Wednesday, December 30, 2015

ஹலால்(Halal) என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!


சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்


ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-


A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.


கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.


B. மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.


C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.


இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?


அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.


D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.


E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.


ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.


F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.


இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.


இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..?

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

வசூலில் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி- உண்மை தகவல்

தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவது விஜய், அஜித் தான். ஆனால், இந்த வருடம் இவர்கள் படங்களின் வசூலை ஜெயம் ரவி முந்தியுள்ளார்.

ஆம், சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் விவரங்கள் வெளியிட்டுள்ளனர்.

இதில் வேதாளம், என்னை அறிந்தால், புலி படத்தின் வசூலை முறியடித்து முன்னணியில் உள்ளது ஜெயம் ரவியின் தனி ஒருவன். இதோ அந்த லிஸ்ட்

    1.பாகுபலி
    2தனி ஒருவன்
    3.ஐ
    4.வேதாளம்
    5.காஞ்சனா-2
    6.என்னை அறிந்தால்
    7.நானும் ரவுடி தான்
    8.அனேகன்
    9.புலி
    10.காக்கி சட்டை

அப்பா டீ விற்ற கோர்ட்டில் மகள் நீதிபதி

தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற நெகிழ்ச்சிகரமான சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் குமார். இவரது மகள் சுருதி. நகோதர் எனும் சிறு நகரத்தில் வசித்து வரும் சுருதி, நீதித்துறை சார்ந்த, பஞ்சாப் மாநில சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு தேர்வானார். முதல் முயற்சியிலேயே நீதிபதி கனவுக்கு சுருதிக்கு நிஜமானது. விரைவில் அவர் தனது அப்பா டீ விற்ற நீதிமன்றத்திலேயே நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார். மாநிலப் பள்ளியில் கல்வி கற்ற பின், சட்டப் படிப்பை தொடங்கிய சுருதி, குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சிறு வயதில் இருந்தே நீதித்துறை சார்ந்த படிப்புகள் மீது ஆர்வம் கொண்டிருந்த சுருதிக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்துள்ளது. சுருதியின் இந்தச் சாதனையை பாராட்டியுள்ள, ராஜ்ய சபா உறுப்பினரான அவினாஷ் ராய் கண்ணா, ‘சுருதி, பஞ்சாப் மாநிலத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக’வும் குறிப்பிட்டுள்ளார். தனது மகளின் லட்சியம் நிறைவேறியது குறித்து சுரிந்தர் கூறுகையில், “இதைக் காட்டிலும் மகிழ்ச்சியான தருணம் என் வாழ்வில் அமையப்போவதில்லை” என்கிறார். பெருமையான தருணமும் கூட.

ரஜினிக்கு 2016 வருடம் எப்படி இருக்கும் - ஒரு நிதான கணிப்பு!

ரஜினிகாந்த்-

இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங் கிளாஸ் அணிந்து கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் ராசிக்கு கருப்பும் ஆகாது. சிவப்பும் ஆகாது. நடுவில் கொஞ்சம் வெள்ளை இருக்கலாமா என்பதை குடும்ப ஜோதிடரிடம் கலந்தாலோசிக்கவும். ராசி நிறம் நரைத்த வெள்ளை. திசை இமயமலை!

"ப்ரூஸ் லீ" - ன் மறுபக்கம்...?

தற்காப்பு கலையின் முடிசூடா மன்னன் என்று உலகம் முழுவதும் போற்றப்படும் "ப்ரூஸ் லீ" ஒரு சிறந்த நடன கலைஞரும் கூட என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

அவருடைய 14 வயதில் குங்ஃபூ படித்து கொண்டிருத்த கால கட்டத்தில், Cha Cha Cha நடனத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு வந்து, அதற்க்கேன நேரம் ஒதுக்கி மிக விருப்பத்துடன் கற்று கொண்டார் ப்ரூஸ் லீ. ஹாங்-காங்கில் 1958-ம் ஆண்டு நடைபெற்ற மிக பிரமாண்ட Cha Cha Cha நடன போட்டியிலும் பங்கெடுத்து சாம்பியன்ஷிப் பட்டதையும் வென்றார் ப்ரூஸ் லீ.

Martial Arts கற்றுகொள்வதர்க்கு காண்பித்த அதே ஆர்வத்தையும், உழைப்பையும் Cha Cha Cha நடனம் கற்று கொள்வதிலும் காட்டியிருக்கிறார் ப்ரூஸ்லி.

 தன்னுடைய நோட்டில் Cha Cha Cha-வின் 108 ஸ்டெப்களை குறித்து வைத்திருந்திருக்கிறார் அவர். அமெரிக்காவிற்கு சென்ற ப்ரூஸ் லீயின் முதல் வேலை "dancing instructor"-தான்.

மாதவனுடன் இணையும் சூர்யா, இயக்குனர் பாலா!

நீண்ட நாட்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரைலர்கள் அண்மையில் வெளியானது. கமல்ஹாசன் வாழ்த்துக்களுடன் இதன் ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

மாதவன், ரித்திகாசிங், நாசர், காளி வெங்கட், ராதாரவி நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் இப்படத்தை தயாரித்துள்ளார். இயக்கம் சுதா கொங்காரா.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் வெளியிடவுள்ளனர். பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் வருண்மணியன் கலந்து கொள்ளவிருக்கிறாராம். இப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்'

2016 ம் ஆண்டில் எல் நினோ சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது. 2015 ம் ஆண்டில் உலகின் சில பகுதிகள் வறட்சியாலும், சில பகுதிகளில் மழை- வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்த ஆண்டில் எல் நினோ காரணமாக அடுத்த 6 மாதங்கள் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. 2015ம் ஆண்டு உலகின் மிக மோசமான வெப்பம் நிறைந்த ஆண்டாக வானிலை ஆய்வாளர்கள் கூறு வந்தனர். ஆனால் 2016ம் ஆண்டு வெப்பத்தின் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே எல் நினோவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 20 முதல் 30 சதவீதம் மழை அளவு குறைந்துள்ளது. இந்நிலையில், 2016ம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும், இதனால் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என ஐநாவும் கூறி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் தெற்கு ஆப்ரிக்காவில் உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டும்.


