Tuesday, December 29, 2015

முடி வளர சித்த மருத்துவம் !

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ரஜினியின் கபாலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் கபாலி படத்தின் போஸ்டர் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது அவர்களை அதிக சந்தோஷத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மற்றும் மார்ஷியல் நிபுணர் ஜெட் லீ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்வாக கூறப்படுகிறது.

Donnie Yen (‘IP Man’ series), Winston Chao (‘Zhong Kui: Snow Girl and The Dark Crystal’), Simon Yam (‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’), Jiang Wen (‘Gone with the Bullets’) and Chow Yun Fat (‘Pirates of the Caribbean: At World’s End’) போன்ற பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தையில் உள்ளனராம் படக்குழு. ஆனால் கபாலி படக்குழுவின் முதல் சாய்ஸ் ஜெட் லீ என்று கூறப்படுகிறது.

அஜீத்தை ரூமுக்குள் வைத்து நான் அடிச்சேன் என்பது பத்திரிகைகளின் கற்பனை! பாலா பதில்!

‘நான் கடவுள்’ படத்தின் போது அஜீத்துடன் மனஸ்தாபம் இருந்தது உண்மை என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் பாலா, தனியார் தொலைக் காட்சியில் நடிகை சங்கீதா நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், சங்கீதாவின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதில் சொன்னார். ‘நான் கடவுள்’ படம் ஆரம்பிக்கும்போது உங்களுக்கும் அஜீத்துக்கும் என்ன பிரச்சனை? நீங்க அஜீத்தை ரூமுக்குள் வைத்து அடித்ததாக சொல்கிறார்களே?

“நான் அடிச்சேன், மிதிச்சேன்னு சொல்றதெல்லாம் பத்திரிகைகளின் கற்பனை! மேலே தெரிஞ்சுக்கணும்னா.. நீங்க அல்ட்டிமேட்டுக்கிட தான் கேட்டுக்கணும்’. ஆனால் எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை.

தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த மாலையை பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பாலா பின்வருமாறு பதிலளித்தார்…(கழுத்திலிருந்து மாலையை வெளியே எடுத்தப்படியே…) ‘இது அகோரி (பிணம் தின்பவர்கள்) கொடுத்தது. தினமும் ஒரு மனித பிணத்தை தின்பவர்கள். 108 மனிதர்களின் முதுகெலும்புகள், வெவ்வேறு மனிதர்களுடைய முதுகெலும்பின், ஒவ்வொரு துண்டுகளை கொண்டு மண்டை ஓடு வடிவில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்ய வேண்டுமா...?

இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள்.

உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை.

ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்கிறீர்கள். அல்லது இவை இல்லாமலேயே, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கி, உங்கள் பணியை முடிக்கிறீர்கள்.

இப்படி மிகக் கவனமாகக் கம்ப்யூட்டரில் செயல்பட்டாலும், மிகத் தந்திரமான ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்று, ஏதோ ஓர் இடத்தில் உள்ள பிழையான இடம் மூலம், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, தன்னை அடையாளம் காட்டுகிறது.

சில சில்மிஷ மாற்றங்களை உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்துகிறது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டரை, பயம் கலந்த அப்பாவி உரிமையாளராக ஆகிவிட்டீர்கள். இங்கு என்ன செய்யலாம்? அதனையே இங்கு பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, அதில் உள்ள மால்வேர் புரோகிராமினை நீக்க வேண்டும். பிரச்னையை அறிந்து செயல்படத் தேவையான, படிப்படியான வழிமுறையைக் காணலாம்.


1. என்ன வைரஸ் என்று சோதனை செய்திடுக:

சம்பந்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர், நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால், ஒரு சிலர், சவுண்ட் கார்ட் சரியாக வேலை செய்திடவில்லை என்றால், உடனே கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துவிட்டது என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

எனவே, பிரச்னை, நாம் வந்துவிட்டதாக நினைக்கும் வைரஸினாலா, அல்லது ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அல்லது பயன்படுத்துபவரின் தவறான அணுகுமுறையா எனக் கண்டறிய வேண்டும்.

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர், வழக்கத்திற்கு மாறாக, மிக மிக மெதுவாக இயங்குகிறதா? அல்லது, நீங்கள் செய்யச் சொல்லாத செயல்பாடுகளைத் தானாகவே மேற்கொள்கிறதா? அப்படியானால், வைரஸ் வந்துவிட்டது என்று எண்ணுவதற்குச் சரியான முகாந்திரம் உள்ளது.

அவ்வாறு முடிவெடுப்பதற்கு முன்னர், Windows Task Manager ஐ இயக்கவும்.இதற்கு விண்டோஸ் டாஸ்க் பாரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், Task Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Processes என்ற டேப்பினைத் திறக்கவும்.

இப்போது கிடைக்கும் விண்டோவில், சந்தேகப்படும் படியான, விநோத பெயரில் ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டுள்ளதா எனக் கவனிக்கவும். வைரஸ்கள் எல்லாம், விநோதமான பெயரிலேயே வரும் என நாம் அனுமானிக்கவும் முடியாது.


2. மால்வேர் தான் என் உறுதி செய்திடும் வழிகள்:

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும்.

அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே இருக்கும். நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள். இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.


3. இணையத்தில் தீர்வினைத் தேடவும்:

வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.


4. பழைய வைரஸ் ஸ்கேனரால் பயனில்லை:

நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது. எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


6. சிறிய அளவிலான ஸ்கேனர் பயன்படுத்துக:

சேப் மோட் இயக்கத்தில், கம்ப்யூட்டரில் அதன் அடிப்படை இயக்கத்திற்குத் தேவையான புரோகிராம்கள் மட்டுமே இயக்கப்படும். ஸ்டார்ட் அப் புரோகிராமில் உள்ள அனைத்து புரோகிராம்களும் இயக்கப்பட மாட்டாது. முக்கியமானவை மட்டுமே இயங்கும். குறிப்பாக, வைரஸ் புரோகிராம் இயக்கத்திற்கு வராது.

இந்த நிலையில் பயன்படுத்தப்படும் புதிய ஸ்கேனர் புரோகிராம் சிறிய அளவில் லோட் ஆகி இயங்கும் வகையில் இருந்தால் நல்லது. சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டுவர, கம்ப்யூட்டரை இயக்க ஸ்விட்ச் போட்டவுடன், எப்8 கீயை அழுத்த வேண்டும்.

அப்போது, கம்ப்யூட்டரில் சேப் மோட் நிலைக்கான பூட் ஆப்ஷன்ஸ் (boot options) மெனு கிடைத்தவுடன், அதில் இணைய இணைப்பிற்கு வழி தரும் Safe Mode with Networking என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஏனென்றால், வைரஸ் நீக்க இணையத்திலிருந்தும் சில வழிகளைப் பெற வேண்டியதிருக்கும்.

சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கி நிலைக்கு வந்தவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறக்கவும். (சேப் மோட் நிலையில், மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தினால், சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 பின்னர், பிட் டிபண்டர்
 (Bitdefender http://www.bitdefender.com/scanner/online/free.html) போன்ற,நம்பகத் தன்மை பெற்ற ஆன்லைன் வைரஸ் ஸ்கேனரை இயக்கவும்.

