Saturday, December 26, 2015

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க?

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,

மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே “பின் பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!!!

வெள்ள நிவாரணம்- அஜீத், விஜய் பணம் ஏதும் கொடுக்கல! விஷால் பதில்!

நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டுகிற அனுமனாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பல ஹீரோக்களின் நெஞ்சில், ராமனும் இல்லை. ரசிகனும் இல்லை. ஈரமும் இல்லை. நேசமும் இல்லை என்பதை தெளிவாக்கிவிட்டு போனது நம்ம சென்னை வெள்ளம்! கொடுக்க மனசில்லாமல் முக்கி முனகியபடி அவர்கள் கொடுத்த உதவித் தொகை குறித்த வயிற்றெரிச்சல் இன்னும் பல ஏரியாக்களில் வற்றவே இல்லை.

அதற்குள் அஜீத் 60 லட்சம் கொடுத்தார். விஜய் மூன்று கோடி கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் இல்லாத கதையை அவிழ்த்துவிட்டதை, “இருக்குமோ” என்ற மன நிலையிலேயே கவனித்துக் கொண்டிருந்தது மக்கள் மனசு. இந்த நேரத்தில்தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

நடிகர் சங்கத்திடம் வெள்ள நிவாரண நிதியாக அஜீத்தும் விஜய்யும் எவ்வளவு கொடுத்தாங்க?

சற்று திகிலிஸ்ட் ஆனார் விஷால். மாரியாத்தாளுக்கு மேகி நூடுல்ஸ் படைச்ச மாதிரி, இதென்ன பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தப்படாத கேள்வி? இருந்தாலும் பதில் சொன்னார். “சில நடிகர்கள் அவங்களே நேரடியாக பல லட்ச ரூபாய்க்கு உதவிகள் செஞ்சுருக்காங்க. பட்… இவங்க ரெண்டு பேரும் நடிகர் சங்கத்தில் பணம் ஏதும் கொடுக்கல” என்றார்.

நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற…

கடவுள் மேல் மனிதனுக்கு சந்தேகம் ஏன்..? மனிதனுக்கு பெண் மேல் அதிக மோகம் ஏன்..?

கலியன் தானம் மாறி தலைகீழாக பூமி வெடித்து தோன்றியவன்(குரோணியின் 6 துண்டம்)முன் யுகங்களில் தன்னை அழித்தார் என்பதற்காகவே விஷ்ணுவையும் அவர் கிளைகளான நம்மையும் அழிக்க வேண்டும் என்றே அவன் விஷ்ணு போலவே உயரம் கொண்டு பிறந்தவன் அவனை ஈசனிடம் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

 உடனே தேவர்கள் கலியனிடம்”கலியனே இவர்தான் ஈசர் இவ்வுலகையும் படைத்தவர் எங்கும் நிறைந்தவர் இவரிடம் உனக்கு வேண்டிய வரங்களை வாங்கிக்கொள்”என்று தேவர்கள் சொல்ல இதைக்கேட்ட கலியன் ஏளனமாக சிரித்து விட்டு “இவனா கடவுள் இவனா கேட்டதை தருவான் மேனி எங்கும் குப்பையை பூசி இருக்கிறான் பண்டாரம் போல் இருக்கும் இவனா கடவுள்”என்றான்.

இதை கேட்ட தேவர்கள் கலியனிடம் “அப்படி பேசாதே இவர்தான் அனைத்தையும் அடக்கி ஆள்பவர்,எட்டாதப்பொருள்,தோணாதப்பொருள்” என்று விளக்க இதைக்கேட்ட கலியன் “அப்படியானால் எனக்கு துணையாக ஒரு பெண்ணை படைத்து கொடுக்க சொல்லுங்கள் பார்போம் அதுமட்டுமல்ல அவள் அழகில் பேரளகியாகவும் அவள் கண் விழி அனைவரையும் மயக்கும் தன்தையாகவும் கொங்கைகள் சரியாமலும்,அவள் மேல் எப்பொழதும் கமகம என வாசனையடனும் உடனே படைத்து தாருங்கள்“ என்று கேட்க என்று கலியன் சொல்ல அவன் விளா எலும்பில் இருந்தே ஒரு பெண்ணை உடனே படைத்துக்கொடுக்கிறார்.

பெண்ணை கண்டவன் தன்னை மறந்தான் வாரி எடுக்கலாமா என நினைக்குறான் முத்தமிடலாமா என நெருங்க உறவு கொள்ளவும் தயாராகிறான் தேவர்கள் அவனை தடுக்கிறார்கள்.உடனே கலியன் ஈசனிடம்”ஈசனே இந்ந பெண்மேல் உள்ள ஆசை என் கடைசி மூச்சி இருக்கும் வரை சிறிதும் குறையக்கூடாது” என கேட்டான்(அதனால்தான் இன்றும் கலி எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பெண்ணாசை தலைக்கேறி நிற்கிறது’.

அதுப்போல் முதலில் கலியன் இறைவன் இவனா என்று சந்தேகப்படுவதனாலேயே இன்றும் கலி எண்ணம் புகுந்த மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் கடவுள் இருக்கிறானா?இருக்கிறானா?என்று சோதிக்கிறார்கள்.அய்யா உண்டு

சிம்புவை சிக்க வைத்ததே விஷால் தரப்புதான்..இன்னும் யாரெல்லாம் சின்னாபின்னமாகப் போகிறார்களோ?