மழை அளவு வெகுவாக குறைந்து வறட்சி அதிகம் இருக்கும் என்பதால் வரலாறு காணாத அளவிற்கு உணவுப் பொருட்களின் விலை 5 முதுல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். கடும் வறட்சியால் பயிர்கள், குறிப்பாக அரிசி, சர்க்கரை, காபி போன்ற பயிர் வகைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

எல் நினோவால் மிக அதிக அளவிலான கடலின் வெப்பம், நிலப்பரப்பை நோக்கி வரும். 2016ல் புவியின் ஒரு பகுதி கடுமையான வெப்பம், வறட்சியாலும், மற்ற பகுதி கடுமையான மழை மற்றும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டின் காரணமாகவும் மனித குலம் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.


எல் நினோவால் 2016ல் எந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கமும், வறட்சியும் இருக்குமோ அதற்கு நேர்மாறாக லா நினாவால் அதற்கடுத்த ஆண்டு கடுமையாக மழை, வெள்ளம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனு ராமசாமியே சொல்லிட்டாரு… அப்புறம் என்னங்க?

‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்! குட்டிப்புலி படத்தில் அறிமுகமானவர். சில பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் என்றாலும், கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சௌந்தர்ராஜா. மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இயக்குனர் சீனுராமசாமி தனது முகப்புத்தகத்தில் சௌந்தர்ராஜா பற்றி நாலே நாலு வரி எழுதியிருக்கிறார். வேறு பல ஜன்னல்களை திறந்துவிடுகிற அளவுக்கு படு ஸ்டிராங்காக இருக்கிறது அந்த நாலு வரி.

“கதாநாயகனாக ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், உங்கள் படத்தில் நடித்தே தீருவேன். ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை என்று அடம் பிடித்து இதயத்தில் இடம் பிடித்த தம்பி நடிகர் சௌந்தரராஜா. ஒளிமயமான எதிர்காலம் இவனுக்கு உண்டு என்கிறது தர்மதுரையில் இவனை இயக்கிய பிறகு என் கணிப்பு! ” இதுதான் சீனுராமசாமியின் அந்த பதிவு.

விஜய்சேதுபதியும் இவரும் ஒரு காலத்தில் அறைத்தோழர்களாம். தனது நண்பன் வளர்ந்து உயர்ந்து நிற்கிற படத்தில் எவ்வித ஈகோவுக்கும் இடமில்லாமல் முகம் காட்ட ஆசைப்பட்ட இன்னொரு நண்பனை வாழ்த்துவதில் வஞ்சகம் எதற்கு? அள்ளுங்க அள்ளுங்க…!

சிம்பு மீதான பீப் வழக்குகள் ஒவ்வொன்றாக வாபஸ்-பின்னணி காரணம்தான இது..?

அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடிய ‘‘பீப்’’ பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை இழிவாக சித்தரித்து பாடிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் 3 வழக்குகள் தொடரப்பட்டன.

பா.ம.க. சார்பில் ஒரு வழக்கும், விடுதலை சிறுத்தை சார்பில் 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இதில் பா.ம.க. தொடர்ந்த வழக்கு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டது. விடுதலை சிறுத்தை தென் சென்னை மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வக்கீல் காசி சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

9–வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி திலிப் அலெக்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் காசி ஆஜராகி, தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். கட்சி தலைமை உத்தரவிட்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக நீதிபதி முன் கூறியதை தொடர்ந்து வழக்கு வாபஸ் ஆனது.

இதேபோல கே.கே.நகர் பகுதி விடுதலை சிறுத்தை செயலாளர் புதியவன் என்கிற லட்சுமணன் சிம்பு–அனிருத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கும் இன்று வாபஸ் பெறப்பட்டது.

23–வது பெருநகர் நீதி மன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் முன் விசாரணை ஏற்பு மனு விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த வழக்கையும் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டன. சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விக்கிரமாதித்தனாய் விஜயகாந்தை தொடரும் பா.ஜனதா!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதேபோல், கூட்டணி பேச்சுவார்த்தையும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. அதேபோல், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி என கூறி வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விஜயகாந்த், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்தும், புதிய கூட்டணி அமைப்பது குறித்தும் இதுவரை வாய் திறக்காமல் உள்ளார்.

அதே சமயம் விஜயகாந்த் தங்களது கூட்டணியில்தான் உள்ளார் என பா.ஜனதா கூறி வருகிறது. ஆனால் விஜயகாந்தோ, " அவர்கள்தான் ( பா.ஜனதா) அப்படி கூறிக்கொண்டுள்ளனர். கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கிய பிறகுதான் முடிவெடுக்கப்படும். யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கட்சியினரின் கருத்தை கேட்டு முடிவெடுக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த்தை சந்தித்து பேசிய, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்றும் அவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டணி குறித்து அவரிடம் விவாதித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை விஜயகாந்த்தை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். விஜயகாந்த் வீட்டில் நடந்த இந்த சந்திப்பின்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட விஜயகாந்துக்கு முரளிதரராவ் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டதாகவும்,  முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று விஜயகாந்த் முன்வைக்கும் கோரிக்கைதான் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ' கூட்டணி அமைத்து போட்டியிடுவோம், தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்துகொள்வோம்' என பா.ஜனதா தரப்பில் சொல்லப்படுவதாகவும், ஆனால் அதனை ஏற்கும் மனநிலையில் விஜயகாந்த் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் கூட்டணி குறித்து அவசரப்பட்டு முடிவெடுக்காமல் இருக்குமாறு விஜயகாந்தை பா.ஜனதா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........

