Friday, December 18, 2015

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.

7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.

10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

15. பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு “ஹெவிநெஸ்’ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.

‘தங்கமகன்’ ஜொலிக்கிறான் - திரை விமர்சனம்

தனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் மூவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் வருமானவரித் துறை அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக பணிபுரிந்து வருகிறார். ரவிக்குமாரின் மனைவி ராதிகா குடும்பத் தலைவி. நடுத்தர குடும்பம்தான், என்றாலும் இவர்களது குடும்பத்தில் சந்தோஷத்துக்கு குறைவில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகி எமி ஜாக்சனை ஒரு கோவிலில் பார்க்கிறார் தனுஷ். பார்த்ததும் அவர்மீது காதல் துளிர்விட, தொடர்ந்து எமியையே சுற்றிவந்து, தனது காதலை வெளிப்படுத்துகிறார், தனுஷ். ஒருகட்டத்தில் எமி ஜாக்சனும் தனுஷை காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள். அதேநேரத்தில், சதீஷும் எமி ஜாக்சனுடன் எப்போதும் கூடவே வரும் அவரது தோழியை காதலிக்கிறார்.

தனுஷும், சதீஷும் காதல் வலையில் சிக்கி, தங்களது காதலிகளுடன் ஊர் சுற்ற, அரவிந்துக்கு இதுபற்றி எதுவுமே இவர்கள் தெரிவிப்பதில்லை. இதனால், அரவிந்தனுடனான இவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

ஒருகட்டத்தில், இவர்கள் காதல் செய்யும் விஷயம் அரவிந்துக்கு தெரியவர, தன்னிடம் இதைப்பற்றி தெரிவிக்காத நண்பர்களிடம் கோபித்துக் கொண்டு அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிகிறான்.

பின்னர், ஒருநாள் எமி ஜாக்சன், தன்னுடைய கனவு இல்லம் பற்றி தனுஷிடம் கூறி, திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக அந்த வீட்டில்தான் வசிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அப்பா, அம்மா மீது அதிக பாசம் கொண்ட தனுஷோ, பெற்றோரை விட்டு தனியாக வரமுடியாது என்று கூறுகிறார். இதனால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துப் போகிறார்கள்.

இதையடுத்து, தனுஷ் படித்து முடித்துவிட்டு அப்பா வேலைசெய்யும் வருமான வரித்துறை அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்கிறார். அதன்பின்னர், சமந்தாவை தனுஷுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். இருவருடைய திருமண வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவரது உயரதிகாரி ஜெயப்பிரகாஷ் மூலமாக பிரச்சினை வருகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் மீது திருட்டுப் பட்டம் கட்டி அவரை அவமானப்படுத்துகிறார் ஜெயப்பிரகாஷ். இந்த அவமானத்தை தாங்க முடியாத கே.எஸ்.ரவிக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இதையடுத்து, தனுஷின் வேலையும் பறிபோகிறது.

அதன்பின்னர், தனுஷின் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. தங்குவதற்குகூட வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற தனுஷும் கிடைத்த சின்ன,சின்ன வேலைகளை நிரந்தரமில்லாமல் செய்துவருகிறார்.

இந்நிலையில், சமந்தா கர்ப்பமடைகிறார். சந்தோஷப்படவேண்டிய இந்நேரத்தில் தனது குடும்பத்தின் நிலையை அறிந்து, மிகவும் வேதனையடைகிறார் தனுஷ். இறுதியில், தனது அப்பா மீதுள்ள திருட்டுப் பட்டத்தை தனுஷ் எப்படி நீக்கினார்? தன்னுடைய குடும்பத்தை எப்படி மேலே கொண்டு வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் நண்பர்களுடன் அரட்டை, எமி ஜாக்சனுடன் காதல் என ஜாலியாக வரும் தனுஷ், பிற்பாதியில் பொறுப்பான குடும்பத் தலைவனாகவும், அப்பா மீதுள்ள களங்கத்தை துடைக்க நினைக்கும் ஆக்ரோஷமான மகனாகவும் அழகாக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சியாகட்டும், ரொமான்ஸ் காட்சியாகட்டும் தனுஷ் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

எமி ஜாக்சன் தனது முந்தைய படங்களைவிட இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் அழகாக தெரிகிறார். காதல் காட்சிகளில் தனுஷுடன் சேர்ந்து இவர் செய்யும் ரொமான்ஸ் விஷயங்கள் ரொம்பவும் ரசிக்க வைக்கிறது.

சமந்தா, அழகான குடும்ப பெண்ணாக அனைவர் மனதிலும் பதிகிறார். அலட்டல் இல்லாத பொறுமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். காமெடிக்கு சதீஷ், தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனுஷின் உறவுக்கார பையனாக வரும் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பிலும் கொஞ்சம் தேறியிருக்கிறார்.

முதன்முதலாக படம் முழுக்க வரும் கே.எஸ்.ரவிக்குமார், இந்த படத்தின் கதையை தாங்கி நிற்கிறார். குடும்பத்தின் மீது அக்கறை காட்டும் பாசமிகு அப்பாவாக மனதில் பதிகிறார். ராதிகாவும் தனது அனுபவ நடிப்பால் அனைவர் மனதையும் கவர்கிறார்.

