Tuesday, December 15, 2015

திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு- நமது எம்ஜிஆர் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டதாக புகார்!

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.

சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நட்ராஜ் நீக்கம் உத்தரவை அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்திருந்தார். இது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை சமூக வலைதளங்களில் ஒரு செய்தியும் படமும் வைரலாக பரவியது. அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் இணையபக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டதாகவும் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும்? எனவும் அதில் கேட்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அக்கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 13.02%; திமுக கூட்டணிக்கு 85.38% ; மற்றவை 1.66% என பதிவாகி இருப்பதாகவும் அந்த செய்தியிலும் ப்ரிண்ட்ஸ்கிரீன் எடுக்கப்பட்ட இமேஜிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாக பரவிய அதேநேரத்தில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் இணையதளம் சிறிது நேரம் இயங்காமல் இருந்தது. பின்னர் இயங்கிய அந்த தளத்தில் இந்த கருத்து கணிப்பு நீக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நமது எம்.ஜி.ஆர். இணையதளமானது, தங்களது வெப்சைட்டை சமூக விரோதிகள் ஹேக் செய்ததாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை விவகாரம்தான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக ஓடுகிறது!

கவுண்டமணியைக் கோபப்படுத்திய புதுநடிகர்

கவுண்டமணி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. இவருடன் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தரராஜா மற்றும் மெட்ராஸ் பட புகழ் ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றிப் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜா. “கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார்.

ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான் அவர்  இவ்ளோ பெரிய இடத்தில் இருக்க காரணம்.

அப்பேர்பட்ட திறமைக்காரர் முன்னாடி, நான் பண்ணுன கூத்தைக்கேட்டா உங்களுக்குக் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல. ஒரு சீன்ல, கவுண்டமணி சார், நான் அப்புறம் ரித்விகா காம்பினேஷன். காட்சிப்படி கவுண்டமணி சார் ரொம்ப நக்கலா எங்களைப் பத்தி பேசிட்டிருப்பார். அதைக்கேட்டு, நான்
சீரியஸா, செம கோபத்துல அவரைப் பார்த்து முறைக்கணும். கவுண்டமணி சார், நக்கலா பேசுறப்போ, அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன் நான்.

அசால்டா, அவர் ஸ்டைல்ல, செம கெத்தா நக்கலா பேசுனப்போ,  எனக்கு, அவரோட நடிப்பையும் கெத்தான அவரோட ஸ்டைலையும் மெய்மறந்து ரசிச்சிக்கிட்டு இருந்தேன். ஒவ்வொரு முறையும் அவரை மனசு ரசிச்சதுல  அவர் மேல  கோபம் வர மாதிரி நடிக்க முடியல. பட்டு பட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்து தான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது.

கவுண்டமணி சார், நான் அடிச்ச கூத்துல லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் தான், சுதாரிச்சிக்கிட்டு,  ‘அண்ணே,  மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக்கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்  தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார் கூட நடிச்சது எனக்கு பெரிய அனுபவம்”, என்றார் சௌந்தரராஜா.

ஒரே போடாக போட்ட ஜெ.! எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்!

எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

மிக உருக்கமாக அமைந்துள்ள அந்த உரையில், "வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்:

கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.

உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.

அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்.

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்.

என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அற்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!"

-இவ்வாறு பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

எந்திரன் 2 படத்தைத் தொடர்ந்து கமலின் மருதநாயகத்தை தயாரிக்கும் லைக்கா

 மருதநாயகம் குறித்து பேசும் போதெல்லாம், அதற்கு டாலர்களில் பணம் தேவை என்பார் கமல். மருதநாயகத்துக்கு தேவைப்படும் பணத்தை முதலீடு செய்ய இப்போது லைக்கா முன் வந்துள்ளதாக யூகச்செய்திகள் கூறுகின்றன. அதென்ன யூகச் செய்தி...?

