இன்றைய தலைமுறைக் குழந்தைகள் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தைப் பருவத்திலேயே சோடியம் உடலில் அதிகமாகிறது என்று பொருள். இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரக்கூடிய விஷயம். ஏனென்றால் உப்பினால் உடல் நலனுக்கு விளையும் கேடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை...
Thursday, December 3, 2015
சென்னையில் ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சம் அறிமுகம்..!

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் சேஃப்டி செக் எனும் பாதுகாப்பு உறுதி செய்யும் தகவல் அனுப்பும் சேவையை சென்னைவாசிகளுக்கு செயல்படுத்தியுள்ளது. இன்று காலை செயல்படுத்தப்பட்ட இந்த சேவை மூலம் ஃபேஸ்புக் வாசிகள் தாங்கள பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் அறிய முடியும்.ஃபேஸ்புக் சேஃப்டி செக் அம்சமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தும் தகவல்களை அனுப்பி வருகின்றது. இந்த தகவல் கிடைத்ததும் "Yes, let my friends know" என்ற பட்டனை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட பயனாளி பாதுகாப்பாக இருப்பதை ஃபேஸ்புக் அவர்களது நண்பர்களுக்கு தெரியப்படுத்தும்.வெள்ளத்தில்...
பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கு நடுவே இப்படியும் ஒரு பஸ் டிராவல்ஸ்: சல்யூட் அடிக்கலாமே!

வெள்ளத்தை காரணமாக வைத்து பகல் கொள்ளை அடிக்கும் நபர்களுக்கு மத்தியில் ரதி மீனா டிராவல்ஸ் தனது இரக்கத்தால் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.நேற்று முன்தினம் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வெள்ளக்காடானது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன.பேருந்துகள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லவிருந்த 25 பயணிகள் குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்தனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸை அணுகி சிதம்பரத்திற்கு ஒரு பேருந்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின்...
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை காட்டும் 'லைவ் மேப்' வசதி!

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தண்ணீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் தனித்தனி தீவுகளாக மாறிவிட்டன. வீட்டில் சிக்கியவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட வெளியேற முடியாத அவல நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், மீட்புப் பணிகளில் முப்படைகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தாண்டி தன்னார்வம் கொண்ட இளைஞர்களும் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகமும் தற்போது சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களையும், உதவிகளையும் அவசர கதியில் துவங்கியுள்ளன.
Chennai Live Map இந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலைகள் குறித்த தகவல்களை 'லைவ்...
பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” கமல்ஹாசன்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்."ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே...
வெள்ள நீரினால் சொறி, சிரங்கு வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க...
வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை நீர் மட்டுமின்றி, சாக்கடை நீர் மற்றும் இதர கழிவு நீரும் கலக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நச்சுமிக்க மோசமான கிருமிகள் நம்மை தாக்க தயாராக இருக்கும்.குறிப்பாக இந்த நீரால் முதலில் நம் சருமம் தான் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும். எனவே எக்காலத்திலும் நம் சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்பை பெட்ரோலியம் ஜெல்லி வழங்கும். ஏனெனில் இது மிகவும் அடர்த்தியானது என்பதால், சருமத்திற்கு மேல் ஓர் படலத்தை உருவாக்கிவிடும்.இங்கு வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு நம் சருமத்தைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ள...
தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் மின்சாரம் தயாரிப்பு
தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையின் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஸ்வீடன் நாட்டின் லிங்கோபிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தெரிவித்துள்ளனர். தாவரங்கள், தங்களுக்கு தேவையான உணவை சூரிய ஒளியின் உதவியுடன், இலைகளில் உள்ள Chlorophyll மூலம் Photosynthesis செயல்பாட்டின் மூலம் உணவை தயாரித்துக்கொள்கின்றன.ஸ்வீடனின் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரோஜா தோட்டத்தி்ல் செடிகளின் அடியில், நீரில் கரையும் பாலிமர் கலந்த நீரை பாய்ச்சினர். தாவரங்கள், மண்ணில் உள்ள ஊட்டச் சத்துக்களை எடுத்துக்கொள்வதைபோல, இந்த பாலிமரும், தாவரத்தினுள் செல்கிறது. தாவரத்தினுள் பாலிமர், அதிலுள்ள அயனிகளின் உதவியுடன் மின் வயர்களாக உருமாற்றம் பெறுகிறது.ஒளிச்சேர்க்கையின் போது இலைகளில் தயாரிக்கப்படும் உணவு, தாவரங்களில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சைலம் மற்றும் புளோயத்தின் மூலமாக கடத்தப்படுவது போல், தாவரத்தினுள் உருவாகியுள்ள பாலிமர்...
அவசர காலத்தில் மின்சாரமின்றி போனினை சார்ஜ் செய்வது எப்படி.??