இயக்குனர் வேல்ராஜ்-தனுஷ் கூட்டணியில் உருவான படம் என்றதுமே, இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை வேல்ராஜ் ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையில் முக்கியமல்ல, பாசமும் தன்மானமும் ஒரு வாழ்க்கைக்கு அடிப்படை முக்கியம் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அதேபோல், அப்பா மீதுள்ள களங்கத்தை போக்க நினைக்கும் ஒரு மகனின் வேதனையை அழகாக சொல்லியிருக்கிறார். சினிமாத்தனம் இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில், இப்படி ஒரு குடும்பம் நமக்கும் வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

குமரன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் அழகாக பளிச்சிடுகின்றன. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமராவின் பணி அழகாக இருக்கிறது. அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டன. இருந்தாலும், இதை காட்சியமைப்பில் பார்க்கும்போது கூடுதல் அழகாக இருக்கிறது. பின்னணி இசையை வழக்கம்போல் தெறிக்கவிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தங்கமகன்’ ஜொலிக்கிறான்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....

மீடியாவின் எல்லை மீறல்!

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர்.

தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா.

அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். 'எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்,' என்று கூற... 'என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?' என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார்.

இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் 'சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க,' என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம்.

இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல.

மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள்.

மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் 'சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை.

அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில்.

இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும்.

அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல!

இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்!

மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான்.

ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

இளையராஜாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்- ஜேம்ஸ் வசந்தன்

சிம்பு எழுதி பாடிய பீப் பாடலால் பாதிக்கப்படுவது அவர் மட்டும் இல்லை. பல திரைப்பிரபலங்களும் இதனால், பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் இளையராஜாவிடம் பீப் சாங் குறித்து கேட்க, அவர் கோபமாக சில வார்த்தைக்களை கூறினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான டுவிட் செய்துள்ளார். இது இளையராஜாவை மிகவும் தாக்கியது போல் உள்ளது. இதை நீங்களே பாருங்கள்...

    ஒளிந்துகொண்டிருக்கிற நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிக்கையாளனை பாராட்ட வேண்டும்.— James Vasanthan (@Vasanthan_James) December 17, 2015

இதை தான் 20 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்- பீப் சாங் குறித்து தாமரை

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் சமீபத்தில் பீப் சாங் குறித்து தன் முகநூலில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் இவர் ‘கடந்த 4 நாட்களாக பலரும் என்னிடம் பீப் சாங் கேட்டீர்களா என்று கேட்டனர். நானும் ஒரு வழியாக கேட்டேன்.

இத்தனை வருடங்களால எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருந்தனர். அவர்களை பார்த்து எத்தனை பேர் பாடல் எழுத வேண்டும் என்று ஓடி வந்தார்கள்.

இதற்கு முன்பு இதுப்போன்ற பாடல்களை தொடர்ந்து கைத்தட்டி ரசித்ததால் தான் தற்போது இந்த பாடலில் வந்து நின்றுள்ளது. இதை தான் நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கூறி வருகிறேன்.

மாற்றம் முதலில் நம்மிடையே தேவை, நான் மட்டும் இதை கூறினால் போதாது, அனைவரும் இதை எதிர்த்து போராட வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளார்.

தங்கமகன் - சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்!

தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்!

கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குடும்ப ஏமி ஜாக்சனை ஸ்கெட்ச் போட்டு காதலிக்க வைக்கிறார். லிப்லாக் மழை, கட்டிப்பிடி விளையாட்டுகளில் நாளும் பொழுதும் கழியும்போது, சின்ன ஊடல் ஜோடியைப் பிரிக்கிறது. காதல் தோல்வி மறந்து, பொறுப்பு உணர்ந்து, வேலைக்குச் சென்று, சமந்தாவை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டு ‘ஹாப்பி ஹவர்ஸ்’களில் திளைக்கிறார் தனுஷ். திடீர் இடி. அப்பா ஒரு திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள, தனுஷின் வேலையும் பறிபோக குடும்பமே நிலைகுலைகிறது. என்ன நடந்தது என்பதை உணர்ந்து அதை சரிசெய்து குடும்பத்தின் தங்கமகனாக தனுஷ் எப்படி ஜொலிக்கிறார் என்பது... வேறென்ன வெள்ளித் திரையில்தான்!

ஆச்சரியமாக... அடக்கி வாசித்திருக்கிறார் தனுஷ். ஓப்பனிங் பில்ட்-அப் இல்லை, அதீத சவால் இல்லை, ஓவர் குடி கும்மாளம் இல்லை. சிம்பிள் ஹம்பிள் இளைஞனாக மனதுக்கு நெருக்கமான கேரக்டர். ஏமியுடனான காதல் கலாட்டாக்கள் வெகு இயல்பு. ’என் நம்பர் கொடுப்பேன்னு பார்த்தியா... அஸ்கு புஸ்கு..’ என ஏமியிடம் அசால்ட் காட்டுவது முதல் பைக்கில் செல்லும்போது ‘நான் எதுவும் பண்ணலையே’ எனப் பதறி பார்வையைப் பதிக்குமிடம் வரை செம சேட்டை. அதுவே சமந்தாவிடம் கனிவான கணவனாக மென்மை ரொமான்ஸ். முதலிரவு அறையில் சமந்தா காலில் விழப் போகிறார் என்று நினைத்துப் பதறுவதும் ஏமி பற்றிய சமந்தாவின் கமெண்ட்டுக்கு சமாளிப்பதுமாக... வாழ்ந்திருக்கிறார் மனுஷன். 