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று ஆர்வமானார்கள் பத்திரிகையாளர்கள். ஓப்பனிங் படு போர். சங்கத்தின் செயல்பாடுகளை பற்றியும், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் விஷாலும், நாசரும்.

மிக பொருத்தமான இடத்தில் பூனைக்கு மணி கட்டினார் ஒரு பத்திரிகையாளர். “சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன முடிவெடுத்திருக்கு?” என்பதுதான் அந்த மணி. நாசர்தான் பதில் சொன்னார். “இப்படியொரு பிரச்சனை வந்தவுடன் நாங்க அமைதியா இருக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் எங்கள் அணிக்கு எதிராக போட்டியிட்டவர் அவர். நாங்க என்ன கருத்து சொன்னாலும் அது தவறா போய்விடும் என்று அமைதியாகிவிட்டோம். அதற்கப்புறம் சரத்குமார்தான், நடிகர் சங்கம் சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கல? என்று கேள்வியை எழுப்பினார். இப்போ அவரே சிம்புவுக்கு ஏன் நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கல என்று கேட்கிறார்”.

“அப்படியிருந்தும் நானும் பொன்வண்ணனும் டி.ராஜேந்தரிடம் பேசினோம். அந்த பாடல் எப்படியோ மக்கள் மத்தியில் வந்திருச்சு. அதை யார் வெளியிட்டிருந்தாலும் பிரச்சனையில்ல. ஒரு மன்னிப்பு கேட்க சொல்லுங்க. போதும். பிரச்சனை முடிஞ்சுடும் என்றோம். ஆனால் அவர்தான் நாங்க சட்ட ரீதியா பார்த்துக்குறோம் என்று கூறிவிட்டார். அதற்கப்புறம் விஷாலும், கார்த்தியும் நேரடியாக சிம்புவிடம் பேசினாங்க. அவர்களும் அதையேதான் சொன்னாங்க. அதற்கு சிம்பு ஒப்புக் கொள்ளவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அதற்கு மேல நாங்க பேசுறது சரியா இருக்காது” என்றார்.

சிம்புவை நடிகர் சங்கத்தை விட்டே நீக்கணும்னு சிலர் கோரிக்கை எழுப்புறாங்களே? என்ற கேள்விக்கு, மிக திட்டவட்டமாக பதில் சொன்னார் விஷால். “அப்படியொரு பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் சிம்புவை சங்கத்தை விட்டு நீக்க மாட்டோம். சங்க பிரச்சனை அல்லாமல் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் எது பேசினாலும் அதற்கான பொறுப்பு அவரவர்களுக்குதான். அதற்கு சங்கம் பொறுப்பேற்க முடியாது” என்றார்.

உண்மை இப்படியிருக்க, ஏதோ அந்த பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டு சிக்க வைத்ததே விஷால் தரப்புதான் என்பது போல கதை கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இப்படிப்பட்ட திரைக்கதை மன்னன்களின் சூழ்ச்சியில் சிக்கி, இன்னும் யாரெல்லாம் சின்னாபின்னமாகப் போகிறார்களோ?

பெண்களே உங்க தொப்பை குறையணும ..? ஓடி போயு இதை பண்ணுங்க

பெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனை

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .

பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின் மூலம் அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.

அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.

*குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.

*தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

*அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.

*முக்கியமாக தொலைக்காட்ச்சியின் முன்பு அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

*வயிறைக் குறைக்கும் யோகாசன முறையை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.

* சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது,பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

*எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

*வீட்டு வேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற் பயிற்சியின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பலனை தரும்.

*நொறுக்கு தீனியை அடியோடு நீக்கிவிடலாம்.

*முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூடவே கூடாது.

*எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.

இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவதொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடாதீங்க.... அது மிகப்பெரிய தவறாம்!.....!

அட! என்னைய்யா அநியாயமா இருக்கு! அவளோட பேரை மட்டும் தான் சொல்றதுக்கு எங்க வீட்டிலே அதிகாரமே இருந்துச்சு! அதுக்கும் வேட்டு வைச்சுட்டீரே! நீர் நல்லாயிருப்பீரா! என்று தலைப்பைப் படித்தவர்கள், திட்ட ஆரம்பித்திருப்பீர்கள்.

கொஞ்சம் பொறுங்க! விஷயத்தை முதலில் தெரிஞ்சுக்கிடுங்க! அந்தக் காலத்து சினிமா பார்த்திருக்கீங்களா! மனைவியிடம் கணவன் தேவி என கசிவார். அந்த அம்மையார் நாதா என உருகுவார். இதெல்லாம் விளையாட்டுக்கு இல்லே! சாஸ்திரப்படி தான், அப்படி சொன்னாங்க.

பொதுவாக, வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்பது மரபு. உறவுமுறை சொல்லி தான் அழைக்க வேண்டும். அதன்படி, கணவனின் பெயரை மனைவி சொல்லக்கூடாது.

