Sunday, December 6, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

 வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

"இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா.

"பூனைங்க எல்லாம் உங்களுதா..?"

"ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி.

"உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?"

"நாலு பேருங்க..." ஆதீஸ்வரி.

"சரி... நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?" என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

"என்ன பண்றதுங்க... வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க" செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

இப்படி பண்றீங்களேம்மா.. அதிமுகவினருக்கு கொஞ்சமும் சளைக்காத விஜய் ரசிகர்கள்!

அந்த அதிமுகக்காரர்கள்தான், அம்மா ஸ்டிக்கர் ஓட்டினால்தான் நிவாரண பொருள் வழங்கவிடுவோம் என்று தகராறு செய்கிறார்கள் என்று பார்த்தால், இங்கு ஒரு நடிகரின் ரசிகர் மன்றமும், ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை விரையம் செய்துகொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.


இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் செய்யப்படுவது தர்மம் என்பார்கள். ஆனால், ஒரு டியூப் லைட்டை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, அந்த லைட்டில் வெளிச்சம் வெளியே தெரியாத அளவுக்கு கொட்டை எழுத்தில் தனது பெயரை பொறித்து வைக்கும், அற்ப சமூகத்தில்தான் நாம் வாழ்த்து வருகிறோம்.

ஆனால், அவசர நேரத்தில், இந்த வெத்து விளம்பரங்களுக்காக காலத்தை விரையம் செய்யாமல், உயிர் காக்கும் பணியில் இறங்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள மனிதர்களின் முதல் கடமை. ஆனால், கடலூர் உள்ளிட்ட வெள்ள பாதிப்புள்ள பகுதிகளுக்கு தன்னார்வலர்களால் அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை ஒட்ட வேண்டும் என்று, அதிமுகவினர் கலாட்டா செய்ததாக புகார் வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் குறித்து தகவல் தருமாறு, அதிமுக தலைமை கழகம் வேண்டிக்கொண்டுள்ளது. அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப்போல, நடிகர் ஒருவரின் படத்தை, தண்ணீர் பாட்டிலில் ஒட்டியபடி வினியோகம் நடந்துவருகிறதாம். இதை பெருமையாக ஷேர் செய்துள்ளனர் டிவிட்டரில். ஏம்ப்பா, உயிருக்கு போராடுறவனுக்கு தண்ணி கூட கொடுக்காம, ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை வீண் செய்யனுமா?

என்னம்மா நீங்களும் இப்படி பண்றீங்களேம்மா..

‘உறுமீன்’ திரை விமர்சனம் - சரியான இலக்கு.

ஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.

கலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார். அப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த அவர், அவர்கள் கையால் சாவதைவிட உயிர்துறப்பதே மேல் என்று தன்னை உயிரோடு புதைக்கும்படி கூறுகிறார். அத்துடன் அவர் தன் எதிர்காலம் குறித்து எழுதி வைத்திருந்த ஜென்ம புத்தகத்தையும் உடன் புதைக்கும்படி கூற, அதன்படியே அவர் புதைக்கப்படுகிறார். இந்த 7 நிமிட முதல் தலைமுறை கதை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்பின்னர் கதை நேராக சென்னைக்கு பயணமாகிறது. கதாநாயகன் பாபி சிம்ஹா, பி.இ. படித்துவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார். நண்பர் காளியின் அறையில் தங்கியிருக்கும் அவருக்கு கால் சென்டரில் வேலை கிடைக்கிறது. அலுவலகத்தில் அவரது டீம் லீடராக வருகிறார் கதாநாயகி ரேஷ்மி மேனன். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பதால் அறிமுகம் ஆகிறது.

இந்நிலையில், முதல் தலைமுறையில் எழுதப்பட்ட ஜென்ம புத்தகம், தன் வீட்டு உரிமையாளர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு கிடைக்க, அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் நடப்பதுபோல் தோன்றுகிறது. புத்தகத்தை அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதிலிருந்து புகை வருகிறது. பின்னர் அதை ஒரு சைக்காடிஸ்ட் டாக்டரிடம் காட்ட, அந்த புத்தகத்திற்கும் பாபிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர் கூறுகிறார்.

எனவே, அந்த புத்தகத்தைப் பற்றிய நினைவில் மூழ்கியிருக்கும் பாபி சிம்ஹாவின் வாழ்க்கையில் ரேஷ்மி மேனன் மூலம் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் நபர், தனக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி ரேஷ்மி மேனன் உதவி கேட்கிறார்.