அட... ஏமி பொண்ணு அழகா நடிச்சிருக்காங்க..! தனுஷ் தன்னை பின் தொடருகிறாரா என்று தவிப்புடன் பார்ப்பதும் கணவனிடம் தனுஷை விட்டுக் கொடுக்காமல் பேசுவதுமாக அசத்தல். இந்தப் பக்கம் செம பாந்தமாக சமந்தா. காட்டன் சேலை, கணவனுக்கு காத்திருப்பு, கஷ்ட ஜீவனம் என தமிழக ஹோம் மேக்கர்களை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார். மழையில் தனுஷ் நனைந்து வந்து நிற்கும் காட்சியில் தலை துவட்டுவதா... இழுத்து அணைத்துக் கொள்வதா என்று சமந்தா தயங்கி மயங்கி நிற்குமிடம்... வாவ்! 

கெத்து எகத்தாளத்தையே டிரேட் மார்க்காக கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் மறதி மனுஷனாக படபடக்க வைக்கிறார். மகனை கோவிலுக்குப் போக வைக்க தலையை ஆட்டி உருட்டி ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கிறாரே ராதிகா... ஆவ்ஸம்!

அனிருத்தின் ஹிட் ஆல்பம் வரிசையில் இந்தப் படமும் இடம் பெற, பின்னணி இசையில் வழக்கமான அதார் உதார். ஏமியோ, சமந்தாவோ பச்சக் பச்சக்கென லிப் லாக்கி விடுகிறார் தனுஷ். ஆனாலும், ’உன் மேல என்னால கோபமே பட முடியாது யமுனா’ என சமந்தாவிடம் தனுஷ் உருகுமிடம்தான் காதலின் தங்கத் தருணம்.

மொட்டை மாடியில் பட்டப் பகலில் பீர் மயக்கத்தில் ஏமி தனுஷிடம் காதல் சேட்டை செய்வது, தனுஷின் நண்பன் ‘பீப்’ வார்த்தையை ஒரு சமயம் சொல்வது (மியூட் செய்திருக்கிறார்கள்), மனைவியே கணவனின் எக்ஸ் காதலியைப் பற்றி அவனிடம் சீண்டலாகச் சிலாகிப்பது, கர்ப்பிணி மனைவியை காக்க வைத்துவிட்டு தனுஷ் ஆக்‌ஷன் அதிரடியில் ஈடுபடுவது ஆகியவை கலாசார கண்ணியக் காவலர்கள் கவனத்துக்கு!

மனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தையிடம் ’சொந்தக்காரங்களை நம்பாதப்பா’ என தனுஷ் சொல்வது, ‘நான் என் எக்ஸ் பாய் ஃப்ரெண்டை பத்திச் சொல்லுவேன்... ஆனா, அது உனக்கு அசிங்கமாயிரும்’ என தன் கணவனிடம் ஏமி சொல்லுமிடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறது வசனம்!

இந்த ஹைலைட் சங்கதிகளில் பெரும்பாலானவை முன்பாதியிலேயே நிகழ, பின்பாதி... மெலோ டிராமாவாக சவசவ! ‘டைஹார்டு’ தனுஷ் ரசிகர்களுக்காக அர்ப்பணித்துவிட்டார்கள் போல. ஒரு செல்போனை வைத்துக் கொண்டு நாலு கோடியை ஜஸ்ட் லைக் தட் மீட்டு சித்து விளையாட்டு காட்டுகிறார் தனுஷ்.

ஆக, ஃபைனல் பன்ச் என்ன..?

தங்கமகன் ஃபர்ஸ்ட் ஹாஃப் செம ஜாலி.... செகண்ட் ஹாஃப் லாஜிக் கேலி. தனுஷ் ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும். மற்றவர்களுக்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்!

ஊடகங்களின் கோபத்தை உணர்ந்த பாலா

பாலா இயக்கத்தில் எம். சசிகுமார் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ள படம் - தாரை தப்பட்டை. வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. இது இளையராஜாவுக்கு 1000 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் மிகப்பெரிய விழா நடத்தி அந்த விழாவிலேயே தாரை தப்பட்டை படத்தின் பாடல்களையும் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார் பாலா. அந்த விழாவை ஒளிபரப்பும் உரிமை சில கோடிகளுக்கு தனியார் சேனலுக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், இளையராஜாவுக்கு நடைபெற இருந்த அந்த பாராட்டு விழாவை கேன்சல் செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்தநிலையில் இளையராஜாவுக்கு இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் மக்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்று சிலர் இயக்குநர் பாலாவிடம் சுட்டிக்காட்டியதாகவும், அதன் காரணமாக இளையராஜா பாராட்டுவிழாவை பாலா ரத்து செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இன்னொரு தரப்பினரோ வேறு ஒரு காரணத்தை சொல்கின்றனர். நேற்று ஒரு நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இளையராஜா மீது ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபமும் திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் அவருக்குப் பாராட்டுவிழா நடத்தினால் தாரை தப்பட்டை படத்தை ஊடகங்கள் கிழித்துவிடும் என்ற பயம் காரணமாகவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டாராம் பாலா.

கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள்!!!

குளிர்காலம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காலமாக இருந்தாலும், இக்காலத்தில் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு மிகவும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். அதில் முதன்மையான ஓர் பிரச்சனை சரும வறட்சி. நம் உடலிலேயே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது நம் கைகள் தான். இதனால் குளிர்காலத்தில் கைகளில் அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்!!!

இதனைத் தடுக்க வேண்டுமானால், குளிர்காலத்தில் கைகளுக்கு போதிய பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். அதுவும் க்ரீம்களைக் கொண்டு அதிக பராமரிப்புக்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகளும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க, இத ட்ரை பண்ணலாமே!!!

இங்கு கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து குளிர்காலத்தில் பின்பற்றி கைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா…

ஆலிவ் ஆயில்
குளிர்காலத்தில் ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது கை, கால்களுக்கு தடவி வந்தால், சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து, கை, கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

மில்க் க்ரீம்
மில்க் க்ரீம் ஓர் சிறந்த மாய்ஸ்சுரைசர். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செரும செல்கள் உருவாக வழிவகுக்கும். எனவே மில்க் க்ரீம் கொண்டு தினமும் மசாஜ் செய்து வாருங்கள்.

தேன்
தேன் சருமத்திற்கு ஈரப்பசையை வழங்குவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும். அதற்கு தேனை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, அதோடு சிறிது சர்க்கரை கலந்து சருமத்தை ஸ்கரப் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமத்தின் ஈரப்பசை அதிகரித்து, சருமமும் பொலிவோடு இருக்கும்.

தயிர்
தயிரும் சிறந்த மாய்ஸ்சுரைசர். மேலும் இதில் ப்ளீச்சிங் தன்மையும் உள்ளது. எனவே குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்
கண்ட க்ரீம் மாய்ஸ்சுரைசர்களை கை, கால்களுக்கு தேய்ப்பதற்கு பதிலாக, தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், கைகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கலாம்.

பால்
முகத்தை எப்படி பால் கொண்டு துடைத்து எடுக்கிறீர்களோ, அதேப் போல் தினமும் பாலை கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தால், கைகளுக்கு ஈரப்பசை கிடைத்தவாறும் இருக்கும், கைகளில் உள்ள இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

ஓட்ஸ்
ஓட்ஸ் பொடி செய்து, பால் சேர்த்து கலந்து, அதனை கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கைகளில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதோடு, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

ரஜினிகாந்த், ஷங்கர் வீடு முற்றுகை?

ரஜினி, ஷங்கர் 3வது முறையாக இணையும் படம் எந்திரன் 2.O. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்ஸன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் கூறினார்.

இதனால், தமிழர் முன்னேற்ற படை என்ற இயக்கம், இன்னும் 3 நாட்களில் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் ரஜினி, ஷங்கர் வீடு முன்பு முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

தங்கமகன் - விமர்சனம் - குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்

தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.

தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைய வேல்ராஜ் இயக்கியுள்ளார்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே கணவன், மனைவியான தனுஷ், சமந்தா மற்றும் தனுஷின் அம்மாவான ராதிகா மிகவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகின்றது. அங்கிருந்து படம் ப்ளாஸ் பேக் செல்கிறது.

அன்பான குடும்பம் அழகான அப்பா, அம்மா, நல்ல நண்பர்கள் என தனுஷின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. இவரின் வாழ்க்கையை மேலும் சந்தோஷப்படுத்த எமி ஜாக்ஸன் வருகிறார். தனுஷிற்கு பார்த்தவுடன் காதல்.

பின் என்ன வழக்கம் போல் எமி செல்லும் இடமெல்லாம் சென்று அவர் மனதில் எப்படியோ இடம்பிடிக்கிறார். எல்லா விஷயத்தையும் தன் அப்பா, நண்பர்களிடம் சொல்லும் தனுஷ் இதை மட்டும் மறைக்கின்றார். இவர்கள் காதலிப்பது சதீஸுக்கு மட்டும் தெரிய மற்றொரு நண்பருக்கு சொல்ல மறுக்கின்றார்.

இதனால் நண்பர்களுக்குள் சண்டை வந்து பிரிய, அதே நேரத்தில் எமி, நமக்கு திருமணமானால், தனியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அப்பா, அம்மாவை விட்டு உன்னுடன் தனியாக வர முடியாது என்று தனுஷ் சொல்ல வாக்குவாதம் பெரிதாகி இருவரும் பிரிய நேரிடுகிறது.

இதை தொடர்ந்து அனைத்தையும் மறந்து தனுஷ், சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கின்றார். இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அவருடைய உயர் அதிகாரி ரூ 5 கோடி கொடுத்து வைக்கின்றார்.

அவருக்கு மறதி அதிகம் என்பதால் பணத்தை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதன் பிறகு தனுஷ் பொறுப்புணர்ந்து அந்த பணம் எங்கு சென்றது, தன் அப்பா நல்லவர் அவர் அந்த பணத்தை திருடியிருக்க மாட்டார் என நிரூபிக்க போராடுவதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் இனியும் தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒவ்வொரு அம்மாவும் இப்படி ஒரு பையன் வேண்டும் என்கின்ற அளவிற்கு திரையில் வாழ்கின்றார். அவர் சிரித்தால் ஆடியன்ஸ் அனைவரும் சிரிக்கிறார்கள், அழுதால் அனைவரும் அழுகிறார்கள் அந்த அளவிற்கு தன் திரை ஆளுமையை வளர்த்துள்ளார்.

