Wednesday, December 23, 2015

ரஜினி யோசனை! ரஞ்சித் கேட்பாரா? ஒரு விறுவிறு… பரபர…

கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி, சென்னையில் சற்று இறுக்கமாகவே காணப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அங்கு ரசிகர்கள் குவிந்தாலும் சந்தோஷம். குடும்பத்தோடு வந்து நின்று கும்பிட்டாலும் சந்தோஷம். இங்கு அப்படியா? நெர்வஸ்… நெர்வஸ்…! முக்கியமாக ரஜினியை வைத்துக் கொண்டு அவுட்டோர் காட்சிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்… இந்த படம் வயதான கெட்டப் ரஜினியில் ஆரம்பித்து இளமையான ரஜினியில் வந்து முடிகிறது. கபாலி யார்? அவரது கம்பீரம் என்ன? என்பதுதான் படத்தின் டிராவலாம். டைரக்டர் ரஞ்சித், ஒரு படம் எப்படி ஆரம்பித்து எப்படி போகுமோ, அப்படிதான் ஷுட்டிங்கையே எடுப்பாராம். நடுவில் இருக்கிற காட்சியை முன்னாலும், ஆரம்ப காட்சியை கடைசியிலும் எடுக்கிற வித்தை அவருக்கு உகந்ததல்ல! அப்படிதான் இந்தப்படமும் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

திடீரென ரஜினி ஒரு யோசனை சொன்னாராம். அதாவது கதை இளம் ரஜினியிலிருந்து ஆரம்பித்து, ஓல்டு கெட்டப் ரஜினியில் முடியட்டுமே என்று! ரஜினியே சொல்லியாச்சு. அப்புறம் என்ன? என்பதுதானே நமது முடிவாக இருக்கும்? ஆனால் டைரக்டர் அந்த யோசனையை ஏற்பதா, வேண்டாமா? என்ற குழப்பத்திலிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.

எந்த ரஜினி எங்கே இருந்தால்தான் என்னப்பா? படம் முழுக்க அவர் வர்றாருல்ல? அதுபோதும் என்பார்கள் போலிருக்கிறது அவரது ரசிகர்கள்! ரஞ்சித் காதுல விழுதா?

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம்.

ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒருசில எளிமையான பொருட்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களைக் கொண்டு எப்போதும் சுத்தம் செய்தால், மார்பிள் தரைகள் பொலிவுடன் காணப்படுவதோடு, வீட்டில் நல்ல மணம் இருக்கும்.

பேக்கிங் சோடா

மார்பிள் தரையில் உள்ள கறைகளைப் போக்க சிறந்த வழியென்றால், அது பேக்கிங் சோடா தான். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து, வீட்டைத் துடைத்தால், கறைகள் முற்றிலும் நீங்கிவிடும். குறிப்பாக பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாக போட வேண்டாம்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் பற்களை மட்டும் சுத்தம் செய்யப் பயன்படுவதில்லை. மார்பிள் தரைகளில் உள்ள கறைகளைப் போக்கவும் தான் உதவுகிறது. அதற்கு செய்ய வேண்டியது எல்லாம், டூத் பிரஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து, பின் ஈரமான துணி கொண்டு துடைத்தால், கறைகள் எளிதில் போய்விடும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், இதனை கறை உள்ள மார்பிள் தரையில் தேய்த்தால், கறைகள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

வினிகர்

மார்பிள் தரையில் உள்ள கெட்சப் மற்றும் ஒயின் கறைகளைப் போக்குவதற்கு, வெள்ளை வினிகரை ஒரு துணியில் நனைத்து, கறை உள்ள இடத்தில் தேய்த்தால், கறை நீங்கி மார்பிள் தரையானது பளிச்சென்று மின்னும்.

