Sunday, December 20, 2015

ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது.

உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு, பா.ம.க, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் களத்தில் குதித்ததும் இந்த பிரச்சனையை இனிமேலும் வளர விடக் கூடாது என்று நினைத்தார் போலிருக்கிறது. இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். நடுநடுவே உருக்கமாக அவர் பேசியதை கேட்டால், “தம்பி… இன்னும் இது மாதிரி பாட்டு ஏதாவது இருந்தா சொல்லிடுப்பா…” என்று மக்களும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திவிடுவார்கள். அப்படியொரு உருக்கம்…. கவலை அதில்!

அட்றா அவள. கொல்றா அவளன்னு பாட்டு எழுதுனவனெல்லாம் விட்டுட்டீங்க. (போற போக்குல தனுஷையும் போட்டு தாக்கிட்டாரே) ஆனால் காதல் தோல்வியால் விஷம் குடிச்சு சாவாதே. வாழ்க்கையில உருப்படுற வேலைய பாரு. பெண்கள் பின்னால் சுத்தாதன்னு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதையேன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? அந்த பாடல் முழுக்க முழுக்க என்னுடைய பிரைவஸி. நான் அதை எந்த டி.வி சேனலிலும் வெளியிடல. சினிமாவிலேயும் பயன்படுத்தல. என் அனுமதியில்லாமல் யாரோ அதை திருடி வெளியிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

முப்பது வருஷமா இந்த சினிமா துறையில் இருக்கேன். கால் முட்டி தரையில் படுற மாதிரி இந்த ஜனங்களுக்காக ஆடியிருக்கேன். டாக்டர் கூட, இப்படியெல்லாம் ஆடுனா அது பின்னால பிரச்சனையை கொடுக்கும்னு சொல்லியிருக்கார். அவர் சொன்னதையும் கேட்காம உங்களுக்காக ஆடியிருக்கேன். அப்படிப்பட்ட என்னை ஒரு பாடலுக்காக இவ்வளவு வேதனைப்படுத்துறீங்களே… நான் எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன். நான் குற்றமற்றவன்னு நிரூபிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் பேட்டி ஒருபுறம் வந்து கொண்டிருக்க, சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். நாங்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கோம். கோடிக்கணக்குல பாதிப்பு. சிம்புவின் இமேஜை தகர்ப்பதற்காக ஒரு சிலர் திட்டம் போட்டு சதி செய்திருக்கிறாங்க. ஆனால் அதையெல்லாம் கடவுள் துணையால சமாளிப்போம். சிம்பு மேல எந்த தப்பும் இல்ல. என்னை இந்தளவுக்கு உயர்த்தியது தமிழ் மக்கள்தான். நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன் என்று கூறியிருக்கிறார் டி.ஆர்.

கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு இந்த சிம்புவால் அல்லோகல்லோலப்படுகிறது. தந்தையும் மகனும் சொன்ன இந்த விளக்கம் எடுபடுமா? அது மக்களின் சகிப்புத் தன்மையை பொருத்த விஷயம்.

அஜினோ மோட்டோ….நல்லதா கெட்டதா? ஒரு விரிவான ஆய்வு..!

மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.

இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.

கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.

பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.

அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.

அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.

எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.

சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.

அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.

போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?

விஷத்தன்மை

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்

அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.

புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?

தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..

இதற்கான ஆதாரங்கள்

Sharon fowler, University of Texas, USA
Jock – Samvels – NOHA Board member Lecture on “The dangers and hidder sowiees of processed free glutmatic acid”
Dr. Olney, 5w Brain lesions, Obesity and other disturbences in mice treated with MSG
Mr.Ka He, Department of Nutrition School of public health,
University of Carolina.
Dr. Betty Maritimi, Georgic, Asinomoto, Aspartame & Brain
Tumors Recipe of Death.

2.O கதை என்ன?

பெரிய இயக்குனர்களோ, பெரிய நடிகர்களோ பங்கேற்கும் படம் என்றால் உடனே அந்தப் படம் குறித்து  பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கும்.

ஆனால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.O படப்பிடிப்பு ஆரம்பமாகி இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில் இன்னும் அந்தப் படத்தின் கதையை பற்றி யாரும் விவாதிக்கவில்லை.