அப்படியானால், கணவனை மனைவி எப்படி தான் அழைப்பதாம்! மாமா, அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைக்கலாம். அப்படி சொல்லும் வழக்கமில்லை என்றால், தங்கள் குழந்தைகளின் பெயரால், ஆகாஷ் அப்பா, கிருஷ்ணப்பா, சாந்தி அப்பா, வசந்தியப்பா என்று கூப்பிடலாம்.

ஆனால், மனைவியின் பெயரை கணவன் சொல்லவே கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இவர்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ராதா என்று பெண் தெய்வங்கள் ஒன்றின் பெயரால் தான், அவர்களை அழைக்க வேண்டுமாம்!

அட போங்க சாமி! நீங்க டிவியிலே சீரியலே பாக்கிறது இல்லியா! சரவணா, மாதவாங்கிற காலமெல்லாம் போய், புருஷனை வாடா, போடாங்கிற ரேரஞ்சுலே போய்கிட்டு இருக்கு! இந்த நேரத்தில் இதுமாதிரி நியூஸெல்லாம் போட்டு, பொம்பளைங்கள வெறுப்பேத்துறீங்களே! என்கிறீர்களா?...

சாஸ்திரம் சொல்றதை நாங்க சொல்லிட்டோம்! அதை பாலோ பண்றதும், பண்ணாததும் உங்க இஷ்டம்!

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


வெள்ளைப் பூண்டு:


பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.


இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


வெங்காயம்:


வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


காரட்:


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


ஆரஞ்சு :


வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


பருப்பு வகைகள் :


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்தஅணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


கோதுமை ரொட்டி :


நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இறால், மீன் மற்றும் நண்டு :


அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.


தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


பாலாடைக்கட்டி :


சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

கோவில்கள் ஏன் மலைகளில் அதிகம் அமைதுள்ளன?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. இதற்கு உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதே ஆகும்.

வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன.

கருப்பு பீன்ஸ்
பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.
இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.

இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய்
பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.

ஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

வேர்க்கடலை
நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.
ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்
கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.
அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

வெள்ளை டீ(White Tea)
நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.

இந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.
ஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை எப்படி அறிவது...

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.

குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
காய்ச்சல்

குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

உடலில் அக்கி உண்டானால்
குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

வயிற்றுப் பொருமல்குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

காமாலைகுழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
விக்கல்மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

நாக்கில் பாதிப்புஉமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

மூலம்மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

தொண்டைப் பிடிப்புஇலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

காது பாதிப்புகையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

கழுத்தில் பாதிப்புகுடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

வாயில் பாதிப்புஅதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.

வயிற்றுவலிகுழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது,  ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

பண்டைய கால வீடுகளில் திண்ணை வைத்து கட்டியது ஏன்?

நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர். அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம். பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு. இன்றைய "பாஸ்ட் பூட்" காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று பாருங்கள் என்று நமக்கு ஒரு பாடமாகவே விளங்குகிறது நம் முன்னோர் விட்டு சென்ற இந்த திண்ணைகள்.

பசிக்க 7 வழிகள்...

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

*சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
*சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

*சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

*எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!

'2.0' அப்டேட்ஸ்: சென்னையில் களமிறங்கிய ரோபோக்கள்

 '2.0' படத்துக்காக வெளிநாட்டில் இருந்து ரோபோக்கள் களமிறங்கியுள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து ரோபோக்கள் வந்துள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1-ம் தேதி வரை நடத்த ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரோபோக்கள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்.

'கபாலி' படப்பிடிப்பு முடிந்து ரஜினி திரும்பியவுடன், அக்‌ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் என படப்பிடிப்பு தொடர இருக்கிறது.

இப்படத்தை 2017 ஆண்டு வெளியாகும் என்றும், படத்தின் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து படத்தை வெளியீட்டை அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தாரை தப்பட்டை நெகிழ வைத்த இளையராஜா- பாடல்கள் ஒரு பார்வை

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நான் ராஜா. இது தான் தாரை தப்பட்டை பாடல்கள் கேட்ட ஒவ்வொருவரின் மனதில் ஓடும் வார்த்தை. நான் கடவுள் என்ற தரமான படைப்பை கொடுத்த பாலா அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்தார்.

அப்போது அவரிடம் ஏன் இசையமைப்பாளரை மாற்றினீர்கள் என்று கேட்க, ‘அதற்கு என்ன, எல்லோரும் அவருடைய இசையை தானே, போடுகிறார்கள்’ என்று ஒரே பதிலால் அனைவரின் வாயையும் அடைத்தார்.

இந்த மெகா கூட்டணி மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் இணைந்தனர். இப்படம் இளையராஜா அவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம். இது இவரின் 1000மவது படமும் கூட.

பாடல்கள் நேற்றும் வர, சமூக வலைத்தளத்தில் உள்ளோர் பலரும் நிறைகளும், குறைகளும் சொல்ல தங்கள் காத்திருந்தனர். ஆனால், குறை சொல்ல வந்தவர்களை கூட, நிறை மட்டும் பேச வைத்தது தாரை தப்பட்டை பாடல்கள்.