டிஷ் வாஷ் திரவம்

 எளிய முறையில் மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க வேண்டுமெனில், பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் டிஷ் வாஷ் திரவத்தைப் பயன்படுத்துவது தான். இதற்கு அந்த திரவத்தை கறை உள்ள இடத்தில் ஊற்றி நன்கு தேய்த்து, கழுவ வேண்டும். முக்கியமாக, மார்பிள் தரைக்கு கடினமான சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. அது மார்பிள் தரைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சோப்பு தண்ணீர்

 மார்பிள் தரை எப்போதும் சுத்தமாகவும், பளிச்சென்று மின்ன வேண்டுமெனில், ஸ்பாஞ்சை சோப்புத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, தரையைத் துடைக்க வேண்டும். அதிலும் இந்த முறையை, தரையில் ஏதேனும் கொட்டும் போது செய்தால், தரையில் கறை படிவதை தவிர்க்கலாம்.

உலகையை ரசிக்க வைத்தவனின் உருக வைக்கும் வரலாறு..!

யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

 ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி. ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை; பாட முடியவில்லை! ஒரே கூச்சல்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது! தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது! சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம்!

'சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!' மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி... மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை! பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை! அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சிட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை! ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது! அம்மா ஹென்னா வந்திருந்தாள்!! சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள்! மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான் 'ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான்!' என்று. அடுத்த அய்ந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின்.

தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது! பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது. தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு... தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது! முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை!

இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது! என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர... மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம்! பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது, இப்படித்தான்! சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று!

இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்! புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின்.

பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள் வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க; வெறி பிடித்த மக்கள் வெள்ளம்! இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள்! அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது! அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார்! கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது! ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம்! நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்! கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது! அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார்!

சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார்! தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம்! இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்! உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்ப புத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, "உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்!" ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது! 1977இல் ஒரு கிறிஸ்துமஸ் நாளில்.... எல்லோரையும் கண்ணீர் வர சிரிக்க வைத்த அந்த மகா கலைஞனின் மரணம் முதன்முறையாக அழவைத்தது!

'கத்தி' முதல் '2.0' வரை: சினிமாவும் அரசியல் ஆர்ப்பரிப்பும்

 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. லைக்கா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கத்தி', தமிழ் ஈழ ஆதரவாளர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியது. படத்தின் உள்ளடக்கத்துக்காக இல்லாமல், படத் தயாரிப்பாளருக்காக படத்தை வெளியிடக்கூடாது என்று போராட்டங்கள் வெடித்தன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சுமார் 65 தமிழ் அமைப்புகள், லைக்கா நிறுவனங்கள், லைக்கா செல்பேசி உள்ளிட்டவைகளை எதிர்த்தன. லைக்கா நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு இலங்கைப் போர்க் குற்றங்களில் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

விடுதலைப் புலிகளின் போராட்டங்களை தவறாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறி, பிரவீன் காந்தியின் 'புலிப்பார்வை' என்னும் திரைப்படத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு, அதே லைக்கா நிறுவனம் இப்போது ஷங்கருடன் கைகோர்த்து எந்திரன் 2 படத்தை அறிவித்திருக்கிறது. சர்ச்சையை ஏற்படுத்திய கத்தி திரைப்படத்தை இந்தியில் மறுஆக்கம் செய்யவும், தெலுங்கில் சிரஞ்சீவின் 150 -வது திரைப்படத்தையும் இணைந்து தயாரிக்கவும் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது லைக்கா.

லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இது குறித்துப் பேசியபோது, "இதுவரை திரைப்படத் தயாரிப்புகளில் சுமார் 500 கோடி வரை முதலீடு செய்திருக்கிறோம். எந்திரன் 2 - க்கு மட்டும் சுமார் 350 கோடி பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தவிர தெலுங்கு மற்றும் இந்தியில் இரண்டு சூப்பர் ஸ்டார் நடிக்கும் படங்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.

