Friday, December 11, 2015

மருத்துவரிடம் செல்லும் பெண்களே! சாக்கிரதை!!

மருத்துவரிடம் செல்லும் பெண்களே சற்று கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.

மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.(உடன் துணை இருக்க வேண்டும்).

தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள்.

மனதை உருக்கிய கிளைமேக்ஸ்

தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த படம் நம் நினைவை விட்டு நீங்காது இருக்கும். அப்படி சில படங்கள் இருக்க காரணம் அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளாக தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் மக்களின் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகள் சில உங்களுக்காக..

மூன்றாம் பிறை

தமிழ் சினிமாவில் இன்றளவும் நம் மனதை பாதித்த கிளைமேக்ஸ் என்றால், மூன்றாம் பிறை தான். இப்படத்தில் கமலின் காதலியான ஸ்ரீ தேவி, மனநலம் சரியில்லாதவராக இருந்து, பின் கிளைமேக்ஸில் மனநலம் சரியாகி, கமலை யார் என்று தெரியாமல் போகும். அப்போது கமல் தன்னை நினைவு கூற எடுக்கும் முயற்சிகள் பார்ப்போரை நெகிழ வைத்தது.

குணா

மீண்டும் கமல் நடித்த ஒரு காதல் காவியம் தான் குணா. இதில் கமலுக்கு மனநலம் சரியில்லாமல் இருக்க, தன் கற்பனை காதலியை நினைத்து கொண்டு நிஜத்தில் ஒருவரை கடத்தி சென்று விடுவார். பின் கிளைமேக்ஸில் அவருக்கும் கமல் மேல் காதல் வர, இவர்கள் இணைய பெரிய சதியே நடக்கிறது. இதில் தன் காதலியை இழந்த கமல் மலையில் இருந்து குதித்து இறந்து விடுவார்.

சேது

சோகமான கிளைமேக்ஸ் என்றாலே பாலா குத்தகைக்கு எடுத்து விடுவார். இவர் இயக்கிய எந்த படத்திலும் பாசிட்டிவான கிளைமேக்ஸே இல்லை, இருந்தாலும் சேது எப்போதும் ஸ்பெஷல் தான். மனநலம் பாதிக்கப்பட்ட விக்ரம், குணமாகி காதலியை பார்க்க வரும் போது அவள் இறந்துவிடுகிறாள். அவள் இல்லாத உலகத்தில் நான் எதற்கு வாழவேண்டும் என மீண்டும் அவர் மருத்துவ மனைக்கே செல்கிறார்.

பருத்திவீரன்

படம் ஆரம்பித்ததிலிருந்து ஆட்டம், பாட்டம், அடிதடி என்று செல்ல இப்படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கியவுடன் பல பேர் தியேட்டரை விட்டு பிரிய மனமில்லாமல் எழுந்து சென்றனர். அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. கார்த்தி செய்த சில தவறான முடிவுகள் கிளைமேக்ஸில் ப்ரியா மணியை எந்தளவிற்கு பாதித்தது என்பதை மிகவும் அழுத்தமாக கூறியிருப்பார் அமீர்.

சுப்ரமணியபுரம்

80களில் மதுரை பக்கத்தில் ஜாலியாக இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை நிழலாக காட்டிய படம். இதில் நட்பிற்காக சசிகுமார், ஜெய் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவர்கள் வாழ்க்கையை எந்தளவிற்கு திசை திருப்புகிறது என்பதை ரத்தமும், சதையுமாக கிளைமேக்ஸில் காட்டிய படம். தான் உண்மையாக காதலித்த பெண்ணே தன்னை கொலை செய்ய உதவிய காட்சி தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்தது.

இதேபோல் உங்கள் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகளை கமெண்டுகளில் தெரிவிக்கலாம்.

பாபநாசம், வேதாளம் உணர்த்திய பாடம்! – பேயை கைவிடும் தமிழ் சினிமா

ஒரு லவ் படம் வந்து ஹிட் அடித்தால், அந்த டிரெண்டிலேயே கதை பண்ணுபவர்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம். அந்த வகையில் பேய் சீஸன் தமிழ் சினிமாவுக்கு டல்லடித்து விட்டது.

பேய் படம் என்று அறிவித்தாலே அது ஓடாது என்கிற அளவுக்கு வரிசையாக பேய் படங்களாக குவிந்து ரசிகர்களை சலிப்படைய வைத்துவிட்டன. தமிழ் சினிமாக்காரர்களும் இப்போது பேயை விட்டுவிட்டு ஃபேமிலியை பிடித்திருக்கிறார்கள்.

பாபநாசம் படம் வருவதற்கு முன்பு அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்து போகவே பாபநாசம் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வேதாளமும் தங்கை செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம். அதுவும் ஹிட் ஆக இப்போது உருவாகும் தமிழ் படங்களில் பெரும்பான்மையானவை குடும்ப செண்டிமெண்ட் தான்.

பீட்சா, ஜிகர்தண்டா என வெரைட்டி காட்டிய கார்த்திக் சுப்புராஜ் இப்போது இயக்கி கொண்டிருக்கும் இறைவி முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படம். இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான நெருக்கம், பகையை விளக்கும் படம்.