சில தினங்கள் முன்பு பேட்டியளித்த கமல், லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர், மருதநாயகம் படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், அதிகம் செலவாகுமே என்றதற்கு, அது என் கவலை. படமும், நானும் அந்த பட்ஜெட்டை தாங்குவோம் என கூறியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஐங்கரனின் அதிகாரப்பூர்வ தளத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஐங்கரன், லைக்கா இணைந்தே எந்திரன் 2 படத்தை தயாரிக்கின்றன. இரு நிறுவனங்களும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டே இயங்குகின்றன. இரண்டும் இரண்டும் நான்கு.... கமலின் லண்டன் நண்பர் லைக்கா, அவர்கள் மருதநாயகத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாலேயே அப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்கிறார்கள்.

லைக்கா எடுக்கிற மிகப்பெரிய ரிஸ்க் இதுவாகத்தான் இருக்கும்.

வியாழன்று சென்னை திரும்பும் அனிருத்! விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்?

சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், போலீசும் தன் சாதுர்யமான விரட்டலை துவங்கிவிட்டது. இருவரில் யார் சிக்கினாலும் களிதான்!

இதற்கிடையில் கனடாவிலிருந்து கிளம்பும் அனிருத் வியாழன் காலை சென்னை வந்து சேர்கிறார். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ், அனிருத்தின் வருகைக்காக காத்திருக்கிறதாம். இங்கிருந்தபடியே எல்லா விஷயங்களையும் அறிந்து வரும் அனிருத், தனது பயணத்திட்டத்தை மாற்றி வழியிலேயே வேறு ஏதாவது ஒரு நகரத்தில் இறங்கி, முன் ஜாமீன் பெற்றபின் வருவாரா? அல்லது ஆழம் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்வாரா? என்பதை வியாழன் வரைக்கும் காத்திருந்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில் இருவருக்குமான எதிர்ப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் சிம்பு அனிருத்தை உள்ளே தள்ளாமல் ஓயக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதனால், பெரிய இடத்து பிள்ளைகள் என்பதையும் மறந்து போலீஸ் நியாயத்தை கையில் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.

டாப் ஹீரோக்களுக்கு வெட்கம்… வெட்கம்… மேலும் வெட்கம்! ஒரு கோடியை அள்ளித்தந்த அக்ஷய் குமார்!

‘மாற்றி மாற்றி நெருக்கடி கொடுத்து பொட்டிய தொறக்க வச்சுருவானுங்க போலிருக்கே…’ என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அண்டை மாநில ஹீரோக்களின் அன்பும் கருணையும், இங்குள்ளவர்களுக்கு அப்படியொரு வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. (அடேய்… நாங்க எங்கடா வெட்கப் பட்டோம்? என்று மறுத்தாலும் அதில் வியப்பு ஒன்றுமில்லை. தெரிந்த சமாச்சாரம்தானே?)

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை மக்களின் சோகத்தை தொலைக்காட்சி வாயிலாகவும் பத்திரிகைகளின் மூலமாகவும் அறிந்த அக்ஷ்ய் குமார், தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாய் செலுத்த விரும்பி பிரபல இந்திப்பட இயக்குனர் பிரியதர்ஷனை தொடர்பு கொள்ள அவரது வழிகாட்டுதலின் படி நடிகை சுஹாசினி வழியாக ஜெயேந்திராவிடம், (விளம்பர பட இயக்குனர் மற்றும் பூமிகா அறக்கட்டளை தலைவர்) வழங்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்கு வந்து சேர்ந்த தொகையிலேயே மிகப்பெரிய தொகை இதுதான் என்பதை எண்ணி பெருமைப்படுவதா? இதற்கப்புறமும் சும்மாயிருக்கும் ‘சூழ்நிலை நழுவி’ ஹீரோக்களை நினைத்து வெட்கப்படுவதா?

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்

குழந்தைகள் கிரிக்கெட்டில் எந்த மேட்சில் எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விவரங்களை துல்லியமாக தருவார்கள். இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள். இதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இவர்களது பிரச்சனை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில் தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். எதில் நினைவாற்றலை வளர்த்தக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நனைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது.

கவனிக்கும் திறன் வேண்டும்:

உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரைய சொல்லுங்கள், அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரைய சொல்லுங்கள். அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்க சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டு பாருங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவிதான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காணரம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.

எதிலும் ஒழுங்கு அவசியம்:

குழந்தைகள் பல நேரங்களில் கணக்கு புத்தகம் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று நாள் முழுவதும் புலம்பி கொண்டு தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே, இலட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலக்த்திற்கு அழைத்து சென்று, அங்கே பணியாற்றுப்பவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களைவிட்டே கண்டறிய சொல்லுங்கள்.