மிகச் சிறப்பான முறையில் தீர்வு கிடைக்க இசெட் ஆன்லைன் ஸ்கேனரைப் (http://www.eset.com/us/onlinescanner) பயன்படுத்தலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் ஸ்கேனரில் இது மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் மால்வேர் புரோகிராம்களுக்கேற்ப அடிக்கடி அப்டேட் செய்யப்படும் ஸ்கேனர் இது.

ஸ்கேன் தொடங்கும் முன்னர், பிரவுசரில் Advanced settings சென்று, அதிகபட்ச பாதுகாப்பு நிலைகளில் ஸ்கேனிங் இயக்கம் நடைபெற செட்டிங்ஸ் அமைக்கவும். file archives and browser data போன்றவற்றையும் ஸ்கேன் செய்திடும் வகையில் அமைக்கவும்.

இந்த வகையில் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஹவுஸ்கால் (http://housecall.trendmicro.com/us/)என்ற புரோகிராமினையும் இயக்கலாம். இது இணையத்திலிருந்தே செயல்படும் புரோகிராம் அல்ல. இதனை இன்னொரு கம்ப்யூட்டர் வழியாகத் தரவிறக்கம் செய்து, ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கிப் பயன்படுத்தலாம்.

இதில் Scan Now பட்டனை அழுத்தும் முன், Settings மற்றும் Full system scan பட்டன்களை அழுத்தி அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்பாடுகள் அனைத்திலும், மெதுவாகச் செயல்படும் ஸ்கேன் முறையையே தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் தொடங்கிய பின்னர், கம்ப்யூட்டரிலிருந்து விலகி, அதனை வேடிக்கை பார்க்கவும். ஏதேனும் ஒரு கதையை வாசிக்கவும். ஸ்கேன் நிச்சயம் அதிக நேரம் எடுக்கும்.


7. இன்னொரு ஸ்கேனிங்:

முதல் ஸ்கேனிங் முடிந்து முடிவுகள் வந்த பின்னர், ஸ்கேன் முடிவுகள் அறிவிப்பை காப்பி செய்து, பதிவு செய்து கொண்டு, இன்னொரு நல்ல ஸ்கேனரைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஸ்கேன் செய்திடவும். பல மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை.


8. பிரச்னை தீர்ந்த கம்ப்யூட்டரை பாதுகாத்திடுங்கள்:

கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர் புரோகிராம்கள் அனைத்தும் நீங்கிய பின்னர், மறுபடியும் வழக்கம் போல விண்டோஸ் சிஸ்டத்தில் மீண்டும் பூட் செய்திடவும். உங்களுடைய பழைய ஆண்ட்டி வைரஸ் புரோகிரா மினைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கவும். அன் இன்ஸ்டால் செய்திடவும்.

அடுத்து, அதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின், அண்மைக் கால மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்ஸ்டால் செய்திடலாம். உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், வேறு ஒரு நல்ல ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பதிவு செய்திடலாம்.

எதனைப் பதிவு செய்தாலும், தொடர்ந்து அதனை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரச்னைகள் எங்குதான் இல்லை. திடமான மனதுடன், தெளிவாகச் சிந்தித்து செயல்பட்டால், அனைத்திற்கும் தீர்வு உண்டு.

இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள சில எளிய வழிகள்!!!

உங்கள் குழந்தை சர்க்கரைக்கு மிகவும் அடிமையாகிவிட்டதா? சரி அதுப்போன்று ஆகாமல் இருக்க பெற்றோர் ஒரு உக்தியைப் பயன்படுத்த வேண்டும். குழந்தை உண்ணும் உணவுகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருந்தால், இது போன்று சர்க்கரைக்கு அடிமையாகாமல் தடுக்க முடியும்.

நீங்கள் அவர்கள் உண்ணும் உணவில் கவனமுடன் இல்லையென்றால், குழந்தைகள் சர்க்கரையின் இனிய ஈர்க்கும் சுவைக்கு அடிமையாகிவிட வாய்ப்புண்டு. எனவே இதுப்போன்ற இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள எளிய வழிகள் இதோ உங்களுக்காக.

சிறு சிறு அளவில் உண்பதற்குக் கொடுங்கள்
இனிப்புகளை அறவே ஒதுக்குவது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், அது குழந்தைகளை வேறு எங்காவது அதனை பெற்று உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. எனவே சிறு சிறு அளவுகளில் சில சமயங்களில் மட்டும் கொடுங்கள்.

ஒவ்வொரு முறையும் தரவேண்டிய அளவு
கொடுக்கும் அளவு சிறியதாக இருப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவர்கள் விரைவில் அதற்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள்.

உணர்வு பூர்வமாக உண்ணுவதை தவிர்த்திடுங்கள்
அவர்கள் நடவடிக்கையை அல்லது எண்ணத்தைத் திசை திருப்ப இனிப்புகளைக் கொடுப்பதை முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குழந்தைகள் வருத்தத்துடன் இருக்கையில் அவர்களுக்கு இனிப்புகளை வழங்குவதன் மூலம் அதனை போக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது அவர்களின் மனதில் ஒரு தவறான வழக்கத்தை விதைக்கும்.

ஒரு நல்ல பெற்றோராக இருங்கள்
உங்கள் குழந்தைகள் உங்கள் செய்கைகளைப் பின்பற்றுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் முன்பு இனிப்புகள் உண்பதைத் தவிருங்கள். ஏனெனில் அது அவர்களுக்கு ஆவலைத் தூண்டும்.

அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்
அதிக அளவு இனிப்புகள் மற்றும் சர்க்கரையை உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். இது அவர்களுக்கு மெதுவாக இனிப்புகளை அதிகமாக உண்பதால் வரும் தீமைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

ஹாலிவுட்டுக்கு செல்லும் தனுஷின் வில்லன் !

தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படம் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட். இப்படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் (Amitash Pradhan), அவரது அமுல் பேபி நடிப்பால் பலராலும் பேசபட்டார்.

இந்நிலையில் இவர் ஹார்ட்பீட்ஸ் (Heart Beats) என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகன் வேடமிடுகிறார். இப்படத்தின் இயக்குனர் டோனே அட்லெர் இதற்கு முன் நடனம் சார்ந்த படமான Save the dance மற்றும் Step Up படத்தை எடுத்தவர்.

அமிதாஷின் நடன வீடியோவை பார்த்து அப்படத்தின் நடிகர்களின் தேர்வு இயக்குனர் நளினி ரத்னம் இவரை தேர்வு செய்துள்ளார். மேலும் அமிதாஷ் பல முன்னணி ஹாலிவுட் நடன இயக்குனர்களிடம் பணியாற்றியதால் தான் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இனிமேல் தியேட்டரில் படுத்துக் கொண்டே படம் பார்க்கலாம்.. இங்கல்ல கோயமுத்தூரில்!