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்க மகன் அம்மா செண்டிமெண்ட் தூக்கலான படம். அம்மாவின் ஸ்போர்ட்ஸ் கனவை மகன் எப்படி நிறைவேற்றுகிறான் என்ற ரீதியில் கதை.

ஃபேமிலி செண்டிமெண்ட் ஹிட் அடிப்பதாலும் கலெக்‌ஷனில் அள்ளுவதாலும் பெரிய ஹீரோக்களும் செண்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ‘வாட்ஸ் அப்’ மெசேஜ்!!


ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கிற தலைப்பில் கடந்த சில நாட்களாக “வாட்ஸ் அப்“ பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியை வழக்கமாக சமூகத்தின் நலனுக்காக ஷேர் செய்யப்படும் விழிப்புணர்வு செய்தி என்று நீங்கள் கடந்து விட முடியாது. காரணம் அது ஒவ்வொரு தனி மனிதனின் நேரடியான நலன் சார்ந்தது.

குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.

பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தரு கிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது.

பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம். இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதி களின் எண்ணிக்கையை அடுக்கலாம்.” என்றெல்லாம் அலர்ட் செய்யும் அந்த மெசேஜில் இன்னொரு தலை சுற்றவைக்கும் தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது.

“பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட காரணத் தால் நாமக்கல் பகுதி மக்களுக்கு புற்று நோய் பிரச்னை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் முதலாளி களான சில அரசியல்வாதிகள், உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்” என்று முடிகிறது அந்த செய்தி.

மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவக்குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தியிடம் பேசினோம்.

“பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது உண்மைதான். பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை இப்போது மிகப் பெரிய வியாபாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால் அது சத்தான பொருள் என்பதிலிருந்து வேறு வடிவத்திற்கு மாறி வருகிறது. பிராய்லர் கோழிகளை வளர்ப்பில் கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும், கால் மற்றும் வயிற்று பகுதிகள் அபரிதமான வளர்ச்சியடைவதற்கும், ஹார்மோன் ஊசிகள் என்று பல்வேறு வகையான ஊசிகளை போடுகிறார்கள், அதற்கு கொடுக்கப்படும் உணவுகளிலும் ரசாயணம் கலக்கிறார்கள். இது ஒவ்வொரு கோழிப்பண்ணைக்கும் வேறுபடும்.

அப்படியான ஊசிகளும், உணவுகளின் மூலமும் வளரும் கோழி மனிதர்களுக்கு பல பிரச்னைகளை தோற் றுவிக்கிறது. முக்கியமாக இதுமாதிரியான ஹார்மோன் ஊசிகளை போடும்போது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும் பெண்களுக்கு சிறு வயதில் பூப்படைதல் என்று பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதால் அதை சாப் பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல்வேறு வகையான உடல் உபாதைகளை தோற் றுவிக்கிறது. இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.

அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பி டமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.

பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத் திவிட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். பிராய்லர் கோழிகளால் ஏற்படும் தீமைகளை super size என்கிற ஆவணப்படத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிக மாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது” என்றவர் அதை எப்படி போக்குவது என்பதற்கான வழிவகைகளையும் அடுக்கினார்.

“இந்த நிலைமையை தவிர்க்க, கோழி வளர்ப்பை வெளிப்படையாக்க வேண்டும். இரண்டாவதாக ஒவ்வொரு கோழியையும் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். பிராய்லருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல நாட்டுக்கோழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கலாம்” என்றார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நல்லத்தம்பி, “இது முழுக்க முழுக்க தவறான செய்தி. விஷமிகளின் வேலை. பரபரப்பிற்காக வாட்ஸ் அப்பில் யார்யாரோ எதை எதையோ எழுதிவிட்டு போய் விடுகிறார்கள். கோழி குஞ்சுகள் வளர்ந்து முட்டையிடுவதற்கு 20 வாரங்கள் ஆகும். அதுவரை அதற்கு எந்த விதமான நோய்களும் தாக்காமல் இருக்க மருந்துகள் கொடுக்கிறோம். அது எப்படி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மற்றபடி வளர்ச்சிக்கெல்லாம் நாங்கள் ஊசி போடுவதில்லை,

விட்டமின் மருந்துகள், எண்ணெய் எடுத்த தவிடு, மக்காச் சோளம், புண்ணாக்கு இவைகளை தவிர கோழிகளுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. இதை மக்கள் நம்பத்தேவையில்லை” என்றார்.
உண்மை என்ன என்பதை அரசு தரப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தினால் நல்லது

காஃப் சிரப் எதற்கு...??? கஷாயம் இருக்க.....??

