தியும் இப்போது இல்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், ஒரு மிஸ்டருடன் பெயரை சொல்லி அழைக்கிற அளவுக்கு ஃபிரீக் ஆக வளர்கிறது இளைய சமூகம்.

மிஷ்கினை பேட்டியெடுக்கப் போனால், நீ அந்த ஆங்கில நாவலை படிச்சுருக்கியா? இந்த நாவல் பற்றி தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பார். “படமெடுக்கிற உங்களுக்குதான் அதெல்லாம் தேவை. என்னை போன்ற நிருபருக்கு, உன் படம் தொடர்பான பத்து கேள்வி கேட்க தெரிந்தால் போதும்” என்று பதில் சொன்ன நிருபர்கள் இங்கு உண்டு. இங்கு இளையராஜா என்ன? மிஷ்கின் என்ன? ஒரே பதில்தான்.

அது மட்டுமல்ல, இளையராஜாவும் ஒரு இசையமைப்பாளர்தானே? இவருக்கு முன்னால் ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன்கள் செய்த சாதனைகள் போலதானே இவரது சாதனையும். பிறகென்ன இவருக்கு மட்டும் தேவதூதன் இமேஜ்? வேறொன்றுமில்லை. பல்லாண்டு காலமாக மிதிபட்டு கிடந்த சமூகத்திலிருந்து எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வீறு கொண்டு எழுந்த இசை சூறாவளி என்பதால் மட்டுமேதான் அந்த இமேஜ். அந்த மரியாதையை இன்றளவும் அவருக்கு கொடுக்க நினைக்கிறது சமூகம். ஆனால் அவர் பால் அன்பு கொண்ட ஒவ்வொருவரையும் அவரே விரட்டி விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார் தன் செய்கையால்.

“எங்க அப்பா செத்தப்ப கூட நான் அழுததில்ல. இளையராஜா பாட்டை கேட்டுதான் அழுதேன்” என்கிறார் ஒருவர். “அவர்ட்ட போயி இப்படி கேட்டுட்டானே?” என்று பாய்கிறார் இன்னொருவர். “கடவுளின் அவதாரம் அவர்” என்கிறார் மற்றொருவர். “உனக்கு அறிவிருக்கான்னு கேட்டதுக்கு பதில் செருப்பை எடுத்து அடிச்சிருக்கணும்” என்கிறார் வேறொருவர். அடேய்… உங்களையெல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

‘ஆண்டை’ மனோபாவத்தோடு நடந்து கொள்வது இளையராஜாவின் வழக்கம். அதையெல்லாம் சகித்துக் கொண்டு கைகட்டி நிற்பவர்கள் நிற்கட்டும். அதற்காக எல்லாரும் நிற்க வேண்டும் என்று நினைப்பது சரியா?

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு செய்தி நிறுவனமும், தங்கள் அளவுக்கு தகுதியான நிருபர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார்கள். “அறிவிருக்கறதாலதான் கேட்கிறேன்” என்று பதில் சொல்கிற அளவுக்கு தைரியமும் அறிவும் இருந்தால் அதுவே நிருபர்களுக்கு ஸ்பஷ்டம்!

இங்கே ‘நான்’ என்கிற எவரும் தப்பிக்கவே முடியாது.

பிடிக்காத கேள்விகள் வந்தால் “சேரை தூக்கி அடிப்பேன்” என்று சொல்கிற விஜயகாந்துக்கும் வேறு வழியில்லை. அவரை அன்றாடம் சந்திக்கும் நிருபர்களுக்கும் வேறு வழியில்லை. ஆனால் இசைஞானிக்கெல்லாம் நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று வீட்டிலும் சரி. வெளியிலும் சரி. நிருபர்களை கண்டால் அந்தப்பக்கம் முகத்தை கூட திருப்பக் கூடாது.

இன்னொன்று…? ம்ஹூம்… வேணாம்!

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், இளமைப் பொலிவுடன் வாழ உதவும் கறிவேப்பிலை...

கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும். இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது. கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.

கறிவேப்பிலைச் சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

சிம்புவிற்கும் பீப்புக்கும் சம்மந்தமே இல்லை- அதிரடி அறிக்கை

சிம்புவின் பீப் பாடலால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. அவரின் மீது தினமும் 10 புகார்கள் வந்து குவிகின்றது.

இந்நிலையில் சிம்பு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சிம்பு ஒரு இசைப்பிரியர். நிறைய படங்களில் பாடல்கள் உருவாக்கியுள்ளார். இதனிடையில் நிறைய பாடல்களை எந்த படத்திலும் வெளியிடாமல், தனது சொந்த பயன்பாட்டிற்காக தயார் செய்து வைத்திருந்தார்.

இதை யாரோ ஒரு விஷமி சிம்புவின் வெளிவராத ஒரு பாடலைத் திருடி அதில் பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

ஆனால், எல்லோருக்கும் நன்றாக தெரியும் சிம்பு தான் அந்த வார்த்தைகளையும் பாடியுள்ளார் என்று, தற்போது திடிரென்று இப்படி பல்டி அடிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வெளுத்து வாங்கிய ரசிகர்கள்- ஜேம்ஸ் வசந்தன் எடுத்த முடிவு?

