Saturday, December 12, 2015

மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி

உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” !

இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி.

இம்முறையை அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” அங்கீகரித்துள்ளது.

ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !

இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :

முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக

இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)

நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்

ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.

இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.

நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்

ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்

இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். beef (மாட்டு கறி)

ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !

எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !

இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்

இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:

காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்

காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.

காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர்

மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்

நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை

எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்

இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.

இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .

“வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? “என கேட்கிறீர்களா? ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

ஐந்து வாலிபர்களில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன்? – டிவி சேனல் நிகழ்ச்சி

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வைத்து அதில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்ணின் அருகில் தலை கவிழ்ந்த படி அந்த பெண்ணின் அண்ணனும் தாயும் அமர்ந்திருந்தார்கள். நடுநடுவே பெண்ணை இப்படி வளர்த்திருக்கிறீர்களே என்று அவர்களை திட்டிக் கொண்டே விசாராணை நடத்திக் கொண்டிருந்தார் நாட்டாமைகாரம்மா.

எனக்கு ஷேவிங் செய்தவர் அதை ரசித்து, சிரித்து, பார்த்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார். உம்பொண்ண உக்கார வச்சு கேள்வி கேட்டா இப்படி சிரிப்பயா? என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அவர் என் கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை உடனே கை விட்டு விட்டேன்.

இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது? இவர்கள் நடத்தும் கட்டப்பஞ்சாயத்துகளை விட காவல் நிலையங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் எவ்வளவோ மேல்! ஏனென்றால் போலீஸ் நிலையங்களில் இரு சாராரிடமும் பணம் பெற்றுக் கொண்டு விஷயத்தை முடிந்தவரை வெளியே வராமல் செய்து விடுவார்கள். ஆனால் இங்கு பிரச்சனையை பெரிதாக்கி விடுவதுடன் காலமெல்லாம் அவர்கள் வாழ்வில் மீண்டும் தலையெடுக்கவே முடியாத அளவுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதற்கு விளம்பரதாரர்கள் மூலம் பணம் வேறு! பணத்தையும் வாங்கிக் கொண்டு வாழ்க்கையையும் அழிப்பதற்கு, போலீஸ்காரர்களே மேல் தானே! ஊர் புறணிகளை கேட்டே வளர்ந்த நம் சமுதாயத்துக்கும் ஊரான் பிரச்ச்னை அல்வா சாப்பிடுவதைப் போல் தான் இருக்கிறது!

இன்னொரு விஷயம் கூர்ந்து கவனித்தால் தெரியும். இதில் பங்கு பெறுபவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களாகவே இருக்கிறார்கள். தவறு செய்பவர்கள் அனைவரும் இவர்களே என்பதைப் போன்ற மாயத்தோற்றத்தை இவர்கள் சித்தரிக்கிறார்கள். மேல்வர்க்கத்தினர் ஒருவர் கூட இதில் கலந்து கொண்டதே இல்லை. ஏன், அவர்களுக்குள் பிரச்சனை வருவதே இல்லையா? மக்களும் இவர்களை இனம் கண்டு இவர்களை ஒதுக்க வேண்டும். குடுபத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டால் அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களிடமே முறையிட்டு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். அது நடக்காத வரை இவர்கள் நிறுத்தப் போவதே இல்லை.

‘பீப் சோங்’ சிம்புவுக்கு ஓர் பெண் கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே…

திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,

சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.

பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள்.

இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் ‘வெர்பல் அப்யூஸ்’ எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்… நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி!

அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். “க்ளப்புல மப்புல” பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை. பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். ‘ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு… பெண்களும் குடிக்க வேண்டும் ‘ என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை.

இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட‌ விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது? அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’… வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, ‘பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்’ என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான‌ உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.

ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்!

அப்புறம் இன்னொரு விஷயம்… ‘இது என்னோட பெர்சனல் கலெக்‌ஷன்… அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்‌ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்‌ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது.

இன்னுமொரு முக்கியமான விஷயம்… சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை… இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..! இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்…. அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன… தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்!

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது.

அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை  உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?

குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும்.  இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.

சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:

அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.   ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி   மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?

மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.

தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாப்பழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், நெல்லிகனி

உட்கொள்ள வேண்டியவை:

நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
கேழ்வரகு
புழுங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.

நடிகர்களிடம் கேட்பது யாசகம் அல்ல, நஷ்டஈடு!

கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு’ என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான் வெளியே வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு போனதை அவன் அழுத்தமாக உணர்வதற்கு இதுபோல் இன்னும் நாலு வெள்ளம் வரவேண்டும்!

ஒருபுறம் இதெல்லாம் நன்கு புரிந்தாலும், தன் ஹீரோவை விட்டுக் கொடுத்து பழகாத நெஞ்சமும், நழுவாத ஈகோவும் இன்னும் தலைவன் வருவான் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டேயிருக்கிறது. ஹீரோ ஜெயிப்பதுதான் க்ளைமாக்ஸ்சின் வழக்கம். ஐயோ பாவம்… இந்த க்ளைமாக்சிலும் அதுதான் நடக்கப் போகிறது.

சென்னையில் திரும்பிய இடமெல்லாம் சாலைகளில் படகு ஓடும் என்று ஒரு சினிமா எடுத்திருந்தால் கூட, “அடச்சே… இப்படியெல்லாமா நடக்கும்? ஏன்தான் இப்படி நடக்காத விஷயத்தையெல்லாம் படமா எடுக்குறாங்களோ…?” என்று அலுத்துக் கொண்டிருப்பார்கள் மக்கள். ஆனால் அதே வெள்ளம் அவரவர் வீட்டு வாசலை முத்தமிட்ட வினாடிகள் மிகக் கொடூரமானது. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அந்த வெள்ளத்தை விட கொடூரமானவை!

எல்லாரும் எழுதி விட்டார்கள். காணொளியாய் காண்பித்தும் விட்டார்கள். அந்த ரணத்தை இனிமேலும் விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால் இந்த வெள்ளத்தில் தான் பூஜித்த ஹீரோ, பால் ஊற்றிய ஹீரோ, பசை தடவி போஸ்டர் ஒட்டிய அந்த ஹீரோ, ஆறுதலுக்காக கூட முன் வந்து தன் முகத்தையோ மூக்கையோ நீட்டவில்லையே என்ற கோபம் ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? அந்த ரசிகர்களை பெற்றவர்களுக்கு இருக்கிறது. வளர்த்தவர்களுக்கு இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு இருக்கிறது.

‘நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவேன்’ என்று எத்தனையோ வருடங்களுக்கு முன் அறிவித்த ரஜினி, சாலையே நதியாக ஓடி, அதில் சடலங்களும் மிதந்தோடிய பிறகும் முன்பு கொடுத்த பத்து லட்சத்தோடு அமைதியாகிவிட்டார். அந்த ஒரு கோடியை முதல் நபராக கொடுத்து, நதிநீர் இணைப்பு இயக்கத்தை அவரே ஆரம்பித்திருந்தால் அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு இந்நேரம் அந்த லட்சியம் நிறைவேறியிருக்கும். டுமாரோ என்பதே டுபாக்கூரின் இன்னொரு சொல்தானே?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு துளி தங்கக் காசு கொடுத்த தமிழனுக்கு அவர் வைத்த விலை இந்த பத்து லட்சம் மட்டும்தான்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் விளம்பரமில்லாமல் பல கோடிகள் செலவு செய்து வருகிறாராம். எப்படி? ராகவேந்திரா மண்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தாரே, அப்படியா?

நல்லவேளை… கமல் இன்னும் ஐந்து லட்சம் அதிகம் கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னாலிருப்பது மனிதாபிமானம் இல்லை. ஒரு பேட்டியும் அதன் விளைவுகளும்தான்! “நான் முறையா வரி கட்றேன். என் வரிப்பணம் எங்கே போனது? நான் ஏன் இதற்கெல்லாம் பணம் தர வேண்டும்?’’ என்று அவர் கேட்கப் போக, அங்கு ஆரம்பித்தது வில்லங்கம். அப்போதுதான் லேசாக உறைத்தது ரசிகர்களுக்கு.

இப்படி அவரவர் முக லட்சணத்தை அவரவர் காண்பித்துக் கொண்டிருக்க, ரஜினி, கமல் தேவலாம் என்றாக்கினார்கள் அஜீத்தும் விஜய்யும். அவர்களாவது வெள்ளத்தை சபித்துக் கொண்டே வழங்கினார்கள். இவர்கள் முகத்தையே காட்டவில்லை. இவர்களிடமிருந்து சிங்கிள் மணி கூட பெயரவில்லை. விஜய் கோவாவில் ஷுட்டிங்கில் இருக்கிறாராம். அஜீத் தன் வீட்டை திறந்து வைத்து அதில் பதினெட்டு பேரை தங்க வைத்திருக்கிறாராம். இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ரஜினியே பத்து என்று அடக்கிக் கொண்ட பின்பு, ஐயோ பாவம்… இருபத்தைந்து கோடியும், தயாரிப்பாளர் ஏமாந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கோடிகளும் சம்பளமாக வாங்கும் இவர்கள் ஏன் தர வேண்டும்?