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

வெள்ள நிவாரண நிதி திரட்ட யேசுதாஸ் இசை கச்சேரி: சென்னையில் நடக்கிறது

சென்னையில் ஆண்டு தோறும் மார்கழி இசை திருவிழா நடைபெறும். இதில் பிரபல கர்நாடக இசை பாடகர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னை நகருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருசில பாடகர்கள் இந்த ஆண்டு பாட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். சில சபாக்கள் இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் நடிகரும் பாரத் கலாச்சார் அமைப்பின் செயலாளருமான ஒய்.ஜி. மகேந்திரன் கூறி இருப்பதாவது:–

'இந்த முறை இசை விழாவாக நடத்தவில்லை என்றாலும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை சேர்த்து வெள்ள நிவாரண நிதியாக கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். இது தவிர ஜனவரி 20–ந்தேதி பாடகர் கே.ஜே.யேசுதாசின் சிறப்பு இசை கச்சேரி சென்னை வாணிமகால் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இதில் வசூலாகும் தொகை வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும்'.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

’விஐபி= தங்கமகன்’...பத்து ஒற்றுமைகள்

தனுஷின் தங்கமகன் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி இணையத்தில் அதற்குள் 6 லட்சத்தைக் கடந்து வைரலாகியுள்ளது. விஐபி2 என படக்குழு சொன்னாலும் சொன்னார்கள் படத்தின் டிரெய்லரிலேயே இரு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா என வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இதோ அந்த ஒற்றுமைகள்...

1. படத்தின் கூட்டணியிலேயே ஏகபோக ஒற்றுமைகள் தனுஷ், அனிருத், வேல்ராஜ்.

2. டிரெய்லரின் ஆரம்பமாக தனுஷ் டயலாக்குகள் தான். அந்த டயலாக்குகளிலும் அங்கே அப்பாவான சமுத்திரக்கனியிடம் சண்டை போடுகிறார். இங்கே அப்பாவுக்கு கோவிலில் அர்ச்சனை செய்கிறார்.

3. இரண்டாவதாக அதில் அப்பா சமுத்திரகனி தனுஷை திட்டுகிறார். இங்கேயும் வெட்டியாக கோவிலுக்குச் செல்லும் தனுஷை அப்பாவான கே.எஸ்.ரவிகுமார் கேள்விகள் கேட்கிறார்.

4. இரண்டு படங்களிலுமே இரண்டு நாயகிகள். நால்வருக்குமே தனுஷுடன் முதல் படம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

5. அங்கேயும் வசனங்கள் பேசிவிட்டு ஸ்லோ மோஷனில் தனுஷ் திரும்ப வேல்ராஜ் பெயர் விழுகிறது. இங்கேயும் அதே பாணிதான்.

6. இங்கேயும் ஹீரோயின் அமலாபால் கிண்டலடிக்க தனுஷ் கட்டையைக் கொடுக்கிறார். அங்கேயும் எமி ஜாக்சனுடன் அதே பாணி சேட்டைகள் தொடர்கின்றன. .

7. அந்தப் படத்தின் டிரெய்லரிலும் சரி இந்தப் படத்தின் டிரெய்லரிலும் சரி வேறு ஆண் பாடகர்களுக்கு வாய்ப்பே இல்லை.போனால் போகட்டுமென அனிருத் தலா ஒரு பாடலைப் பாடியிருப்பார்.

8. இரண்டு படங்களிலுமே தனுஷுக்கு அப்பா, அம்மாவாக வரும் சமுத்திரக்கனி - சரண்யா, கே.எஸ்.ரவிகுமார் - ராதிகா இருவருமே முதல் முறையாக தனுஷுக்கு அப்பா - அம்மாவாக நடித்தவர்கள்.

9. இரண்டு டிரெய்லர்களும் கட்டக்கடைசியாக சொல்லும் பன்ச் ’என்னை யாராலும் அழிக்க முடியாது’ பாணி தான்.

10. இரண்டு படங்களின் டிரெய்லர்களும் தனுஷ் மாஸ் க்ளாஸ் வசனங்கள் பேசி முடிக்க டிரெய்லர் படக்கென முடியும்.

இப்படி பத்து அம்சமான நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றுமைகள் நம் கண்களுக்கு தென்பட்டன. உங்களுக்கு பாஸ்....

ஈட்டி- வெற்றி இலக்கை நோக்கிய வேகமான பாய்ச்சல்!

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு! வரும்போதே அருவாளோட வந்தாலும், குங்குமம் வச்சு ‘குலவை’ பாட்றோம்ணே… பின்னிட்டீங்க!

என்னமோ ஒரு இங்கிலீஷ் பெயரெல்லாம் வைத்து ஒரு வியாதியை பற்றி ஆரம்பத்தில் பேசிக் கொண்டேயிருக்கிறது டாக்டர் கூட்டம். கட்ட கடைசியில், ‘சின்ன வயசு அதர்வாவுக்கு உடம்பில் லேசாக எந்த காயம் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தாலும் அது உறையாது. நிற்காமல் வழிந்து கொண்டேயிருக்கும். அதற்கு என்ன பண்ணுவது? அவரை பூப்போல பாதுகாத்து வளர்ப்பதுதான்’ என்று புரிகிறது. வளர்க்கிறார்கள் ஹெட்கான்ஸ்டபுள் அப்பா ஜெயப்ரகாஷம், அம்மா சோனியாவும். அப்படி வளரும் அதர்வாவுக்கு தடையோட்டத்தில் இந்தியாவுக்காக ஓடி கோல்ட் மெடல் அடித்துவிட வேண்டும் என்பதுதான் லட்சியம்.