ஏற்கெனவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஸ்டுடியோவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் அவர்களாக புகைப்படத்தை வெளியிடும் முன் தப்பித் தவறி எந்த புகைப்படும் வெளியாகாது என படக்குழுவினரே தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் அடுத்த ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்கிறார்கள். 2.O படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என யாருமே எழுத ஆரம்பிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

பெண்களிடம் மன்னிப்பு கேட்டு டி.ராஜேந்தர் உருக்கமான பேட்டி!

கூடா நட்பிருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கவேண்டிவரும் என்று பீப் பாடல் பற்றியான பிரச்னைக்கு டி.ராஜேந்தர் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்லமுடியவில்லை. இதை சதி என்று சொல்லவா இல்லை விதி என்று சொல்லவா? கூடா நட்பு இருந்துவிட்டாலே வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகள் நிச்சயம் வரும்.

என்ன வாழ வைத்த தமிழ் மொழி இது. சினிமாவில் கூட எந்த கதாநாயகியையும் தொட்டு நடிக்காத கதாநாயகனாக இத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறேன். எந்த விதமான கிசுகிசுகளுக்கும், முறைப்படி வாழக்கூடியவன். ஒரு தலை ராகத்தில் தொடங்கி இன்று வரையிலும் பெண்களுக்காவே படம் எடுத்தவன்.

தாய்மார்களின் ஆதரவுடன் வளர்ந்தவன் சிம்பு. சிம்புவுக்கு எந்த பெண்களையும் வேண்டுமென்று புண்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கிடையாது” என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை மிச்சப்படுத்த எளிமையான சில யோசனைகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மடமடவென உலக சந்தையில் ஏகிறிக்கொண்டே செல்கின்றது. அதன் இருப்புகளும் தீர்ந்துகொண்டு தான் செல்கின்றது. சராசரி குடியானவன் என்ன செய்ய முடியும்? அதிகபட்சம் தான் சார்ந்திருக்கும் நிறுவனம், சங்கம், அமைப்புகள் மூலம் எதிர்குரல் கொடுக்க முடியும். அரசுக்கு நாம் படும் அவதிகளை சுட்டிக்காட்ட முடியும். அதனை அரசு ஏற்று அதை நடைமுறைபடுத்துகின்றாதா என்பது வேறு கதை. அடுத்த சந்தியினருக்கு நாம் விட்டு செல்வதெல்லாம் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத வாழ்கை மட்டுமே. எத்தனை இயந்திரங்கள், நவீன கண்டுபிடிப்புகள் இருந்து என்ன பயன். நிம்மியாக சுவாசிக்க காற்றை நாம் விட்டு செல்லபோவதில்லை, குடிக்க குடிநீரை நிலத்தடியில் விட்டுவைக்கவில்லை, நீளும் இந்த பட்டியல்..

சரி பெட்ரோல் விலை ஏறுகின்றது என்கின்ற எரிச்சலை தூரப்போட்டுவிட்டு அதனை சரியாக முறையாக எப்படி பயன்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் எப்படி நல்லது செய்ய முடியும் என்பதனை பார்க்கலாம். சில யோசனைகள்

1. பிடித்துக்கொண்டே இருக்காதே.
வண்டி ஓட்டும் போது கைகளை (இருசக்கர வாகனம் ஓட்டுகையில்) கால்களை (நான்குசக்கர வாகனம் ஓட்டுகையில் கிலட்சில்(clutch) அதிகம் வைத்துக்கொண்டு ஓட்ட வேண்டாம். இது அதிக எரிபொருளை செலவு செய்யும்.தேவையான சமயம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இது பாதிக்கு பாதி எரிபொருளை மிச்சம் செய்யும். அனேகமாக வண்டி ஓட்ட பழகும் போதே இதனை சொல்லி இருப்பார்கள். மேலும் கிலட்சை பிடித்துக்கொண்டு ஓட்டும் போது எஞ்சின் விரைவில் பாழடைந்துவிடும்.

2. சன்னலை திற காற்று வரட்டும்
குளிரூட்டப்பட்ட வாகனத்தில் செல்லும் போது, வெளியே நல்ல தட்பவெட்பம் சூழல் நிலவுகையில் குளிர்சாதன வசதியினை பயன்படுத்தாமல் சாரளத்தை திறந்துவைக்கலாம். இது சுமார் 10% எரிபொருளை மிச்சப்படுத்தும்.