இதனால், அந்த நபரை பின்தொடரும் பாபி சிம்ஹா, அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என்று நெருங்கியபோது, அவர் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். அவர் பாபியின் நண்பர் கலையரசனின் தம்பி என்பதால், அவர்களுக்குள் பகை ஏற்படுகிறது.

தம்பியின் சாவுக்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்த கலையரசன், தம்பியை பின்தொடர்ந்து சென்ற பாபியையும் உண்மையான கொலையாளிளையும் பிடித்து தனி இடத்தில் அடைத்து வைக்கிறார். உண்மை அறிந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற பாபி, நேரடியாக கலையரசனுடன் மோத ஆரம்பிக்கிறார்.

பின்னர் தன்னிடம் உள்ள ஜென்ம புத்தகத்தை படித்தபோது, தனது முன்ஜென்ம வரலாறு அதில் இருந்தது. முதல் ஜென்மத்தில் நண்பரா இருந்து காட்டிக்கொடுத்த கலையரசன், இரண்டாவது ஜென்மத்திலும் வழக்கறிஞரான தன்னை நண்பனாக இருந்து காட்டிக்கொடுத்து சாவுக்கு காரணமாக இருந்தது தெரியவருகிறது. இவர்களின் ஜென்ம பகை தீர்ந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் பாபி சிம்ஹா இரண்டு தோற்றங்களில் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். வக்கீல் தோற்றத்தில் மிடுக்காக வந்து மனதில் நிற்கிறார். ரேஷ்மி மேனனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், அழகுப் பதுமையாக வந்து ரசிகர்களை சுண்டியிழுக்கிறார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடிப்பிலும் சபாஷ் பெறுகிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டுகிறார் கலையரசன். கதா நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறுப்பை உணர்ந்து சரியாக செய்திருக்கிறார். அப்புக்குட்டி, மனோ பாலா, சார்லி, காளி என சிறுசிறு கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

பெரிய படங்களில் பயன்படுத்தப்படும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை, சிறிய பட்ஜெட் படத்தில் முதல் முறையாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் சக்திவேல். மூன்று தலைமுறை கதைகளை சிறப்பாக தொகுத்திருந்தாலும், நீளமான காட்சிகளை தவிர்த்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். தரமான படத்திற்குண்டான காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவுக்கும் சபாஷ் போடலாம்.

மொத்தத்தில் ‘உறுமீன்’ சரியான இலக்கு.

சீரியஸ் ஹீரோவான விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டது. சொல்லாமலே சசி இயக்கியுள்ள இந்த படமும் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்கள் வரிசையில் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கிய கதையில் உருவாகியிருக்கிறது. அதோடு முதல் இரண்டு படங்களிலும் சீரியசான கதையில் நடித்த விஜய் ஆண்டனி, அந்த முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா பாகிஸ்தான் படத்தில் காமெடி கலந்த காதல் கதையில் நடித்தார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு அது பெரிதாக கைகொடுக்காததால், மறுபடியும் சஸ்பென்ஸ் திரில்லர் நாயகனாகவே உருவெடுத்திருக்கிறார்.

அந்த வகையில், இந்த பிச்சைக்காரன் படத்திலும் விஜய் ஆண்டனியை சீரியஸ் நாயகனாகவே பார்க்கலாம் என்கிறார்கள். ஒரு இளைஞன் பிச்சைக்காரன் கெட்டப்பில் சமூக விரோதிகளை எப்படி களையெடுக்கிறார் என்பதுதான் இந்த படமாம். தற்போது அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து விட்ட இப்படத்தை, டிசம்பர் மாதம் இறுதியில் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிச்சைக்காரன் படத்தில் நடித்து வந்தபோதே, சைத்தான் படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தையும் முடித்து விட்டார். இன்னும் பத்து நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டி யுள்ளதாம். அதனால் பிச்சைக்காரன் திரைக்கு வந்து இரண்டு மாதங்களிலேயே சைத்தான் படமும் திரைக்கு வந்து விடுமாம். மேலும், சைத்தான் படப்பிடிப்பு முடிந்ததும் திருடன் படவேலைகளிலும் இறங்குகிறாராம் விஜய் ஆண்டனி. அந்த படத்திலும் அவருக்கு மிக சீரியசான வேடம்தானாம். ஆக, இப்போது நடித்துள்ள பிச்சைக்காரன் மற்றும் சைத்தான், திருடன் ஆகிய மூன்று படங்களிலுமே விஜய் ஆண்டனிக்கு படு சீரியசான வேடங்கள்தானாம்.