இவர் ஓடுகிற ஒட்டத்தின் நடுவே, ஹீரோயின் ஸ்ரீதிவ்யா இவர் வாழ்க்கைக்குள் ராங் கால் மூலம் வந்து சேர… லவ்! சென்னையில் வசிக்கும் ஸ்ரீதிவ்யாவும் தஞ்சாவூரில் வசிக்கும் அதர்வாவும் எங்கே சந்திக்கிறார்கள்? காதலிக்கு வரும் பிரச்சனையை சமாளித்து அவரை எப்படி அதர்வா கைப்பிடிக்கிறார்? அதர்வா இந்தியாவுக்காக ஓடி கோல்ட் அடித்தாரா? இம் மூன்றுக்குமான தடை(யில்லா) ஓட்டம்தான் இந்த ஈட்டி!

ஒரு ஜல்லிக்கட்டு காளை எப்படி முறுக்கிக் கொண்டு நிற்குமோ, அப்படி நிற்கிறார் அதர்வா. அவரது திணவெடுத்த தோள்களும், கட்டிங் பிட்டிங் தேகமும் ஒரு நிஜ அதெலெட்டிக்காகவே ஆக்கியிருக்கிறது அவரை. லேசாக கிழி பட்டாலும் ரத்தம் வழியும். ஆளுக்கு ஆபத்து என்று சொல்லியாயிற்று. இவருக்கும் வில்லன் கோஷ்டிக்குமான பிரச்சனை முற்ற முற்ற… விரலையும் நகத்தையும் கடியோ கடியென கடித்தபடி, அந்த திகில் வினாடிக்காக காத்திருக்க வைக்கிறார் ரசிகர்களை. ஒரு ஹீரோ எங்கு அடிக்க வேண்டும் என்கிற சினிமா சூத்திரத்தை கரைத்துக் குடித்திருக்கிறார் டைரக்டர் ரவி அரசு. அந்த இடத்தில் அதர்வா, எதிரிகளை பிரித்து மேய்கையில் தியேட்டரும் சேர்ந்து துவம்சம் ஆகிறது. அதர்வாவுக்கு மிக பொருத்தமான படம். (இதுக்கு மேலயாவது உருப்படியான கதைகளா கேட்டு நீந்தி தப்பிச்சுக்கோங்க அதர்வா)

ஹீரோயின் நம்ம ஊதாக்கலரு! நல்லவேளை… அவரை பாவாடை தாவணியில் காண்பித்து வெறுப்பேற்றவில்லை. கவிதை கண்களும், ஹைக்கூ சிரிப்புமாக எல்லாரையும் வளைத்துப் போடுகிறார் ஸ்ரீதிவ்யா. இவருக்கும் அதர்வாவுக்குமான காதல் அப்படியே மெல்ல பூத்து, பளிச்சென விரிவதில் ஒரு அவசரமும் காட்டவில்லை இயக்குனர். அதுமட்டுமா, இருவருக்குமான காதல் காட்சிகளில் நிறைய ஜிலீர். ஒரு ஹீரோ காதலியின் பர்த் டே பரிசாக என்ன வாங்கிக் கொடுப்பார்? இந்த படத்தில் நீங்கள் யூகிக்கும் எதுவுமேயில்லை. அங்க நிக்குது டைரக்டரின் கற்பனை!

படம் நெடுகிலும் டைரக்டக்டோரியல் ‘டச்’ நுணுக்கமாக பதியம் செய்யப்பட்டிருக்கிறது. ஜஸ்ட் லைக்காக கடந்து போகிற ஒரு காட்சியில் தன் மேஜையின் ஓர விளிம்பை ஒரு நாணயம் கொண்டு கூர் மழுக்கிவிட்டு உட்காருகிறார் அதர்வா. அந்தளவுக்கு! படம் முழுக்க அதர்வாவின் வியாதியையும் நமக்கு இப்படி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார் ரவி அரசு.

ஒருபுறம் நகரும் பட்டு நூல் காதலில், மாஞ்சா தடவிய மாதிரி உள்ளே நுழைகிறது வில்லன் ஏரியா. அதற்கு மிக பொருத்தமான வில்லனாக ஆர்.என்.ஆர்.மனோகர். சிறப்பு. சிறப்பான நடிப்பு!

அதர்வாவுக்கு ஓட்டப்பந்தய கோச்சாக நடித்திருக்கும் நரேனிடம் அப்படியொரு யதார்த்தம்! பின்பு அவரையே படுக்க வைக்குது வில்லன் கோஷ்டி. தனக்கு குருவுக்காக அதர்வா தோளுயர்த்த, அதற்கப்புறம் நகரும் வினாடிகள் ஒவ்வொன்றும் பரபர…

களவாணி திருமுருகன், வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாகவும், கொடுமை கண்டு கொந்தளிக்கும் இளைஞனாகவும் மனதில் பதிகிற அளவுக்கு நடித்திருக்கிறார்.

பட்ஜெட் இடம் கொடுக்கவில்லையோ, என்னவோ? அதர்வாவின் நண்பர்களாக வரும் அத்தனை பேரும் ஈர வைக்கோல்போரில் ஒதுங்கிய கொசுக் கூட்டம் போல எடுபாடாமல் கிடக்கிறார்கள். நல்லநேரத்திலும் ஒரு கஷ்டகாலம் என்பது இவர்கள் வரும் போர்ஷன் மட்டுமே!