எமி காதலியாக முதல் பகுதியில் வருகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் 3 படத்தையே தூக்கி சாப்பிடும் ரொமான்ஸ் காட்சிகள், அதிலும் அவர் நிறத்திற்கு கூட ஒரு விளக்கம் கொடுத்து, ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்திருப்பது சூப்பர். இரண்டாம் பாதியில் கதையின் திருப்பத்திற்கு உதவுகிறார்.

சமந்தா, தனுஷின் மனைவியாக கதாபாத்திர பொருத்தம். தன் கணவரின் பெயர் கெடக்கூடாது என்பதற்காக அம்மா வீட்டில் இருந்து வெளியேறும் காட்சியில் இருந்து, தனுஷிற்கு முதல் காதலி இருப்பது தெரிந்தும் ஜாலியாக அரட்டை அடிப்பது என நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கேரக்டர்.

கே.எஸ்.ரவிக்குமார் இத்தனை அப்பாவியாக அவர் நடித்த எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம். காமெடி, வில்லன் கலந்து தான் அவர் நடித்த ஒரு சில படங்களிலும் தான் பார்த்திருப்போம். இதில் செம்ம ஸ்கோர் செய்கிறார். ராதிகாவும் அப்பாவி அம்மாவாக தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.

சதீஸ் கவுண்டர் கொடுப்பதும், கலாய் வாங்குவதும் என லிட்டில் சந்தானமாக வளர்ந்து வருகிறார். இத்தனை சிறப்பு இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் வில்லன் கதாபாத்திரம் தான்.

ஒரு படத்தில் ஹீரோ வெற்றி பெற்றால் அதை நாம் ரசித்து கைத்தட்ட வேண்டும், ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய போராட்டம் இருக்க வேண்டும். ஆனால், இதில் வில்லன் மிகவும் அமுல்பேபியாக இருப்பதால், தனுஷ் வெற்றிபெறும் போது ரசிகன் கூட கைத்தட்டவில்லை.

க்ளாப்ஸ்

தனுஷ்-எமி காதல் காட்சிகள், இன்றைய ட்ரண்ட் இளைஞர்களுக்கு செம்ம விருந்து. அதே போல் தனுஷ்-சமந்தா திருமண உறவுகள் நிஜ தம்பதியினர்களே அசந்து போகும் யதார்த்தம். குடும்ப உறவுகள் பற்றி பேசும் காட்சிகள்.

அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அதிலும் அறிமுக ஒளிப்பதிவாளர் குமரன் செம்ம கலர்புல்லாக காட்டியுள்ளார்.

படத்தின் முதல் பாதி. வில்லன் கதாபாத்திரம் டுவிஸ்ட் அவிழும் காட்சி.

பல்ப்ஸ்

வில்லன் கதாபாத்திரம் வலுவாக இல்லாமல் இரண்டாம் பாதி மிகவும் தடுமாறுகிறது.

தனுஷ் படத்திற்கு இசை என்றாலே அனிருத் புகுந்து விளையாடுவார், ஆனால், இதில் என்னவோ பின்னணி இசையில் சொதப்பியுள்ளார். அதற்காக வேலையில்லா பட்டதாரி இசையை அப்படியேவா போடுவது. சுவாரசியம் இல்லாமல், மெதுவாக நகரும் இரண்டாம் பாதி.

மொத்தத்தில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்.

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

டெல்லி ரகசியம்-ரிவர்ஸ் ஆன விஜயதாரணி எம்.எல்.ஏ.

 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ. பின்வாங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே திடீரென கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, தன்னை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயதாரணி. இதன் பேரில்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் சிலர், விஜயதாரணி மீது தீண்டாமை பிரிவின் கீழ் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க விஜயதாரணிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதன் பேரில், சோனியாகாந்தி விஜயதாரணி சந்தித்தார். அப்போது, இரு தரப்பும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற உத்தரவிட்டார். இதனையடுத்து,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது காவல் நிலையத்தில் விஜயதாரணி அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டது. 

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!! எச்சரிக்கை...?

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!



நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .


அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .


இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .


ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

தென்னிந்தியன் - திரை விமர்சனம்

சரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் கேட்டு வருகிறார். சுரேஷை கைது செய்ய சரியான தருணம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால், சுரேஷோ எம்.பி., கமிஷனர் ஆகியோரின் ஆதரவோடு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். இதனால், அவரை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய சரத்குமார் காத்திருக்கிறார்.

மறுமுனையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நிவின் பாலி, தனது நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் பாவனாவை காப்பாற்றுகிறார். இதனால் கோபமடைந்த அந்த ரவுடி கும்பலின் தலைவனான சுரேஷின் தம்பி, நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களை கொல்ல முடிவு செய்கிறார்.