ஊர் முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் அனேக இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் மின்சாரம் இன்றி தகவல் தொடர்பு முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த தொகுப்பு பகிரப்படுகின்றது.கரண்ட் இல்லாமல் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்யாமல் இருப்போர், வீட்டில் இருக்கும் சிறிய 9 வோல்ட் பேட்டரி, நாணயம், கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் பயன்படுத்தி நிமிடங்களில் சார்ஜரை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.முதலில் டேட்டா கேபிள் அல்லது கார் சார்ஜரை மொபைல் போனுடன் இமைத்து, பின் 9 வோல்ட் பேட்டரியின் + டர்மினலில் நாணயத்தை அழுத்தி பிடித்து கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் வயர்களை அந்த...
அசைவப்பிரியர்களே...இது உங்களுக்கான டிப்ஸ்!
கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.ஒமேகா 3 உள்ள உணவுகள்ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது.இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும்.சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு.முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள்...
கற்பூரம் கொடிய விஷம்!
‘கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!’எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.ஆனால்,...
உங்களை நீங்களை காப்பாற்றினால்தான் உண்டு: அப்துல் கலாம் உதவியாளர் விளாசல்... மீட்பு பணி தோல்வி..

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிலையில், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு என்று, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தனது முகநூலில் நேற்று காலை, பொன்ராஜ் கூறியிருந்ததாவது:தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள். 108-டை உடனடியாக சென்னை மக்களை காப்பாற்றும் ஒரே நம்பராக அறிவியுங்கள். ஒரு சேவை நோக்கம் கொண்ட திறமையான அதிகாரிக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர் சொல்வதை ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழக ஆட்சித்தலைவர்களுக்கு ஒரே இடத்தில் அத்துணை 108 அழைப்புகளையும் ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்களை இணைத்து உதவ ஏற்பாடு செய்யுங்கள்.HAM Radio...
இயக்குனர் சிகரமும் காவிய கவிஞரும் - பகுதி 1

இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாடல்கள் எடுப்பதில் வல்லவர். அவரது படங்கள் மட்டுமின்றி பாடல்களும் புதுமை நிறைந்ததாக இருக்கும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெறும், சிப்பி இருக்குது முத்து இருக்குது பாடல் ஒன்றே போதும், அவரது திறமையை அறிய.தூர்தர்ஷனில் காவிய கவிஞர் வாலி தனது மலரும் நினைவுகளை பதிவு செய்த நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரமும் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியை நடத்தியவர் நெல்லை ஜெயந்தா. அந்த அருமையான நிகழ்ச்சி நூலாகவும் வெளிவந்துள்ளது. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் விழிகளில் கண்டேனே என்ற வாலியின் அற்புதமான பாடல் குறித்தும், அந்தப் பாடல் தனக்கு கற்றுத் தந்த பாடம் குறித்தும் இயக்குனர் சிகரம் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"மதுரையில்...
தனியார் பஸ்களில் கட்டணக் கொள்ளை ? ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்கு உயர்வு ! என்னவாகுமோ சென்னை...

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஹோட்டல்களில் ரூம் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாது பொதுமக்கள் திகைத்து வருகின்றனர்.
சென்னையில் விடாது விரட்டி விரட்டி பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பலர் முகாம்களில் தங்கியுள்ளனர். மழையும் விடாது கொட்டித் தீர்த்து வருவதால் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
இதற்காக பெருங்களத்தூரில் நேற்று இரவு முதல் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் போதுமான பேருந்து வசதி இல்லாததால் மக்கள்...
மழை எதிரொலி: திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், வரும் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ஈட்டி’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு இப்படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....
பல் துலக்கும் போது நாம் செய்யும் 5 தவறுகள் - 5 mistakes we make while brushing
பல் துலக்கும் போது நாம் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.* நாம் கண்ணாடியை பார்த்து பல் துலக்குவது தான் சிறந்தது, ஆனால் பலரும் அதனை செய்வதில்லை. * பல் துலக்குவதற்கு சரியான நேரம் எடுத்து கொள்ள வேண்டும் , ஆனால் நாம் வேகவேகமாக ஒரு நிமிடத்தில் முடித்து விடுகிறோம். * நாம் மிகவும் அழுத்தி பல் தேய்க்கிறோம் , இதனால் நமது பற்கள் பாதிப்படைகின்றன. * நாம் சரியான பிரஷையும், டூத் பேஸ்டையும் உபயோகப்படுத்த தவறி விடுகிறோம். * பல் துலக்கிய பிறகு அதிகளவு வாய் கொப்பளக்க வேண்டும், ஆனால் நாம் அதனை செய்ய தவறி விடுகிறோம்....