Thursday, December 31, 2015

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.


அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!)


எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.


பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.


ஒன்று போட்டு நூறு சைபர்.


எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.


 ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

சிம்பு தம்பிக்கான 2016 ராசிபலன் எப்படியிருக்கு..!

பேச்சாயி அம்மனின் அருளைப் பெற முடியாத துர்பாக்கியசாலி நீங்கள்தான். அதனால் சுமார் ஆறு வருடங்களுக்கு பேசவோ, பாடவோ, முணுமுணுக்கவோ, கூடாது. முக்கியமாக முக்கால் கிலோ எடையுள்ள நண்பர்கள் வந்தால் முற்றிலும் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பது ‘குண’சந்திரிகா யோகத்தை கொடுக்கும். நாட்டு மருந்து கடையில் ‘மண்டை’ வெல்லத்தை வாங்கி தூள் தூளாக அரைத்து செல்போனுக்கு அபிஷேம் செய்து வந்தால் துர் சக்திகள் விலகும். நந்தி காதில் தொடர்ந்து ஓதிவர, ரகசியங்கள் கசியாமல் காக்கப்படும். பிடித்த நிறம் வெள்ளை. திசை – புழலாகவும் இருக்கலாம், வேலூராகவும் இருக்கலாம்!

அழகான குழந்தை தன்னுடையதுதான்-போலிசாரிடம்-பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் பரபரப்பு

 அழகான குழந்தை தன்னுடையதுதான் என்று போலிசாரிடம் நிரூபிக்க ஒரு பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கேரளாவின் கோலிகோடு மாவட்டத்தில்,  நாடபுரம் என்று ஊருக்கு அருகில் உள்ள கலாச்சி என்னும் பகுதியில், கடந்த திங்கள் கிழமை, ஒரு பிச்சைச்காரி காண்பவரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் ஒரு அழகான 4 மாத குழந்தையை வைத்திருந்தார்.
  அதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில் தாயின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும், குழந்தையின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது. 

  எனவே அக்குழந்தையை அவர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்தனர்.

ஆனால் அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று வாதாடினார். போலிசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. 
  அதன் பேரில், போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.

அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று அழுது புரண்டிருக்கிறார். அவரின் உறவினர்கள் சிலர், அதே பகுதியில் வசிப்பதாக கூறியதால், போலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்தார்கள்.
  அப்போது அவரின் உறவினர்கள், ஒரு ஏழு வயது சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அந்த சிறுமி, அக்குழந்தையின் சகோதரி என்று கூறப்பட்டது. அவர்களும், அந்த குழந்தை அவருடையதுதான் என்று கூறினர். 
  மேலும் அந்த குழந்தை அவரின் சகோதரியிடமும், உறவினர்களிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதை பார்த்த போலிசார், கொஞ்சம் இறங்கி வந்தனர்.

அதன் பின், அவரையும், அக்குழந்தையும் அவரின் உறவினரோடு அனுப்பி வைத்தனர். 
  தான் பெற்ற குழந்தை தன்னுடையதுதான் என்று நீரூபிக்க அந்த தாய் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

ராதிகா பேசியதைக் கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருதாம் விஷாலுக்கு..!

விஷால் நடிகர் சங்க தேர்தலில் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் வெற்றி பெற்றுவிட்டார். இந்நிலையில் இன்று கதகளி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் படத்தின் ட்ரைலரில் காண்டம் குறித்து ஒரு பெண்ணிடம் பேசியதை ராதிகா சுட்டிக்காட்டி குறை கூறினார், இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை, இதை கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது’ என மிக கூலாக பதில் அளித்தார்.