படத்தயாரிப்பு குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழவில்லையா என்ற கேள்விக்கு, "சென்னை உயர்நீதி மன்றம் எங்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. படத்தின் ப்ரமோஷன் வேலைகளிலும், டைட்டில் கார்டில் பெயர் போட்டுக்கொள்ளவும் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குப் பிறகு, 'நானும் ரவுடிதான்' படத்தின் விநியோக உரிமையைப் பெற்று, படத்தை வெளியிட்டோம்" என்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் டி.வேல்முருகன், லைக்கா நிறுவனத்துக்கு எதிரான தங்கள் போராட்டங்கள் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் 2016 தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளையும் தயாராகி வரும் சூழ்நிலையில், இந்தப் போராட்டத்துக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது கடினமே என்றும் கூறியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் இது குறித்துப் பேசியபோது, "இதைக் காட்டிலும் பொதுமக்களைப் பாதிக்கும் மற்ற விஷயங்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். லைக்காவுக்கு எதிரான போராட்டங்கள், இப்போது எங்களின் இலக்கல்ல" என்றார்.

'கத்தி' மேல் நடந்த நிகழ்வுகளின் பார்வை:

ஆகஸ்ட் 2014

'கத்தி' பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் ஈழ ஆதரவாளர்களைச் சந்தித்தார். முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமானவராகக் கருதப்பட்ட லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. விடுதலைப் புலிகளின் போராட்டங்களை தவறாகக் காட்சிப்படுத்தி இருப்பதாகக் கூறி, பிரவீன் காந்தியின் 'புலிப்பார்வை' என்னும் திரைப்படத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆகஸ்ட் 20, 2014

கத்தி மற்று புலிப்பார்வை ஆகிய படங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சுமார் 65 தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. லைக்கா நிறுவனத்தை முன்னிறுத்தும் அனைத்து விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அக்டோபர் 21, 2014

பட வெளியீட்டு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 21 ல், 'கத்தி' படத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாயின. இரண்டு சினிமா அரங்குகள் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டன.

அக்டோபர் 22, 2014

லைக்கா நிறுவனம் தொடர்பான அனைத்துப் பெயர்களையும், அடையாளங்களையும் நீக்கிய பின்னர், சுமார் 500 திரையரங்குகளில் கத்தி படம் வெளியானது.

நவம்பர் 27, 2014

சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய லைக்கா நிறுவனம், தங்களின் பெயரையும், அடையாளத்தையும் வைத்துக் கொள்ள காவல்துறையின் பாதுகாப்பு கேட்டது. உயர் நீதிமன்றமும், காவல்துறை முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அக்டோபர் 21, 2015

மிகச்சரியாக ஒரு வருடம் கழித்து லைக்கா நிறுவனம், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் விநியோக உரிமையைப் பெற்று படத்தை வெளியிட்டது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

நவம்பர் 2015

எந்திரனின் தொடர்ச்சியாக எந்திரன் 2.0 படத்தைத் தயாரிக்க உள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 350 கோடி அளவில் பிரமாண்டமாக படம் வெளிவரப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்‌ஷய் குமார் நடிக்கும், கத்தி படத்தின் இந்தி ஆக்கத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாயம் இல்லாத போது விலகுவேன் - எஸ்பி பாலசுப்ரமணியம்

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளவரும், 69 வயதைக் கடந்த பிறகும் இப்போதும் தன்னுடைய இனிமையான குரலால் இன்றைய இளம் நாயகர்களுக்காகவும் பாடி வரும் சிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். திரையுலகத்தில் பாட வந்து 50 ஆண்டுகளை கடந்த வாரம்தான் வெற்றிகரமாக கடந்தார். எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் என பலருடைய இசையில் தமிழ், தெலுங்கில் சுமார் 40,000 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளவர்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகில் பாடுவதை எப்போது நிறுத்துவேன் என்பது குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு பாடலுக்கு நியாயமாக இல்லாத போது நானாகவே பாடுவதை நிறுத்திக் கொள்வேன் என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்போதும் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேலாக பாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பலருக்கு எஸ்பிபி பாடிய பாடல்களை இன்றும் இசை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எஸ்பிபி பாடிய பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும் என்பதே உண்மை.