3. நட ராசா
நடக்கும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு நடந்தே செல்லவும். வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். இது உடலுக்கும் நல்லது தானே. சைக்கிள் வாங்கும் வசதி இருப்பின் முடிந்த அளவிற்கு அதனை பயன்படுத்தலாம்.

4. காற்றில்லாத போது அடுத்துக்கொள்
அடிக்கடி வண்டியில் உள்ள காற்றின் அடர்த்தியினை சரிபார்க்கவும். குறைந்த அடர்த்தியுள்ள வாகனங்கள் 50% சதவிகிதம் வரை அதிக எரிபொருளினை ஏப்பம் விடுமாம். பெட்ரோல் போடும் பொழுதே இதை சரிபார்க்கும் வசதி எல்லாம் பெட்ரோல் நிலையங்களிலும் உள்ளது.

5. சீர் கேட்காதே, சீராக செல்
சீரான வேகத்தில் வாகனத்தினை செலுத்தினால் சுமார் 30% சதவிகிதம்வரை எரிபொருளினை சேமிக்கலாம். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் எப்படி சீரான வேகத்தில் செல்ல முடியும் என்கின்ற கேள்வி நியாயமானதே. பீக் அவர் எனப்படும் நேரத்தை தவிர்த்து அதற்கு முன்னரே அலுவலகத்திற்கு பயனிக்கலாம். அதே போல திரும்பவரும் போதும் அப்படி செய்யலாம். அது அவரவர் வேலையின் தன்மையினை பொருத்ததே.

6. கம்முனு கெட
சிக்கலான சிக்னல் இல்லாத ஊரே இல்லை எனலாம். அதுவும் எவ்வளவு நேரம் நிற்கப்போகின்றோம் என்பது கூட நமக்கு தெரியாது. அந்த சூழல்களில் வண்டியினை நிறுத்திவிடுதல் சிறந்தது. முதலில் எரிபொருள் சேமிக்கப்படும், இரண்டு தேவையில்லாத கழிவுக்காற்று, மூன்று சத்தம் குறையும். உர் உர் என்று உருமிக்கொண்டே இருப்பது எரிச்சல்களை ஏற்படுத்தவில்லை?

7. கனத்தை குறை
கனமான பொருட்களை வண்டியில் சுமந்து செல்லாதீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்து செல்லவும். அதிக எடை அதிக எரிபொருள். மூட்டை முடிச்சுகள் போன்றவைகளையும் அகற்றிவிடவும். தேவையற்ற பொடுட்கள் இருக்கும் போது குளிர்சாதனம் செய்ய அதிக எரிபொருள் தேவைப்படும்.

8. சுத்தம் சோறு போடும்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வண்டியினை சர்வீஸ் செய்யவும். ஏதேனும் அடைப்பு இருந்தால் சர்வீஸ் செய்யும் போது சரிசெய்யப்படும். முறையாக சர்வீஸ் செய்யாத வாகனங்கள் நிறைய பெட்ரோல் டீசலை குடிக்கும். பெங்களூரில் வண்டியிலிருந்து வெளியேறும் புகையில் எவ்வளவு நச்சு கலந்து இருக்கின்றது, அதன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதா என்ற சோதனை சான்றிதழ் எல்லா வண்டியிலும் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படுக்கின்றது. இது எல்லா இடத்திலும் வந்தால் நலம்.

9. பேருந்து பயணம்
நல்ல பேருந்து வசதி இருக்கும் ஊர்களுக்கும் இடங்களுக்கும் நம் வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகளை பயன்படுத்தலாம். இது கூட்ட நெரிசலையும் குறைக்கும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.

10. ஒன்றாக செல்லுங்களேன்.
ஒரே/அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் சேர்ந்து ஒரே இடத்திற்கு செல்லவேண்டுமானால் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வண்டியினை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல நட்பும் கிடைக்கும். அதே போல சுற்றி இருக்கும் மாணவர்கள் ஒரே பள்ளிக்கு செல்லவேண்டுமெனில் தனித்தனி வாகனத்திற்கு பதிலாக ஒரு நாள் நீங்களும், மறுநாள் அடுத்த நண்பர் என பேசி அதன்படி நடக்கலாம்.