திரையரங்குகளில் படுத்துக் கொண்டே சாவகாசமாக படம் பார்க்கும் வகையில் மல்டிபிள் திரையரங்கு ஒன்று கோயமுத்தூரில் உருவாகி வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் கோயமுத்தூரில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புரோசான் மால் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாலில் 9 திரையரங்குகளை அமைக்க ஐநாக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மேலும் இந்த மாலில் அமையவிருக்கும் 9 திரையரங்குகளிலும் ரசிகர்கள் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் வகையில், மெத்தை போன்ற தலையணைகளுடன் கூடிய இருக்கைகளையும் ஐநாக்ஸ் அமைக்கிறது.

ஆனால் தனித்தனியாக இல்லாமல் ஜோடியாக சேர்ந்து அமரும் வகையில் இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோயமுத்தூரில் உள்ள சத்தி ரோட்டில் இந்த மால் தற்போது கட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ப்ரூக்பீல்ட்ஸ் மற்றும் ஃபன் ரீபப்ளிக் மால் போன்ற 2 மால்கள் இங்கே இருக்கின்றன. ஆனால் இவை இரண்டையும் மிஞ்சும் வகையில் புரோசான் மால் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மாலின் கட்டுமானப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற பெருமையை புரோசான் மால் பெறும்.

இங்கு ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இளமை ததும்பும் 2.0 ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த், ‘எந்திரன்-2’ படத்தில் இளமையான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். இந்த படம், கடந்த 2010-ல் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சி என்பதால் இதிலும் அவர், ‘வசீகரன்’ என்ற இளம் விஞ்ஞானி வேடத்தில் வருகிறார். இதற்காக, ‘ஹாலிவுட்’ ஒப்பனை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கழுத்தை ஒட்டிய பனியன், கோட்-சூட், ‘பிரஞ்சு பியர்டு’ வடிவில் தாடி என ரஜினிகாந்த் இளமையாக மாறி இருக்கிறார். அவரது மிடுக்கான வேடத்தை பார்த்து பழைய இளம் ரஜினிகாந்த் திரும்ப வந்தமாதிரி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

படுக்கும் முன் செய்யக்கூடாத விஷயங்கள்

சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேல் முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.

சிலருக்கு எப்போதும் ஏசியிலேயே இருக்க வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால் அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.

அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.

அம்மா ஆட்சி- ராதிகா டுவிட்டர் பதிவு? – தர்மசங்கடத்தில் சரத்குமார்

சென்னை – சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தை விமர்சிக்கப் போய், ராதிகா வெளியிட்ட டுவிட்டர் பதிவு, ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

ராதிகா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை நாளை செல்ஃபி எடுக்கும், குளியல் அறையில் பாட்டுப் பாடும் உங்களில் ஒருவருக்கும் வரலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் அவர், “நடிகர் கமல்ஹாசனை, நிதி அமைச்சர் விமர்சித்தபோதும் ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், “சிம்புவுக்காக விமான நிலையங்களில் கண்காணிப்பா? நாட்டில் பற்றி எரியும் பல விசயங்கள் உள்ளன. இதுதான் முக்கியமா? கற்பழித்தவர் சுதந்திரமாக வெளியே உள்ளார். ஏன் இந்தப் பிரச்சனை பெரிதாக்கப்படுகிறது? ஒருவேளை கவனத்தைத் திசை திருப்ப இப்படி செய்யப்படுகிறதா?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை மறைப்பதற்காகவே சிம்பு பலிகடா ஆக்கப்பட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ராதிகாவின் இந்த பதிவு அரசுக்கு எதிராக இருப்பது போல் தோன்றுவதால், அதிமுக கூட்டணியில் இருக்கும் சரத்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

2015-ல் தமிழ் சினிமா கடந்து வந்த சர்ச்சைகள் ஒரு பார்வை!

சென்னை – இந்திய அளவில் பாலிவுட்டுக்கு அடுத்ததாக சிறந்து விளங்கும் கோலிவுட் சினிமா, பாலிவுட் போலவே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. 2015-ம் வருடத்திலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கின்றனர்.

1. பீப் போட்ட சிம்பு

சிம்பு = சர்ச்சை என்று கூறும் அளவிற்கு, தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுடன் வளம் வந்த சிம்பு, இந்த வருடத்தின் இறுதியில் கிளப்பிய சர்ச்சை தான் இதுவரை அவர் சந்தித்த பிரச்சனைகளின் உச்சமாக இருக்க வேண்டும். பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பீப் பாடல் போட, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு மகளிர் சங்கம் வழக்கு போட்டது. அவரைப் பிடிக்க, காவல்துறை 5 தனிப்படை அமைத்தும், மனிதர் இன்னும் சிக்கவே இல்லை. பூதாகரமான இந்த பிரச்சனையில் அனிரூத்தும், சிவக்கார்த்திகேயனும் சிக்கியது தனிக்கதை.

2. நடிகர் சங்கத் தேர்தலா? பொதுத் தேர்தலா?

நடிகர் சங்கத்தின் தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? என்று மக்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சர்ச்சைகளுடனும், ரகளைகளுடனும் தேர்தல் நடந்து முடிந்தது. பழம் பெரும் நடிகர் சிவக்குமார் முதல் கமல்ஹாசன், விஷால் என ஒருவரையும் விட்டு வைக்காமல் ராதா ரவியும், சரத்குமாரின் திட்டித் தீர்க்க, பல நாட்களுக்கு அந்த காணொளி வாட்சாப், யூ-டியூப் என வளைய வந்தது.

3. உலக நாயகன் இழுத்த வம்பு

விஸ்வரூபம் சந்தித்த பிரச்சனைக்குப் பின்னர், நடப்பு அரசியலைப் புரிந்து கொண்டு அமைதி காத்த கமல்ஹாசன், சென்னை வெள்ளத்தில், மழையுடன் சேர்ந்து அவரும் பொங்கிவிட்டார். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட, கொதித்தெழுந்த அமைச்சர் ஓபிஎஸ், கேட்க வேண்டியவர்களிடம் அனுமதி பெற்று, வெளியிட்ட ‘பதிலடி அறிக்கை’ பல பக்கங்களைத் தாண்டியது. கடைசியில், ‘நான் அறிக்கையே வெளியிடல..ஆள விடுங்க’ என்று தப்பித்தார்? உலக நாயகன். தப்பித்தாரா? என்பது அடுத்த படம் வரும் போது தெரியும்.

4. பத்திரிக்கையாளரைப் போட்டுத் தாக்கிய இசை ஞானி

நிவாரண பணிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவிடம்,  சிம்புவின் பீப் பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, கொந்தளித்த இசை ஞானி, “உனக்கு அறிவிருக்கா?. என்கிட்ட கேக்க உனக்கு என்ன தகுதி இருக்கு” என்கிற ரீதியில் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஒருவழியாக உடன் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

5. கலாம் மறைந்த அன்று பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவு, ஒரு கணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் மறைந்து முழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில், டுவிட்டரில் அஞ்சலி செலுத்திவிட்டு நட்சத்திர விடுதி ஒன்றில், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் பல நட்சத்திரங்களுடன் தனது பிறந்த நாளை, தனுஷ் விமர்சையாகக் கொண்டாட, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

6. ரஜினியை விடாது விரட்டிய ராம் கோபால் வர்மா

சென்னை வெள்ளத்திற்கு தெலுங்கு நடிகர்கள் கூட கோடிக் கணக்கில் நிவாரண நிதி வழங்க, ரஜினி வழங்கிய 10 லட்சம் ரூபாய் பல்வேறு தரப்பினரிடத்திலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, “ரஜினி கொடுத்த அவ்வளவு பெரியத் தொகையை வைத்துக் கொண்டு, சென்னை மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். இந்த தொகை கொடுத்ததற்கு ரஜினி கொடுக்காமலே இருந்திருக்கலாம்” என்று டுவிட்ட, அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்கள் பற்றி எரிந்தன.