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

o பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

o சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

o அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

o சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

o ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

o ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

o ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

o கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

o நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

o வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

o கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

o நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

o நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உளுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே

தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம்.

தங்களுக்குள்ள போட்டி
பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம்.

முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக

யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற உலகப்புகழ் படம் அவதார். இப்படத்தின் வெற்றியும் வரவேற்பும் நாமறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

2017 கிறிஸ்துமஸ் தினத்தில் அவதார் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 டிசம்பர் மாதம் வெளியான அவதார், உலகம் முழுவதிலும் மாபெரும் வெற்றியடைய, இன்று வரை எந்த படமும் தொட முடியாத வசூல் சாதனையைப் படைத்தது.

கன்னடியன் என்டர்டெயின்மென்ட் கம்பெனியின்  ’தி ஃபர்ஸ்ட் பிளைட்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன் 2017 டிசம்பரில் அவதார் 2 வெளியாகும் என தெரிவித்தார்.தற்சமயம் படப்பிடிப்பில் இருந்துவரும் அவதார் படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாம் , மூன்றாம் பகுதிகள் முடிவடைந்தவுடன் 2017 முதல் 2019 வரை அடுத்தடுத்து ஆண்டுகளில் படங்களை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு படமும் தனித் தனி என்றாலும், அது ஒரு மிகப் பெரியகதையைக் கொண்டது எனவும் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப்  பிறகு அவதார் 2 பற்றிய செய்தி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..! அவசியம் உண்ண வேண்டியது...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!

ரஜினி, சிரஞ்சீவி, ஆயிரம்கோடி - திரைத்துறையை அதிரவைக்கும் நிறுவனம்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து பல சிக்கல்களுக்கு ஆட்பட்ட லைகாநிறுவனம் இப்போது அதிரடியாக தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியசினிமாவிலும் கால்பதிக்கிறது.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ படத்தை 50 கோடி செலவில் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதேபோல இந்தியசினிமாவிலேயே அதிகசம்பளம் வாங்கிய நடிகர் என்று புகழப்பட்ட சிரஞ்சிவி நடிக்கவிருக்கும் கத்தி படத்தின் தெலுங்குமாற்றப்படத்திலும் இணைதயாரிப்பாளராக தன்னைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது லைகாநிறுவனம்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் உச்சநட்சத்திரங்களைப் பிடித்தாயிற்று என்ற நிலையில் இந்தியில் உச்சநட்சத்திரம் இல்லையென்றாலும் முன்னணிநடிகர்களில் ஒருவராக இருக்கும் அக்ஷய்குமாரை வைத்து கத்தி படத்தின் இந்தி மொழியாக்கத்தினைத் தயாரிக்கவிருக்கிறார்கள். இந்தப்படம் அடுத்தஆண்டு பாதிக்குமேல்தான் தொடங்கவிருக்கிறதாம்.

தெலுங்கு கத்தி மொழிமாற்றுப் படத்தின்  தயாரிப்புப் பொறுப்பை சிரஞ்சீவியின் நிருவனமே கவனித்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. தமிழில் 350 கோடி படம் தெலுங்கில் 150 கோடி மதிப்பிலான படத்தில் இணைந்திருப்பது, இவற்றோடு இந்தியில் சுமார் நூறுகோடியில் ஒருபடம் என்று மிகப்பெரிதாகத் திட்டமிட்டு செயலில் இறங்கியிருக்கிறது லைகாநிறுவனம்.

இவைதவிர தமிழில் சாம்ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறது லைகா. வெற்றிமாறனின் விசாரணை உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்யவும் உள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் சில படங்களின் வெளியீட்டில் அவர்கள் பின்புலமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் கணக்கிட்டுப்பார்த்தால் ஒரேநேரத்தில் சுமார் ஆயிரம்கோடியை திரைத்துறைக்குள் இறக்கி ஏற்கெனவே படத்தயாரிப்பில் இருக்கிறவர்களை வியக்கவைத்திருக்கிறது அந்நிறுவனம்.

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும்.