மதத்தை மிஞ்சிய மனித நேயம்: இந்து கோயிலில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு முஸ்லீம் இளைஞர்கள் உதவி

 சென்னையில் வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள முடியாத இந்த சூழ்நிலையில் சாதி, மதங்களையும் கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு உதவிகளை செய்து வருகின்றனர்.



சென்னையில் பெய்த நூற்றாண்டு காணாத கன மழை காரணமாக நகரை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச்சென்றது. பல்வேறு பகுதிகளில் முதல் மாடி வரை மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்

நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள், அருகில் இருந்த இந்து கோவில், சமூக நலக்கூடங்கள், பள்ளிகள், மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்ததால், சென்னை பார்த்தசாரதி கோயிலில் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பார்த்த சாரதி கோயிலுக்குள் தஞ்சம் அடைந்துள் மக்களுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் குழுவாக இணைந்து, இன்று உணவு பொட்டலங்களை வழங்கினர். மேலும், மசூதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை முஸ்லீம் இளைஞர்கள் செய்துவருகின்றனர்.

சென்னையில் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள முடியாத இந்த சூழ்நிலையில் சாதி, மதங்களையும் கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக்

கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும்.

அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச் சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செ ல்லும் செயல்முறை தாமதமாகும்.

எச்சில் அளவை குறைக்கும்

செரிமானத்திற்கு முதல்படியே எச்சில்தான். உணவை உடைப்பதற்கான என்சைம் கள் மட்டுமல்லாமல் செரி மான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண் ணீர் குடித்தால், எச்சில் நீர் த்து போகும். இது வயிற்றுக் கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல் லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி வி டும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.

அசிடிட்டியை உண்டாக்கு ம்

அசிடிட்டியால் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்க ளா? அப்படியானால் சாப் பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின்மீது பழி யை போடலாம். தண்ணீர் குடி ப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீன த்தை அது ஏற்படுத்தும். சேச்சு ரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தா து. அதன்பிறகு இரைப்பை சா றுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்க ளின் அளவு குறைந்துவிடும். இ தன் மூலம் செரிமானமாகாத உ ணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர் பாயல் மற் றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத் தும்.

உணவை நன்கு மென்று விழுங் கவும்

உணவை அப்படியே விழுங்காதீ ர்கள்; நன்றாக மென் று உண்ணுங்கள். உணவை மென் று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளி க்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக் க எச்சிலும் உதவும். இது போக மெ ன்று உட்கொண்ட உணவு உடைபடு வதற்கும் உட்கிரகித்துத் கொள்வத ற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மெ ன்று உண்ணுவதால் உள்ள மற்றொ ரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக் கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.

30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்

உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற் குமுன்பே தண்ணீர் குடியுங்கள். உ டல் எடையை குறைத்து ஆரோக்கி யமான மெட்டபாலிசத்தை உண்டா க்க வேண்டுமானால், உணவருந் தும்முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வே ண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த வார இறுதியில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:



நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா பொடிக்கு...

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.



சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,  அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

சுந்தர் சி.யின் அருணாச்சலம் மலரும் நினைவுகள்

 யுடிவி தனஞ்செயன் நடத்திவரும் பாஃப்டா கல்லூரியில் உரையாற்ற சுந்தர் சி. வந்திருந்தார்.

நான் ஒரு மினிமம் கியாரண்டி இயக்குனர், அப்படி இருக்கவே ப்ரியப்படுகிறேன் என்று சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலம் முதல் சொல்லி வருகிறவர். அபூர்வமாக சொன்னதை இன்றுவரை நிலைநாட்டியும் வந்திருக்கிறார்.

நகைச்சுவை படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள சிறந்த குருகுலம், சுந்தர் சி. காமெடிக் காட்சிகளை அவர் எப்படி உருவாக்குகிறார் என்பதை கவனித்தாலே ஒருவர் சிறந்த நகைச்சுவை படத்தை எடுத்துவிட முடியும்.

சுந்தர் சி.யின் படங்கள் பார்வைக்கு எளிதாக தெரியும். ஆனால், அதனை அவர் சாத்தியப்படுத்த எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். முக்கியமாக ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை எடுத்த அனுபவம்.