சென்னையில் சில காலம் தங்கி படித்த ஒரு கடமைக்காக 2 கோடி கொடுத்த தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் எங்கே? நீங்கள் எங்கே? ரவிதேஜா 25 லட்சம், பிரபாஸ் 10 லட்சம், என்று நம் கடைக்கோடி கிராமம் அறியாத ஹீரோக்களே, இந்த வெள்ளத்தையும் அதன் வலியையும் உணர்ந்திருக்கும் போது, பத்து லட்சத்தை கொடுப்பதற்குள் பஞ்சாங்கம், திதியெல்லாம் பார்க்கும் இவர்களை இனிமேலும் போற்றுதற்கு நாக்கு புரளுமா?

“அதென்னாங்கடா… ஆ ஊன்னா ரஜினி தரல. கமல் தரல. அஜீத் தரல. விஜய் தரலன்னு ஆரம்பிச்சுடுறீங்க? கோடி கோடியா கொள்ளையடிச்ச கவுன்சிலரை கேட்க தைரியம் இருக்கா? எம்.எல்.ஏ வை, எம்.பியை. மந்திரியை கேட்க முடியுமா உன்னால்?” ஒரு சில சினிமா வெறியர்களால் சமூக வலைதளங்களில் வைக்கப்படும் இந்த கேள்வியும், ஆக்ரோஷமாக பொங்கும் ரசிகர்களும் இருக்கும்வரை, மேற்படி ஹீரோக்களுக்கு அழிவேயில்லை!

“ஆமாங்கடா…” என்று திருப்பிக் கேட்க நிமிஷம் போதாது. அந்த நிமிஷம்தான் இந்த நிமிஷம். இந்த கட்டுரைக்கான நிமிஷம்!

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் சினிமா இருக்கிறது. அங்கிருக்கும் ஹீரோக்களுக்கும் அபரிமிதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேறெங்கும் இல்லாதளவுக்கு இங்கு ஒரு சமுதாயத்தையே மடை மாற்றிவிடுகிற ஆற்றல் இந்த ரஜினி கமல் அஜீத் விஜய்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் இவர்களின் படங்கள் வருகின்றன. டிக்கெட் குறைந்த பட்சம் 300 லிருந்து அதிக பட்சம் 1000 வரைக்கும்! மாதம் முழுக்க உழைத்த பணத்தை, குடும்பத்திற்கு செலவழிக்க முடியாமல் டிக்கெட்டுக்கு கொட்டி, அதையெல்லாம் சம்பளமாக உங்கள் தலையில் கொட்டுகிறவன் நீங்கள் திரும்ப செய்ய வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

டாஸ்மாக் வருமானம், இலவச கிரைண்டராகவும் மிக்சியாகவும் வரும்போது, டிக்கெட் வருமானம் மட்டும் உங்கள் வீட்டு லாக்கரை விட்டு வெளியே வராது என்றால் எப்படி?

இப்போதும் எம் தமிழர் வாழ்வில் ஒரு முறை இருக்கிறது. அதற்கு பெயர் ‘மொய்’! கல்யாணமோ, கருமாதியோ? காது குத்து திருவிழாவோ? ஊரே சேர்ந்து சிறுக சிறுக கொடுப்பார்கள். அவரவர் வீட்டில் அது அது நடக்கும்போது, அதை திருப்பி எதிர்பார்ப்பார்கள். “கட் அவுட் பாலை வேண்டுமானால் நீ வைத்துக் கொள். கை வலிக்க போஸ்டர் ஒட்டும் உழைப்பை வேண்டுமானால் நீயே வைத்துக் கொள். ஆனால் அவன் செய்த மொய் பணத்தை திருப்பிக் கொடு” என்று கேட்க, யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?

ஒரு கவுன்சிலருக்கு இல்லாத செல்வாக்கு, ஒரு அமைச்சருக்கு இல்லாத செல்வாக்கு உங்களை போன்ற டாப் ஹீரோக்களுக்கு இருக்கிறது. அந்த செல்வாக்கு என் மக்களை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது தெரியுமா?