7. ஹன்சிகாவின் ஆபாசக் காணொளி

பிரபல நடிகை ஹன்சிகாவின் குளியல் அறைக் காணொளி இணைய தளங்களில் வெளியாக, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள, ஹன்சிகாவிற்கு பல நாட்கள் பிடித்தது. அந்த கேள்வியை தவிர்ப்பதற்காகவே பல நாட்கள் ஊடகப் பேட்டிகளைத் தவிர்த்து வந்தார். அப்படியும் ஒரு நாள், அந்த கேள்வியை செய்தியாளர் கேட்க, “எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனது வருகிறது என்று புரியவில்லை. இப்படிப்பட்ட ஆபாச காணொளியை வெளியிடுவது  கற்பழிப்பை விட கொடுமையானது” என்று கதறினார்.

ஹன்சிகா மட்டுமல்லாது கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் ராதிகா ஆப்தே, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட நடிகைகளும் ஆபாசக் காணொளிப் பிரச்சனையில் சிக்கித் தவித்தனர்.

8. வடிவேலு மீண்டும் வெடி வேலானார்

2011 தேர்தல் சூறாவளியில் சிக்கி, இரண்டு வருடங்கள் காணாமல் போயிருந்த வடிவேலு, மெல்ல எழுந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். என்றாலும், ‘நடிச்சா ஹீரோ தான் சார்’ என்று கூறி, அவர் நடித்த இரண்டு படங்களும் காலை வார, இன்றும் அடுத்த வாய்ப்பிற்கு காத்திருக்கிறார். என்றாலும் விடாத வடிவேலு, நடிகர் சங்கத் தேர்தலுக்காக இம்முறையும் மைக் பிடித்தார். ராதாரவிக்கு போட்டியாக விஷால் அணியால் களமிறக்கப்பட்ட வடிவேலு வெடித்துச் சிதறினார்.

9. புலி தயாரிப்பாளர்களை நோகடித்த ஸ்ரீதேவி

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு, ‘புலி’ படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவியை அழைத்து வந்தனர். விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த புலி, பாக்ஸ் ஆபிசில் உறுமாமல் ‘மியாவ்’ என்று தான் கத்தியது. நஷ்டத்தை வெளியில் சொல்லாமல் தயாரிப்பாளர்கள் அமைதி காத்து வந்தாலும், சம்பளம் பாக்கி இருப்பதாக ஸ்ரீதேவி தரப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, நொந்து போன அவர்கள், படத்தில் அரசியாக நடித்த ஸ்ரீதேவி, படப்பிடிப்பில் நடத்திய ராஜாங்கத்தை போட்டுடைத்தனர்.

10. திரிஷா இல்லனா நயன்தாரா என மாறி மாறி பயணித்த சர்ச்சை

முன்னணி நடிகைகளான திரிஷாவும், நயன்தாராவும், மாறி மாறி சர்ச்சைகளில் சிக்கினர். திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் கோலாகலமாக நடந்த திருமண நிச்சயதார்த்தம், ஏனோ திருமணம் வரை செல்லாமல் நின்று போனாது. விடாமல் துரத்தி திரிஷாவிடம் பத்திரிக்கையாளர்கள் காரணம் கேட்க, “எல்லாம் கடவுள் செயல்” என வானத்தைக் காட்டினார்.

நயன்தாராவிற்கும் சர்ச்சைகளுக்கும் ஏகப் பொருத்தம். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என நயன்தாராவின் காதலர்கள் பட்டியல் ஊடகங்களில் நீள, தற்போது அந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பெற்று இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதற்கு ஆதாரமாக அவர்களின் செல்பி (தம்படம்) இணையங்களில் சுழன்றடித்தது.

“தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சிம்புவிற்காக மன்னிப்பு கேட்கத் தயார்” – நாசர்

சென்னை – சிம்பு விவகாரத்தில், நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என நடிகை ராதிகா கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில், சிம்பு மன்னிப்புக் கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவிற்கு வந்திருக்கும். ஆனால் சட்டப்பூர்வமாக, அதனை சந்திக்க விரும்புவதாக அவர் தெரிவித்ததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாசர் அளித்துள்ள விளக்கத்தில், “இந்த பிரச்னையை பொறுத்த வரை, இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றுதான் சங்கமும் விரும்புகிறது. தம்பி விஷாலும், கார்த்தியும் தொடர்ந்து சிம்புவிடம் பேசிக்கொண்டு இருந்தனர். இதிலிருந்து அவர் மீண்டு வரவேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவிற்கு வந்திருக்கும். அதை முன்னிறுத்திதான் நாங்கள் பேசினோம்.”

“நானும், பொன்வண்ணனும் டி.ஆரிடமும் பேசினோம். ஆனால் அவர்கள் அதனை சட்டப்படி சந்திப்பதாகக் கூறினார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வேறு ஏதும் சொல்ல முடியாது. சிம்புவின் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அதனை ஏற்றுகொள்ள மாட்டர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் இணைய அர்னால்ட் கால்ஷீட் கிடைக்கல… ஜெட் லீயாவது கொடுப்பாரா..?

பல வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘கபாலி’ படப்பிடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துவிட்டு ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடிக்கவிருந்த கேரக்டரில் தற்போது ஜான் விஜய் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மற்றொரு வில்லனும் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் கதைப்படி ரஜினி மலேசியா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு வில்லனால் சில பிரச்சினைகளை சந்திக்கிறாராம். அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க ஜெட் லீ, டோனி யென், சைமன் யாம், ஜியாங் வென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதில் ஜெட் லீ அவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரின் சம்மதம் கிடைத்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்கிறாராம் கபாலி.

அர்னால்ட் கால்ஷீட் கிடைக்கல… ஜெட் லீயாவது கொடுப்பாரா பார்க்கலாம்..

உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க...

செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது. இவை இல்லாமல் நம்மால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே முடியாது. இத்தகையவற்றை வீட்டின் வெளியே மட்டும் வளர்க்காமல், வீட்டின் உள்ளே கூட வளர்க்கலாம். அதற்காக அனைத்து செடிகளும் வீட்டினுள் வளரும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை.

ஆகவே அவற்றில் ஒருசில செடிகளை மட்டுமே வீட்டின் உள்ளே வளர்க்கலாம். அதுமட்டுமின்றி, அவற்றினுள் வீட்டினுள் வளர்க்கும் சில செடிகள் வீட்டில் சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றி, நல்ல சக்தியை வீட்டில் நிலைக்க வைத்து, வீட்டில் எப்போதும் நல்லதே நடைபெற வழிவகுக்கும்.

