Thursday, December 17, 2015

சபாஷ், சரியான '2' போட்டி

தென்னிந்தியத் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே தங்களுடைய படைப்புகளால் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், இரண்டாமவர் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி.

ஷங்கர் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார். ராஜமௌலி, 'மகதீரா' படத்தை இயக்கிய பிறகு உச்சத்திற்குப் போனார். தற்போது 'பாகுபலி' படத்தின் வெற்றி மூலம் ஷங்கர் புரியாத ஒரு சாதனையையும் புரிந்துவிட்டார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து தங்களது '2'ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' நேற்று சென்னையில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது. படத்தின் பெயரே '2.0' என்பதுதானாம். ராஜமௌலி 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இன்று ஹைதராபாத்தில் ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே 40 சதவீத படப்பிடிப்புகள் இரண்டாம் பாகத்திற்காகவும் முடித்து விட்டார்கள் என்பது பழைய பழைய செய்தி.

ஷங்கரின் '2.0' படமும், ராஜமௌலியின் 'பாகுபலி 2' படமும் வரும் போது கண்டிப்பாக சமூக வலைத்தளங்களில் இந்த '2' படங்களின் வசூலைப் பற்றியும், தரத்தைப் பற்றியும் காரசாரமான விவாதங்களும், மோதல்களும் எழப் போவது உறுதி.

2.0 மட்டும் தான்! எந்திரன்-2 அல்ல..!

ஷங்கர் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'சிவாஜி, எந்திரன்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு '2.0' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தில் படத்தின் பெயரை '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அந்தப் பெயருடன் '2' என்பதை கூடச் சேர்த்துவிடுவார்கள். ஆனால், 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'எந்திரன் 2' அல்லது 'எந்திரன் 2.0' என்றும் வைக்காமல் அதிலும் வித்தியாசமாக '2.0' என்று மட்டுமே வைத்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் கூட இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போவது குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூட '2.0' நாளை படப்பிடிப்பு ஆரம்பம்' என்றுதான் குறிப்பிட்டிருந்தார். இதுதான் படத்தின் இறுதியான தலைப்பு. படத்தை தமிழைத் தவிர மற்ற மொழிகளில் வெளியிடும் போது '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டால் அதுவும் வசதியாகத்தான் இருக்கும்.

ஹிந்தியில் முன்னணி நடிகராக உள்ள அக்ஷய்குமாரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தை ஹிந்தியில் வெளியிடும் போதும், உலக அளவில் வெளியிடும் போதும் ஹிந்தி ரசிகர்களிடையேயும் வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

சிம்புவால் கவிழ்ந்த சொம்பு? விஜய் மில்டன் படத்திலிருந்து டிஆர் கல்தா!

“தன்மான சிங்கம் டிராஜேந்தரை, இப்படி அவமான சின்னம் ஆக்கிவிட்டாரே அவரது மகன்?” என்று அச்சச்சோவாகிறது கோடம்பாக்கம். பெற்ற கடமைக்காக அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இப்படியொரு ஷாக். பத்து எண்றதுக்குள்ள படத்தையடுத்து விஜய் மில்டன் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன் வந்தாரல்லவா? அதில் இப்போது டி.ஆர் இல்லையாம். ஐயய்யோ… அவரை வச்ச இடத்துல இன்னொருத்தரை வச்சுப் பார்க்க, கோடம்பாக்கத்திலே நடிகரே இல்லையே?

ஏனில்லை? அவர் யாரென்பதுதான் இந்த செய்தியின் கடைசி முடிச்சு! அதற்கு முன் டி.ஆரும் விஜய் மில்டனும் இணைந்ததெப்படி? பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு முன்பே டிஆரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கதான் நினைத்திருந்தார் விஜய் மில்டன். ஒரு அலேக் பலேக் தங்கச்சி கதையுடன் டிஆர் வீட்டு வாசலை தட்ட, ஒரிஜனல் தங்கச்சி வந்தால் கூட, “ஓரமா உட்காந்துட்டு ஒண்ணும் பேசாம ஓடிப்போயிடு” என்று சொல்லிவிடுகிற டிஆர், சினிமா தங்கச்சி என்றால் சும்மாயிருக்க மாட்டாரே? “சொல்லுங்க கோலிசோடா” என்று கூறிவிட்டு உட்கார்ந்துவிட்டாராம். இவர் கதை சொல்ல சொல்ல, குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது தீர்த்துவிட்டாராம்.