ரஜினி, சிவாஜி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் - விஜய் சேதுபதி.. சூப்பர் ஜி. சூப்பர் ஜி

‘நானும் ரௌடிதான்’ வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி பழைய பார்முலாவுக்கு திரும்பியுள்ளார். அடுத்த வருடம் மட்டும் இவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஒரு புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டன் இறார். அன்புசெழியன் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது.

விஜய் சேதுபதி தற்போது ரஜினி படத்தலைப்பான ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள ‘ஆண்டவன் கட்டளை’ படம், சிவாஜி கணேசன், தேவிகா. சந்திரபாபு நடித்து 1964ஆம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, சிவாஜி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் போலும் விஜய் சேதுபதி.. சூப்பர் ஜி. சூப்பர் ஜி..

இதுதான் உண்மையான.. நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்-

இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங் கிளாஸ் அணிந்து கூட பார்க்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் ராசிக்கு கருப்பும் ஆகாது. சிவப்பும் ஆகாது. நடுவில் கொஞ்சம் வெள்ளை இருக்கலாமா என்பதை குடும்ப ஜோதிடரிடம் கலந்தாலோசிக்கவும். ராசி நிறம் நரைத்த வெள்ளை. திசை இமயமலை!

கமல்-

வாக்கு ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும் கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர் மூலமாகவோ கூட பேசாமலிருப்பது நல்லது. பின்பு அது பேட்டியாக வந்துவிட்டதே என்று புலம்புவதை கணிசமாக குறைக்கும். நீண்ட வருஷங்களாக பரணில் போட்டு வைத்த பழசு பட்டுகளுக்கு திடீர் மரியாதை கிடைக்கும். வீட்டில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு, வாசலில் தேங்கியிருந்த குப்பை கூளங்கள் அகலவில்லையே என்று கடந்த வருஷத்தில் நீங்கள் பட்ட கவலை ராசிநாதனின் அமைதி காரணமாக மெல்ல மெல்ல மறையும். பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து சந்திரனை வழிபட்டால், நீங்கள் பேசுவதை நீங்களே புரிந்து கொள்கிற அளவுக்கு வாக்கில் நலம் கூடும்! ராசி நிறம் கருப்பு. திசை- ஈரோடு

அஜீத்-

காலுக்கு வந்த கண்டசனியை தோளில் விழுந்த துண்டு சனியாக கருதி ஆபரேஷன் செய்து கொண்டிருப்பீர்கள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்க வைக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு, வெள்ள நேரத்தில் மட்டும் கண்ணை மறைக்கும் நோய் வந்து மறையும். எதற்கும் முடிச்சூரிலிருக்கும் மூகாம்பிகையையும், கோட்டூரபுரத்திலிருக்கும் கோலவிழியம்மனையும், அடையாறில் இருக்கும் ஆஞ்சநேயரையும் முட்டிக்கால் நீரில் நின்று மூன்று முறை சுற்றி வந்தால் மனபாரம் குறையும். கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் புதனின் நேரடி பார்வை இருப்பதால் எல்லா தொடர்புகளையும் துச்சமென விலக்கி வைப்பீர்கள். குறிப்பாக பத்திரிகையாளர்களை கிட்டவே சேர்க்க மாட்டீர்கள். சிவப்பு ஜிப்பா, மொட்டை தலையுடன் வேதாளக் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ததை இந்த வருடமும் தொடர்வது சிறப்பு. ராசி நிறம் வெள்ளை. திசை வீட்டுக்குள்ளேயே எதுவாக இருந்தாலும்…

விஜய்-

போன வருஷத்தில் புலியடித்து அதனால் கிலியடித்துப் போயிருந்தீர்கள். ராசிநாதன் சற்று பலமாக இருப்பதால் இந்த வருடம் தெறிக்க விடுகிற யோகம் வரும். பயண காலங்களில் பெண் தெய்வங்கள் சில உங்களுக்கெதிராக உக்கிர கதியில் இயங்கி வருவதால், அந்த தெய்வங்களின் காந்த பலம் அதிகம் வீசும் போயஸ் பகுதியை தவிர்ப்பது நல்லது. அடுக்குமொழி பேசுகிறவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது உங்களை பார்த்து மற்றவர்கள் சிரிக்காமலிருக்க உதவும்! இந்த வருஷமாவது கட்சிக் கொடி தைக்கலாம் என்று கவர்ச்சி திட்டத்துடன் அழைக்கும் டெய்லர்களின் சகவாசத்தை இன்னும் நாலைந்து வருஷத்துக்கு ஒத்திப் போடுவது நலம். ஜல ராசிப்படி உங்களுக்கு தோஷம் வந்து சில வாரங்கள் ஆகியிருப்பதால், கோட்டூர்புரம், அடையார், முடிச்சூர் பகுதிகளை காரில் சுற்றி வந்தாவது வணங்கி பாவம் நீக்கிக் கொள்ளலாம். தோஷ நிறம் மஞ்சள் கருப்பு. தவிர்க்க வேண்டிய திசை வண்டலூர்.

சூர்யா-

சூரியனின் உச்சம் பெற்றவராதலால், வாழ்க்கை ‘ஜோ’வென்று பிரகாசமாக இருக்கும். “என்னை அறிந்தால் எல்லா சுபிட்சமும் தருவேன்” என்று நெருங்கி வரும் மேனன்களை தவிர்ப்பது தொழிலுக்கு நல்லது. பாலோ, தயிரோ என்ற குழப்பமே வேண்டாம். சைக்கோவா இருப்பாரோ என்று சந்தேகப்படும் நபர்களை தவிர்த்தால், இரண்டு வருஷத்துக்கு முடங்க வேண்டிய அவசியம் இருக்காது. மார்கண்டேயனின் அருளும் இருப்பதால் தோற்றப் பொலிவில் எந்நாளும் குறை வராது. ஒரு சிலேட்டில் அ- என்று எழுதி, அதை தினந்தோறும் படித்துவர, எல்லா நற்பெயரும் தானாக வந்து சேரும். நிறம்- பளிச்சென்ற எதுவும். திசை- அப்பா ரூம்!