முன்பெல்லாம் கிராமத்தில் குளத்தை தூர் வாரவும், ஆற்றில் படர்ந்திருக்கும் படர் தாமரையை வெட்டி எறியவும் வீட்டுக்கு ஒரு இளைஞன் கிளம்புவான். இப்போது அத்தகைய இளைஞன் ஒருவன் கூட இல்லை. எல்லாருக்கும் ரசிகர் மன்றம் திறக்கிற வேலை இருக்கிறது. அங்கு கொடி ஒட்டுகிற பணி இருக்கிறது. போஸ்டருக்கு போண்டா படைக்கிற கடமை இருக்கிறது. கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற வேலை இருக்கிறது. அதனால்தான் கிராமத்தில் கூட எங்கள் குளங்களை காணவில்லை. ஆற்றை அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கிறது வேண்டாத செடி கொடிகள்.

இப்படி ஒரு இளைய சமுதாயத்தை தன் சுயநலத்திற்காக மடை மாற்றிக் கொண்ட உங்களிடம் கேட்கிற இந்த பணம், யாசகம் அல்ல. நஷ்ட ஈடு! கவுன்சிலரையும், அமைச்சரையும், கேள்வி கேட்க ஐந்து வருஷத்துக்கொரு முறை தேர்தல் வருகிறது. உங்களை போன்ற ஹீரோக்களிடம் கேட்பதற்கு எப்போதாவது இப்படி ஒரு வெள்ளமோ சுனாமியோதானே வருகிறது? அதுவும் இல்லை என்றால் யார் கேட்கப் போகிறார்கள் உங்களை?

இவ்வளவு கொடூரத்திலும் ஒரு ஆறுதல்! ரசிகர்களின் பலமே இல்லாத ஏராளமான நடிகர்கள் எவ்வித சுயநலமும் இன்றி செய்த உதவிகள்தான். சில லட்சங்களோ, சில கோடிகளோ வாங்கும் அவர்கள் கேட்காமலே முன் வந்து செய்த உதவிகளை மக்கள் மறக்கப் போவதில்லை. இந்த வெள்ளம் உங்கள் நால்வரையும் மக்களிடம் அடையாளம் காட்டிவிட்டது.

சொல்ல முடியாது. பெருமாள் கோவில் உண்டியலை உடைச்சு, பிள்ளையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணியதை போல, உங்களுக்காக கொட்டிய பாலை, இனி சித்தார்த், மயில்சாமி தலையில் கொட்டக் கிளம்புவார்கள் ரசிகர்கள்.

அப்படியொரு அதிசயம் நடக்கும்போது எங்கள் கிராமத்து இளைஞர்கள் மண்வெட்டியோடு கிளம்புவார்கள். ஆறு குளங்களில் மட்டுமல்ல, அவர்கள் மனங்களிலும் அப்போது தூர் இருக்காது!

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.

தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா…

பொன்வண்ணன்-சரண்யா

மணிரத்னம்-சுஹாசினி

பார்த்திபன்-சீதா

ரேவதி-சுரேஷ் மேனன்

பூர்ணிமா-பாக்யராஜ்

தேவயாணி-ராஜகுமரன்

ரோஜா-செல்வமணி

கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்

சோனியா அகர்வால்-செல்வராகவன்

சுந்தர்.சி-குஷ்பு

ஹரி-ப்ரீத்தா

அமலா பால்-விஜய்

இளையராஜா - "16 வயதினிலே'' எஸ்.பி.பி-யை நீக்கிவிட்டு மலேசியா வாசுதேவனை ஏன் பாடவைத்தார்...?

"16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

"16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

"பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

"16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

"செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

"பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.


யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

"இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும்  இல்லை.

விஜய்காந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரஜினி, கமலுக்கே ஒரு காலத்தில் போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். பின் தீவிர அரசியலில் ஈடுப்பட்டதால் சினிமாவில் இருந்து விலகினார்.தற்போது மீண்டும் தன் மகனுடன் இணைந்து தமிழன் என்ற சொல் படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் உடல் நிலை சரியில்லை, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவி வருகின்றது.சமீபத்தில் வந்த தகவலின்படி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறிது காய்ச்சல், தற்போது விஜயகாந்த் நலமுடன் தான் உள்ளார். ரசிகர்கள் எதையும் நம்ப வேண்டாம் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் - பாஸ்ட் புட் கடைகள்

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை ..
2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை ..
மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

- – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

இந்தியா பிரபலங்களின் பட்டியலில் விஜய்-அஜித்திற்கு ஏன் இடம் இல்லை!

இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2015 போர்ப்ஸ் (Forbes) இந்தியாவில் முதல் 100 நட்சத்திரங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் ஷாருக்கான், இரண்டாம் இடத்தில் சல்மான்கான், மூன்றாம் இடத்தில் அமிதாப் பச்சன், நான்காம் இடத்தில் தோனி, ஜந்தாம் இடத்தில் அமிர்கான் ஆகியோர் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 41-வது இடத்தில் இருந்த விஜய்யும் 51-வது இடத்தில் இருந்த அஜித்தும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை. என்பது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.

ஆண்களும் மச்சங்களும்:

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்கள்.
வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும்.
நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
வலது கண்ணுக்குள், வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர், ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள்பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும். இருப்பினும், அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும், ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும், அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோக முள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்

கபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் போன்ற இடங்களில் நடத்தினர். மலேசியா மற்றும் பாங்காக்கிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

தற்போது கோவாவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ரஜினிகாந்த் மற்றும் படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. வெள்ளை தாடியுடன் கோட்-சூட் அணிந்து மிடுக்காக வருவது போன்ற படங்கள் இணைய தளங்களில் வெளிவந்தன.

இந்த தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்து இருந்தனர். ஆனால் மலேசிய ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த இடங்களுக்குள் புகுந்து செல்போனில் படம் எடுத்து இணைய தளங்களில் பரவ விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். ரசிகர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கவில்லை.

துணை நடிகர்-நடிகைகள் மற்றும், தொழில்நுட்ப கலைஞர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தாடி இல்லாமல் கண்ணாடி அணிந்து இளமை தோற்றத்தில் இருப்பது போன்ற இன்னொரு படமும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. கோவாவில் நடந்த படப்பிடிப்பில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

இதன்மூலம் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் 2 தோற்றங்களில் நடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது குறைந்த தோற்றத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், கலையரசன், தன்ஷிகா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். தாணு தயாரிக்கிறார். ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டில் ‘கபாலி’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை நெருங்கவே முடியாது-ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் வந்து சென்றுள்ளது. ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே காலம் கடந்து ஜொலிக்கின்றது. அப்படி இன்றும் மங்காது ஜொலிக்கும் நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பெயருக்குள் ஒரு காந்தம் இருக்கிறது என்றால், அந்த பெயர் கண்டிப்பாக ரஜினியாக தான் இருக்கும், 6லிருந்து 60வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இந்த காந்தம், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் வரை ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளது.

‘நான் யானை இல்லை, விழுந்ததும் தாமதமாக எந்திரிக்க, குதிரை’ என்று கூறி சந்திரமுகியில் தன்னை பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார், அதேபோன்ற ஒரு கட்டத்தில் தான் தற்போதும் உள்ளார். மீண்டும் கபாலி மூலம் தான் குதிரை என்று நிரூபிக்க ஓட ஆரம்பித்துள்ளார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனே ‘ரஜினியை யாராலும் எட்ட முடியாது, அவரை மிஞ்ச எவரும் இல்லை’ என குறிப்பிட்டு தன் பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் இன்று போல் என்றும் ஜொலிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!!

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!!

இந்த ஆயில் செய்ய தேவையான மூலிகையை அமேசான் காட்டுல இருந்தும் கொண்டும் வரல, முதுமலை காட்டிலிருந்தும் கொண்டு வரல. நம்ம கிராமங்களில் கிடைக்கும் ”பீக்களா செடி” என்னும் கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான் இந்த ஆயில்... !!

இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி, இதை அறைச்சி தலையில் தடவி குளிச்சாலே தலையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, முடி வளர உதவும், இந்த செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டு ஏற்றுமதி ஆகி, அங்கிருந்து ஆயிலாக இங்க வருகிறது, உங்க ஊரில் இருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க ..!

மொத்தத்தில் ‘ஈட்டி’ கூர்மை - திரை விமர்சனம்

போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

இந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.

இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.

இறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா? அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஈட்டி’ கூர்மை.

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன்

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படத்தை தயாரிக்கும் அதே நண்பர் ராஜாவுடன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் சிவகார்த்திகேயன்.

யெஸ்… சிவா நடிக்க, ராஜா தயாரிக்க அப்படத்தை இயக்கப் போவது மோகன் ராஜா. ‘தனியொருவன்’ புகழ் ராஜா என்றால் தையத்தக்கா என்று சந்தோஷப்படுவீர்கள். ஏன் இவ்வளவு அவசரமாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டும்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்!