இவை அனைத்தும் உங்களுக்கு தெரிந்தவை தான். என்றாலும் இது ஒரு நினைவூட்டலே. காலத்தின் அவசியமாக மாறிவிட்டது. போராட்டங்களும் முழக்கங்களும் ஒரு புறம் நடக்கட்டும், நாமும் பங்கேற்போம் அதே சமயம் இவற்றையும் நடைமுறை படுத்தலாமே.!!!

கடைசியாக

என்னிடம் பணம் உள்ளது, நான் எவ்வளவு எரிபொருள் வேண்டுமானாலும் பயன்படுத்துவேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அல்லது வாகனமே வேண்டாம் சாமி எதற்கு? நம்ம முன்னோர்கள் எல்லாம் என்ன காரிலும் பைக்கிலுமா சென்றார்கள் என்று கேட்கலாம். அது நடைமுறைக்கு வந்தால் சந்தோஷம் தான். இவை நம்மால் இயலக்கூடிய சாதாரண விஷயங்கள் தான். நடைமுறைபடுத்திவிட்டால் சிரமம் ஏதும் தெரியாது.

நமக்காகவும், நம் அடுத்த தலைமுறையினருக்காகவும் இதை பற்றி சிந்தித்தே தீரவேண்டும்.

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி!

பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ?

கடந்த  30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன்.  அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, என் உருவபொம்மையை எரிக்கிறீர்கள். அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டேன். கற்பழிப்பு வழக்கில் கைதாகிறவர்கள் சுலபமாக வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனா இவ்வளவு வருசம் தமிழ் சினிமாவிற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உழைச்சிருக்கேன். யரோ சொல்லுறாங்கனு பாட்டைக் கூட கேட்காம, என்ன சொல்லிருக்கேன்னு கூட கேட்காம எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் யாருமே எனக்கு ஆதரவாக பேசவில்லை. என கூட இருந்தவங்க ஒதுங்கிட்டாங்க. ஆனால் இன்றும் சொல்கிறேன், தமிழ் மக்கள் என்றுமே என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சிம்பு என்கிற தனி மனிதனை டார்கெட் பண்ணி என்ன இழிவு படுத்திருக்காங்க, நான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் பண்ற பாட்டுக்கு கேள்வி கேட்டிங்கனா நியாயம்.

நான் ரிலீஸே பண்ணாத பாட்டுக்கு என்னை ஏன் கஷ்டப்படுத்துறீங்க. என்னை இழிவு படுத்தி, காயப்படுத்திட்டாங்க. இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகும் ஒரு சிம்புவா உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் என்றால் தமிழ் மக்களிடம் எனக்கு இருக்குற ஆதரவுதான் காரணம் '' என தெரிவித்துள்ளார்.

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்

புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

* சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

* வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

* நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

* புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும்.

* உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற்கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.

* பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும்.

* பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.

இனி உங்கள் புருவத்தினை அழகா வச்சிக்க முயற்சி பண்ணி பாருங்க, உங்கள் முகமும் அழகா இருக்கும்.

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய்

அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.

* இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.

* இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.

* கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.

* பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம்.

வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப்படுத்தும் இருமலில் இருந்து விடுபடலாம்.

பெண் குரலில் இளையராஜா பாட்டு!- பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்

சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, பாடுவது பெண் என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர். கேரள முதல்- மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, தனது மந்திரிசபை அமையக் காரணமானவர் என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது என்கிறார் இளையராஜா.

அவர் கூறுகிறார்:-

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்யூனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜுரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜுரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.

இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், அடாத ஜுரத்திலும் விடாது பாட முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் ரெஸ்ட் கிடைத்த மாதிரி இருக்கும் என்றார்.

ஜுரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, சரி நீயும் வா என்றார்.

அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது.

மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

அதோடு காவிரியாற்றில் உற்சாகக்குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை? என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட டூயட் பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம் சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

டூயட் பாடலில் அண்ணன், காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி என்று பாட, பதிலுக்கு நான், வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க என்று பாடுவேன்.

சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு யாரோ ஒரு பெண் பாடுகிறாள் என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப் பாடுவோம்:

ஒத்த ரூபா தாரேன் நான்
ஒனப்பத் தட்டும் தாரேன்
ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்
மாட்டப் பாத்து குத்து - இது அண்ணன்.

ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க
ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க
ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள
ஒழிச்சிக் கட்டப் போறோம்- இது நான்.

இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், இனி நீ பாட வரவேண்டாம் என்று அண்ணன் சொன்னால் எப்படி இருக்கும்?

படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

பீப் சாங் விவகாரம் : வருத்தத்தில் இளையராஜா குடும்பத்தினர்

 பீப் சாங் விவகாரம் குறித்து இளையராஜாவிடம் சமீபத்தில் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட விவகாரமும், அது சர்ச்சையாக்கப்பட்டதும் இளையராஜா குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கினார். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தன்னால் முடிந்த உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்தார். இதே போன்று எக்மோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும் நேரில் சென்று சந்தித்தார். கடலூருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வழங்கியதுடன், அவர்களின் சோகத்தையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு 5000 பெட்சீட்களை தனது சொந்த பணத்தில், நேரில் சென்று வழங்கினார். அவர்களுக்கு தேனையான அனைத்து உதவிகளையும் செய்தார்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாத போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தவர்களை பாராட்டுவதற்காக எத்திராஜ் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, உடல் நலனையும் பொருட்படுத்தாமல் 1200 பேருக்கும் நின்றபடியே தனது கைகளால் கையெழுத்திட்டு, சான்றிதழ்களை வழங்கினார். இந்நிலையில், சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பீப் சாங் பற்றி கேள்வி கேட்ட போது இசைஞானிக்கு வந்த கோபம் நியாயமான ஒன்று தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுவதற்காகவே அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றபடி அது எந்த ஒரு சினிமா விழாவோ அல்லது தனிப்பட்ட விழாவோ இல்லை. அந்த விதத்தில் பீப் சாங் விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாக்கப்பட்டு வருவது இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் பெரிதும் பாதித்துள்ளது.

இது குறித்து இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கூறுகையில், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது என் தந்தை தனது உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் 5 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று, மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். வெள்ள பாதிப்புக்கள் குறித்து ஒரு வார காலமாக அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாத போதும் பல இடங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதங்கத்தில் இருந்தவரிடம் அந்த இடத்தில் அப்படி ஒரு கேள்வி கேட்டதாலேயே அவருக்கு கோபம் வந்தது. தயவு செய்து இந்த விஷயத்தை இனியும் பெரிதுபடுத்த வேண்டாம். மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளது. அதனால் இந்த பிரச்னையை இனியும் பெரிது படுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ரோபோ சங்கரிடம் சான்ஸ் கேட்கும் டிவி காமெடியன்கள்

 விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி செய்து புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். அதையடுத்து பல சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பாலாஜிமோகன் இயக்கிய வாய்மூடி பேசவும் படம்தான் அவரை பேச வைத்தது. அந்த படத்தில் குடிகாரர்கள் சங்கத்தலைவராக நடித்த ரோபோ சங்கரை பின்னர் பல படங்களுக்கு புக் பண்ணினார். குறிப்பாக, மாரி, மாயா, ஸ்ட்ராபெர்ரி, திரிஷா இல்லன்னா நயன்தாரா, மய்யம் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். இதில் மாரி படத்தில் ஷோலோ காமெடியனாக நடித்திருந்தார்.

அதையடுத்து, இப்போது ரஜினிமுருகன், வீர சிவாஜி உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் இணைந்து காமெடி செய்வதற்காக அவர் சினிமாவில் ஏற்கனவே நடித்து வரும் காமெடியன்களை கூட்டணி சேர்த்துக்கொள்வதில்லை. மாறாக, தன்னுடன் சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தவர்களையே இணைத்துக்கொண்டு வருகிறார். அதனால், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர ஆசைப்படும் காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அவரிடம் சான்ஸ் கேட்பது அதிகரித்து வருகிறது.