தனுஷ்-

கஷ்ட திசை ‘மாரி மாரி’ அடித்ததால், வாழ்க்கையே வெறுத்து ‘போடா சோமாறி’ என்கிற அளவுக்கு விரக்தியடைந்திருப்பீர்கள். தங்கம் என்று நம்பி இறங்குகிற காரியங்கள், தகரமாகி நஷ்டம் ஏற்படுத்தும். மனைவி ஸ்தானமே பலமாகவும், சில நேரங்களில் பலவீனமாகவும் இருப்பதால், அவரை நம்பி பணம் போடுவதை தவிர்க்கவும். பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். குறிப்பாக இந்தி கைகொடுக்கும். வாழ்நாள் முழுக்க நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம், பீமன்தான்! அவ்வப்போது பிள்ளையாருக்கு கொழுக்கட்டைகளை படைத்து யாருக்கும் கொடுக்காமல் தின்று வந்தால் ஒல்லி தோஷம் நீங்கும்! ராசி நிறம் மாநிறம். திசை மாமனார் வீடு.

சிம்பு-

பேச்சாயி அம்மனின் அருளைப் பெற முடியாத துர்பாக்கியசாலி நீங்கள்தான். அதனால் சுமார் ஆறு வருடங்களுக்கு பேசவோ, பாடவோ, முணுமுணுக்கவோ, கூடாது. முக்கியமாக முக்கால் கிலோ எடையுள்ள நண்பர்கள் வந்தால் முற்றிலும் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது ‘குண’சந்திரிகா யோகத்தை கொடுக்கும். நாட்டு மருந்து கடையில் ‘மண்டை’ வெல்லத்தை வாங்கி தூள் தூளாக அரைத்து செல்போனுக்கு அபிஷேம் செய்து வந்தால் துர் சக்திகள் விலகும். நந்தி காதில் தொடர்ந்து ஓதிவர, ரகசியங்கள் கசியாமல் காக்கப்படும். பிடித்த நிறம் வெள்ளை. திசை – புழலாகவும் இருக்கலாம், வேலூராகவும் இருக்கலாம்!

விஜய்சேதுபதி-

கடந்த வருடம் ஆரஞ்சு மிட்டாய்க்கே அதிகம் செலவு செய்திருப்பீர்கள். கடைசியில் வாயின் ஓரத்தில் எறும்பு கடித்ததுதான் மிச்சம் என்று லாப நஷ்ட கணக்கு முடிந்திருக்கும்! வருஷ இறுதியில் நீங்கள் காட்டிய ரவுடி இமேஜுக்கு நல்ல மரியாதை இருந்ததால், வீரனை வணங்கி இனி வரும் காரியங்களை துவங்கலாம். ‘இடம் பொருள் ஏவல்’ தெரிந்த உங்களையும் கூட, வக்கிர சனி சொத்துக்களை விக்கிற சனியாக நின்று கஷ்டம் கொடுத்திருப்பார். இந்த வருடம் தர்ம துரையாக பெயரெடுப்பீர்கள். தவிர்க்க வேண்டிய நிறம் ஆரஞ்சு. தவிர்க்க வேண்டிய திசை -பைனான்சியர்ஸ் வீடு.

சிவகார்த்திகேயன்-

முருகனின் அருள் கிடைக்காமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அல்லாடி வருகிறீர்கள். அந்த வருத்தம் இந்த பொங்கலோடு போய்விடும். சொந்த வீட்டில் சுக்கிரன் உட்கார்ந்திருப்பதால், கல்லாபெட்டி சிங்காரமாக கவலையற்று இருப்பீர்கள். உங்கள் லக்னத்திலிருந்து வடக்கில் அமைந்திருக்கும் மதுரைக்கு செல்லும்போதெல்லாம் எச்சரிக்கையுடன் இருந்தால் பின் கழுத்தில் அடிபடுவதை தவிர்க்கலாம். முகம் தெரியாத நபர்கள் கையை ஒங்கிக் கொண்டு வந்தால், அங்கிருந்து ‘கமல’ பாதங்கள் தெறிக்க தெறிக்க ஓடிவிடுதல் பூர்வாசிரம கஷ்டங்களுக்கும் சேர்த்து விடுதலையளிக்கும். திருப்பதி, ஏழுமலை, போன்ற வேங்கடனின் பெயர் கொண்டவர்களை தொலைவிலிருந்தே வணங்கிவிட்டு ஓடிவிடுதல் நலம் பயக்கும். பிடித்த நிறம் நீலம். பிடித்த திசை நாலா திசையும்.

நயன்தாரா-

அண்ணாநகர் ராகுவும், தி.நகர் கேதுவும் வாழ்வில் மாறிமாறி வந்து தொல்லை கொடுத்த காலம் போன வருஷத்தோடு போச்சு. தும்பிக்கை விநாயக விக்னேஷன் அருளால் நெற்றியில் பொட்டும், காலில் மெட்டியுமாக இல்லறம் செழிக்க நடப்பீர்கள். மூன்றெழுத்துக்காரர்களால் மன உளைச்சல் ஏற்பட்டாலும், வினை விதைத்தவனே அதை அறுப்பான் என்ற நம்பிக்கையுடைய உங்களை ஒன்றும் செய்ய முடியாது. வீடு வாங்கினாலும் ‘கோடி’ வீடாக பார்த்து வாங்குவீர்கள். இதுவரை வணங்கி வந்த மன்மதனை விட்டுவிட்டு எப்போது விநாயக விக்னேஷ்வரனை வணங்கினீர்களோ, அன்றே பீடை ஒழிந்தது. பிடித்த நிறம் வெள்ளை. திசை- வாடிகன்