ஹீரோ இண்ட்ரோ என தீம் மியூஸிக்குடன் இந்த ஆல்பம் தொடங்க, தன் பழைய தப்பு, தவில்களை எல்லாம் எடுத்து கலக்கிவிட்டார் ராஜா. அனைவரையும் எழுந்து நடனமாட வைக்கும் ஒரு தீம் மியூஸிக். இது இப்படி என்றால் தாரை தப்பட்டை தீம் மியூஸிக் எப்படி இருக்கும் என கடைசி பாடலை க்ளிக் செய்தால், ‘தாரை தப்பட்டை கிழிய போவுது’ என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் புரியும். நான் கடவுள் படத்தில் வரும் ஓப்பனிங் சாங் போல, மிரட்டியுள்ளார்.

மோகன்ராஜ் எழுதிய வதன வதன வடிவேலன், கூத்து பாடல் போல் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால் வரிகள் அப்படியிருக்க, இசையில் வேறு ஒரு தளத்தை ராஜா எட்டியுள்ளார். இனி அவர் செல்ல எந்த தளமும் இல்லை என்றாலும் எங்களுக்கு சொல்ல வேறு வார்த்தை கிடைக்கவில்லை.

தாரை தப்பட்டை டைட்டில் பார்த்தாலே வெறும் குத்து பாடல்கள் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு முதல் பதிலடியாக பாருருவாயா என்ற திருவாசகப்பாடல். மெல்லிசையில் அர்த்தத்தை கூறுகின்றது. இதை விட இடறினும் என்ற பாடல் தான் இந்த ஆல்பத்தில் ஹைலைட் என்று கூட சொல்லலாம்.

நான் கடவுள் படத்தின் பிச்சை பாத்திரம் பாடலுக்கு பிறகு மனதை நெகிழ வைக்கும் ஒரு பாடல் இது என்றால் மிகையல்ல. இதேபோல் ஆட்டகாரி மாமன் பொண்ணு ராஜாவின் ஃபோக் டச்.

மொத்தத்தில் தாரை தப்பட்டை மீண்டும் இந்த பகுதியின் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள்.

பலம் இழந்து வரும் ஆண்டிபயாடிக் மருந்துகள், பயமுறுத்தும் அசைவ உணவுகள்...

‘நமது உடலை தாக்கும் கிருமிகளை அழித்து நம்மை காப்பாற்றிய ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் மெதுவாக பலம் இழந்து வருகிறது’ என்று உலக சுகாதார மையத்தின் அதிகாரி மார்காட் சான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நோய் கிருமிகள் அதிக சக்தியுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை முறியடித்து வளர்வதின் ரகசியம் மேலும் அதிர்ச்சி தருகிறது.

உற்பத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பெரும் பகுதி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற மிருகங்களுக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை நாம் உண்பதால், இந்த ரக ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு நமக்கு வரும் நோய்கள் கட்டுபடுவதில்லை.
இது முதல் காரணம்!

இரண்டாவது காரணம், புதுவித ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அதிகம் நடைபெறவில்லை என்பது தான்!
பிறகு இதற்கு என்ன தான் தீர்வு?

‘எல்லோரும் சைவமாக மாறி விடுங்கள்’ என்கிறார் மார்கிரட்!
‘இல்லை என்றால் வெகு சீக்கிரம் சாதாரண சளி என்றால் கூட கட்டுபடுத்த முடியாத நிலை வந்து விடும். மற்ற பயங்கரமான வியாதிகளை நினைத்து பாருங்கள்’ என்று எச்சரிக்கிறது உலக சுகாதார மையம்!

ரஜினியுடன் கிறிஸ்துமஸ் - சந்தோச எமிஜாக்சன்

2010 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசபட்டணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான எமிஜாக்சனுக்கு 2015 தான் முக்கியமான ஆண்டாக அமைந்ததெனலாம்.

இந்த ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ஐ, தனுஷூடன் தங்கமகன் ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் சிங்ஈஸ்பிளிங் இந்திப்படத்திலும் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினியுடன் எந்திரன் 2.0 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். உதயநிதி ஜோடியாக அவர் நடித்திருக்கும் கெத்து படமும் இவ்வாண்டே வெளியாகவேண்டியது. சென்னை வெள்ளம் காரணமாக தள்ளிப்போய் அடுத்தஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகவிருக்கிறது. நேற்று கிறிஸ்துமஸ் நாளும் அவருக்கு விசேசமாக அமைந்துவிட்டது.

காலையிலிருந்து ரஜினியுடன் எந்திரன் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்புத்தளத்தில் கேக்வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார்கள். மாலையில் உதயநிதியின் கெத்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு படங்களில் நடித்திருப்பதன் மூலம் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம்கிடைக்கும் என்கிற சந்தோசத்தில் இருக்கிறாராம்.    

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணம்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்று தான்.

    108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது

     Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)

    Chrome Leather Factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று

    17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார், பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது

    மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது

    தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது

    சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது

    முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி

    உருது வார்த்தையான Che Bage (Six Gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்

    சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்

    கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்

    சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது

    பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்

    சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது

    நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (தி.நகர்)

    புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது

    அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்

    17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை

    முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது

    மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது

    பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது

    சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது

    திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது

    பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது

    தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது

    வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது

குறைந்த டாக்டர் ஃபீஸ்! வாழ்நாளுக்கு தேவையான வைத்தியம்!! – பசங்க 2

பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற லட்சிய முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் டைரக்டர். எத்தனை குடும்பங்கள் இவர் பின்னே செல்லப் போகிறதோ? வாழ்க பாண்டிராஜ்.

இரண்டு தம்பதிகள். வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தங்கள் வீட்டு சுட்டிக்குழந்தையால் பிரச்சனை பிரச்சனை எந்நேரமும் பிரச்சனை. எந்த பள்ளிக்குப் போனாலும், நாலே வாரம்தான். பொறுக்க முடியாமல் “டிசி வாங்கிட்டு போயிருங்க” என்கிறது பள்ளி நிர்வாகம். அப்படியொரு பிள்ளையை வைத்துக் கொண்டு தொல்லை தாங்க முடியாமல் துவளும் பெற்றோர், இருவரையும் ஹாஸ்டலில் சேர்க்கிறார்கள். அதற்கப்புறமும் நிம்மதியானால்தானே? ஹாஸ்டல் நிர்வாகமும் இவர்களை சமாளிக்க முடியாதென அனுப்பி விட, அந்த நேரத்தில்தான் ‘என்ட்ரி’ கொடுக்கிறார்கள் குழந்தை மருத்துவர் சூர்யாவும், அவரது மனைவி அமலாபாலும்! என்ன நடக்கிறது என்பது செகன்ட் ஹாஃப்!

படத்தில் லீட் ரோல் செய்திருக்கும் கவின், நயனா, அபிமான் மட்டுமல்ல. கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் குழந்தை கூட, நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் அவ்வளவு யதார்த்தமாக ஒத்துழைத்திருக்கிறது. அதுவும் கவின் நயனா குறும்புகளை நினைத்து நினைத்து மயங்கலாம். இன்டர்வியூவில் நயனா ஒரு கதை சொல்கிறாளே… அழகு! இராமயணக் கதைக்குள் ஸ்பைடர் மேன், டோரா என்று யார் யாரோ வருகிறார்கள். அவளது அற்புதமான அந்த உலகத்தின் மீது, புத்தகப் பையையும் மார்க்கையும் எறிகிறார்களே என்கிற கவலையே வந்துவிடுகிறது நமக்கு. அதே நயனாதான் கிளைமாக்சை தாங்கிப்பிடிக்கிற குழந்தையும். அதற்காக மண்டையை பிய்த்துக் கொண்டு சீனை திணிக்காமல் அதன் போக்கில் விட்டுவிடுகிற பாண்டிராஜுக்கும் ஒரு பாராட்டு.

போர்டில் எழுதப்பட்டிருக்கும் கணக்கு சமன்பாடுகள், கவினை பார்த்து சிரிக்க… “என்னையா பார்த்து சிரிக்கிறே?” என்று அவன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஓடுவதும், தெருவில் சாவுக் குத்து கேட்டால், தன்னையறியாமல் ஆடுவதுமாக கலக்குகிறான்!

கார்த்திக்- பிந்துமாதவி ஒரு தம்பதியாகவும், முனிஸ்காந்த்- வித்யா இன்னொரு தம்பதிகளாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோடிகளில் முனிஸ் தம்பதிக்கு சற்று கூடுதல் மார்க்! அதிலும் திருட்டு பழக்கத்தை வைத்துக் கொண்டு அதை விடவும் முடியாமல், தொடரவும் சகிக்காமல் போராடும் முனிஸ், அவரும் ஒரு குழந்தை போலவே தெரிகிறார் நம் கண்களுக்கு.

முதல் பாதியில் யதார்த்தமாக நகரும் கதை, சூர்யா அமலாபால் உள்ளே வந்ததும் கொஞ்சம் சினிமாவை பூசிக் கொண்டதை தவிர்த்திருக்கலாமோ பாண்டிராஜ்? சூர்யாவும் தேவைக்கு அதிகமாகவே நடித்துவிட்டாரோ? இருந்தாலும் அவரது ‘குழந்தை கவர்தல்’ எபிசோட் படம் பார்க்க வரும் குழந்தைகளை கவரக்கூடும்.

பெரிய பெரிய நடிகர்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட், திரையில் நிமிஷ நேரம் மட்டும் நடமாட விட்டிருக்கிறார் டைரக்டர். வருகிற அந்த கொஞ்ச நேரத்தில் ஸ்கோர் அடிக்கிறார்கள் அவர்களும். குறிப்பாக சமுத்திரக்கனி. “சார்… ஒரு கவர்மென்ட் ஸ்கூல் வாத்தியாரா இருந்துகிட்டு நீங்களே தனியார் ஸ்கூல்ல உங்க பிள்ளைகளை சேர்த்தா, கவர்மென்ட் ஸ்கூலை யார் நம்புவா?” என்பதெல்லாம் நெத்தியடி டயலாக்ஸ். “எல்லாரும் ஃபர்ஸ்ட் மார்க்கணும்னு வாங்கணும்னு இந்த ஸ்கூலுக்கு வந்தாலும், ஒரு பர்ஸ்ட் மார்க்தானேப்பா…” என்று குழந்தை கேட்கும் கேள்விக்கு பதிலேது? ‘‘அவன் கெட்ட வார்த்தை பேசல. கேட்ட வார்த்தையதான் பேசுறான்…’’ இப்படி படம் முழுக்க ஆரோக்கியமான வசனங்களால் விளையாடியிருக்கிறார் பாண்டிராஜ்!