காரணத்தினை ஆராய்ந்தால், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் இரைந்து கிடப்பதே, நூலகத்தில் கிடைப்பதற்கு காரணம் அடுக்கி இருப்பதே. குழந்தைகள் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். இதனால் எதிலும் ஒழுங்கை கடைபிடிக்க பழக வேண்டும்.

மறதியை விரட்டும் வழி:

குழந்தைகளின் மறதியை போக்கும்பெற்றோர்கள் சில வழிகளை மேற்கொள்ளலாம். அதாவது, கு£ந்தைகளுடன் வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றை கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு நூலகத்தில் அவர்கள் பார்த்த புத்தக அலமாரியின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுத சொல்லுங்கள், அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்ததை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்க தோன்றும்.

உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள்.

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்சை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். இப்படி ஒவ்வொறு செயலையும், ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். இவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றினால் குழந்தைகளின் மறதியையும் மறக்கடிக்கலாம்.

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் போட்ட குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

இஞ்சி ஜூஸ்

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

பூண்டு ஜூஸ்

இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ஜூஸ்

இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசிப் பழ ஜூஸ்

அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

கிவி ஜூஸ்

கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்ரிக்காட் ஜூஸ்

தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

மிளகு கசாயம்

மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்

முதலமைச்சர் தலையிட வேண்டுமாம்- சிம்பு,அனிருத்திற்கு பலத்த நெருக்கடி

சிம்பு-அனிருத் இருவரும் தான் தற்போதைய தமிழகத்தில் தலைப்பு செய்தி. பீப் சாங் என்றே ஒரு பாடலின் மூலம் இருவரும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதில் அனிருத் தான் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமார் இருவரையும் மிகவும் கோபமாக சாடியுள்ளார்.

அவர் ‘மாண்புமிகு முதலமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டிலேயே சிம்புவும். அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும் அதை நியாயப்படுத்தவும் துணிந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் துணிச்சலை முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளாராம்.

இதுவரை வந்த படங்களில் அதிக லாபம் கொடுத்த படம் எது? முழு விவரம்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் தற்போது மிகவும் சாதாரணமாக ரூ 50 கோடியை தாண்டுகிறது. இதனால், வசூலும் அனைவரும் ரூ 100 கோடியை எதிர்ப்பார்க்கின்றனர்.

அந்த வகையில் எப்போதும் வசூல் மன்னர்களாக திகழ்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இதில் அனைத்து தரப்பிலும் லாபம் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படம் எது என்பதை சினிமா விமர்சகர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Distributor share அடிப்படையில் இன்று வரை எந்திரன் ரூ 64 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அஜித்தின் வேதாளம் ரூ 47.2 கோடி, விஜய்யின் துப்பாக்கி ரூ 44.5 கோடி, கத்தி ரூ 43.6 கோடி, விக்ரமின் ஐ ரூ 43.2 கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இவை அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறை சொல்லாமல் வாழ்வது எப்படி ?கண்டிப்பாக படியுங்கள் உங்களுக்கான மாற்றத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் !!

சிலர் எடுத்ததுக்கெல்லாம் எப்போதும் குறை சொல்வார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண முடியாது. குறை சொல்வதைத் தவிர்ப்பதே ஒரு பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும்’ என்று சொல்லி, குறை சொல்லாமல் இருப்பதன் பலாபலன்களை விளக்கி, குறை சொல்லும் குணத்தைத் தவிர்ப்பது எப்படி என்று சொல்கிறார் ‘எ கம்ப்ளைன்ட் ஃப்ரீ வேர்ல்டு’ என்கிற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வில் பொவென்.

‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதனை மாற்றுங்கள். மாற்ற முடியவில்லை என்றால் பிடிக்காததைப் பிடிக்கிற மாதிரி நீங்கள் மாறிக்கொள்ளுங்கள்.

அதை விட்டுவிட்டு, பிடிக்காத மற்றும் மாற்றமுடியாத விஷயத்தைப்பற்றி ஒருபோதும் குறை சொல்லாதீர்கள்’ என்ற அடிப்படை உண்மையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.