விஷால்-

கடந்த சில வருடங்களாகவே ‘வரலட்சுமி’ விரதம் இருந்து வந்த நீங்கள், இந்த வருஷம் மூக்கு முட்ட விருந்து சாப்பிட்டு அந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம். புதன் செவ்வாய் உள்ளிட்ட எல்லா கிரகங்களும் அபிபுல்லா சாலையில் கூடியிருப்பதால், இந்த வருஷம் கட்டிட யோகம் உண்டு. நற்பலன்கள் விளைந்தாலும், வக்கிரசனி அவ்வப்போது அச்சப்படுத்தி வருவதால், நாட்டாமைகளையோ, பஞ்சாயத்து தலைவர்களையோ கண்டால், கண்டவுடனேயே உடலில் உஷ்ணம் ஏற்படும். இதற்கு மருந்தும் இல்லை, மாத்திரையும் இல்லை. பரிகாரமும் இல்லை என்பதால், காணாமலிருப்பதே உத்தமம்! பிடித்த நிறம் கருப்பு. திசை- ஆந்திரா, தமிழ்நாடு.

நமீதா-

‘குன்று’ இருக்கும் திசையெல்லாம் குமரன் இருக்கும் திசை என்று அவரையே வணங்கி வந்தீர்கள். உங்களையே ‘பக்தி குன்று’ என்று பாடி பரவசம் கொண்டனர் பக்தர்கள். புது வருஷம் உங்களை இறகு போல ‘வெயிட் லெஸ்’ ஆக்கி விடும். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் ஏகப்பட்ட கூட்டம் நின்று இன்டர்வியூவுக்கு அலைபாய்வதால், திருமண ஆசையை இன்னும் பத்து வருஷத்துக்கு தள்ளிப் போடலாம். கைவிரல் முழுக்க கத்திரிக்கோல் ரேகை பரவிக்கிடப்பதால், ஒரு லட்சம் கடைகளை குறிவைத்து இந்த வருஷத்தை துவங்கலாம். பலன் உண்டு. பிடித்த நிறம்- மெல்லிசாக எதுவும். திசை- தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்!

சேரன் இயக்கத்தில் நயன்தாராவின் ‘ஆட்டோகிராப் 2’…!

ஒவ்வொரு ரசிகனையும் அவர்களின் முன்னாள் காதல் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த படம் ஆட்டோகிராப். இதில் ஒரு இளைஞனின் வாழ்வில் வந்த சென்ற காதல்களை பற்றி கவிதையாக சொல்லி இருந்தார் சேரன்.

இவரே தயாரித்து இயக்கி நடித்திருந்த இப்படத்தில் நான்கு காதாநாயகிகள் நடித்திருந்தார்கள். அதாவது சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். தமிழில் வெளியாகி படம் சூப்பர் ஹிட்டடிக்கவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே…’ பாடலுக்காக கவிஞர் பா. விஜய் மற்றும் பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் தேசிய விருது பெற்றனர்.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க சேரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய கேரக்டரில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் முதல் பாகம் 2004ஆம் ஆண்டு வந்தபோதுதான் நயன்தாரா சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதால் இப்படத்தின் இரண்டாம் பாக பெயர் மாறக்கூடும் எனத் தெரிகிறது.

அப்போ இது நயன்தாராவின் ஆட்டோகிராப்..ன்னு சொல்லுங்க..

ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல... சத்தியமா இது ஒரு படத்தோட பேர்தாங்க!

பிரபல நடிகர்கள் தங்களது படத்திற்கு பெயர் வைத்ததும், அது ஏற்கனவே நாங்கள் பதிவு செய்த தலைப்பு என ஆளாளுக்கு போர்க்கொடி தூக்குவது வழக்கமாகி விட்டது. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம் தலை விரித்தாடுகிறது எனலாம். இதனாலேயே படத்திற்கு சகட்டு மேனிக்கு விதவிதமாய் பேர் வைப்பதை புதிய டிரெண்டாக்கி இருக்கிறார்கள் சில இயக்குநர்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான், யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை என இதற்கு உதாரணங்கள் பல.

ந்தவகையில் தற்போது வித்தியாசமான தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. தலைப்பு ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல' என்பதாகும். தலைப்பைக் கேட்டாலே சும்மா சிரிப்பு அள்ளுதுல.

ப்படத்தின் நாயகனாக ஆதித்யா சேனல் தொகுப்பாளர் அஸார் நடிக்கிறார். மிமிக்ரியில் கலக்கிக் கொண்டிருந்த அஸார் ஏற்கனவே விக்ரமனின் நினைத்தது யாரோ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அப்படம் அவ்வளவா சொல்லிக் கொள்ளும்படி ஓடாததால், நடிகரின் பெயர் வெளியில் வரவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் அஸார். இரண்டிலும் அஸார் மட்டுமே சோலோ ஹீரோ.

தாரை தப்பட்டை-அந்தக்காட்சியை நீக்க மாட்டேன்-பாலா- ஏ சான்றிதழே கொடு..!

சசிகுமார் - வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் நாதஸ்வர வித்வானாகவும், வரலட்சுமி கரகாட்டம் ஆடுபவராகவும் நடிக்கின்றனர்.

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் படங்களின் சாயலில் இப்படத்தின் கதை அம்சம் உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல் அன்று திரைக்கு வரும் தாரை தப்பட்டை படம் நேற்றைய முன்தினம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் தாரை தப்பட்டை படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சிலகாட்சிகளை படத்திலிருந்து நீக்கினால் யுஏ சான்றிதழ் தருவதாக தெரிவித்துள்ளனர். யுஏ சான்றிதழ் கிடைத்தாலும் பிரயோஜனமில்லை, வரிவிலக்கு கிடைக்காது. எனவே ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை... குறிப்பிட்ட அந்தக்காட்சியை நீக்க மாட்டேன் என்று பாலா சொல்லிவிட்டார். எனவே ஏ சான்றிதழுடன் திரைக்கும் வருகிறது தாரை தப்பட்டை.