ஜி.வி.பிரகாஷின் இசையில் குய்யோ… முய்யோ, நான் புடிச்ச மொசக்குட்டியே… பாடல்கள் காதுக்குள் ஊடுருவி, மனசுக்குள் மையம் கொள்கிற ட்யூன்கள். பின்னணி இசையில் முதல் பாதியில் அதிகம் அக்கறை காட்டாவிட்டாலும், ஆக்ஷன் மோடுக்கு வந்ததும் பின்னி எடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

படத்தில் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய இன்னொருவர் ஸ்டன்ட் இயக்குனர்தான். மிக லாவகமான கம்போசிங். ரத்தக்கசிவு என்கிற மையப்புள்ளியை புரிந்து கொண்டு பம்பரம் ஆடவிட்டிருக்கிறார் அதர்வாவை!

ஆக்ஷன் மோட், காதல் மோட் இரண்டுக்கும் இசைந்து கொடுக்கிறது சரவணன் அபிமன்யு-வின் கேமிரா.

ஈட்டி- வெற்றி இலக்கை நோக்கிய வேகமான பாய்ச்சல்!

இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய்வீக சக்தி கொண்டவள் மற்றும் மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று அனைத்து குறிப்புகளிலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.

பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக சிறப்பிக்கப்படுகிறார். இவருடைய பதிவிரத்தின் காரணமாகத் தான் அசுர குணம் படைத்தவராக கருதப்பட்டும், பல்வேறு தவறான செயல்களைச் செய்தவராக கருதப்பட்டும் வரும் இராவணனின் தீஞ்செயல்களுக்கான தண்டணைகள் அல்லது பாவங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள். மிகவும் திறமை பொருந்திய பொறியியல் கலைஞராக விளங்கிய மாயாசுரனின் இருப்பிடத்திற்கு ஒருமுறை வந்திருந்த இராவணன், அவரிடம் தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு கேட்டுக் கொண்டான். இந்த நேரத்தில் தான் இராவணன் மண்டோதரியைக் கண்டதும் காதல் கொண்டார். இராவணன், மண்டோதரியின் தந்தையிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார், மாயாசுரரும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். வேத முறைப்படி இராவணன்- மண்டோதரி திருமணம் நடைபெற்றது. இந்த வகையில் சிவபெருமானின் அருளும் இராவணனக்கு கிடைக்கப் பெற்றது. இந்த சூழ்நிலையில் தான் இராவணன் வீரமிக்க அரசனாக மட்டுமல்லாமல், சிறந்த சிவ பக்தராகவும் பரிமளிக்கத் துவங்கினார். தங்கதிலான மிகவும் அழகிய நகரத்தை தன்னுடைய மருமகனுக்காக உருவாக்கி பரிசளித்தார் மயூராசுரர்.

மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். மண்டோதரி சிறந்த மற்றும் பதி பக்தியுள்ள மனைவியாக இருந்தாள். இராவணனிடம் கர்வம் மற்றும் மூர்க்க குணம் போன்ற சில தீய குணங்கள் இருந்தன. அந்நாட்களில் இருந்த வழக்கப்படி, இராவணனுக்கு மண்டோதரியைத் தவிர, வேறு சில மனைவிகளும் இருந்தார்கள்.

தன்னுடைய மனைவி அல்லாத ஒரு பெண்ணின் மேல் இராவணன் மையல் கொண்டான் - அந்த பெண்ணின் பெயர் வேதவதி. இந்த விஷயங்களை எல்லாம் மண்டோதரி தெரிந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய கணவனை நல்வழிப்படுத்த அறிவுரை கூறினாள். மேலும் இராவணனுக்கு உண்மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள். இராவணனை நல்ல வழியை நோக்கி, நீதியை நோக்கி வழிநடத்திச் செல்ல மண்டோதரி முயற்சித்தாள். நவகிரகங்களை துன்புறுத்த வேண்டாம் என்றும் மற்றும் வேதவதியின் மேல் மையல் கொள்ள வேண்டாம் என்றும் அவள் அறிவுரை வழங்கினாள். இந்த வேதவதி தான் சீதா தேவியாய் மறுபிறப்பெடுத்து, இராவணனின் அழிவுக்குக் காரணமாக இருந்தாள். இராவணன் மண்டோதரியின் அறிவுரையைக் கேட்கவில்லை.

விஷ்ணுவின் அவதாரமான இராம பிரான் அயோத்தியிலிருந்து வனவாசம் சென்றிருந்த வேளையில், அவனுடைய மனைவியான சீதா தேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதா தேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார் - ஆனால் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்த மையல் இராவணனின் அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள்.

வால்மீகியின் இராமாயணத்தில் மண்டோதரி மிகவும் அழகான பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இராமபக்தரான அனுமான் சீதா தேவியைத் தேடி இலங்கைக்கு வந்த போது, இராவணனின் அந்தப்புரத்தில் பார்த்த மண்டோதரியை சீதா தேவி என தவறாக எண்ணிக் கொண்டார். ஆனால், அனுமன் சீதா தேவியை கண்டறிந்த வேளையில், இராவணன் சீதா தேவியிடம் தன்னை மணம் புரிந்து கொள்ளாவிடில், கொன்று விடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தான். சீதா தேவி மறுத்த போது, சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினார் இராவணன். ஆனால், மண்டோதரி இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள்.

ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச் செயல், அதனால் சீதா தேவியை இராவணன் கொல்லக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள் மண்டோதரி. மேலும், இராவணனை அவருடைய பிற மனைவியரிடம் சென்று திருப்திப்படுத்திக் கொள்ளுமாறும், சீதா தேவியை மணந்து கொள்ளும் எண்ணத்தை மறந்து விடுமாறும் கேட்டுக் கொண்டாள். மண்டோதரியை விட சீதா தேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள் மண்டோதரி. மேலும் சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டாள் மண்டோதரி.

சீதையை அமைதியான முறையில் திரும்பப் பெற செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமன் இராவணனுடைய இலங்கையின் மேல் போர் தொடுப்பதை அறிவித்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னரும் கூட மண்டோதரி இராவணனிடம் ஒருமுறை கேட்டுக் கொண்டாள், ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னுடைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக் கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.

இராவணனுடைய அனைத்து மகன்களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும் படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினார். அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தை இராமர் கலைக்க விரும்பினார். இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தை தொடர்ந்து செய்து வந்தார். இந்நேரத்தில் அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றிய படி இராவணன் முன் இழுத்து வந்தார். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன் இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருக்கிறான் என்றும் நினைவுபடுத்தினாள். இதனால் கோபமுற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக கத்தியுடன் பாய்ந்தார். எனினும், வந்த காரியத்தை முடித்து விட்ட திருப்தியுடன், மண்டோதரியை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றார். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும் படி கேட்டர், ஆனால் இராவணன் மறுத்து விட்டார்.

வால்மீகி இராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை, பின்னர் வந்த இராமாயண படைப்புகளில் மண்டோதரியை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்கு காரணமான பெண்ணாகவோ குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இராவணனால் கொல்லப்பட்ட யோனிவர்களின் இரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்கள். இந்நேரத்தில் கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாகப் பிறக்க வேண்டும் என்ற வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். அவர் தர்ப்பைப் புல்லின் பாலை, தன்னுடைய மந்திரங்களால் சுத்திகரித்து வைத்திருந்தார். எனவே, இலட்சுமி தேவி அதில் வாழ்ந்திடுவார் என்பது முனிவரின் எண்ணம். இந்த பாலை தன்னுடைய இரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றி விட்டார் இராவணன். இராவணனின் இந்த அடாத செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோதரி, மிகவும் கொடிய விஷமாகக் கருதப்பட்ட அந்த இரத்தத்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்ள விரும்பினால். அதைக் குடித்த மண்டோதரி, மரணமடைவதற்குப் பதிலாக, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமையால் இலட்சுமி தேவியின் அவதாரத்தைப் குழந்தையாகப் பெற்றார். இந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அருகில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டார்.

மண்டோதரியை மணந்து கொள்ள வேண்டும் என்று மாயாசுரரிடம் இராவணன் கேட்டுக் கொண்ட போது, அவருடைய ஜாதக கணிப்பின் படி, இந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் முதல் குழந்தை இராவணனின் வம்சத்தை அழித்து விடும் மற்றும் அந்த குழந்தையைக் கொன்று விட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மாயாசுரரின் அறிவுரையை கருத்தில் கொள்ளாத இராவணன், மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டார். வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளார். இராவணனின் வம்சம் சீதையினால் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டதால் தான், தன்னுடைய மகளான சீதையை இராவணன் விட்டு விட்டான் என்றும் சொல்லப்படுகிறது.

ஈட்டி -திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது குறைவு தான். அந்த வகையில் விளையாட்டு, காதல் என பொழுதுபோக்கு கலவையோடு அறிமுக இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா, நரேன், ஜெயப்பிரகாஷ் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ஈட்டி.

கதை :

உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் அதிகமாக வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான நோயினை பற்றிய தொலைக்காட்சி கலந்துரையாடலுடன் படம் தொடங்குகிறது,

பின்பு அந்த நோயானது தடகள வீரரான அதர்வாக்கு சிறுவயது முதலே இருக்கிறது என்பதிலிருந்து கதை நகர தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் ஒரு தவறான போன் காலில் ஸ்ரீ திவ்யாவுடன் ஏற்படும் நட்பானது காதலாக மாற ஒரு விளையாட்டு போட்டிக்காகவும், ஸ்ரீதிவ்யாவை சந்திப்பதற்காகவும் தஞ்சாவூரிலிருந்து அதர்வா சென்னைக்கு வருகிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக வில்லன்களால், ஒரு முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்ய முயற்சிக்க, யார் என்று தெரியாமல் திவ்யாவின் அண்ணன் திருமுருகனை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற பின்பு வில்லன்களுக்கும், அதர்வாவுக்கும் இடையே பகை ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அதர்வா கலந்துக்கொள்ளும் போட்டி நெருங்கும் நேரத்தில் வில்லன் RNR மனோகர், அதர்வாவை கொலை செய்ய முயற்சிக்கிறார். பின்பு, எதிரிகளிடமிருந்து எப்படி தப்பித்தார், போட்டியில் வெற்றிபெற்றாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அதர்வாவின் நடிப்பும், உடல் அமைப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பொருந்தியுள்ளது, ஸ்ரீ திவ்யாவிற்கு பெரிதாக ஒன்றும் கதாபாத்திரம் இல்லை.