இது தெரியவந்ததும் நண்பர்கள் உடனே அங்கிருந்து புறப்பட தயாராகிறார்கள். ஆனால், இவர்கள் சென்ற கார் பழுதடையவே அங்கிருந்து கிளம்ப முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், தன்னைக் காட்டிக் கொடுத்ததாக கூறி தனது கூட்டாளி ஒருவனை சுரேஷ் கொலை செய்வதை, நிவின் பாலியின் நண்பர்களில் ஒருவன் செல்போனில் படம்பிடித்து விடுகிறான். இதை பார்க்கும் சுரேஷ், அவர்களை பிடிக்க முயற்சி செய்கிறான். அப்போது, அவனிடமிருந்து நண்பர்கள் அனைவரும் தப்பித்து செல்கிறார்கள்.

கொலை செய்ததை படம்பிடித்த நண்பர்களை கொல்ல சுரேஷும் அவர்களை தேடி அலைகிறான். இறுதியில் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களின் கதி என்ன? சரத்குமாரின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

சரத்குமார் தனக்கே உரிய பாணியில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அனல் பறக்க விடுகிறார். பாவனா, படத்தில் சில காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நாயகன் நிவின் பாலி ஆக்‌ஷன் கலந்த எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவருக்கு டூயட் காட்சிகள் கிடையாது. இவருடைய நண்பர்களாக வருபவர்களும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வில்லனாக வரும் சுரேஷ், வில்லத்தனத்துடன் சிறப்பாக நடித்திருக்கிறார். கேரளா பின்னணியில் அழகான ஆக்‌ஷன் கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிபின் பிரபாகர். மலையாளத்தில் வெளிவந்த ‘தி மெட்ரோ’ படத்தின் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழிலும் ரசிக்கும்படி இப்படத்தை எடுத்திருப்பதுதான் சிறப்பு.

மூன்றுவிதமான கதையை கூறினாலும், கதையில் விறுவிறுப்பு குறையாமல் அழகான திரைக்கதை அமைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியை யாரும் எதிர்பார்க்க முடியாதபடி வைத்திருப்பது சிறப்பு.

ஷான் ரகுமான் இசையில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது. ஒருசில பாடல்கள்தான் என்றாலும் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீராம் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு மெருகேற்றியிருக்கிறது.

மொத்தத்தில் ‘தென்னிந்தியன்’ ரசிக்கலாம்.

நாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா? விரிவான அலசல்..உங்களுக்காக..!

பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.

குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?

Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.

Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.

Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.

Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.

Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

போலி சுத்திகரிப்பு

தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.

கோடையில் இது சீசன் தொழில்

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.

இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002′ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.

தீர்வுகள் என்ன?

250 – 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.

கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.

பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்

பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.

எண் 1 – பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 – ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 – பாலிவினைல் குளோரைடு, 4 – லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 – பாலி புரோபைலினால், 6 – பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 – ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்….! அதிர்ச்சியில் உலகம் !!

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள்,மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும்
போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க
காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!

விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..!

இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!
மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!

இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்தி ரிக்கை.

அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!

என்னதான் தீர்வு?

 இன்றைய தேதியில் வொயிட் காலர் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட் மோசடிதான். பிக்பாக்கெட் அடித்தால் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். செயினைப் பறித்தால் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வீடு புகுந்து கொள்ளையடித்தால் சில லட்ச ரூபாய் கிடைக்கக்கூடும். ஆனால், ஒரே ஒரு நில மோசடி செய்தால் கோடிக் கணக்கான ரூபாயைச் சுருட்டிவிட முடியும் என்பதுதான் ரியல் எஸ்டேட் மோசடிகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம்.
இந்த ரியல் எஸ்டேட் மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யவேண்டும் என்கிற கேள்வியை தமிழ்நாடு பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினாரிடம் கேட்டோம். இதற்கு அவர் சொன்ன விளக்கங்களைப் பார்ப்பதற்குமுன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…

வில்லங்கச் சான்றிதழில் பவர் கொடுக்கப்பட்ட விவரம் இடம்பெறுவது, பவர் பத்திரத்தைப் பதிவு செய்வது கட்டாயம் என்பது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமிழக அரசின் நடவடிக்கை, நடைமுறைக்கு வந்ததில் இவருக்கு ஒரு  முக்கிய பங்குண்டு. தமிழகத்துக்கு என்று தனியே தமிழ்நாடு முத்திரைச் சட்டம் என்ற சட்ட வரைவு தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்ததிலும் இவர் முக்கியப் பங்காற்றியவர். இனி ஓவர் டு ஆறுமுக நயினார்.

நேரில் தீவிர விசாரணை..!
”பல லட்சங்கள், கோடிகளைக் கொடுத்து சொத்து வாங்கும்போது, முதலில் சொத்து இருக்கும் இடத்துக்கு நேரடியாகச் சென்று தீவிர விசாரணை செய்தும், சொத்து விற்பவரின் நாணயத்தைப் பற்றி அக்கம்பக்கத்தில் தீவிரமாக விசாரித்தும் வாங்கினால் அதுவே மோசடிகளைத் தடுக்கும் முதல்வழியாக இருக்கும்.