2015ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய+சொதப்பிய டாப் 10 படங்கள்- ஒரு பார்வை

புத்தாண்டு என்றாலே ஒரு புத்துணர்ச்சி தான். இந்த வருடத்தில் நாம் செய்த தவறுகளை இனி செய்யக்கூடாது என்று சபதத்துடன் பலரும் புத்தாண்டை ஆரம்பிப்பார்கள். அந்த சபதம் எல்லாம் அடுத்து வரும் தமிழ் புத்தாண்டு வரை இருக்குமா என்றாலும் கேள்விக்குறி தான். எது எப்படியோ இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக தொடங்க சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், கடந்த ஆண்டு 200 படங்களுக்கு மேல் வந்துள்ளது, இதில் தமிழ் சினிமாவை கலக்கிய+சொதப்பிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.(இவை அனைத்தும் படத்தின் பட்ஜெட், தயாரிப்பாளர் லாபம், விநியோகஸ்தர்கள் லாபம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது).

1)பாகுபலி, காக்கா முட்டை

டைனோசர் முட்டை இருக்கும் இடத்தில் காக்கா முட்டைக்கு என்ன வேலை? என்று கேட்பது புரிகின்றது. ஆனால், பாகுபலி தன் பட்ஜெட்டிற்கு எத்தனை கோடி வசூல் செய்ததோ, அதே தான் காக்கா முட்டை செய்து காட்டியது.

மஹாதீரா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் பலரும் கவரப்பட்டவர் ராஜமௌலி, ஈயை வைத்து இமயம் அளவு வெற்றி பெற்றவர். இவரின் கனவுப்படைப்பான இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்தது பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என நட்சத்திர பட்டாளாத்துடன் வெளிவந்த இப்படம் உலகமெங்கும் இப்படம் ரூ 600 கோடி வரை வசூல் செய்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 70 கோடி வரை வசூல் செய்தது மட்டுமில்லாமல், பாலிவுட்டில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற பெயரையும் பெற்றது.

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் ரூ 1 கோடிக்கு குறைவாக எடுக்கப்பட்ட காக்கா முட்டை ரூ 15 கோடி வரை வசூல் செய்தது. நடிகர்கள் பலங்களை நம்பாமல் கதையை நம்பி வந்த படத்திற்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மதிப்பளிப்பார்கள் என்பதற்கு இவையும் ஒரு உதாரணம்.

2)வேதாளம்

அஜித்+சிவா கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகிய படம் தான் வேதாளாம், டீசர் சாதனை, பாடல்கள் தெறி ஹிட் என தீபாவளிக்கு களம் இறங்க, ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் மாஸ் தெறிக்க, இதுவரை இல்லாத அஜித் படத்திற்கு ஓப்பனிங் கிடைத்தது. முதல் நாளே ரூ 15 கோடி வசூல் செய்து அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. மலேசியாவில் ரூ 13 கோடி, விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் ரூ 45 கோடிகளுக்கு மேல் என இப்படம் வசூலில் புரட்சி செய்ய ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

3)தனி ஒருவன்

இதுவரை இப்படி ஒரு கமர்ஷியல் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு வெளிவந்த படம் தான் தனி ஒருவன். ஜெயம் ரவி, மோகன்ராஜா, ஹிப் ஆப் ஆதி என அனைவரும் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி வசூல் வேட்டை நடத்தினர். அதிலும் அரவிந்த் சாமியின் நடிப்பு மகுடத்திற்கு எல்லாம் மகுடம் தான். இப்படம் பல மொழிகளில் தற்போது ரீமேக் ஆக காத்திருக்கின்றது. தனி ஒருவன் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

4)காஞ்சனா-2

லாரன்ஸ் தன்னுடைய ட்ரண்ட் மசாலாவான பேய் படத்தின் வரிசையில் 3வது பாகமாக காஞ்சனா-2வை வெளியிட, முந்தைய பாகங்கள் அளவிற்கு இல்லை என்றாலும், கோடை விடுமுறை, குழைந்தகளை கவர்ந்து இழுத்தல் போன்ற பல காரணங்களால் இப்படம் ரூ 101 கோடி வசூல் செய்தது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா அல்லாது ரூ 100 கோடி தமிழில் வசூல் செய்தது லாரன்ஸ் மட்டுமே. இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்காததால் 4வது இடத்தை பெற்றுள்ளது.

5)ஐ

கடந்த வருடத்தில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் அதிக வசூல் செய்த படம் என்றால் ஐ தான். இப்படம் ரூ 225 கோடி வரை வசூல் செய்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் கடின உழைப்பு, எமியின் கவர்ச்சி என அனைத்தும் கவர படமும் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது. ஆனால், படத்தின் பட்ஜெட், 30% டாக்ஸ் என இப்படத்திற்கு இதுவே கொஞ்சம் தடையாக இருந்தது. அதை வைத்து பார்க்கையில் இத்தனை கோடி வசூல் செய்திருந்தாலும் இப்படம் சில இடங்களில் சுமாரான லாபத்தை தான் தந்தது.

6)பாபநாசம்

அழகான குடும்பம், அந்த குடும்பத்திற்குள் நுழையும் ஒரு பிரச்சனை என மலையாள சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த த்ரிஷயம் படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்த படம் தான் பாபநாசம். கமல்ஹாசன் படத்திற்கு எப்போதும் இருக்கும் ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால், படத்தின் பாசிட்டிவ் டாக், மெல்ல ரசிகர்களை வரவைத்தது. இப்படமும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 50 கோடி வரை வசூல் செய்தது.