முதல் பாதி சற்று நீளமாக இருந்தாலும் கதை நகர்வது தெரியவில்லை, இரண்டாம் பாதி சற்று பொறுமையாக நகர்ந்தாலும் போக போக விறுவிறுப்பாக செல்கிறது.

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக ஜெயபிரகாஷ், திருமுருகன், பயிற்சியாளராக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் மன நிறைவு.

வில்லனாக வரும் மனோகர் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்துள்ளார். காவல் துறை உயர் அதிகாரியாக வரும் செல்வாவும் சிறிது நேரம் வந்தாலும் நிறைவு.

அறிமுக இயக்குனரான ரவிஅரசு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஒரு கட்டத்தில் கொண்டு வந்து அவர்களுக்கான தொடர்பை விவரிப்பதில் சபாஷ் வாங்குகிறார்.

ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை நன்றாக உள்ளது. பாடல்களில் நான் புடிச்ச மொசகுட்டி, குய்யோ முய்யோ ஆகியவை கேட்கும் ரகம்.

ஒளிப்பதிவு மிக யதார்த்தமாகவுள்ளது, குறிப்பாக ஆடுகளத்தில் போட்டிகளை காண்பிப்பதில் நம்மை வெகுவாக ஈர்த்துள்ளார்.

க்ளாப்ஸ்

அதர்வாவின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்திற்கு கொடுத்த ஈடுபாடு நம்மை கவர்கிறது

பல்ப்ஸ்

பார்த்து பார்த்து சலித்து போன கிளைமேக்ஸ். இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கலாம், படத்தின் காமெடி எதுவும் ரசிக்கும் படி இல்லை, குறிப்பாக நடிகர்களின் தேர்வு அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரமும் மனதில் ஓட்டவில்லை.

மொத்தத்தில் ஈட்டி குறி பார்த்து வீச தடுமாறியுள்ளது.

விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

புதியதாக விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவசியமான ஒன்று விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம்.
பிரிட்டனில் இருந்து செயல் படும் ஒரு தனியார் தொலைக்காட்சி போயிங்குடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. விமானம் ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டு, விமானத்தினுள் "மாதிரி" மனிதர்கள் அமர்த்தப்பட்டு அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது உள்ளே நிகழும் பாதிப்புகளை கண்டறிந்தனர்.
இவை மட்டும் இல்லது இதுபோன்ற கடந்த 30 வருடங்களாக பல்வேறு தருணங்களில்நடத்தப்பட்ட ஆய்வும் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதன் படி விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது, விமானத்தில் முதல் வகுப்பு வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் தான் முதலில் மிகுந்த பாதிப்பு உள்ளாகிறது.

அதாவது முதல் பதினொன்று இருக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து சிதறி விடுகின்றன.
விமானம் வந்த வேகத்தில் தரையில் மோதும் போது முதல் 11 இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன.
எனவே இதில் பயணம் செய்தவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என கூறலாம். அதே நேரத்தில் விமானத்தில் பின்புறம் அதாவது எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்யும் பயணிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

இந்த ஆய்வு குறிந்து கருத்து தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், விமானத்தில் எல்லா இருக்கையும் ஒரே அளவு பாதுகாப்பு உடையது தான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எவ்வாறு தரையில் படுகிறது என்பதை பொருத்து தான் அதன் பாதிப்பு அமையும்.

மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு,
எனவே பாதுகாப்பான விமான பயணத்திற்கு சீட் பெல்ட் தான் மிக அவசியம் என தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான விமானம் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், அதுபோன்ற விமானத்தில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த விமான விபத்துக்களில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் விமானத்தில் எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ ரகசியம்! அரைஞாண்கயிறு - ஒரு கருப்பு கயிறு

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர்
வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும்
ஒரு கருப்பு கயிறு.
எதற்கு இதை நான்
அணிந்து கொள்ள வேண்டும்
என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு
சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த
கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
நிச்சயமாக இல்லை !
அந்த அரைஞாண்
கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள்
கண்டுபிடித்த ஒரு மருத்துவ
ரகசியமே அடங்கியுள்ளது அந்த
ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற
அரைஞாண்கயிறு ஒரு நோய்
தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத்
தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக
குடல் இறக்க நோய் வருவதுண்டு.
அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம்
தமிழர்களிடையே இருந்தது.
பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக்
கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும்
குறைந்து விட்டது. உடல் பெருத்தலின்
ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்'
ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள்.
இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத்
தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள்
சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண்
கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.
இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக்கொடி கட்டுகிறார்சில விசயங்கள் நாகரீக
மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும்
இன்றும் கறுப்புக் கயிற்றில்
முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக்கொடி கட்டத்தான் செய்கிறார்கள்.நம்
முன்னோர்கள் பாரம்பரியத்தை நம்
பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்...

நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?


 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள்  நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார்  விளக்கம் அளித்துள்ளார். 


சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் கூறுகையில், "காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரினை பருகவேண்டும். மற்றவர்கள் தினந்தோறும் 1 முறை 7 நாட்களுக்கு பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது" எனத் தெரிவித்தார்.


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். 

உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.
உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.
இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.
சீரகம்
சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1/2
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை
இரவில் படுக்கும் போது நீரில் சீரகத்தைப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குளிர வைத்து, அதில் எலுமிச்சையை பிழிந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் காலையில் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடை குறைந்திருப்பதை நீங்களே காணலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்
ஒரே மாதத்தில் உடற்பயிற்சி அல்லது டயட் இல்லாமல் எடையைக் குறைக்க வேண்டுமெனில், தேன் மற்றும் எலுமிச்சை உதவும். எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும். அத்தகைய எலுமிச்சையுடன் தேனைக் கலக்கும் போது, ஆரோக்கியமாக உடல் எடை குறையும்.
எடுக்கும் முறை
எலுமிச்சை - 1/2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
செய்முறை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, ஒரு வாரத்தில் எடையில் மாற்றத்தைக் காணலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
உடல் பருமனை நினைத்து கவலைக் கொள்கிறீர்களா? அப்படியெனில் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு எடையை விரைவில் குறைக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் என்னும் பொருள், நீங்கள் அளவாக உணவை உட்கொள்ளச் செய்யும். மேலும் இதில் உள்ள அசிட்டிக் ஆசிட், கொழுப்புக்களை கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.
எடுக்கும் முறை
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் மாலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வர, ஒரு வாரத்தில் கொழுப்புக்கள் கரைந்து தொப்பை சுருங்கி, உடல் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.
சுடுநீர்
சொன்னால் நம்பமாட்டீர்க்ள, தினமும் குளிர்ந்த நீருக்கு பதிலாக சுடுநீரைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, உடல் எடை சீக்கிரம் குறையும். எனவே உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் சுடுநீரைக் குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 9-10 டம்ளர் சுடுநீரைக் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் சேர்மம், உடலில் சேர்ந்துள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புக்களை கரைத்து, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதற்கு தினமும் 4-5 பற்களை பச்சையாக உட்கொள்ளலாம் அல்லது பாலுடன் சேர்த்தும் எடுத்து வரலாம்.
எடுக்கும் முறை
பூண்டு - 5 பற்கள்
பால் - 1 கப்
செய்முறை:
பூண்டு பற்களை பாலில் போட்டு, 20 நிமிடம் நன்கு வேக வைத்து, பின் பூண்டை அந்த பாலுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும். சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு அப்படிப்பட்ட சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

உடற்பயிற்சி நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி இன்றியமையாததாகும். உடலின் பல பாகங்களின் நலத்திற்கே அது நல்லது எனும் போது, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இந்த உடற்பயிற்சி தான் முக்கியம். அதைத் தவறாமல் செய்து வருவது சிறுநீரகத்திற்கும், அதன் செயல்பாடுகளுக்கும் நல்லது.

மருத்துவ சோதனைகள் நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.
உணவுக் கட்டுப்பாடு உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது.

இரத்த அழுத்தம் சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

இரத்தத்தில் சர்க்கரை அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும்.

நிறைய நீர் சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு நிறைய நீராகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது சிறுநீரகத்தைத் தான் நேரடியாகப் பாதிக்கும்.


'நோ' சிகரெட் அதேபோல், புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்தால், சிறுநீரகம் மட்டுமல்லாமல் மற்ற பல உடல் பாகங்களும் தப்பித்துக் கொள்ளும்.

சரியான மருந்துகள் நம் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும், அதற்குத் தகுந்த சரியான மாத்திரை-மருந்துகளை ஒரு மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

முதல்வர் கையில்தான் கொடுப்பேன்! நயன்தாரா பிடிவாதம்?

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினியும் பத்து லட்சம், நம்ம ஹன்சிகாவும் பத்து லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும், ஈகை குணமும் மிக்க நயன்தாரா எங்கே என்று மனசு தேடுமல்லவா? அப்படிதான் தேடுகிறது சினிமா டெக்னீஷியன்களின் கண்கள். சக தொழிலாளிக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவி செய்யும் குணமுடைய நயன்தாரா எதையும் விளம்பரமாக்கிக் கொண்டதில்லை. கடந்த முறை சுனாமி வந்து மக்கள் கடும் உயிர் பலியை சந்தித்தபோது நயன்தாராதான் சினிமாவுலகத்திலிருந்து முதல் நிதியை வழங்கினார். அப்போதே பத்து லட்சம்!

அப்படிப்பட்ட நயன்தாரா எங்கு போனார்? ஏன் இன்னும் நிதியளிக்கவில்லை? நிச்சயம் அது நிறைவான தொகையாகதான் இருக்கும் என்றெல்லாம் சினிமாவுலகம் எதிர்பார்த்து காத்திருக்க, நம் காதுக்கு வந்த செய்தி… அட! அட!!

இந்த தடவையும் நிதியை நேரடியாக முதல்வரை சந்தித்துதான் கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்திலிருக்கிறாராம் நயன்தாரா. அதனால்தான் அந்த நல்ல செய்தி வர தாமதம் ஆகிறது என்கிறார்கள். மனசு சொல்லும்போதே மணி பர்சை திறந்துடுங்க நயன்தாரா! நாள் போக போக, சுருக்குப்பை இறுக்கமாகிடும் என்பதுதான் மனுஷ மனசின் மகத்துவம்!