இப்போது அப்படி வீட்டில் சந்தோஷத்தை வாரி வழங்கக்கூடிய சில செடிகளைப் பார்ப்போமா...

 
மூங்கில்

மூங்கிலை வீட்டினுள் வளர்த்தால், அந்த மூங்கிலின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டில் செல்வமும், சந்தோஷமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அது நம்பிக்கை மட்டுமின்றி, பலர் உணர்ந்ததும் கூட. ஆகவே வீட்டினுள் மூங்கில் வாங்கி வளர்த்து வாருங்கள்.

துளசி

துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.

ஹனிசக்கிள் (Honeysuckle)

இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.


மல்லிகை

மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். மேலும் இந்த செடியானது மன அழுத்தத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

லாவெண்டர்

லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அந்த அளவில் இதன் நறுமணமானது இருக்கும். அதுவும் இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீட்டும் நல்ல வாசனையோடு இருக்கும்.

ரோஜா

அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். அதிலும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.


மந்தாரை/ஆர்க்கிட் (Orchid)

வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிமையானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் இது வீட்டில் நல்ல பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்.

சேஜ்

சேஜ் செடி, அதன் பாதுகாப்பு குணங்களால் அனைவருக்கும் நன்கு தெரியும். மேலும் இதனை வளர்த்தால், இது இறப்பின்மை, ஆயுள், ஞானம் போன்றவற்றை பிரதிபலிக்கும்.

விஜய்யின் புலி தோல்வியடைய இந்த சென்டிமென்ட் காரணமா?

விஜய் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை திருமலை படத்திலிருந்து தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் வெற்றி. அதைத் தொடர்ந்து 2004 இல் வெளியான கில்லி அவருடைய மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அதன்பின்னர் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்துவிடுகிறார்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும்பாலும் இரண்டுபடங்களும் வெற்றி அல்லது இரண்டில் ஒன்று வெற்றி என்று இருந்திருக்கிறது. அதேசமயம் ஒரு வருடத்தில் ஒரேபடம் என்று வெளியான படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவி அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது.

2006 ஆம் ஆண்டு வெளியான ஆதி படம் தோல்வியடைந்தது. விஜய்யின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிவைத்த ரமணா இயக்கத்தில் அவர் நடித்த ஆதி அவருக்குக் கைகொடுக்கவில்லை. அடுத்து 2008 இல் விஜய்க்கு குருவி படம் மட்டும்தான் வெளியானது. விஜய்யை கில்லியாக்கிய தரணியின் இயக்கத்தில் அவர் நடித்திருந்த குருவி ஓடவில்லை.

அதற்கடுத்து 2010 இல் விஜய் நடிப்பில் வெளியான படம் சுறா. அந்தப்படத்தின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதன்பின் 2013 இல் வெளியான தலைவா படம் வெளியாகவே பெரும் சிரமத்தைச் சந்தித்தது. அதனாலேயே வெற்றி பெற்றிருக்கவேண்டிய அந்தப்படம் தோல்வியைத் தழுவியது.

2014 இல் ஜில்லா, கத்தி ஆகிய இரண்டுபடங்களும் அவர் பெயரைக் காப்பாற்றின. கத்தி நூறுகோடி வசூல் செய்தபடம் என்றும் சொல்லப்பட்டது. இந்தஆண்டு அவருக்கு புலி படம் மட்டும்தான் வெளியானது. அதுவும் தோல்வி.

எனவே, வருடத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதுதான் அவருக்கு நல்லது என்று விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

பாகிஸ்தானுடன் 'குளோஸா' போனால் அரசியலில் 'குளோஸ்'தான்... மோடிக்கு 'வார்னிங்'

பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுகிற எந்த ஒரு இந்திய அரசியல் தலைவரும் அரசியலில் நீடித்ததாக சரித்திரமே இல்லை என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள்து.

இதனிடையே பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து தமது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை. வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பாகிஸ்தானிடம் நெருக்கம் காட்டினர். அவர்கள் தீவிர அரசியலில் நீடிக்க முடியாமல் போனது.

முகமது அலி ஜின்னா நினைவிடத்துக்கு போன அத்வானி அவரை புகழ்ந்துவிட்டு எல்லாம் திரும்பினார். இதனால் அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமானது.

அந்த மண்ணின் தன்மை அப்படியானது. லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களை பாகிஸ்தான் கொன்று குவித்ததால் அது சபிக்கப்பட்ட மண். அப்பாவி இந்தியர்களின் ரத்தம் தோய்ந்த மண்ணில் கால் பதித்ததற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.

ஹாலிவுட் பட ஹீரோவான தனுஷ் பட வில்லன்

தனுஷ் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தில் அமுல் பேபி என்று தனுஷால் கிண்டலடிக்கப்பட்ட வில்லன் அமிதாஷ், தற்போது பிரபல இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த ஹாலிவுட் வாய்ப்பினால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் அமிதாஷ் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "ஆமாம்.. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். 'ஸ்டெப் அப்', 'சேவ் த லாஸ்ட் டான்ஸ்' போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ட்வேன் அட்லரின் படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன். முழுக்க முழுக்க நடனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் இந்தியாவில் எடுக்கப்படவுள்ளது.

இந்த படத்தின் கேஸ்டிங் டைரக்டரான நளினி ரத்னத்திற்கு நான் நடனமாடிய சில காட்சிகளை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு 4 முறை ஆடிஷனுக்காக சென்றேன். நடனம் மற்றும் நடிப்புத்தேர்வில் 3 முறை பங்கேற்று என் திறமையை நிரூபித்த பிறகே நான் இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடனத்துறையில் உள்ள 2 பெண்களைக் கொண்ட முக்கோணக் காதல் கதையாக இந்தப்படம் இருக்கும்.

இந்த படத்தில் 'பாஜிராவ் மஸ்தானி' படத்தின் நடன இயக்குனரான சம்பா கோபி கிருஷ்ணா மற்றும் உலகப்புகழ் பெற்ற எம்மி விருது வென்ற டெசண்ட்ரா சாவேஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுடன் பணியாற்ற இருப்பது நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்றார்.

மும்பையில் வசித்து வரும் அமிதாஷ் தற்போது இந்த படத்திற்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்று வருகிறார். 

திருட்டுத்தனமாக படம் லீக் , பாதிக்கப்பட்ட டைட்டானிக் நடிகர்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய சம்பவங்கள் உண்டு. அதுபோல  சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளிவர இருந்த ரேவேனன்ட், தி ஹேட்ஃபுல் எயிட்  ஆகிய திரைப்படங்கள் படம் ரிலீஸாவதற்கு முன்பே இணையதளத்தில் லீக் ஆகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும்  படம் "தி ரேவேனன்ட்". அமெரிக்கக் காடுகளில் பயணங்களை மேற்கொள்ளும் ஹுக்ஹ் கிளாஸ் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. சென்ற ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதைத்தட்டி சென்ற "பேர்ட்மேன்" படத்தை இயக்கிய அலெஜன்றொ கோன்சாலஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தன்று திரையில் வெளிவர இருந்தது. அனால், கடந்து 20ஆம் தேதியன்று இணையதங்களில் படத்தை யாரோ திருட்டுத்தனமாக வெளியிட சில மணி நேரங்களில் பல லட்சம் மக்கள் டவுன்லோட் செய்தனர். இதனால் படத்தின் லாபம் பெரிதும் பாதிக்கப்படலாம் என படக்குழு கவலையில் உள்ளது.