குறை சொல்லியே வாழ்வதினால் நமக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்கிற கேள்விக்கு அழகான விளக்கத்தைத் தருகிறார் ஆசிரியர். ”குறை சொல்வதால் நெகட்டிவ் எண்ணங்கள் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்துகிடக்கிறது. ஒருமுறை பத்திரிகையாளர்கள் நடுவே, பாசிட்டிவாகச் செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினாராம் ஆசிரியர்.

‘பாசிட்டிவ்வாக நினையுங்கள், பேசுங்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், நாங்கள் நல்ல செய்தியை வெளியிடும் நாளன்று நடக்கும் விற்பனையைவிட பிரச்னை, குழப்பம், சீர்கேடு என்று செய்தி போடும் நாட்களில்தான் எங்களுக்கு அதிக செய்தித்தாள் விற்கிறது’ என்றாராம் ஒரு நாளிதழின் அதிபர்.

ஆசிரியர் அவரிடம், ”மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் நெகட்டிவ் எண்ணங்களினாலேயே கெட்ட செய்தி தலைப்பாக வரும் நாளில் செய்தித்தாள்கள் அதிகம் விற்பனையாகிறது’ என்றாராம்.

மக்கள் மனதில் இருக்கும் பயமே கெட்ட செய்திகளை தெரிந்துகொள்ள தீராத ஆவலைத் தருகிறது என்கிறார் ஆசிரியர். அமெரிக்க தொலைக்காட்சி களில் வரும் 24 மணி நேர செய்தி சேனல்களில் பலவற்றையும் மேற்கோள் காட்டும் ஆசிரியர், அவற்றை செய்தி என்றே சொல்லமுடியாது. கெட்ட செய்தி என்று வேண்டுமென்றால் சொல்லலாம் என்கிறார். அந்த அளவுக்கு கொலை, கொள்ளை, விபத்து எனக் கெட்டவைகளின் தொகுப்பாக அது இருக்கிறது.

முப்பது நிமிட செய்தித் தொகுப்பில் 29 நிமிடம் கெட்ட செய்திகளும் ஒரேயொரு நிமிடத்துக்கு மட்டும் ஏதோ ஒரு நல்ல செய்தி தப்பித்தவறி வருகிறது. இதைச் செய்தி என்று சொல்வதைவிட கெட்டச் செய்தி என்று சொல்வதுதானே சரி என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

இதனாலேயே நான் முழுவதுமாக டிவி செய்தி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஆசிரியர், அப்புறம் எப்படி நாட்டுநடப்பைத் தெரிந்துகொள்வது என்று கேட்காதீர்கள். கெட்ட செய்திகளைச் சொல்ல நிறையபேர் உங்களைத் தேடிவருவார்கள் என்கிறார்.

”மூளை என்பது ஒரு தோட்டம் போன்றது. அதைச் செப்பனிட்டு நல்ல பல வாசமலர்களை அதில் பயிர் செய்து சந்தோஷமாக வாழவும் செய்யலாம். கரடுமுரடாக முட்செடிகளை வளர்த்துவிட்டு வருத்தத்துடனும் வாழலாம். எது உங்கள் சாய்ஸ்?” என்று கேட்கிறார்.

நாள் முழுக்க கெட்டதைப் பார்த்துக்கொண்டும், கெட்டதைக் கேட்டுக்கொண்டும் இருந்தால் எங்கே உங்கள் மூளையும் மனதும் நல்லதை நினைக்கும்? என்றும் கேட்கிறார்.

”நம் மனதிலும் மூளையிலும் பயிரிடப்படும் கெட்ட எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? குறை சொல்வதனாலேயேதான். எண்ணம் போல் வாழ்வு என்கிறீர்கள். எப்போதும் குறையைச் சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்தால் உங்கள் வாழ்வில் எங்கே நிறைவு வரும்?” என்று கேட்கிறார் ஆசிரியர்.

பெரும்பாலான குறைகள் நம்மை நாம் உயர்வாக எண்ணிக்கொண்டும் நம் மனதினில் தோன்றும் மாயக்குறைகளைச் சொல்வதற்காகவுமே சொல்லப்படுகிறது என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான பல உதாரணங்களைச் சொல்லியுள்ளார்.