இருபது வருஷங்களுக்கு முன் பள்ளிகள் எப்படியிருந்தன. ஆசிரியர்கள் எப்படியிருந்தார்கள் என்பதற்கு படத்தில் வரும் அந்த பிளாஷ்பேக் ஓட்டப்பந்தயம், அருமையான உதாரணம்.

பாலசுப்ரமெணியெம் ஒளிப்பதிவு செயற்கை பூசிக்கொள்ளாமல் நம்மை திரைக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறது. அரோல் கரோலி பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார். பிசாசு படத்தில் ஜமாய்த்த அவருக்கே உரித்தான அந்த வயலின் பிட், இந்த படத்திலும் ஆங்காங்கே தொடர்வது அழகு.

குறைந்த டாக்டர் ஃபீஸ்! வாழ்நாளுக்கு தேவையான வைத்தியம்!! – பசங்க 2

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்கிறார் ஆர்யா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஹிட் படத்தை எண்ண வேண்டும் என்றால் இரு கைகைகள் போதாது. ஆனால், அவர் கொடுத்த ஹிட் படங்களை ரீமேக் என்ற பெயரில் சொதப்பி வைப்பது தான் தற்போதையே ட்ரண்ட்.

இதற்கு மாப்பிள்ளை, முரட்டுக்காளை போன்ற படங்கள் உதாரணம். அஜித் நடித்த பில்லா படம் மட்டுமே இதில் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.

இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாண்டியன் படத்தை சுராஜ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

மருக்களை மறைய செய்யும் கை வைத்தியங்கள்...Warts To Disappear

* ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.

* அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும்.

* அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.

* கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை பலமுறை நிரூபித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.

ரஜினி வசனம்-எம்ஜிஆர் பாடலைத் திருடும் பிரபல இசையமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய படம் ‘டார்லிங்’. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு பாட்ஷா படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை தலைப்பாக வைத்திருக்கின்றனர்.

ரஜினி வசனத்தை கைப்பற்றிய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக எம்.ஜி.ஆர் படத்தின் பாடலை கைப்பற்றியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்தை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’ என்ற பாடலை ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தில் அறிமுகப் பாடலாக இடம் பெறும் இப்பாடலை தற்போது உள்ள ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இசையமைக்க இருக்கிறார்கள்.

மேலும் நா.முத்துக்குமார் இக்கால இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் வரிகளை அமைக்க, பாபா ஷங்கர் நடனம் அமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது- முதலிடம் யாருக்கு?

2015ம் வருடம் முடியும் நேரத்தில் பல பிரிவுகளில் கருத்துக்கணிப்பு தொடங்கி விட்டது. அந்த வகையில் இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதன் முடிவுகளை பிரபல இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் ரிசல்ட் விவரங்கள் இதோ...

    1)முத்தம் கொடுத்த மாயக்காரி- 2216(த்ரிஷா இல்லன்னா நயன்தாரா)
    2)டானு டானு- 2207(மாரி)
    3)மெண்டல் மனதில்- 2200(ஓ காதல் கண்மணி)
    4)டண்டனக்கா- 2057(ரோமியோ ஜுலியட்)
    5)உனக்கென்ன வேனும் சொல்லு- 2015(என்னை அறிந்தால்)
    6)ஏண்டி ஏண்டி- 1939(புலி)
    7)மழை வரப்போகுதே- 1841(என்னை அறிந்தால்)
    8)மெர்சலாயிட்டேன்- 1826(ஐ)
    9)காதல் கண் கட்டுதே- 1824(காக்கி சட்டை)
    10)ஏயா என் கோட்டிக்காரா- 1798(பாபநாசம்)

நல்லெண்ணெய் குளியல் அவசியமா?!

நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கேசம் பொலிவு பெறுவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைப்பது, ஒளி, ஒலி, திறன் அதிகரிப்பது, சரும வியாதிகளில் இருந்து காப்பது, பித்தத்தைச் சமன்படுத்துவது என இதன் பலன்கள் பற்பல. எண்ணெய்க் குளியல் கூடாது என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடவே கூடாது என்கிறார்கள். இதற்குக் காரணம், முறையாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தெரியாத, குழந்தைகளைக் குளிக்க வைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் இருப்பதுதான். குறிப்பாக, சீகைக்காய் துகள்கள் குழந்தையின் நாசிக்குச் சென்று, சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்த ஆரம்பித்தும் என்பதால்தான் எண்ணெய் குளியலே தேவையில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

 மற்றபடி, முன்கூட்டியே சீகைக்காயை சரியாக குழைத்துக்கொண்டு முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று வலியுறுத்துகிறார் சித்தமருத்துவர் .

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..!

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…
வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும்,
பத்திரத்தை வங்கியிலும்,
என் மகனை வெளிநாட்டிலும் அடகு வைத்தேன்
கண்டிபாக ஒரு நாள் அவனையும் மீட்டுவிடுவேன்
ஆனால் அவன் இல்லாத ஊர் திருவிழாவையும்,
உறவினர் திருமணத்தையும்,
நண்பனின் மரணத்தையும்,
செல்போனிலும் பேஸ்புக்கிலும் கேட்டு கேட்டு
வாழ்கையையும், இளமைகாலத்தையும்,
தொலைத்த அவனை நான்
எப்படி மீட்டுதருவேன்?