அதேபோல, பிரபல இயக்குநர் குண்டின் டரண்டினொ இயக்கத்தில் வெளிவர இருந்த  " தி ஹேட்ப்ஹுல்   எய்ட்" திரைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க படங்களை எடுத்து  ஹாலிவுட் ரசிகர்களை தெறிக்கவிடும் இவரது படத்திற்கு இந்த நிலைமையா...? என ஹாலிவுட் வட்டாரங்கள் புலம்பி வருகின்றன.

படம் இணையத்தில் வெளியான சோகம் ஒருபுறம் இருக்க ,அதை லட்சக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்து வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.

என்னை முழுநேர அப்பா நடிகராக்கி விட்டனர்! -பட்டிமன்றம் ராஜா

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக சினிமாவில் என்ட்ரி ஆனவர் பட்டிமன்றம் ராஜா. அதையடுத்து, குரு என் ஆளு, மாப்பிள்ளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, பட்டத்து யானை, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க என பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்ததில் பெரும்பாலான படங்களில் அவர் அப்பா வேடங்களிலேயே நடித்திருக்கிறார்.

இதுபற்றி பட்டிமன்றம் ராஜா கூறுகையில், சினிமாவில் நான் அறிமுகமானதே அப்பா வேடம் என்பதினாலோ என்னவோ எனக்கு தொடர்ந்து அப்பா வேடங்களாகவே கிடைக்கிறது. அப்பா நடிகர் என்கிற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டார்கள். அப்படி தரும் வேடங்களில் கோட்சூட் போட்டு வரும் வசதியான அப்பாவாக காட்டுகிறார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு படத்திலும் வேஷ்டி சட்டை அல்லது லுங்கி பனியன் அணிந்து நடிப்பது போல்தான் கேரக்டர் தருகிறார்கள்.

தற்போது ஒரு படத்தில் எனக்கு மளிகை கடைக்காரர் வேடம் தந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு பொட்டலம்கூட போடத் தெரியாது என்று கூறும் பட்டிமன்றம் ராஜாவுக்கு, இப்போது நடித்து வருவதை விட அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து அப்பாவாக மட்டுமே என்னை நடிக்க வைக்காமல் வித்தியாசமான குணசித்ர வேடங்களிலும் நடிக்க வையுங்கள் என்றும் என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் கேட்டுக்கொண்டு வருகிறேன் என்கிறார்

சிம்புவுக்காக மன்னிப்பு அறிக்கை தயாரானதா?

பீப் பாடல் விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிம்புவைக் காப்பாற்ற நடிகர்சங்கம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மன்னிப்பு அறிக்கை கொடுத்துவிடுங்கள் மற்றதெல்லாம் நாங்கள் சரி செய்துவிடுகிறோம் என்று நடிகர்சங்கம் தரப்பில் சிம்புவிடம் கேட்கப்பட்டதாம். அவரும் அதற்குத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் நடிகர்சங்கத்தைச் சேர்ந்த மூத்தநடிகர்கள், சிம்புவுக்காக ஒரு மன்னிப்பு அறிக்கையை ஒருநாள் முழுக்க அமர்ந்து தயார் செய்து சிம்புவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் தங்கியிருந்த சிம்பு அறிக்கை தயாராகும்வரை நடிகர்சங்கத்தினரோடு தொடர்பில் இருந்திருக்கிறார்.

அறிக்கை அவர் பார்வைக்குப் போன பிறகு இவர்களுடைய தொடர்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின் அவரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் அது நடக்காமல் போய்விட்டதென்கிறார்கள். மன்னிப்புக் கேட்க தயாரான அவர் கடைசிநேரத்தில் பின்வாங்கியது எதனால்? என்று தெரியாமல் நடிகர்சங்கத்தினர் குழம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்பே அவர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால் ஒருநாளை வீணடித்திருக்க வேண்டியிருக்காது என்று மூத்தநடிகர்கள் வருந்துவதாகவும் சொல்கிறார்கள். இந்தச்சிக்கல் முடிவுக்கு வந்துவிடாமல் தொடரவேண்டும் என்பதற்காக சிம்புவே இப்படிச் செய்தாரா? என்கிற சந்தேகமும் திரைத்துறையினர் மத்தியில் எழுந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்த ராகவா லாரன்ஸ்

இந்த வருடத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோராலும் ரசிக்கப்பட்ட படம் காஞ்சனா 2.

இப்படம் ராகவா லாரன்சுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது. தற்போது 2011ல் வெளியான காஞ்சனா 1 படம் தமிழ் சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்துள்ளது.

அதாவது இப்படம் சீனா, கொரியன், தாய் போன்ற அந்நிய மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற அந்நிய மொழிகளில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம் இதுவே ஆகும்.

பத்தே நிமிடத்தில் மெட்டு! எட்டே நிமிடத்தில் பாட்டு! பாட்டைய கிளப்பும் நா.முத்துக்குமார்!

பத்தே நிமிஷத்தில் மெட்டு போட்டால் கூட அதற்கு, எட்டே நிமிடத்தில் பாட்டெழுதிக் கொடுத்து அசத்துகிற ஆற்றல் நா.முத்துக்குமாருக்கு உண்டு. பாடுனவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்கிற பழமொழிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். சினிமா பாடல்கள் இலக்கியமாகுமா என்ற வெகுகால சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் நா.முத்துக்குமாரும்தான்.

வழக்கம் போல இந்த வருடமும் அவர்தான் டாப். கடந்த வருடத்தில் எழுதிய படங்கள், இந்த வருடத்தில் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் என பாய்ச்சல் பலமாகவே இருக்கிறது.

2016 ம் அவர் வசம் ஆக வாழ்த்துகிறது நியூடமில்சினிமா.காம்

2015 ல் அவர் எழுதிய பாடல்களின் லிஸ்ட்

1. பாபநாசம் (அனைத்துப் பாடல்கள் )
2. காக்கிசட்டை
3. காக்கா முட்டை ( அனைத்துப் பாடல்கள் )
4. டார்லிங் ( அனைத்துப் பாடல்கள் )
5. டிமான்டி காலனி
6. பசங்க – 2
7. திரிஷா இல்லன்னா நயன்தாரா
8. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
9. ஈட்டி
10. இது என்ன மாயம் ( அனைத்துப் பாடல்கள் )
11. நண்பேன்டா
12. புறம்போக்கு என்கிற பொதுவுடமை
13. ஓம் சாந்தி ஓம் ( அனைத்துப் பாடல்கள் )
na muthukumar photos_0000514. வலியவன்
15. சகலகலா வல்லவன்
16. ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை
17. ஒரு நாள் இரவில் ( அனைத்துப் பாடல்கள் )
18. சகாப்தம்
19. அதிபர்
20. ஆவி குமார் ( அனைத்துப் பாடல்கள் )
21. காவல்
22. நண்பர்கள் நற்பணி மன்றம்
23. பள்ளிக்கூடம் போகாமலே
24. பரஞ்சோதி ( அனைத்துப் பாடல்கள் )
25. சண்டமாருதம்
26. ஒரு தோழன் ஒரு தோழி
27. சோன்பப்டி
28. துணை முதல்வர்
29. வெத்து வேட்டு
30. தொட்டால் தொடரும்
31. டூரிங் டாக்கீஸ் ( அனைத்துப் பாடல்கள் )
32. ஐவராட்டம்
33. கதம் கதம்