”குறை சொல்லுதல் என்பது நம்முடைய ஃபோகஸை பிரச்னையின் மீது நிறுத்திவைக்கிறதே தவிர, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வைப்பதில்லை. குறைசொல்லும் பழக்கம் உடல்நலத்தையும் பாதிக்கும். உங்கள் வாய்க்குள் செல்லும் உணவு உங்கள் உடலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாயிலிருந்து வரும் குறை சொல்லும் வார்த்தைகள் உங்களைச் சுற்றியிருக்கும் சூழலை நிர்ணயிக்கிறது” என்கிறார்.

நாம் ஏன் குறை சொல்கிறோம் என்பதற்கு பின்வருவனவற்றையே காரணமாகச் சொல்கிறார் ஆசிரியர். ”மற்றவர்கள் கவனம் நம் மீது திரும்ப, நம்மிடம் இருக்கும் பொறுப்பை கைகழுவிவிட, பொறாமை கொள்பவர்களின் காலை வாரிவிட, பவர்ஃபுல்லாக மாற, நம்முடைய திறமையற்ற செயல்களுக்கு சப்பைக்கட்டுக் கட்ட என்பது போன்ற சூழல்களிலேயே நாம் குறைசொல்ல ஆரம்பிக்கிறோம்” என்கிறார் ஆசிரியர்.

நாம் அனைவருமே ஒரு விஷயம் இல்லாவிட்டால் மற்றொன்றில் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால் இந்தப் புத்தகத்தை ஒருமுறை வாசித்து, குறைசொல்வதால் வரும் நெகட்டிவ் எண்ணங்களை மாற்றி பாசிட்டிவ்வான வாழ்க்கைப் பாதைக்கு செல்ல முயலலாம்.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும்,

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான்.

எனவே நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளலாம். இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.

கிவி கிவி பழம் :
நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
செர்ரி :
செர்ரி பழங்களில் கிளை சீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும். எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
கொய்யா :
கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் `ஏ’ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.
நாவல் பழம் :
கிராமப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த பழம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
பீச் :
மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
பெர்ரிப் பழங்கள் :
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆப்பிள் :
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் தான். ஏனெனில் ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசி :
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டிவைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
பேரிக்காய் :
சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால், பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
பப்பாளி :
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
அத்திப்பழம் :
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் `சி’ இருப்பதால், இந்த பழத்தை தினந்தோறும் அளவாக சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தர்பூசணி :
தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்.
கிரேப் ஃபுரூட் :
ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே காணப்படும் இந்த பழம் தான் கிரேப் ஃபுரூட். இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும்.
மாதுளை :
அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
பலாப்பழம் :
பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தொடக்கூடாது என்று நினைக் கக்கூடாது. ஏனென்றால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் பழங்களுள் ஒன்றாகும்.
நெல்லிக்காய் :
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
முலாம்பழம் :
முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.
நட்சத்திரப் பழம் :
இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.
வெள்ளை கொய்யா :
நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம். இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் என்பது பரம்பரை வியாதியா அல்லது பருவத்தில் வரும் வியாதியா என்ற பட்டிமன்றம் நடத்தாமல் வந்த பின்னர் என்னசெய்யவேண்டும் என்று யோசியுங்கள்.
உணவு கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்து வந்தால் எல்லா நோயுமே நம்மை விட்டு அகன்றுவிடும். அதிலும் குறிப்பாக மேற்கண்ட பழ வகைகளை மட்டும் உண்டு வாழ்வை மட்டும் இனிப்பாக்குவோம்.

நீரிழிவு, இதய நோய்களை குணமாக்கும் மிளகாய்!

மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டை உண்டாக்குமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள் உள்ளன.
ஆனால், எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம், காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்று அதிகம்.

கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை.

எடைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் “பீட்டா கரோட்டின்” என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம்.

அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது. வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது.
மிளகாயில் “சிணீஜீணீ வீநீவீஸீ” என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.

நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

இரவில் காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம்.

மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் – ஊறுகாய் போன்ற உணவுகளை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம்.

இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"

பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.

இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:

பச்சை - இயற்கை
நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

உண்மை என்ன?

இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டும், எங்கு மடக்க வேண்டும் என்பதனையும், ட்யூபிற்கு எந்த கலரை கொடுக்க வேண்டும் என்பதனையும்" மெசின்கள் தெரிவிக்கும்.

இந்த கலர் குறியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுமின்றி, பல்வேறு க்ரீம் பாக்கெட்களிலும் நீங்கள் பார்க்கலாம்.

தயவு செய்து யாரும் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்று கேட்டுடாதீங்க....

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

இன்று தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டு மெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உண வுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.

குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும் ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

காலையில் எழுந்ததும் தேன்- வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும்.

மூலிகை டீ- டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை- தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால்- பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது

தர்பூசணி- காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும் எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ஓட்ஸ்- தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

காபி- காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும் மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

சிட்ரஸ் பழங்கள்- சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும் மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

வாழைப்பழம்- காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும் அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

ஆளி விதை- பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம் ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

தயிர்- நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள் அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும்.

கோதுமை முளை- முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும் அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும் ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும் மேலும் இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்- பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும் மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய்- வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளுவது மட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும் எனவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தண்ணீர்- காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும் அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும் எனவே இவறில் ஒன்றை சாப்பிட்டால், மிகவும் நல்லது.

நயன்தாராவை மிருகமாக சித்தரித்து ஒரு பாடல்! தொடரும் சிம்பு அட்ராசிட்டி!


அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது.

வேறொன்றுமில்லை… சிம்பு நடித்து எப்பவோ(?) வெளிவரப்போகும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை. அதில் நடிக்கவே முடியாது. உங்களால ஆனதை பாருங்க என்று கிளம்பிவிட்டார் நயன்தாரா. நடிகர் சங்கத்தில் புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், கொட்டாம்பட்டி தலையாரி சங்கத்தில் புகார் என்று நயன்தாராவுக்கு எதிராக நாலாபுறமும் வாள் சுழற்றிய சிம்பு அண் கோ தனது போராட்டத்தை ஒரு வழியாக நிறுத்திக் கொண்டது. ஏன் நயன்தாரா அதில் நடிக்க முடியாது என்று சொன்னார்?

அந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அது நயன்தாராவை ஒரு மிருகமாக நினைத்து சிம்பு பாடுகிற பாடலாம். அதையே சாக்காக கொண்டு நாயே பன்னியே என்றெல்லாம் வார்த்தைகளை போட்டு அந்த பாடலை அவரே எழுதியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பாடல் வரிகள் இவ்ளோ கேவலமா இருக்கு. அதுவும் என்னை திட்ற மாதிரி. நான் எதுக்கு நடிக்கணும் என்கிறாராம் நயன்தாரா.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் டேஷ் என்றோ, நாய் என்றோ திட்டப்படும் அவர்…? இப்ப புரியுதா?

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.

சிலந்தி தான் கட்டிய வலையில் சிலந்தி சிக்கிக்கொள்வதில்லை ஏன் தெரியுமா?

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன

சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர, அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் உதவப் போகின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிலந்தியைப் பார்க்கும் போதே பலருக்குப் பயம் ஏற்படும். அவசரமாக விலகிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இந்தியச் சிலந்திகள் அபாயமற்றவை. நஞ்சு கொண்ட சில சிலந்திகளும் அதிகமாக அபாயத்தை ஏற்படுத்தாது.

‘ஓநாய் சிலந்தி’ போன்றவை விவசாயிகளின் தோழர்களாகி வருகின்றன. அவை, பயிர்களை நாசம் செய்யும் பழுப்பு தாவர வெட்டுக்கிளிகளை விருப்பமான உணவாகக் கொள்கின்றன.

‘பெரிய நண்டுச் சிலந்தி’ மற்றொரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். இந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறச் சிலந்தி, கரப்பான்பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.

இது வலை ஏதும் பின்னுவதில்லை. மாறாக, சமையலறை ‘சிங்க்’ மற்றும் வீட்டுக் குப்பைகளில் மறைந்திருக்கிறது. இரவில் மட்டும் வெளிப்பட்டு கரப்பான்பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்தச் சிலந்தியால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் கிடையாது.