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கி சட்டை’. ஒரு வளர்ந்து வரும் ஹீரோ தன் அடுத்த படத்திற்கான இடைவெளியை இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளக் கூடாதுதான். அவர் என்ன செய்வார்? பல்வேறு சிக்கல்களில் சிக்கி, நூல் எது? நூலின் முனை எது என்று புரியாமல் தேங்கி நிற்கிறது அதற்கப்புறம் வர வேண்டிய ‘ரஜினி முருகன்’. எல்லா பஞ்சாயத்துகளும் முடிந்து கடந்த 4 ந் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். மழை, வெள்ளம் காரணமாக மறுபடியும் தள்ளிப் போய்விட்டது. இதற்கிடையில் அவரை ஏழு கோடி கேட்டு மிரட்டிய விநியோகஸ்தர் ஒருவர், தானே படம் தயாரிக்க ஆசைப்பட்டாராம். ஏற்கனவே படங்கள் தயாரித்திருந்தாலும், இந்த முறை அவர் குறி வைத்தது சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை என்கிறார்கள்.

முக்காலியோ, சிம்மாசனோ? அது நம்ம வீட்ல செஞ்சதா இருக்கட்டும் என்ற முடிவுக்கு சிவகார்த்திகேயன் வந்து வெகு நாளாச்சு. அதன் காரணமாக தன் கால்ஷீட் டைரி இன்னும் ஒரு வருஷத்துக்கு புல்லா இருக்கு என்பதை சொல்வதற்காகவே இந்த படத்தை முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள். தனியொருவன் படத்தின் தன்னிகரில்லா வெற்றியும், சிவகார்த்திகேயனின் அசுர பல ரசிகர்களும் சேர்ந்தால், அந்த படத்தை ஆன் டேபிள் பிசினஸ் செய்து கொள்ளதான் ஆயிரம் பேர் விருப்பப்படுவார்களே?

அதற்கப்புறம் ஏன் அந்த பைனான்சியர் தொந்தரவு கொடுக்கப் போகிறார்? அரசியலுக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் கூட அரசியல் தேவைப்படுகிறதே பெருமாளு…!

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!

புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப் போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட
ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

ஷங்கர் இயக்கத்தில் விஜய்-அஜித்?

தமிழ் சினிமாவில் எப்போதும் வட துருவம் தென் துருவம் என்றால் அது விஜய் மற்றும் அஜித் என்று தான் சொல்லணும் அதாவது விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் எப்போதும் இந்த இருவருக்கும் சண்டை இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு மிக பெரிய முயற்சி என்று கூட சொல்லலாம்

சில ஆச்சரியங்கள் எப்போதாவது ஒருமுறை தான் நடக்கும். அதிலும் அந்த அதிசயம் முன்னணி ஹீரோக்கள் பற்றி என்றால் அது இன்னும் விசேஷம்தானே? இந்த தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இதேபோல விஜய்யின் தெறி படமும் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது எவ்வளவு பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடிக்க தயாராகி வருகிறாராம் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.

எஸ்.ஏ.சியின் உதவியாளராக இருந்தும் ஷங்கருக்கு பல வருடங்களுக்குப் பிறகுதான் விஜய்யை வைத்து நண்பன் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அந்தப்படமும் ஹிட்டானதால் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க நினைத்தவர் கூடவே அஜித்தையும் நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்து வருகிறாராம்.

இப்போது மருத்துவ ஓய்வில் இருக்கும் அஜித் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அதையடுத்து ஷங்கரின் இயக்கத்தில் அவரும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கலாம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்…

அப்படி ஒரு படம் வந்தால் அதன் கவனிப்பே ரசிகர்கள் மத்தியில் ரொம்பப் ஸ்பெஷலாக இருக்கும் என்பது மட்டும் உண்மை .ஷங்கர் நினைத்தால் மட்டுமே இது நடக்கும் என்பதால், அப்படி ஒரு படம் வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கலாமே?

பல முறை ரஜினி கமலை வைத்து படம் பண்ண பலர் முயற்சித்து அது பலிக்கவில்லை இப்ப சமீபத்தில் கூட ஷங்கர் இந்த முயற்சி செய்து பார்த்து விட்டு விட்டார் . அதற்கு அடுத்து விஜய் அஜித் ஜோடியை நடிக்க வைக்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம் ..