பாஜிராவ் மஸ்தானி - திரை விமர்சனம் மொத்தத்தில்-மாஸ்டர்பீஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு சரித்திர படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் மராட்டிய மன்னர் பாஜிராவ், அவரது இரண்டாவது மனைவி மஸ்தானியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியாகியுள்ள சரித்திர காவிய திரைப்படம் பாஜிராவ் மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், திரைக்கு வந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

பாஜிராவ் பலால் பட் எனும் ரன்வீர் சிங், போரில் பல வெற்றிகளை கண்டவர். அவரிடத்தில் மஸ்தானி எனும் தீபிகாவின் தந்தையும், அரசருமான சத்ரசால், முகலாயர்களிடமிருந்து தன் தாய்நாடான பண்டல்கண்ட்டை காப்பாற்றும்படி கேட்கிறார். மஸ்தானிக்காக, சத்ரசாலுக்கு உதவ முடிவு செய்கிறார் பாஜிராவ், கூடவே அவருடன் காதல் வயப்படுகிறார். மஸ்தானியை பாஜிராவ் காதலிப்பது அவரது மனைவியான காசியாப் எனும் ப்ரியங்கா சோப்ராவுக்கும் தெரியவருகிறது. இவர்களது காதலை ப்ரியங்கா ஏற்று கொண்டாரா.?, மஸ்தானியுடன் போர் புரிந்து அவரது தாய்நாட்டை பாஜிராவ் காப்பாற்றி கொடுத்தாரா..? எனும் கேள்விக்கு விறுவிறுப்பாக பதில் சொல்கிறது பாஜிராவ் மஸ்தானி படத்தின் மீதிக்கதை!

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பாஜிராவ்வாக வரும் ரன்வீர் சிங், மஸ்தானியாக வரும் தீபிகா படுகோனே மற்றும் காசிபாயாக வரும் ப்ரியங்கா சோப்ரா... மூவரும் படத்தின் பெரும் பலம் என்றே சொல்லலாம். அதிலும் ப்ரியங்கா சோப்ரா படம் முழுக்க அசத்தியிருக்கிறார். போர்க்கள காட்சியில் ரன்வீர், தீபிகாவின் வீரம் மற்றும் சண்டைக்காட்சிகள் 'வாவ்' சொல்ல வைக்கிறது.

படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. சொல்லவே வேண்டாம்... படத்தில் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு அழகாக செதுக்கியிருக்கிறார். கதையாகட்டும், திரைக்கதையாகட்டும், வசனங்களாகட்டும்... எல்லாமே சிறப்பாக உள்ளது. காதல் காட்சிகளிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி சஞ்சய் லீலா பன்சாலியின் திறமை வெளிப்படுகிறது. கூடவே படத்தின் இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாமும் சேர்ந்து ''பாஜிராவ் மஸ்தானி'' படத்தை 'மாஸ்டர்பீஸ்' படமாக்கியுள்ளது.

சரித்திரகால கதையில், ரொமானட்டிக் கதையையும் சேர்த்து ஒரு பக்கா படமாக, அனைவரும் பார்க்கும்படியுமான படத்தை தந்துள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

!''

”இளையராஜாவின் இசையின் ரசிகன் நான்” - சொல்கிறார் ஜேம்ஸ் வசந்தன்

 கடந்த வியாழக்கிழமை அன்று, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சிம்பு மற்றும் அனிருத்தின் ’பீப் பாடல் வெளியானது குறித்து கேள்வி எழுப்பினார். இதில், எரிச்சலடைந்த இளையராஜா, ’எந்த நேரத்தில் வந்து என்ன கேள்வி எழுப்புகிறாய். உனக்கு அறிவு இருக்கிறதா?” என்று திட்டினார்.

இதற்கு, இளையராஜாவிடம் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்பலாமா? என்று ஆதரவும், நிருபரை தாக்கியது தவறு என்று பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனமும் தெரிவித்தது.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ”ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்” என்று ட்வீட் செய்தார்.

இதற்கு, இளையராஜாவின் ரசிகர்கள் ஜேம்ஸ் வசந்தனை கடுமையாக திட்டி தீர்த்தனர். இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தை ஜேம்ஸ் வசந்தன் நீக்கி விட்டார்.

தற்போது தான் இளையராஜாவை விமர்சனம் செய்தற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

அதில், ”இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)

எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.

30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துகூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.


மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்