Tuesday, December 15, 2015

திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு- நமது எம்ஜிஆர் வெப்சைட் ஹேக் செய்யப்பட்டதாக புகார்!

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது எம்.ஜி.ஆர்." இணைய தளத்தில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதாக கருத்து கணிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தங்களது இணைய பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக் செய்து இதுபோன்ற கருத்து கணிப்பை வெளியிட்டதாக நமது எம்.ஜி.ஆர். இணையதளம் தெரிவித்துள்ளது.சென்னை வெள்ளம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது அரசு மீதும் முதல்வர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கருதி முன்னாள் டிஜிபி நட்ராஜ், அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர்தான் வேறு ஒரு நட்ராஜின் பேட்டிக்கு தொலைக்காட்சி நிர்வாகம் தவறாக முன்னாள் டிஜிபி படத்தைப் போட்டது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து நட்ராஜ்...

கவுண்டமணியைக் கோபப்படுத்திய புதுநடிகர்

கவுண்டமணி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”. இவருடன் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தரராஜா மற்றும் மெட்ராஸ் பட புகழ் ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றிப் பகிர்ந்து கொண்டார் சௌந்தரராஜா. “கவுண்டமணி சார், எந்த டயலாக்கையும் வாசிக்க மாட்டார், வாசிக்கச்சொல்லி கேட்பார். ரெண்டு, மூணு தடவை வாசிக்கச்சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியாக டேக் போகலாம்ணு சொல்லிடுவார். ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக் ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும் இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட...

ஒரே போடாக போட்ட ஜெ.! எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்!

எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு உரையாக வாசித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். மிக உருக்கமாக அமைந்துள்ள அந்த உரையில், "வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்: கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை...

எந்திரன் 2 படத்தைத் தொடர்ந்து கமலின் மருதநாயகத்தை தயாரிக்கும் லைக்கா

 மருதநாயகம் குறித்து பேசும் போதெல்லாம், அதற்கு டாலர்களில் பணம் தேவை என்பார் கமல். மருதநாயகத்துக்கு தேவைப்படும் பணத்தை முதலீடு செய்ய இப்போது லைக்கா முன் வந்துள்ளதாக யூகச்செய்திகள் கூறுகின்றன. அதென்ன யூகச் செய்தி...? சில தினங்கள் முன்பு பேட்டியளித்த கமல், லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர், மருதநாயகம் படத்தை தயாரிக்க விரும்புவதாகவும், அதிகம் செலவாகுமே என்றதற்கு, அது என் கவலை. படமும், நானும் அந்த பட்ஜெட்டை தாங்குவோம் என கூறியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஐங்கரனின் அதிகாரப்பூர்வ தளத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஐங்கரன், லைக்கா இணைந்தே எந்திரன் 2 படத்தை தயாரிக்கின்றன. இரு நிறுவனங்களும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டே...

வியாழன்று சென்னை திரும்பும் அனிருத்! விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்?

சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், போலீசும் தன் சாதுர்யமான விரட்டலை துவங்கிவிட்டது. இருவரில் யார் சிக்கினாலும் களிதான்!இதற்கிடையில் கனடாவிலிருந்து கிளம்பும் அனிருத் வியாழன் காலை சென்னை வந்து சேர்கிறார். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ், அனிருத்தின் வருகைக்காக காத்திருக்கிறதாம். இங்கிருந்தபடியே எல்லா விஷயங்களையும் அறிந்து வரும் அனிருத், தனது பயணத்திட்டத்தை மாற்றி வழியிலேயே வேறு ஏதாவது ஒரு நகரத்தில் இறங்கி, முன் ஜாமீன் பெற்றபின்...

டாப் ஹீரோக்களுக்கு வெட்கம்… வெட்கம்… மேலும் வெட்கம்! ஒரு கோடியை அள்ளித்தந்த அக்ஷய் குமார்!

‘மாற்றி மாற்றி நெருக்கடி கொடுத்து பொட்டிய தொறக்க வச்சுருவானுங்க போலிருக்கே…’ என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் மனசுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அண்டை மாநில ஹீரோக்களின் அன்பும் கருணையும், இங்குள்ளவர்களுக்கு அப்படியொரு வெட்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. (அடேய்… நாங்க எங்கடா வெட்கப் பட்டோம்? என்று மறுத்தாலும் அதில் வியப்பு ஒன்றுமில்லை. தெரிந்த சமாச்சாரம்தானே?)பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை மக்களின் சோகத்தை தொலைக்காட்சி வாயிலாகவும் பத்திரிகைகளின் மூலமாகவும் அறிந்த அக்ஷ்ய் குமார், தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாய் செலுத்த விரும்பி பிரபல இந்திப்பட...

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்

குழந்தைகள் கிரிக்கெட்டில் எந்த மேட்சில் எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விவரங்களை துல்லியமாக தருவார்கள். இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள். இதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இவர்களது பிரச்சனை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில் தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். எதில் நினைவாற்றலை வளர்த்தக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நனைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது. கவனிக்கும் திறன் வேண்டும்: உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரைய சொல்லுங்கள், அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரைய சொல்லுங்கள். அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம். ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை...

முதலமைச்சர் தலையிட வேண்டுமாம்- சிம்பு,அனிருத்திற்கு பலத்த நெருக்கடி

சிம்பு-அனிருத் இருவரும் தான் தற்போதைய தமிழகத்தில் தலைப்பு செய்தி. பீப் சாங் என்றே ஒரு பாடலின் மூலம் இருவரும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.இதில் அனிருத் தான் இந்த பாடலுக்கு இசையமைக்கவில்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமார் இருவரையும் மிகவும் கோபமாக சாடியுள்ளார்.அவர் ‘மாண்புமிகு முதலமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டிலேயே சிம்புவும். அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும் அதை நியாயப்படுத்தவும் துணிந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் துணிச்சலை முதலமைச்சர் அவர்கள் ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளாராம...