7)நானும் ரவுடி தான்

தமிழ் சினிமா விஜய் சேதுபதி என்று ஒரு தரமான நடிகனை சில வருடங்களாக மிஸ் செய்தது. இதை ஈடுகட்டும் பொருட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இவர் நடித்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் படஜெட் ரூ 10 கோடிக்கும் குறைவு தான், ஆனால், ரூ 35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

8)த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

இதெல்லாம் ஒரு படமா? எப்படி எடுத்து இருக்காங்க பாருங்க என கூறினாலும், பல இளைஞர்களை திரையரங்கு நோக்கி வரவைத்தது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம். இப்படம் மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 25 கோடிகள் வரை வசூல் செய்தது/

9)மாயா, டிமாண்டி காலனி

பேய் படங்கள் என்றாலே பேய் பிடிக்கும் பின் அதை ஓட்ட வரும் சாமியர், அதில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில், கொஞ்சம் செண்டிமெண்ட் என சில டெம்ப்ளைட் இருக்கும். ஆனால், இதையெல்லாம் உடைத்து தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பேய் உலகத்தை காட்டிய படங்கள் தான் மாயா, டிமாண்டி காலனி. இந்த இரண்டும் படங்களிலும் பெரிய நடிகர்கள், டெக்னிஷியன் பெரிதால் செலவு கூட இல்லாமல் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இதில் மாயா ரூ 20 கோடிகளுக்கு மேல், டிமாண்டி காலனி ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

10)ஓ காதல் கண்மணி

இதெல்லாம் தமிழ் குடும்பத்திற்கு செட் ஆகுமா? என கேட்கும் லிவிங் டூ கெதர் கலாச்சாரத்தை கையில் எடுத்து, என்றும் புதுமையை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் மணிரத்னம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஓ காதல் கண்மணி படத்தை ரிலிஸ் செய்தார். துல்கர், நித்யா மேனனின் துறுதுறு நடிப்பு, காதல், கலர்புல் என இளைஞர்களை இப்படம் சுண்டி இழுக்க, மணி ரத்னம் இஸ் பேக் என்று சொல்ல வைத்தது. இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுமார் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இதை தொடர்ந்து ஹிட் வரிசை, சுமாரான லாபம், போட்ட பணம் திரும்ப வந்தது அடிப்படையில் டார்லிங், என்னை அறிந்தால், அனேகன், காக்கி சட்டை, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கொம்பன், 36 வயதினிலே, இன்று நேற்று நாளை, ராஜதந்திரன், இவனுக்கு தண்ணில கண்டம், ரோமியோ ஜுலியட், இனிமே இப்படித்தான், தூங்காவனம், ஈட்டி ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது.

மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து பெரும் தோல்வியை சந்தித்த படங்கள்

புலி, மாஸ், உத்தம வில்லன், பாயும் புலி, சகலகலா வல்லவன், தங்கமகன், இஞ்சி இடுப்பழகி, பொறம்போக்கு, எனக்குள் ஒருவன், இது என்ன மாயம், மசாலா படம், சண்டி வீரன், எலி, வலியவன் என பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. மேலும் தோல்விப்படங்கள் குறித்த விவரங்கள் அறிய க்ளிக் செய்க

வழக்கம் போல் இந்த வருடமும் வெற்றி படங்களின் எண்ணிகையின் விட தோல்வி படங்களின் எண்ணிக்கை தான் அணி வகுத்து நிற்கின்றது. ஆனால், மனதிற்கு ஆறுதளாக காக்கா முட்டை, டிமாண்டி காலனி போன்ற சிறு பட்ஜெட் படங்களின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலையில் ரூ 100 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட புலி ஒரு சில சமூக வலைத்தள பேச்சுக்களால் மாபெரும் தோல்வியடைந்தது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்சினிமா கலைஞர்கள் பலருக்கும் வருத்தம் தான்.

இதில் ரிலிஸாகமால் பெட்டிக்குள் முடங்கிய படங்கள் ரிலிஸான படங்களை விட அதிகம் தான். கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் இனி பிறப்பவை கபாலி, 2.o, பாகுபலி-2, தெறி, 24, அஜித்-சிவா படம், விக்ரம்-ஆனந்த் ஷங்கர், கமல்ஹாசனின் பெயரிடாதப்படம், ரஜினி முருகன், கதகளி, தாரை தப்பட்டை என பல பெரிய நடிகர்கள் படங்கள் வரவிருந்தாலும், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், தியாகராஜா குமரராஜா, டிமாண்டி காலனி இயக்குனர் அஜய்யின் அடுத்த படம், சுந்தர்.சியின் அரண்மனை-2 என பல படங்கள் களம் இறங்க இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

இறால்

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

யானை

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
 

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

புகைப்பிடித்தல்
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

முழங்கை ட்ரிக்

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

சிலந்தி

உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
 

கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
 

முதலை

பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


கரப்பான்பூச்சி

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


தூசிப்படிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


கர்ப்பமான மீன்

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

வங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால்..! லாபமா..? நஷ்ட‍மா..?

அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப் போது பணம் கிடைக்கும் என்று தான் காத்திருப்போம். அதே கட னை திரும்பக்கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திரு ப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந் த இ.எம்.ஐ. யை கட்டி முடிப்பத ற்குள் உயிர் போகிறது என்று புல ம்புகிற வர்கள்தான் அதிகம்.

இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பண ம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்து விடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் என

சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப் பில் இருந்தவர்களும் கல ங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூ ட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந் தியன் ஓவர்சீஸ் வங்கியி ன் முன்னாள் பொதுமேலா ளர் (ஓய்வு) டாக்டர் எஸ். இளங்கோவனிடம் கேட்டோம்.

”வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச்செ லுத்தும்விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆ ண்டுக்குள் கடனை திரு ம்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற் படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பல ரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.

ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெ ருந்தொகை கிடைத் திருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வெளியி லிருந்து வர வேண்டிய பணம் வந் திருக்கும். இது போன்ற   சமயங்களி ல் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்க ள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறை வான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டிவிகிதம் அ திகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நி னைப்பார்கள்.