வீசாவிற்க்கு பணம் கட்டி,
காதலுக்கு சமாதி கட்டி,
சூழ்நிலைக்கு தாலிகட்டி,
வட்டி கட்ட சென்றவனின்
மனைவியை தவறாகத்தானே
பார்கிறது இந்த சமூகம்!
பையன் பக்கத்தில் இல்லை என்றால்
பக்கத்து வீட்டுகாரன்கூட பகைக்க பார்க்கிறான்

என் மகன் வந்தால் சென்ட் வியாபாரியாக,
தைலம் விற்பவனாக,
ஃபாரின் சரக்கு தருபவனாகதான் பார்க்கிறார்கள்
ஆனால் என் கண்களுக்கு மட்டும்
அவன் வாளருந்த பட்டமாகதான்
தெரிகிறான்

உங்கள் குழந்தைகளுக்கு குடிப்பதும்,
புகைப்பதும் குற்றம் என்று சொல்லி தரும் நீங்கள்
கடன் வாங்குவதும் குற்றம் என்று சொல்லிக்கொடுங்கள்

வட்டிக்கு விடுவது பாவம் என்பார்கள்
அதை மாற்றி எழுதுங்கள்
வாங்கியவனே பாவம் என்று…

இளையராஜா.. நாம் வாழும் காலத்தின் அதிசயம்! - கொண்டாடும் ரசிகர்கள்

காலையில் இருந்து 'தாரை தப்பட்டை' இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், இன்றைய பொழுது உயிர் வாழ்க்கையின் வெகு அரிதான சிலிர்ப்பான கணங்களை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு செல்லின் உள்ளிருக்கும் நியூக்ளியசும் ஆடிக்களிப்பதை நாளங்களில் உணர முடிகிறது, துடிப்போடு கண்ணை மூடி வெவ்வேறு உலகங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

இசை உடலை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் எப்போதோ சிறுவனாய் இருந்த காலத்தின் டவுசரைத் தேட வைக்கிறது, திருவிழாக் காலங்களில் கலர் கலராய் பறக்கும் பலூன்களில் ஏற்றிக் கொண்டு மறந்து போன அத்தை மகளின் கண்களில் இறக்கி விடுகிறது, கண்மாய்க் கரையெல்லாம் பஞ்சு மிட்டாய் பொதி நுரைக்க புளியங்காற்றை நாசியில் ஏற்றுகிறது.

பறையும், உறுமியும், நாதசுரமும், தவிலும் தான் இந்த மண்ணுக்கும், இந்த மண்ணில் முளைத்த இந்த உடலுக்குமான உயிர்ப்பான இசை என்று பொட்டில் அதிரும் நரம்புகளில் பறைக் குச்சியால் அடித்து அடித்து நொறுக்குகிறார் ராஜா. பறை முழங்க முழங்க இடையில் ஊதும் கொம்பின் இசை கண்ணீரை எங்கிருந்து கொண்டு வருகிறது என்று தெரியவில்லை.

மண்ணையும், உறவுகளையும் இழந்து வெகு தொலைவில் வாழும் எங்கள் அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் இந்த இசையைக் கேட்டால் ஆடியும், அழுதும் தீர்த்து விடுவான். பறையின் தோலில் இருந்து கிளம்பி நரம்புகளை சூடேற்றி முறுக்கும் அற்புத இசை அனுபவம் நாயகன் அறிமுகம் செய்யப்படும் காட்சிக்கான பின்னணியாக ஒலிக்கிறது, கணினியில் இருந்து ராஜாவின் இசையைக் காதுக்குக் கொண்டு வரும் கருவியின் வயர்களை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தி அறுந்து விடாமல் பிடித்துக் கொள்கிறேன். ஆனாலும், அவை துடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

நலிந்து நகர மறுக்கும் வாழ்க்கையைச் சில நேரம் இசை உயிரமுதூட்டிப் பாதுகாக்கிறது, முறிந்த சிறகோடு பறத்தலைப் பற்றிய கனவு காணும் பறவைகளின் துளிர்க்கும் சிறகாய், காற்றடைத்த பையான மானுட உடலின் உணரக்கூடிய ஒற்றை உண்மையாய் இசை பெருகி வழிகிறது. ராஜா நாம் வாழும் காலத்தின் அதிசயம், நம் வாழ்க்கையின் எல்லாவற்றுக்குமான ஒற்றைத் தீர்வாய் உயிர் வாழும் இசைப் புதையல்.

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.

உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல. ,இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mgஅதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

நான் மேலே சொன்னதெல்லாம் மாத்திரைகளை பற்றி ஆனால் சிறுவர்களுக்கோ பரசிட்டமோல் பாணி மருந்தாகவே கொடுக்கப் படுகிறது.முந்திய இடுகைகளில் குறிப்பிட்டதுபோல பரசிட்டமொளின் அளவு உடல் நிறையை வைத்தே தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது உங்கள் குழந்தையின் நிறை 10kg என்றால் உங்கள் குழந்தைக்குத் தேவையான அளவு 150mg என்பதாகும்.(உடல் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த நிறையை கொண்ட பாணி மருந்தை எப்படிக் கணிப்பது?5ml பாணி மருந்தில் இருக்கும் பரசிட்டமோளின் அளவு125mg ஆகும். அதாவது 10kg உள்ள குழந்தைக்கு 5ml பாணி மருந்து ஒரு வேளைக்கு கொடுக்கப்பட்டால் போதுமாகும்.