சுப்ரமணியபுரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் இளையராஜா குறித்து சில கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த கருத்துக்கள் பலவும் இளையராஜாவை தாக்குவது போலவே இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் கோபமாகி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

அவரும் பொறுமையாக பதில் அளிக்க ஒரு கட்டத்தில் டுவிட்டர் பக்கத்தையே நீக்கி விட்டாராம்.

மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்! விரிவான அலசல்!

[ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ]

"AMWAY
" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு
முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.

இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம்.

ஒருவன்
என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல்
வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன்
உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில்
இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த
வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா
சொல்லுவான்?.

[i]ஒருவனை
இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில்
செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால்
உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக
கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை
தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான
வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம்
கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.[/i]

[i]ஒரு
நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள்
விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும்
பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில்
இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும்
என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. [/i]

[i]இந்த
கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து
நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற
நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில்
கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான்
இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம்
விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS)
மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.[/i]

[i]FMCG
பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை
சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை
செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு
வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய
நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?.

[i]அடுத்தது
PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால்
அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி
வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக
விற்பனை செய்யலாம்?.[/i]


[i]பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்: [/i]
[i]ஒரு
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள
அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது
போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து
நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE
SECTOR) என்று சொல்வார்கள்.

[i]அந்த
DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு
செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த
இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த
AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு
நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த
நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. [/i]

[i]இப்படி
இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி
விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என
சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும்,
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார
வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும்.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY
நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே
யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.[/i]

[i]இதனால்
நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக
பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால்
பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு
வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு
இருக்கும் கடமையை உணர்ந்து
செயல்படுங்கள்.[/i]

[i]இதுவரை
நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும்
வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம்
பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும்
என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம்.
நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட
இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.[/i]

[i]ஏமாற்றும் வழிகள்: [/i]
[i]இந்த
நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ
ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது
வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு
மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து
இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்
ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை
கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு
வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர். [/i]

[i]நமது
இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில்
இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது
மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான்.
பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம்
பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின்
ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். [/i]

[i]இவர்கள்
சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம்
பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர்
ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின்
பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின்
பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக
உள்ளது.[/i]

[i]►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).[/i]

[i]►ஆனால்
ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர்,
விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே!)[/i]

[i]மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.[/i]

[i]TOOTHBRUSH(1) -19 ரூபாய்[/i]

[i]HAIR OIL(500 ML) -95 ரூபாய்[/i]

[i]SHAVING CREAM(70G) -86 ரூபாய்[/i]

[i]OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்[/i]

[i]FACE WASH -229 ரூபாய்[/i]

[i]PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்[/i]

[i]மேலே
இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்
இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும்
இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என
பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு
குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக
சொல்லி விற்று வருகின்றனர்.[/i]

[i]நேரடி
விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில்
லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால்
ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற
இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். [/i]

[i]இந்திய
நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது
ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே
நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்
இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால்
இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?[/i]

[i]► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். [/i][i](எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)[/i]

[i]►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.[/i]

[i](எந்த
ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம்
உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த
நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)[/i]

[i]►
இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது
6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு
நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில்
30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய்
லாபம் வருகிறது.[/i]

[i]இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்: [/i]

[i]►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.[/i]

[i]►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .[/i]

[i]►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.[/i]

[i]இந்த
நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம்
ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று
எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.[/i]

[i]►ஒருவன்
ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு
கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது
இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)[/i]

[i]100 x 995 = 99500 ரூபாய்[/i]

[i]இந்த
ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில்
அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும்
மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று
சொல்வார்கள்.[/i]

[i]3000 x 100 = 300000 ரூபாய்[/i]

[i]அப்படிபார்த்தால்
இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500
ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).[/i]

[i]இவ்வளவு
கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் (
ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.[/i]

[i]இன்னொரு
கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால்
வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு
கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில்
இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக
வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு
கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல்
இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே
300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான்
சம்பாதிக்க முடியும்.[/i]

[i]300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)[/i]

[i]900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)[/i]

[i]இந்த
PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில்
இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.[/i]

[i]லட்சங்களையும்,
கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி
கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத
மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான்
வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த
நிறுவனத்தில் இனைந்து
தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை
விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.[/i]

[i]இந்த
நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை
ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு
நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் .
இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த
ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம்
பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.[/i]

[i]இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்: [/i]

[i]தயவு
செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில்
உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து
சொல்லுங்கள்.

சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும் - ஒரு அதிர்ச்சி தகவல்..!

நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மகதீரா - திரை விமர்சனம்

மிகப்பெரிய தாதாவான ராகுல் தேவ், காஜல் அகர்வாலை அடைய முயற்சி செய்கிறார். இதனால், தனது காதலன் அல்லு அர்ஜூனுடன் ஊரைவிட்டு செல்கிறார். அப்போது, ராகுல்தேவின் அடியாட்கள் இவர்கள் செல்லும் பஸ்சை வழிமறித்து, காதலர்களை கொலை செய்துவிட்டு, அந்த பஸ்சுடன் சேர்த்து எரித்து விடுகிறார்கள். இதில், காஜல் அகர்வால் இறந்துபோக, அல்லு அர்ஜூன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார். அவரது முகம் ஒரு பாதி முழுக்க எரிந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

இது ஒருபுறமிருக்க... இதே பஸ்சை மையப்படுத்தி மற்றொரு சம்பவம் இணைகிறது.

டாக்டரான ஜெயசுதாவின் ஒரே மகன் ராம்சரண். கல்லூரியில் படித்து வரும் இவர் ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் எழுச்சிகரமான இளைஞர். இவர் நண்பர் வசிக்கும் பகுதியில் ரவுடி சாய் குமாரின் ஆட்கள் புகுந்து அந்த இடத்தில் வசிப்பவர்களை காலி செய்து போகும்படி வற்புறுத்துகிறார்கள். இந்த பிரச்சினையில் ராம்சரண் தலையிட்டு, ரவுடியின் ஆட்களை துவம்சம் செய்கிறார்.

பின்னர், அந்த மக்களுக்கு ரவுடியின் மீதுள்ள பயத்தை போக்கி, அவர்களுக்கு எதிராக போராட தைரியத்தை ஊட்டுகிறார். இதனால், வெகுண்டெழுந்த மக்கள் ரவுடிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இதனால் கோபமடைந்த சாய் குமார், ராம்சரணை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார். ராம்சரண் வெளியூர் செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, தனது அடியாட்களை அனுப்பி ராம்சரணை கொன்றுவிடுகிறார்.

ராம்சரண் உடல் ஜெயசுதா பணிபுரியும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதேசமயம், அல்லு அர்ஜூன் முகம் சிதைந்த நிலையில் சிகிச்சைக்காக அங்கு கொண்டு வரப்படுகிறார். ராம்சரணை பிணமாக பார்த்த ஜெயசுதா, மிகுந்த வருத்தமடைகிறார். ராம்சரணால் அந்த பகுதி மக்கள் இதுவரை நிம்மதியுடன் இருப்பது இனி நிலைக்காது என நினைக்கும் ஜெயசுதா, பாதி எரிந்த நிலையில் இருக்கும் அல்லு அர்ஜூனின் முகத்தை ஃபேஸ் டிரான்ஸ்பிளான்ட் என்ற சிகிச்சை மூலம் முழுமையாக ராம்சரணாகவே மாற்றுகிறார்.

சிகிச்சை முடிந்து நினைவு திரும்பும் ராம்சரண் தோற்றத்தில் இருக்கும் அல்லு அர்ஜூன், தனது காதலியை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட புறப்படுகிறார். இறுதியில், அவர்களை பழிவாங்கினாரா? ராம்சரண் முகத்தோற்றத்தோடு இருக்கும் அல்லு அர்ஜூனுக்கு ராம்சரண் எதிரிகளால் என்னென்ன பிரச்சினை எழுந்தது? அதிலிருந்து அவர் மீண்டாரா? அவர்களையும் பழிதீர்த்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகன் ராம்சரண், வழக்கமான தெலுங்கு மசாலா கலந்த பாணியில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் அதிவேகமாக நடனமாடி மெய்சிலிர்க்க வைக்கிறார். அல்லு அர்ஜூன் நட்புக்காக ஒரு சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இவருக்காக படத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சி உண்டு. அந்த காட்சியில் அசால்ட்டாக நடித்து கைதட்டலை அள்ளுகிறார்.

நட்புக்காக நடித்திருக்கும் காஜல் அகர்வால் படத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். அதேபோல், எமி ஜாக்சன் துறுதுறு கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடி, ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசனுக்கும் படத்தில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இவரும் எமி ஜாக்சனுக்கு போட்டியாக ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

சாய்குமார் வழக்கம்போல் அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார். முதல் பாதியில் ராகுல்தேவ் சாந்தமான வில்லனாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான, குழப்பமான ஒரு கதையை எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி அழகான திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் வம்சி பைடிபள்ளி. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பதால், படம் முழுக்க சண்டைக் காட்சிகளே அதிகம் இருப்பதுபோல் இருக்கிறது. இருப்பினும், அதுவும் ரசிக்கத்தான் வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவர்களை திறமையாக கையாண்டிருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை அதிரடி காட்டுகிறது. சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.