இதுவரை வந்த படங்களில் அதிக லாபம் கொடுத்த படம் எது? முழு விவரம்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் தற்போது மிகவும் சாதாரணமாக ரூ 50 கோடியை தாண்டுகிறது. இதனால், வசூலும் அனைவரும் ரூ 100 கோடியை எதிர்ப்பார்க்கின்றனர்.அந்த வகையில் எப்போதும் வசூல் மன்னர்களாக திகழ்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் தான். இதில் அனைத்து தரப்பிலும் லாபம் மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படம் எது என்பதை சினிமா விமர்சகர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.Distributor share அடிப்படையில் இன்று வரை எந்திரன் ரூ 64 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அஜித்தின் வேதாளம் ரூ 47.2 கோடி, விஜய்யின் துப்பாக்கி ரூ 44.5 கோடி, கத்தி ரூ 43.6 கோடி, விக்ரமின் ஐ ரூ 43.2 கோடி என அடுத்தடுத்த இடங்களில்...

குறை சொல்லாமல் வாழ்வது எப்படி ?கண்டிப்பாக படியுங்கள் உங்களுக்கான மாற்றத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் !!

சிலர் எடுத்ததுக்கெல்லாம் எப்போதும் குறை சொல்வார்கள். இதுபோன்ற குணமுடையவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் காண முடியாது. குறை சொல்வதைத் தவிர்ப்பதே ஒரு பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும்’ என்று சொல்லி, குறை சொல்லாமல் இருப்பதன் பலாபலன்களை விளக்கி, குறை சொல்லும் குணத்தைத் தவிர்ப்பது எப்படி என்று சொல்கிறார் ‘எ கம்ப்ளைன்ட் ஃப்ரீ வேர்ல்டு’ என்கிற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் வில் பொவென். ‘வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை எனில், அதனை மாற்றுங்கள். மாற்ற முடியவில்லை என்றால் பிடிக்காததைப் பிடிக்கிற மாதிரி நீங்கள் மாறிக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, பிடிக்காத மற்றும் மாற்றமுடியாத விஷயத்தைப்பற்றி ஒருபோதும் குறை சொல்லாதீர்கள்’ என்ற அடிப்படை உண்மையை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். குறை சொல்லியே வாழ்வதினால் நமக்கு என்ன இழப்பு...

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 45 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும்...

நீரிழிவு, இதய நோய்களை குணமாக்கும் மிளகாய்!

மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டை உண்டாக்குமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள் உள்ளன. ஆனால், எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை. பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம், காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்று அதிகம். கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக்...

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.

பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம். இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்" பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும். இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்: பச்சை - இயற்கை நீளம் - இயற்கை + மருத்துவ குணம் சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை கருப்பு - சுத்தமான ரசாயன கலவை உண்மை என்ன? இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவைகள்...

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை என்ன உணவுகள் சாப்பிட வேண்டும்!

இன்று தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டு மெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உண வுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும். அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும் ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால்,...

நயன்தாராவை மிருகமாக சித்தரித்து ஒரு பாடல்! தொடரும் சிம்பு அட்ராசிட்டி!

அந்த ‘சர்ச்சைப்பாடலின்’ ஹீரோயின் நயன்தாராவா? ஹன்சிகாவா? என்பதுதான் இன்னும் புரியாத புதிர்! நல்லவேளையாக இப்போது வந்திருக்கும் இன்னொரு தகவல் மூலம் அது நயன்தாரா என்பதை அரசல் புரசலாக புரிந்து கொள்ள முடிகிறது.வேறொன்றுமில்லை… சிம்பு நடித்து எப்பவோ(?) வெளிவரப்போகும் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லை. அதில் நடிக்கவே முடியாது. உங்களால ஆனதை பாருங்க என்று கிளம்பிவிட்டார் நயன்தாரா. நடிகர் சங்கத்தில் புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், கொட்டாம்பட்டி தலையாரி சங்கத்தில் புகார் என்று நயன்தாராவுக்கு எதிராக நாலாபுறமும் வாள் சுழற்றிய சிம்பு அண் கோ தனது போராட்டத்தை ஒரு வழியாக நிறுத்திக் கொண்டது. ஏன் நயன்தாரா அதில் நடிக்க முடியாது...

பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம் பருந்து மனிதனுக்கு தரும் பாடம் – வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்க...

சிலந்தி தான் கட்டிய வலையில் சிலந்தி சிக்கிக்கொள்வதில்லை ஏன் தெரியுமா?

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்டஇழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன சிலந்திகளை சாதாரணமாக வீட்டில் பார்த்திருப்போமே தவிர, அவற்றைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க மாட்டோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிலந்திகள் உதவப் போகின்றன. சென்னையில் உள்ள ‘இந்திய அறிவு அமைப்புகள் மையம்’, அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த மையத்தினர், சிலந்திகளைக் கொண்டு இயற்கைக் கட்டுப்பாட்டு முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வில்...

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்....கூடுதல் தகவல்..!

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம் 1) உணவுக்கட்டுப்பாடு: * உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.   உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை, இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது. * இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. * கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம். * ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது. 2) மருத்துவ முறைகள்: * ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு...