
அது... அதர்வா, ஜெயம்ரவி இருவரது கடுமையான உழைப்பு. எல்லாப் படங்களிலும் உழைப்பு உண்டு என்றாலும், விளையாட்டை மையப்படுத்திய ஈட்டி, பூலோகம் படங்களில் ஹீரோக்களின் உழைப்பு கண்முன் தெரிந்தது. அதை நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைத்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ஈட்டி படத்தில் தேசிய போட்டிக்காக அதர்வா பயிற்சி பெறும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன.
பூலோகம் படத்திலும் குத்துச்சண்டைபோட்டிக்காக ஜெயம்ரவி தயாராகும் காட்சியில் சிரத்தை எடுத்து உழைத்திருந்தார். இவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்த ஹீரோக்களுக்கு நாம் வெற்றியைக் கொடுப்போம் என்ற தார்மீக எண்ணத்திலேயே ஈட்டி பூலோகம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கி இருக்கிறார்கள் மக்கள். இதன் மூலம் மக்கள் ஒரு உண்மையையும் புரிய வைத்துள்ளனர். பாடுபட்டு உழைத்தால் வெற்றியைத் தருவோம் என்பதே அது.
0 comments:
Post a Comment