இந்த அளவு ஒரு நாளைக்கு நான்கு முறை கொடுக்கப்படலாம்.அதேபோல் உங்கள் குழந்தையின் நிறை 17kg என்றால் தேவையான பரசிட்டமோளின் அளவு 255mg ஆகும்( நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்)இந்த 255mg என்ற அளவை கொடுப்பதற்கு தேவையான பாணியின் அளவு 10ml( அதாவது 10ml பாணியில் 250mg பரசிட்டமோல் இருக்கும்.மிகவும் சரியாக 255mg தான் கொடுக்க வேண்டுமில்லை ).

இவ்வாறு கணிப்பது கடினம் என்று நினைக்கும் பெற்றோர்கள், இலகுவாக உங்கள் வைத்தியரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு தேவையான பாணி மருந்தின் அளவை அறிந்து வைத்துக் கொள்வது முக்கியமாகும். ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் பரசிட்டமோலே உங்கள் பிள்ளையின் உயிரைப் பறித்து விடும்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம் ’Sugar Curing 'Vilwa'

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில்  போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக  பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக  பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.

இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை  கொண்டவை. வேர் கசப்பானது. இதன் தாவரவியல் பெயர் கிமீரீறீமீ Aegle marmelos roxb..   இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக  பயன்படுகிறது. இந்த தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட 

வில்வ மரத்தின் பாகங்கள் காய்ச்சல், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. சிறந்த காலரா தடுப்பு மருந்தாகவும் இது  செயல்படுகிறது. வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர கழிச்சல், மூலநோய் நிற்கும். இலையை  இடித்து பிழிந்த சாற்றில் பசுவின் பால் விட்டு கொடுத்தால் சோகை, வீக்கம் போகும்.

வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியம். ஆண்மை அளிக்கும். வில்வ வேர் பட்டையை பச்சையாக 10 கிராம் எடுத்து ஒரு கிராம்  சீரகத்துடன் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் தாது பலப்படும். இதன் மூன்று இலைகளை  சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட் செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். நல்ல ஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும்  உணவு பொருட்களிலுள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து வலுப்பெற செய்கிறது.

வேர், பட்டை, இலை ஆகியவற்றில் எதையாவது ஒன்றை சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கல்யாணமுருங்கை சாறு அதே அளவு  எடுத்து கலந்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதுபோல் இதன் காய் தூளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து உண்டால்  ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும்.

வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால்  சீதபேதி, பசியின்மை குணமாகும். 2, 3 பச்சை இலைகளை தினந்தோறும் காலையில் தின்று வர நீரிழிவு, ஆஸ்துமா நோய்கள் கட்டுப்படுகிறது,  கோழைகட்டாது. வேர்ப்பட்டையை கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் தணிகிறது. பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத்  செய்து குடித்து வர உடலில் வெப்பம் தணியும்.  இதனால் அதிக வேர்வை ஏற்படுவது குறைகிறது. மலச்சிக்கல் வராது.

வில்வ மரத்தின் பட்டை மற்றும் பிசின் பல்வேறு நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மிகச்சிறந்த மூலிகை மரமான  வில்வம் தற்போது சாதாரண இடங்களில் காண்பது அரிதாகிவிட்டது. இது தானாக வளர்வது அரிது. விதைகளை நடவு செய்து தான் வளர்க்க  வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரம் தற்போது சிவன் கோயில்கள் மற்றும் சில மூலிகை பண்ணைகளில்  மட்டுமே உள்ளன. இதன் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் இம்மரம் கைவிடப்பட்டாலும், ஆன்மிக காரணங்களுக்காக  பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களை எளிதாக குணப்படுத்தும் வில்வ மரத்தை அழிவு பட்டியலில் இருந்து மீட்டு அனைத்து இடங்களிலும்  வளரச்செய்ய வேண்டும்.

இரண்டு வேளைக்கு மேல் மூலிகைசாறு வேண்டாம்

வில்வம், அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு இலையில் ஒரு கைப்பிடி  அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்பளர் (250 மில்லி) தண்ணீர் விட்டு சட்டினி போல் அரைத்து அதை சுத்தமான வெள்ளை துணியில்  ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு வெல்லம் அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். சில இலைகள் சில நோய்களை  முற்றிலும் குணப்படுத்தும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு மேல் மூலிகை சாறு குடிக்க கூடாது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு நம்  கையில் தான் உள்ளது.

மூலிகை சூப்

வில்வ இலை அல்லது மற்ற மூலிகை இலைகளை சாறு எடுத்து பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கீரையுடன் சேர்த்து சமைத்து  சாப்பிடலாம் அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம். இந்த சாறு ஒருவருக்கு ஒரு நேரத்திற்கு போதுமானது.


உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.

இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.

1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.

மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.

கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான். ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்

ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு :

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.

அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.

ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.

இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.

ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.

உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும்.

 உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.