எந்த அளவுக்கு
நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும்
என்பதை அக்குபங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து
கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில்
நேர்கோடாக அமைந்துள்ளது.

உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு
நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர்
சக்தி நாளம் அமைந்துள்ள தலை நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி
நாளங்கள் அமைந்துள்ளன.

இதனையடுத்து நடு மையக் கோட்டின் இரு
புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள்
அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது.
தலைப்பகுதி, முதலில் தலையின் நடு மையக்கோட்டில் அமைந்துள்ள உயிர் சக்தி
நாளத்திலிருந்து தூரமாக உள்ளது.

ஹெல்மெட் அணியும்பொழுது அதனுடைய
கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள்
பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு
அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும்.

இந்த
நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை
வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள்
போன்றவற்றைத் தோற்றுவிக்கும்.

காதைச் சுற்றி இந்த சக்தி நாளம்
பரவியிருப்பதைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக பிற்காலத்தில்
காதுகளில் மந்தம் ஏற்படலாம். இன்னும் காதுகளில் வலிகளும் அடிக்கடி சீழ்
பிடித்தலும் உருவாகும்.

கண்களின் இருபுறமும் வெளிப்புறங்களில்
நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடியாத வலி தோன்றினால் அது இந்த சக்தி
நாளத்தில் ஏற்பட்டுள்ள பாதகங்களின் காரணமாகவே ஆகும்.
ஹெல்மெட் மற்றும்
கண்ணாடிகளை அணிவது இந்த சக்தி நாளங்களை பாதிக்கும் என்பதை அறிந்து
கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச்
சுற்றி அமையும்.

அதனுடைய ஃபிரேம் நிச்சயமாக இவர்களுடைய காதுகளை
பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்துவத்தால்
ஒரு போதும் குணப்படுத்த முடியாது.
எத்தகைய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது.

குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல்
பாதுகாப்பீர்களானால் நாளை வரக்கூடிய மணிக்கட்டு வலிகள், விரல் மூட்டுகளின்
வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது, நெற்றிப் பொட்டு
வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

அடுத்து
பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவதும் இந்த சக்தி நாளம்
பரவியிருக்கிறது. தலையின் இருபுறமும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட்
அணியும்பொழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு
உள்ளாகின்றன.

இதன் விளைவு வெயில் காலங்களில் ஏற்படும் மயக்கம்,
தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக்
ஏற்பட்டு இறப்போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின்
உச்சக்கட்டத்தில் வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து
ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

ஹெல்மெட் அணிவதன் காரணமாக
மயக்கம், வாந்தியுணர்வு ஏற்பட்டால் இது மட்டுமல்ல, ஹெல்மெட் கடுமையான கோடை
காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் விளைவுகள் ஹெல்மெட் அணியாததன் போதிலும்
வெயிலில் செல்லும்போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விடலாம்.

அடுத்து
சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப் பெற்ற தலைப்பகுதியைப் பாருங்கள்.
ஹெல்மெட் அணிவதன் காரணமாக யாருக்கு சிறுநீர்ப்பை பலவீனமாக இருக்கிறதோ
அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள்
அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டால், கண்களிலிருந்து தலை முழுதும் வலி ஏற்பட
ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல்
ஏற்படும்.

தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும்
தலையில் நீர் கோர்த்துக் கொண்டது போன்று பாரம் ஏற்படும். கழுத்தின் பின்
பகுதியின் மையத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி போன்றவை ஹெல்மெட்
அணிவதன் காரணமாக எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய நோய்களாகும்.

இவையனைத்தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் காரணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டியவர்கள்
அவர்களுக்கு ஏற்படும் மேலே கண்ட அனைத்து நோய்களிலிருந்து அக்குபங்சர்
சிகிச்சையின் மூலம் மேற்படி நோய்கள் வராமலும், ஏற்கனவே
அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும்.