2015 ஆம் ஆண்டு எழுதி ஹிட்டான பாடல்களில் சில…

1.முத்தம் கொடுத்த மாயக்காரி – த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
( சூரியன் FM 2015 டாப் 5 ல் முதல் இடம் )
2.ஏய்யா என் கோட்டிக்காரா – பாபநாசம்
( சூரியன் FM 2015 டாப் 5 ல் ஐந்தாம் இடம் )
3.கருப்பு கருப்பு – காக்கிசட்டை
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
4.உன் பார்வை போதும் – டார்லிங்
(பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
5. Subscriber not reachable – வாசுவும் சரவணனும் ஒண்ணா படுச்சவங்க
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
6.தம் தம் தார தம் தம்தம் – பசங்க – 2
( பல பண்பலைகளில் பல வாரங்கள் முதலிடம் )
7.போ போ வாழ்வே காக்கா முட்டைதான் – காக்காமுட்டை
8. எதை நினைத்தோம் – காக்காமுட்டை
9. ஆஹா காதல் என்னை – வலியவன்
10. கொஞ்ச நேரம் மழைவரும் – வலியவன்
11. புஜ்ஜிமா புஜ்ஜிமா – சகலகலா வல்லவன்
12. நீ என்ன பேசுவாய் – ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
13. உன்னாலே கண்கள் தள்ளாடி – டார்லிங்
14. இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் – இது என்ன மாயம்
15. இது காக்கிசட்டை – காக்கிசட்டை
16. பல்பு வாங்கிட்டேன் – சகலகலா வல்லவன்
17. உன் விழிகளில் – டார்லிங்
18. சட்டென மாறுது – டார்லிங்
19. இரவாக நீ – இது என்ன மாயம்
20. மழைத்துளி அழகா – ஓம் சாந்தி ஓம்
21. வாடா வா மச்சி – டிமான்டி காலனி
22. ஏலே மிய்யா – வலியவன்
23. உன் விழியில் – ஈட்டி
24. ஒரே ஒரு முறை – புறம்போக்கு
25. Shame shame – ஓம் சாந்தி ஓம்

தற்போது பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கும் படங்கள்

1. தெறி
2. தரமணி ( அனைத்துப் பாடல்கள் )
3. கோ – 2
4. சேதுபதி ( அனைத்துப் பாடல்கள் )
5. எனக்கு இன்னொரு பேர் இருக்கு ( அனைத்துப் பாடல்கள் )
6. கெட்டப் பயடா இந்த கார்த்தி ( அனைத்துப் பாடல்கள் )
7. புரூஸ்லி ( அனைத்துப் பாடல்கள் )
8. பேரன்பு ( அனைத்துப் பாடல்கள் )
9. கடவுள் இருக்கான் குமாரு ( அனைத்துப் பாடல்கள் )
10. டார்லிங் – 2 ( அனைத்துப் பாடல்கள் )
11.இயக்குனர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம்(அனைத்துப் பாடல்கள் )
12.இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள் )
13. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்
14. சாகசம்
15. ரங்கூன் (அனைத்துப் பாடல்கள் )
16. அஞ்சல
17. அழகு குட்டி செல்லம் (அனைத்துப் பாடல்கள் )
18. அடித்தளம் (அனைத்துப் பாடல்கள் )
19. ரெண்டாவது படம்
20. ஊதா (அனைத்துப் பாடல்கள் )
21. வைகை எக்ஸ்பிரஸ் (அனைத்துப் பாடல்கள் )
22. தொலைக்காட்சி (அனைத்துப் பாடல்கள் )
23. நனையாத மழையே
24. புகழ்
25. 54321 (அனைத்துப் பாடல்கள் )
26. கோவலனின் காதலி
27. போர்க்களத்தில் ஒரு பூ
28. குறு நில மன்னன் (அனைத்துப் பாடல்கள் )
29. கிழக்கு மேற்கு
30. சுவாசமே (அனைத்துப் பாடல்கள் )
31. நாடி துடிக்குதடி
32. நீங்காத எண்ணம் (அனைத்துப் பாடல்கள் )
33. அன்னம் விடு தூது
34. காட்டுமல்லி (அனைத்துப் பாடல்கள் )
35. திருப்பங்கள்
36. கல்லாப்பெட்டி
37. கதை கேளு கதை கேளு
38. யாக்கை (அனைத்துப் பாடல்கள் )
39. புளியமரம் (அனைத்துப் பாடல்கள் )
40. கான் (அனைத்துப் பாடல்கள் )
41. வெயிலோடு உறவாடி
42. இருவர் உள்ளம்
43. சோக்காலி
44. கோட்டை
45. திறப்புவிழா
46.முள்வேலி
47. நகர்ப்புறம்
48. கருவாச்சி
49. கறுப்பர் நகரம்
50. படித்துறை
51. ஏன் என்னை மயக்கினாய்
52. ஓம் காரம் (அனைத்துப் பாடல்கள் )
53. படம் பேசும்
54. வதம்
55. நிர்ணயம் (அனைத்துப் பாடல்கள் )
56. வீரவாஞ்சி
57. நாடோடி வம்சம்
58. அர்ஜுன்
59. புன்னகை பயணக்குழு
60. சாரல்
61. பரிமளா திரையரங்கம்
62. பணக்காரன்
63. மன்னவா
64. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
65. கொடைக்கானலில் ஊட்டி
66. வெற்றி
67. சரவணப் பொய்கை
68. உனக்குள் பாதி
69. என்னதான் பேசுவதோ (அனைத்துப் பாடல்கள் )
70. கனா காணுங்கள்
71. மனதில் மாயம் செய்தாய்
72. நாலு பேரும் ரொம்ப நல்லவங்க
73. யாவரும் கேளீர் (அனைத்துப் பாடல்கள் )
74. எங்க காட்டுல மழை (அனைத்துப் பாடல்கள் )
75. கலக்குற மாப்பிள
76. வாலிப ராஜா
77. ஒடிசி
78. காதல் காலம்
79. மேல் நாட்டு மருமகன்
80. திமிராட்டம் (அனைத்துப் பாடல்கள் )
81. அசுரகுலம்
82. என்னுள் ஆயிரம் (அனைத்துப் பாடல்கள் )
83. ஒரு குப்பையின் கதை (அனைத்துப் பாடல்கள் )
84. அக்பர்
85. இவன் இன்னொருவன்
86. அரவம்
87. வாஸ்துவின் வாஸ்தவம் (அனைத்துப் பாடல்கள் )
88. ரங்கராட்டினம்
89. பட்லர்
90. அதர்வனம்
91. அதிர்வேட்டு
92. மீண்டும் ஒரு காதல் கதை (அனைத்துப் பாடல்கள் )
93. ரத்னவேல் பாண்டியன்
94. சோம்பேறி
95. அம்மணி (அனைத்துப் பாடல்கள் )
96. மை இந்தியா (அனைத்துப் பாடல்கள் )
97. பைசா
98. துலாம் (அனைத்துப் பாடல்கள் )
99. தீபாவளி துப்பாக்கி
100 சவுகார்பேட்டை
101. கட்டம் போட்ட சட்டை
102. எய்தவன் (அனைத்துப் பாடல்கள் )
103. காந்தாரி
104. இசை ஞானியின் இசையில் அரவிந்த் சாமி நடிக்கும் படம் (அனைத்துப் பாடல்கள் )
105. முப்பரிமாணம்
106. 12.10
107. தேவகுமாரன்
108. உஷ்
109. போங்கு (அனைத்துப் பாடல்கள் )
110. குள்ளநரி
111. ராஜ வாழ்க்கை (அனைத்துப் பாடல்கள் )
112. கள்ளன் (அனைத்துப் பாடல்கள் )
113. பகடி ஆட்டம்
114. என்று தணியும் (அனைத்துப் பாடல்கள் )
115. மணி
116. ஜெயிக்குற குதிரை
117. குளவி (அனைத்துப் பாடல்கள் )
118. அழகாய் பூக்குதே
119 வீரா (அனைத்துப் பாடல்கள் )
120. மாப்பிள்ளை விநாயகர்