முப்பது வயதுக்குள் அருணாச்சலம் படத்தை ரஜினியை வைத்து எடுத்தார் சுந்தர் சி. எப்படி இதனை அவரால் சாதிக்க முடிந்தது? சுந்தர் சி.யின் மறக்க முடியாத அந்த மலரும் நினைவு சினிமாவில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் பாடமாக இருக்கும்.

பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை சுந்தர் சி.யிடம் ஏதோ பேச்சுவாக்கில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஒத்த கருத்து உள்ளவர்களிடம் மட்டுமே ரஜினி பணிபுரிவார். மற்றவர்களை அவர் தவிர்த்துவிடுவார் என்றிருக்கிறார். பேச்சுவாக்கில் கடந்து போகும் ஒரு விஷயம்தான் அது. ஆனால், சுந்தர் சி. அதனை மறக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து ரஜினியிடமிருந்து சுந்தர் சி.க்கு அழைப்பு வருகிறது. போகிறார். ஒரு கதை இருக்கு கேட்கிறீர்களா என்று, கோவிலில் மணியடிப்பவன் ஒருவனின் கதையை ரஜினி கூறுகிறார். கதை சரியில்லை என்று சுந்தர் சி.க்கு தெரிகிறது.

கதையை சொல்லி முடித்த பிறகு, கதை எப்படி என கேட்கிறார் ரஜினி..

 பஞ்சு அருணாச்சலம் சொன்னதை மட்டும் சுந்தர் சி. மறந்திருந்தால், சுமாரான கதை என்று சொல்லியிருப்பார்.

ரஜினியும். எஸ்.. எஸ்... என்று சொல்லி அனுப்பியிருப்பார். ஆனால், என்றோ பஞ்சு அருணாச்சலம் சொன்னது அவரது மனதில் இருந்தது. அவர் அந்த சுமார் கதையையும், சூப்பர் நல்லாயிருக்கு என்றார். ரஜினிக்கு மகிழ்ச்சி.

அந்தக் கதையைத்தான் பிறகு கதைவிவாதத்தில் மாற்றி அருணாச்சலமாக்கியிருக்கிறார்கள். ஆக, எதையும், எடுத்த உடனேயே மறுக்கக் கூடாது என்பது சுந்தர் சி. அன்று கற்றுக் கொண்ட பாடம்.

அதேபோல், கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் லாஜிக் பார்க்க தேவையில்லை என்பதையும் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக மாணவர்களிடம் சுந்தர் சி. கூறினார்.

கதைப்படி ரஜினி பணத்தை செலவு செய்வதற்காக நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்ட சூட்டில் அறை எடுத்திருக்கிறார். நாளொன்றுக்கு பல லட்சங்கள் வாடகை உள்ள சூட் அது.

முப்பது நாள்கள் முடியும்போது ரஜினியிடமுள்ள காசு காலியாகிவிடும். அப்போது, ஹோட்டல் மேனேஜர் வந்து ரஜினியை தட்டி எழுப்பி, முப்பது நாள் முடிந்தது என அனுப்பி வைப்பதாக காட்சி. அதாவது, முப்பது தினங்கள் ஆடம்பரமாக இருந்த ரஜினி, ஒன்றும் இல்லாதவராக ஹோட்டலில் இருந்து இறக்கிவிடப்படுகிறார் என்பதுதான் காட்சியின் மையம்.

முப்பது நாள்கள், பல லட்ச ரூபாய் செலவளித்து ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவரை, தூங்கிக் கொண்டிருக்கும் போது, அதுவும் ஹோட்டல் மேனேஜரே வந்து தட்டி எழுப்பி அனுப்ப மாட்டார்கள் என்று சுந்தர் சி. கூறியிருக்கிறார்.

ஆனால், ரஜினி அதனை மறுத்துள்ளார். தட்டி எழுப்பி அனுப்புவது போலவே எடுங்கள். யாராவது படத்தைப் பார்த்து, இது சரியில்லை, லாஜிக் இடிக்கிறது என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள், மாற்றிவிடலாம் என்றிருக்கிறார். அரைகுறை மனதுடன் ரஜினி சொன்னது போல் எடுத்தார் சுந்தர் சி.

இன்றைய தேதிவரை குறிப்பிட்ட அந்தக் காட்சியை யாரும் குறை சொல்லவில்லை. கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் சில நேரம் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்பதை ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்றார்.

திரைப்படத்தில், திரைப்படங்களைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவைப்படுகிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார் சுந்தர் சி.

வெள்ளை விஷம் – சர்க்கரை ( சீனி ) !! வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம் !!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.