இரத்த அழுத்த
மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அக்குபங்சர் மூலம்
குணப்படுத்தலாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகள் ஒரு நோயாளி சாப்பிட
ஆரம்பிக்கிறாரோ அப்போது தொடங்குவது தான் சிறு நீரகங்களின் அழிவு.


நுரையீரலும், சிறு நீரகங்களும் பாதிப்படைய ஆரம்பிக்கும்போது தூக்கமின்மை
ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தை கெடுக்கும். இரண்டு,
மூன்று மணிக்கு மேல் பின்னிரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது
நுரையீரல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆண்களையும், பெண்களையும்
மலடுகளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரைகள்தாம்.


ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள
ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமழிப்பார்கள். ஈடுபட
நினைத்தாலும் அவர்கள் உறுப்புகள் ஒத்துழைக்காது.

சிலருக்கு
வயிற்றின் மேல் பகுதிகளில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு இடுப்பு
மடிப்புகளில், சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப்பகுதியில்,
சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின்
முன்புறமோ, பின்புறமோ சதைகள் பருமனாகும்.

கழுத்தின் முன்புறம் சதை
பருமனாகுதல் சிறு நீரகங்கள் சக்தியிழந்து வருவதை உணர்த்துகிறது. கழுத்தின்
பின்புறம் போடும் சதை சிறுநீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது.
பெண்களுக்கு பொதுவாக சதை போட ஆரம்பிக்கும்.

மார்பகங்களில்
அதிகனமாக தோற்றமளித்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்மந்தப்பட்டது.
வயிற்றின் வேலை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு
மட்டுமில்லாமல் மார்பகங்களில் ஊளைச் சதை போடும்.



மார்பகங்களுக்குப் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடிப்புகளிலும் சதை
விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக்
குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப்போது குணப்படுத்தப்படாமல்
போகும்போது தான் நாளடைவில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீரணக்
கோளாறை காலமெல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது.

அது மட்டுமல்ல இருதயக் கோளாறுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச்சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.

மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம்
குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதை
தவிர்க்கலாம்.

சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல்

சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல்

சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றது.

சிவகார்த்திகேயனை பீப் சாங் விவகாரத்தில் சிக்க வைத்த நபர் யார்?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எந்த ஒரு கிசுகிசு, சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பவர்.

இந்நிலையில் இவர் தான் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது என யாரோ நேற்று கிளப்பிவிட்டனர். பின் சிம்புவே இதற்கு அவர் இல்லை என்று முற்று புள்ளி வைத்தார்.

மேலும் அதில் ‘வேண்டுமென்றே அவரது பெயரை இதில் சிலர் இழுத்துவிடுகின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு அந்த அளவிற்கு எதிரி யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் என்பது தான் தற்போதைய கேள்வி.

இளையராஜாவை தூக்குல போடனுமா? சிம்பு என் புள்ளை- கங்கை அமரன் அதிரடி

சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபம் அதை தொடர்ந்து கங்கை அமரன் அதற்கு விளக்கம் என நீண்டுக்கொண்டே போகின்றது.

அந்த வகையில் கங்கை அமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘சிம்புவை நான் திட்டினேன், இதற்கு சிம்பு, வெங்கட் பிரபுவிடம் வருத்தம் தெரிவித்தார், அதற்கு நான் கூறினேன் “சிம்புவும் என் பிள்ளை தான், எனக்கு திட்ட உரிமையில்லையா” என்று.

மேலும், இளையராஜா மீது பலரும் கோபத்தில் உள்ளார்களாம், புகார் வேற கொடுக்கவிருக்கிறார்களாம், என்ன தூக்கில் போடப்போகிறார்களா? இல்லை ஆயுள் தண்டனை வாங்கி தரப்போகிறார்களா?’ என கோபமாக பேசியுள்ளார்.