சென்னை இந்தியா அறிவு அமைப்புகள் மையமானது நிறைய ‘பெரிய நண்டுச் சிலந்திகளை’ உருவாக்குகிறது. கரப்பான்பூச்சிகளை வேட்டையாடும் அளவுக்குப் பெரிதாகும் வரை அவற்றை வளர்க்கிறது. பின்னர், கரப்பான்பூச்சித் தொந்தரவு அதிகமுள்ள பகுதிகளில் அவற்றை விடுகிறது.

ஒரு கட்டத்தில் இந்தச் சிலந்திகளின் எண்ணிக்கையே அளவுக்கதிமாக அதிகரித்து ஒரு தொந்தரவாகிவிடுமா? கிடையாது. இந்தச் சிலந்திகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலந்திகளை ஒரு பகுதியில் அதிகமாக விடும்போது அவை பெருகாமல் போய்விடுகின்றன.

சிலந்தி அல்லது எட்டுக்கால் பூச்சிகளைக் கண்டு நாம் பயப்படுகிறோம். ஆனால் உண்மையாக எல்லாப் பூச்சிகளும் நம்மைக் கண்டு பயப்படுகின்றன. நீங்கள் சிலந்தி வலைப் பின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். சுவற்றின் மூலைகள் அதற்கு மிகப் பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலைப் பின்னும். அது எவ்வளவு லாவகமாக அதைப் பின்னும் என்பது அதை உற்றுக் கவனிக்கப் புரியும். பகுதியில் அந்த வலையின் நூல் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாக பின்னி விடும். பெரியக் கட்டடக்கலை நிபுணர் போல் தன் வலையைத் தயார் செய்யும்.

உலகத்தில் சிலந்தியின் வகைகள் சுமார் 50000 என்று சொல்லுகிறார்கள் ஆஸ்ட்ரேலியாவில் மிகவும் விஷம் வாய்ந்தச் சிலந்திகள் உள்ளனவாம். சிலந்தி அல்லது எட்டுகால் பூச்சி கடித்தால் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு எதிர்ப்பலன்கள் reaction இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். சிலருக்கு உடல் முழுவதும் தடிக்கும், அரிக்கும், சிவப்பு சிவப்பாக, பட்டை பட்டையாக தோலின் மேல் அடையாளம் வந்து அரித்து தொல்லைக் கொடுக்கும். சிலருக்குத் தலைவலியுடன் சுரமும் வரலாம். குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாகத் தெரியும்.

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்....கூடுதல் தகவல்..!

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

1) உணவுக்கட்டுப்பாடு:
* உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.
  உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை,
இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
* இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
* கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
* ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது.

2) மருத்துவ முறைகள்:

* ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு நோய் குறையும்
*தேற்றான் விதை,கடுக்கை தோல்,ஆவாரை விதை,விளாம் பிசின் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து முதல் நாள் இரவு மோரில் ஊற போட்டு, மறு நாள் காலை அறைத்து பசு மோரில் கலந்து சாப்பிடலாம்.
* நெல்லிக்காய் சாறு,தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா 15 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து காலை மற்றும் சாப்பிட்டு வர இந்நோய் குறையும்.
* அருகம்புல்லை நிழலில் உலர்த்தி காலையும் மாலையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
* இலவமரப்பட்டை-10 கிராம்,கருஞ்சீரகம்-5 கிராம் எடுத்து பொடியாகி,1 ஸ்பூன் மோரில், உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிடலாம்.

3) உடற்பயிற்சி:
* தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடை பயிற்சி செய்து வரவும்.
* இளம் வயதினராயின் ஓட்டப் பயிற்சி, யோகா செய்து வரலாம்.
* பகலுரக்கதை தவிர்க்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:
* நெல்லிக்காய் சாறு ஒரு மேஜை கரண்டி,பாகற்காய் சாறு 1 மேஜை கரண்டி கலந்து தினமும் காலையில் சாப்பிட, கணையம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, சர்க்கரை வியாதியை தடுக்கலாம்.
* நெல்லிக்காய் பொடி, நாவல் பழப்பொடி,பாகற்காய் தூள் தலா ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
* தினமும் நடை பயிற்சி , ஓட்ட பயிற்சி செய்தல்.