போலி ஆவணங்கள் உஷார்!
சமீபத்தில் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தில் காட்டியதுபோல, ஒரிஜினல் ஆவணம் போலவே அச்சு அசலாகத் தயாரித்து மோசடி செய்வதற்கு என முக்கிய நகரங்களில் பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், ஏதாவது சொத்து வாங்குவது என்றால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் ஆவணம் பெற்று அதனுடன் உங்கள் வசம் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து, அதன்பிறகு சொத்தை வாங்குவது நல்லது.
இந்த போலிகள் என்பது சொத்து பத்திரத்துடன் முடிந்துவிடுவதில்லை. பட்டா, சிட்டா எனத் தொடர்கிறது. அந்தவகையில் இந்த ஆவணங்களையும், தொடர்புடைய அரசுத் துறைகளில் அவற்றின் ஆவணப் பதிவில் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த ஆவண மோசடிகளைத் தவிர்க்க பட்டா, வாரிசுச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, குடும்ப அட்டை போன்ற ஒவ்வொரு ஆவணத்துக்கும் தனித்தனி ‘செக்யூரிட்டி கோடு’ முறை கொண்டு வருவது அவசியம்.

பவர் பத்திரத்தைப் படியுங்கள்..!
சொத்துப் பிரச்னைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது, பவர் ஆஃப் அட்டர்னிதான்.
சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வரமுடியாத நிலைமை, அதிக வயது, வேலைப்பளு காரணமாகப் பலரும் பவர் தந்துவிடுகிறார்கள். உங்களுக்கு மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பவர் தரவேண்டும். இந்த பவர் பத்திரத்தை முழுமையாகப் படித்துப் பார்த்தபின் கையெழுத்து போடுவது நல்லது. இல்லையெனில், பவர் வாங்குபவர் தன் இஷ்டத்துக்கு ஏதாவது எழுதிக்கொண்டு உங்களை மாட்டிவிடக்கூடும்.

நீதிமன்ற ஆணைகள் பதிவு அவசியம்!
சொத்து குறித்த நீதிமன்ற ஆணைகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது தெரியாமல் பலர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் போராடி ஜெயித்த சொத்தை இழக்கும் சூழ்நிலை இருக்கிறது.

உதாரணத்துக்கு, ஒரு சொத்தில் பங்காளிகளுக்கு உரிமை இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று ஒருவர் வழக்குத் தொடர்ந்து வெற்றிப் பெற்றிருக்கும்போது, அந்தத் தீர்ப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை எனில், பழைய ஆவணப்படி அந்தச் சொத்தில் பங்காளிகள் அனைவருக்கும் உரிமை இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில், இவரை ஓரங்கட்டிவிட்டு அல்லது இவரை மறைத்துவிட்டு மற்றப் பங்காளிகள் சொத்தை விற்க வழி இருக்கிறது. எனவே, நீதிமன்ற ஆணைகளை அவசியம் உடனுக்குடன் பதிவு செய்யுங்கள்.

விலை மலிவா..? உஷாராகுங்கள்!
சிலர் அவசரத் தேவைக்கு, சந்தை விலையைவிட மிகக் குறைத்து சொத்தை விற்பதாகச் சொல்வார்கள். இங்கேதான் வாங்குபவர் உஷாராக இருக்க வேண்டும். நல்ல நிலையில் இருக்கும் ஒருவர் அசையா சொத்தை உடனடியாக அவசரப்பட்டு மிகக் குறைந்த விலைக்கு விற்க முன்வரமாட்டார். கூடியவரையில் அதன் பத்திரத்தை அடமானம் வைத்துப் பணம் திரட்டவே முயற்சி செய்வார். இந்த நிலையில் சொத்தை விற்க முன்வருபவருக்கு அதில் முழு உரிமை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதுபோன்றவர்களிடம் ரொக்கப் பணம் கொடுக்கக் கூடாது. காசோலை அல்லது டிடி மூலம் பணம் கொடுக்க வேண்டும்.

டூப்ளிகேட் ஆவணம்..!
சிலர் ஒரிஜினல் ஆவணம் இல்லாமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற்ற நகல் ஆவணம் மூலம் சொத்தை விற்க முன்வருவார்கள். ஒரிஜினல் ஆவணம் தொலைந்துவிட்டது என்று காரணம் சொல்வார்கள். ஒரிஜினல் ஆவணம் தொலைந்துபோனது குறித்து போலீசில் புகார், பத்திரிகை விளம்பரம் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது கட்டாயம். அண்மையில்தான் ஒரிஜினல் பத்திரம் தொலைந்துபோனதாகச் சொன்னால் கூடுதல் உஷார் தேவை.

பத்திரத்தை அடமானம்வைத்து பெரும்தொகையைக் கடனாக வாங்கிவிட்டு, உங்களிடமும் அந்த சொத்தை விற்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ஒரிஜினல் பத்திரம் இல்லையெனில்,  மிகவும் உஷாராக இருப்பது அவசியம்” என்று சொல்லிக்கொண்டேபோன ஆறுமுக நயினார்,  தமிழ்நாட்டில் நடக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகளைத் தடுக்க அரசு எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கிச் சொன்னார்.