அட இப்படியும் செய்யலாமா........விற்பனை தந்திரம்..!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார், ஐந்து பழங்கள் பத்து ரூபாய்
என்று கூவி, பழங்களை விற்க முயன்றார், எவரும் பழம் வாங்க முன்வரவில்லை,
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன்
பேருந்தில் ஏறினான், ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவினான், அவனுக்கு
நல்ல விற்பனை,

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ஐந்து
பழங்கள் பத்து ரூபாய் என்று விற்க முயன்றார், பலன் இல்லாமல் போகவே கீழே
இறங்கி விட்டார், அடுத்து ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவியபடி அந்தப்
பேருந்தில் ஏறிய இளைஞன் ஏகத்துக்கு விற்பனை செய்தான்,

மிகப் பெரிய
கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக்
கொண்டிருந்தார், முதியவரை அருகில் அழைத்தவர் அந்த இளைஞனின் சாமர்த்தியம்
உங்களிடம் இல்லையே, அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய்
என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும், அதிகக் கொள்முதல் மூலம்
குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப்
பழகுங்கள் தாத்தா என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்,

முதியவர்
சிரித்தபடி போய்யா... அவன் என் பேரன், இந்தப் பழமும் அவனது தான், ஆறு பழம்
பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு நம்ம சனத்துக்கு மனசு
வராது, அதனால் நான் 'ஐந்து பத்து ரூபாய்னு கூவிகிட்டுப் போவேன், அப்புறமா
ஆறு பழம் பத்து ரூபாய்னு அவன் வந்து சொன்னதும்... அடடே லாபமா இருக்கேனு
சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க, அவன் தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட
மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான் என்றார் முதியவர்.

இளைய தளபதி விஜய்.. இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா...?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தயாரித்து வரும் ‘நையப்புடை’ என்ற படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில், கதை நாயகனாக நடித்துள்ள டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘‘தாணு, என் நெருங்கிய நண்பர். அவர் அனுப்பியதாக, சில மாதங்களுக்கு முன்பு விஜயகிரண் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவரிடம், எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்? என்று கேட்டேன். ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு அவர், ‘லேப்டாப்’பை திறந்தார்.

விக்ரமன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல டைரக்டர்களிடம் விஜய்க்காக நான் கதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் நடித்துக் காட்டியபடி கதை சொல்வார்கள். இப்படித்தான் எனக்கு கதை கேட்டு பழக்கம்.

விஜயகிரண் என்ற அந்த இளைஞர் எனக்கு ‘லேப்டாப்’ மூலம் கதை சொன்னது, புதிய அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பும் ‘லேப்டாப்’ உதவியுடன்தான் நடந்தது.

ஒருநாள் காலை ஒன்பதே முக்கால் மணி ஆகியும் முதல் ‘ஷாட்’ எடுக்கவில்லை. என்ன ஆச்சுப்பா? என்று கேட்டேன். உடையலங்கார பெட்டி வரவில்லை என்றார்கள். எல்லோருமே அவரவர் உடையணிந்து தயாராக இருக்கிறார்களே? என்றேன். உடையலங்கார பெட்டி வரவில்லை. அதற்குள்தான் ‘லேப்டாப்’ இருக்கிறது என்றார், விஜயகிரண்.

‘‘ஏம்ப்பா சீன் நீதானே எழுதியிருக்கிறாய்...வாயினால் சொல்லுப்பா’’ என்றேன். ஆனால் அவர், ‘‘அது சரிப்பட்டு வராது’’ என்றார். அந்த ‘லேப்டாப்’ வந்த பிறகுதான் படப்பிடிப்பு நடந்தது.

இன்றைய இளைய தலைமுறை டைரக்டர்கள், ‘லேப்டாப்’புக்குள் மூளையை வைத்து இருக்கிறார்கள். ‘கம்ப்யூட்டர்’ மூலம்தான் கதை சொல்கிறார்கள். தப்பைக்கூட சரியாக நம்பிக்கையுடன் செய்கிறார்கள். தப்பைக்கூட சரியாக செய்தால், அது தப்பே இல்லை என்று பாடலே பாடுகிறார்கள்.