2015 ஆம் ஆண்டு பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்களில் சில…

1.தேசிய விருது ( அழகே அழகே – சைவம் )
2.பிலிம்பேர் விருது ( அழகே அழகே – சைவம் )
3.ஒளிப்பதிவாளர் சங்க விருது ( அழகே அழகே – சைவம் )
4.நார்வே திரைப்பட விருது ( அழகே அழகே – சைவம் )
5.புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘தமிழன்’ விருது
6.எழுத்தாளர் பாமரன் வழங்கும் இயக்குனர் மணிவண்ணன் விருது
7.சிங்கப்பூர் அரசாங்க அழைப்பில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் தமிழ் மொழி சார்பாக கலந்து கொண்டது.

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.

இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

இனி பரிட்சைக்கு க்ளிக் :::http://en.sommer-sommer.com/braintest/

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?

மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம்.

1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும்.

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

4. இப்போது  Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும்.

5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும்.

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும்.

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள்.

8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.

வெளி மூலம்:

முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.

வாந்தி உண்டாக்க:

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

பூலோகம், கணிதன்... என்ன ஒற்றுமை?

ஆஸ்கார் பிலிம்ஸ் பட நிறுவனம் சில வருடங்களுக்கு முன் ஐ, விஸ்வரூபம்-2, பூலோகம், மரியான், வல்லினம், திருமணம் எனும் நிக்காஹ் என ஒரே நேரத்தில் வேறு பல படங்களையும் தயாரித்து வந்தது. இவற்றில் நடித்த ஹீரோக்களின் அன்றைய மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு படங்களையும் முடித்து வெளியிட்டு வந்தது. ஜெயம்ரவிக்கு மார்க்கெட் இல்லை என்பதால் பூலோகம் படத்தை முடிக்கவும்... வெளியிடவும் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக ஏறக்குறைய நான்கு வருடத்துக்கும் மேலாக பூலோகம் படம் வெளியாகாமலே கிடந்தது. ஃபர்ஸ்ட்காப்பி ரெடியானநிலையிலும் இரண்டு வருடங்கள் பூலோகம் படம் கேட்பாரற்று கிடந்தது.

இந்நிலையில் ஒருவழியாக சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது பூலோகம் படம். அதர்வா நடித்த கணிதன் படமும் ஏறக்குறைய பூலோகம் படம் போலவே நீண்டகாலமாக தயாரிப்புநிலையிலேயே இருக்கிறது. தற்போது அதர்வா நடித்த ஈட்டி படத்தின் வெற்றியை அடுத்து கணிதன் படத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பரபரப்பாக வேலைகளை முடித்து விரைவில் கணிதன் படத்தை வெளியிட உள்ளனர்.

பூலோகம் படத்தைப்போல் கணிதன் படமும் வாகை சூடுமா? பார்ப்போம்... !

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்


காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

2016-யை அதிர வைக்கும் விஜய் சேதுபதி!

2016-ம் ஆண்டு 7.3% மற்றும் 2017-ல் 7.5% என்ற விகிதங்களில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி யடையும் என்று ஐநா ஏற்கெனவே கணித்துள்ள நிலையில் .2030-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என இங்கிலாந்தின் பிரபல பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான சி.இ.பி.ஆர் (Centre for Economics Business and Research) தெரிவித்துள்ளது.

முன்னதாக“வரும் பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிவேகமாக வளரும் ஆற்றல் இந்திய பொருளாதாரத் துக்கு உள்ளது. அதாவது 7% என்ற சீரான பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுவதால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா அதிவேக வளர்ச்சி பொருளாதார நாடாக உயர்வடைய வாய்ப்புள்ளது” என்று ஹார்வர்டு பல்கலைக் கழக பன்னாட்டு வளர்ச்சி மைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலை கண்டு ஆண்டுக்கு 4.3% பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். கச்சா எண்ணெய் பொருளாதார நாடுகள் மற்றும் பிற உற்பத்தி/ நுகர்வுப் பொருள் பொருளாதார நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர் கொள்ளும் வேளையில் தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்தியா தனது உற்பத்தித் திறன்களில் முக்கியமான வளர்ச்சி நிலையை பெற்றுள்ளது. வித்தியாசமான பொருட்கள் மூலம் இந்தியாவின் ஏற்றுமதிகள் பல்படித்தானதாக மாறும் வாய்ப்புள்ளது. அதாவது மருந்துப்பொருட்கள், வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து ஹார்வர்டு கென்னடி பள்ளியின் பொருளாதார வளர்ச்சித்துறை பேராசிரியர் ரிகார்டோ ஹாஸ்மேன் கூறும்போது, “சீனா இத்தகைய பொருட்கள் மூலம் தனது தனிநபர் வருவாயை 10 ஆண்டுகளுக்குள்ளாகவே இரட்டிப்பாக்கியுள்ளது. அதே போல் வளர்ச்சியை இந்தியா எட்ட அடுத்த 10 ஆண்டுகளில் வாய்ப்புகள் கூடிவந்துள்ளன” என்று கூறியிருந்தார்.

இந்நிலைதான் வரும் 2030-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10,133 பில்லியன் டாலராக இருக்கும். அமெரிக்கா 32,996 பில்லியன் டாலர்களுடன் 2-வது இடத்திலும், சீனா 34,338 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும் இருக்கும் என கணித்துள்ளது. 2030-ல் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்றாலும், 2019-ம் ஆண்டிற்குள் பிரிட்டனை முந்திச்சென்று காமன்வெல்த் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் எனவும் ஜி 8 நாடுகளில் ஒன்றாக இந்தியா மற்றும் பிரேசில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!