இப்படி செய்வதால் சிபில் பட்டியலி ல் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படா து. மாறாக, நீங்கள் கடனை விரை வாகச் செலுத் துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிரு ந்தாலே போதும்.

ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒருவங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினா ல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங் கள் மீதான மதி ப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய் ப்பு உள்ளது.

சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட் டும் திறனை கணக்கிடும் அள வுகோல்தான். பெரும்பாலா ன வங்கிகள் வாடிக்கையாள ர்களுக்கு கடன்தரும்முன்   இந்த அளவுகோலை அவசிய ம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கட ன் தரப்படுவதில்லை என்றா லும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது

ஒரே குடும்பத்தில்..!

ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெ யர் சிபில் பட்டியலில் இருந்தா ல் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடை ப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறா ர்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணு குவதாகவும் சிலர் சொல்கிறார் கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.

அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல் லும் சூழ்நிலையில் மனை வி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன் களை வாங்கி, அதை சரி யாகக் கட்டாமல் செட்டில் மென்ட் செய்துள்ளார் என் று வைத்துக் கொள் வோம். பின்னாளில் மகனுக்கு கல் விக் கடன் கேட்டு விண்ண ப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜ ர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.

அதேபோல, அதிக தொகை கட னாக கிடைக்கும்என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் கு றைவாக இருந்தா ல் அந்த கடன் நிகாரிக்கப்படும்.

ஒருவருக்கு கடன் வழங்கும்போ து கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறு வனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவரு டைய எதிர்கால வளர்ச்சி என்பதை எ ல்லாம் அடிப்படையாக வைத்து தான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்மு றையாக கடன் வாங்குபவருக் கும்இதைப்பின்பற்ற வேண்டும்.




அடமானக் கடன்..!

வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமா னமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமா ளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அட மானமாக வைத்து கடன் வாங்கும்போது மா தத் தவணை கட்டும்படி இருக்கும்.

தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறை யும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணை யில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல் லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலா ம். ஆனால், வட்டியை சரியா க கட்டுவது அவசியம். வட்டி க்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலா ம். 

எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய் யுங்கள்” என்று முடித்தார் இளங்கோவன்.

லோன் செட்டில்மென்ட்..!

கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட் டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.

”திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தி னால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரி வர கட்ட முடியவில்லை என் ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத் தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கட னாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வ ராது என்ற சூழ்நிலையி ல்தான் வங்கி செட்டில் மென்டிற்கு போகும்.

செட்டில்மென்ட் முடிவு க்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக் கிவிடும். கொடுத்த கட ன்தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும் போ துதான் செட்டில்மென் டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங் கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்ட வேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும்.

 இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவ ரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்து விடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்கு கூட  சென்ட்டில் மென்ட் செய்ய வங்கி ஒப்புக் கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கி யவரும் பெ ருமையாக வாங்கிய கடனை விட குறைவா ன தொகையே கட்டினேன் என்று பெருமை ப்பட்டுக்கொள்ளலாம்.

செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில் மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்ப டும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்தி சாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வா ங்கிய கடன் தொகையை விட குறைவான தொகையே திரு ம்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும்.

 இந்த தகவல் அப்ப டியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகி விடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவி டும். பிற்பாடு வீட்டுக்கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ண ப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வா ய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி வி கிதம் சற்று அதிகமாக இருக் கும். அதோடுகடனுக்குஒருவ ர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன் ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபா சிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, மீதமுள்ள கடனுக்கான வட் டி அதிகம் என்றாலும் பரவாயில்லை . வங்கி கேட்கும் தொகை முழுவதை யும் செலுத்த முயற்சி செய்யுங்கள். சில ஆயிரங்களை மிச்சப் படுத்துவ தாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்க ள்” என்றார். ஆக கடன் வாங்குபவர் கள் கவனமாக இருப்பது அவசியம்!

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.

அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.

இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).

கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.

இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..

கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.

உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்

 ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.

புரோகிராம்களை முறையாக மூடிட புதிய மென்பொருள்!

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், ""அனைத்து புரோகிராம்களையும் மூடிவிடவும்'' என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.


இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.


இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது.


"x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப் (kill) படுகின்றன”.


இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். ஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. இந்த End it All புரோகிராமினை

http://www.docsdownloads.com/enditall-1.htm
என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து விண்டோஸ் பதிப்புகளிலும் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கலாம்.

பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைது

பீப் பாடல் சர்ச்சையில் நடிகர் சிம்பு, பாடகர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி போலீசாருக்கு அம்மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பீப் பாடல் மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளார் நடிகர் சிம்பு. இவருடன் இசையமைப்பாளர் அனிருத் மீதும் நடவடிக்கை கோரி பல்வேறு தரப்பிலிருந்து போராட்டங்கள் வெடித்தன.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கோர்ட் அறிவுறுத்தல்படி, சர்ச்சைக்குரிய அந்தப் பாடலை வெளியிட்ட இணைய தளத்தை அணுகி அந்தப் பாடலை யூடியூப்பிலிருந்து நீக்கும்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால் யூடியூப் நிர்வாகம் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டது.

இந்நிலையில், பீப் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சக்தி கனி என்ற வழக்கறிஞர் கடந்த 15 ஆம் தேதி தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்தார். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி சக்தி கனி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதே மேற்கூறிய உத்தரவை நீதிபதி காமராஜ் பிறப்பித்தார்.

மேலும் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மார்ச் 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டின் இந்த உத்தரவால் சிம்புவை, வருகிற ஜனவரி 4 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகும் முன்னரே செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.

‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?

சஹாரா:

“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


“ஆரஞ்ச்’ வந்த வழி:

வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


காகிதம்:

“காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


திங்கள்:

திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


கிருதா:

“கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

 இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்