எனக்கு 73 வயது ஆகிறது. இந்த படத்தில் 75 வயதான முன்னாள் ராணுவ வீரராக நடிக்கிறேன். கோபக்கார முதியவர் வேடம். அங்கங்கே சண்டை காட்சிகள் வேறு. எனக்கு வேகமாக நடந்தாலே முழங்கால் வலிக்கும். அப்படிப்பட்ட என்னை சண்டை காட்சிக்காக கயிற்றில் கட்டி தொங்க விட்டார்கள்.

‘‘நீங்க கையை காலை அசைத்தால் போதும். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார்கள். படம் பார்த்து நானே மிரண்டு போனேன்.’’

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத்தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஜே.சூர்யா, வெற்றிமாறன், பட அதிபர்கள் சந்திரபிரகாஷ் ஜெயின், பி.டி.செல்வகுமார், நடிகர் ஜீவா, கவிஞரும், நடிகருமான பா.விஜய், டைரக்டர் விஜயகிரண், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

உடல் பருமன் எப்படி குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும்?

உடல் பருமன் என்பது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அதில் முக்கியமான பாதிப்பு குழந்தை பாக்கியத்தைத் தடுப்பது தான். உடல் பருமன் பெண்கள் கருவுறுதலை மட்டும் பாதிப்பதில்லை ஆண்களின் விந்து உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாக்கியம் தாமதாக நடப்பதுடன், பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி கருசிதைவும் ஏற்படும் நிலையும் உள்ளது.

உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியாவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் சினைப்பையில் கட்டி ஏற்பட்டு கருவுறுதல் மேலும் சிக்கல் அடைகின்றது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பாதிப்பும் உடல் பருமனால் ஏற்பட்டு கருவுறுதலை பாதிப்பதுடன், சில நேரத்தில் பிரசவ காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உடல் பருமன் ஹார்மோன் குறைப்பாட்டைக் ஏற்படுத்தும். இதனால் கருமுட்டை மற்றும் விந்து உற்பத்தி பாதிப்பு அடைகின்றது. ஆகவே குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தால், தயவு செய்து உடல் எடையில் கவனம் கொள்ளுங்கள். அதற்காக பலவற்றை முயற்சி செய்து உடல் எடையை அதிகமாக குறைத்தாலும் ஆபத்து தான். கூடுதல் உடல் எடை குறைவும், குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும். ஆகவே சரியான உடல் எடை குழந்தை பாக்கியம் பெற மிக மிக அவசியம்.

சொல்பவன் யார் என்றுதான் உலகம் பார்க்கிறது - கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு
கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
-
அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல்
எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம்
பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,”இன்று நான்
வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்
நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்

.அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க
சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.
அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்
பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”

நைட் ஷிபிட் பார்க்கும் போது காபி வேண்டாம் - ஜப்பான் நபர் மரணம்!

காலை எழுந்ததும் காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, இடையே, 11 மணிக்கு ஒருமுறை, உணவருந்திய பிறகு ஒருமுறை, மாலை ஒருமுறை, வீடு திரும்பியதும் ஒருமுறை என காபியின் ருசி நாவை விட்டு விலகாதவண்ணம் இருக்கும் அளவு காபி குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஏராளம்.

ஆனால், இந்த பழக்கம் இப்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதிகப்படியாக காபி பருகுவதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கடைசியில் ஒரு நபர் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தி.

இதனால், இனிமேல் அதிகளவு காபியை பருக வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது....

டயபடிஸ் வரக் காரணம் என்ன? ஒரு முழுமையான அலசலும் தீர்வும்..!

டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

டயபடிஸ் வரக் காரணம் என்ன?

நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

க்ளுகோஸ்

லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

“இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

வெள்ளை சர்க்கரை 64

முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

வெள்ளை ரொட்டி 87

ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

காலை ஐந்து இட்டிலி

மதியம் சாதம், சாம்பார், ரசம்,

மாலை வடை, டீ காப்பி

இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

இட்டிலி மற்றும் சப்பாத்தி.

சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?