போலிகளைத் தடுக்கும் டிஜிட்டல்!
”ரியல் எஸ்டேட் மோசடிக்கு பெரும்பாலும் பழைய ஆவணங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஒருவர் கடந்த 1920-ம் ஆண்டுப் பத்திரம் என்று பழைய பத்திரம் ஒன்றை கொண்டு வருகிறார். அது உண்மைதானா என்பதைப் பார்ப்பதில் சிக்கல். காரணம், தமிழகப் பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ள ஏராளமான பழைய ஆவணங்கள் பொடிப்பொடியாக உதிர்ந்து கிடக்கின்றன. இதைத் தவிர்க்க நல்ல நிலையில் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். இது ஒன்றும் செய்ய முடியாத செயலல்ல. தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டு வரைக்கும் வில்லங்கச் சான்றிதழ்கள், 2000-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் எல்லாம் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டி ருக்கின்றன. அதேபோல், பழைய ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும். இதனால் போலி ஆவணங்களை அடையாளம் கண்டு தடுக்க முடியும்.

வில்லங்கச் சான்றிதழில் உயில் விவரம்!
இப்போது உயில் பதிவு செய்த விவரத்தை வில்லங்கச் சான்றிதழில் சேர்க்க சட்டம் இல்லாமல் இருக்கிறது. இதனால் உரிமை உள்ள அனைவரின் சம்மதம் இல்லாமல் சொத்தை விற்கும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, சொத்தை வாங்கியவருக்குப் பின்னால் சிக்கல் வருகிறது. அந்த வகையில் உயில் பதிவு செய்யப்பட்டு, அதனை வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடுவது மோசடியைத் தவிர்க்க உதவும்.

நில மோசடி சிறப்பு நீதிமன்றம்!
நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்புத் தீர்ப்பாயங்கள் அல்லது நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். அதில் அனுபவம் மிக்கப் பதிவுத்துறை அதிகாரிகளும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் பிரச்னைகள் புரிந்துகொள்ளப்பட்டு விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு கிடைக்கும். நில மோசடியில் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களின் பத்திரங்களை ரத்து செய்யும்போது, பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தைத் திரும்ப அளிக்கவும்; தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரத்தை ரத்து செய்யும்போது மோசடி செய்தவரும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தும் நிலையை மாற்ற வேண்டும்.

பதிவு குறிப்பேடு!
வில்லங்கச் சான்றிதழ், பத்திர நகல் எனப் பல்வேறு விஷயங்களுக்கு அடிக்கடி பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவேண்டி இருக்கிறது. இதனால் நேர விரயம், பொருட்செலவு, வீண் அலைச்சல் ஏற்படுகிறது. மேலும், பதிவு அலுவலகப் பணியாளர்களுக்கு பணிச் சுமையும் கூடுகிறது. இவற்றைத் தவிர்க்க, சொத்துப் பதிவு குறிப்பேடு Registration Pass Book) கொண்டுவருவது அவசியம். இதனை 13 ஆண்டுகளுக்கு முற்பட்ட பதிவுக் குறிப்புகளுடன் வழங்க வேண்டும். மேலும், இதில் பதிவேடு முதலில் தாக்கல் செய்யப்படும் அன்று சொத்தின் கடைசி உரிமையாளர்,  வாங்கியவர்  பற்றிய விவரம் போன்றவற்றைப் பதிய வேண்டும். சொத்து வேறு ஒருவருக்கு விற்கப்பட்டால், அதன் விவரத்தை இந்தப் புத்தகத்தில் தொடர்ச்சியாகக் குறிப்பிட வேண்டும்.

இப்படியே சொத்து சம்பந்தமான பவர், உயில், விற்பனை, அடமானம், தானம் போன்ற அனைத்து பதிவுகளையும் இதில் மேற்கொண்டு வரவேண்டும். அந்தவகையில் இந்தப் பதிவு குறிப்பேட்டை நிரந்தர வில்லங்கச் சான்று பதிவேடு என்று குறிப்பிடலாம். இதனால் போலி வில்லங்கச் சான்றிதழ், ஆவணத் தயாரிப்புகள் தயாரிப்பது தடுக்கப்படும்.

காவல் துறையின் பொறுப்பு…
நில மோசடிகளைத் தடுப்பதில் பதிவுத்
துறை, வருவாய்த் துறை போல காவல்துறையின் பங்கும்  முக்கிய மானது. பொதுவாக, நில மோசடி புகார் கொடுத்தால் அதைக் காவல் நிலையத்தில் சிவில் தாவாவாக எடுத்துக்கொண்டு பொதுமக்கள் சேவைப் பதிவு ரசீது (சிஎஸ்ஆர்) தருகிறார்கள். இது நில மோசடி செய்தவர்களை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. மாறாக புகார் வந்தவுடன், அதில் நில மோசடிக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகத் தெரியவந்தால் உடனே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மோசடிக்காரர்களைக் கைது செய்யவேண்டும்.

அப்போதுதான் கிரிமினல்கள் இடையே ஒரு தார்மீக அச்சம் ஏற்படும். அது மட்டுமல்ல, ஒரு சொத்து மீது போலி ஆவணம் பதிவு செய்யப்பட்டு காவல் துறையில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் வழக்கு விவரம் பற்றி வில்லங்கச் சான்றில் குறிப்பு சேர்க்கவேண்டும். அதன் தொடர் விற்பனை தடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தச் சொத்து மீண்டும் கைமாறாமல் இருக்கும்” என்று முடித்தார் ஆறுமுக நயினார்.
விற்பவரைவிட வாங்குபவர் உஷாராக இருந்தால்தான், மோசடி களிலிருந்து தப்பிக்க முடியும் என்பதே இன்றைய நிலை. ஜாக்கிரதை!