“யோவ்… நானும் எவ்ளோ தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை சொல்லிட்டேன். எங்க வீட்ல வெள்ளம் வர வச்சுட்டியேய்யா…” என்று மேலும் இரு டம்ளர் கண்ணீர் வடித்தவர், “யோவ்… என்ன ஆனாலும் சரி. இதுல நான்தான் ஹீரோ” என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால் காலக்கொடுமை, விக்ரம் குறுக்கே வந்து சுமார் பதினைந்து கோடி அநாமத்தாக கரைந்தது.

போகட்டும்… இப்போதைய நிலைமை என்ன? கடந்த சில தினங்களாக டிஆர் அண்டு பேமிலிக்கு ஏற்பட்டிருக்கும் அந்தஸ்து சரிவில், விஜய் மில்டனின் கதையும் சேர்ந்து உருள… தன் படத்தின் ஹீரோவை அதிரடியாக மாற்றிவிட்டார். இப்போது டி.ஆர் வேடத்தில் நடிக்கவிருக்கும் அந்த சிறந்த நடிகர், நம்ம தேவயானி புருஷர் ராஜகுமாரன்!

அட்றா சக்க… அட்றா சக்க!

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு !!!

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன் முதன்மைப் பணி.

கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி என்னதான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது

இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.

கார்டன் தந்த சுதந்திரம்! வேகமெடுக்கும் போலீஸ்!

விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு நாலாபுறத்திலிருந்தும் சப்போர்ட் என்கிற சித்தாந்தம் சிம்பு அனிருத் விவகாரத்தில் செல்லுபடியாகாது போலிருக்கிறது. இந்த விஷயத்தில் பீப் பிரதர்ஸ்சை காப்பாற்றுவதற்காக கார்டனின் கதவை தட்டினார்களாம் இருவரது தரப்பிலிருந்தும்! ஆனால் அங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும்படி கண்ணசைவு காட்டிவிட்டதாம் கார்டன்! இப்படியொரு ஆன்ட்டி கிளைமாக்சை இருவர் குடும்பமும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் இப்போதைய நிலை.

இதற்கிடையில் சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது போலீஸ். ஆமாம்… இன்று சென்னை வருவதாக இருந்த அனிருத் என்னவானார்? கிளம்ப வேண்டாம். கனடாவிலேயே இருக்கவும் என்று இங்கிருந்து அறிவுறுத்தப்பட்டதாம். அதுமட்டுமல்ல, இன்னும் சில தினங்களில் கிளம்பி மும்பை போய்விடு என்றும், அங்கு அனிருத் செய்ய வேண்டிய இசைப்பணிக்காக ஒரு ரெக்கார்டிங் தியேட்டர் வாடகைக்கு பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் கோவை போலீசிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலையிலிருக்கும் இருவரும், நேரில் செல்லாமல் தத்தமது வழக்கறிஞர்களைதான் அனுப்புவார்கள் போலிருக்கிறது. இதற்கிடையில் தன் மகன் சதி வலையில் சிக்கிவிட்டான் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கப் போன டிஆரிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் கமிஷனர். “முதலில் உங்க பையனை கொண்டு வந்து போலீஸ்ல ஒப்படைங்க” என்று அவர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இன்னொருபுறம், அனிருத்தின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள். அடிக்கடி போலீஸ் வந்து விசாரித்துக் கொண்டிருப்பதால்தான் இந்த ஓட்டம்.

புள்ளைங்க தறுதலைன்னா பெற்றவங்களுக்கும்தான் பிரச்சனை! ஐயோ பாவம்

அர்னால்ட் எந்திரன் 2.0வில் நடிக்காதது ஏன்? தயாரிப்பு தரப்பு தந்த விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படம் எந்திரன் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

அனைவரும் அர்னால்ட் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்ட நிலையில், திடிரென்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இதில் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கின்றார்.

இதுக்குறித்து தயாரிப்பாளர் தரப்பில் "ஒப்பந்த முரண்பாடுகள்... இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும்மான இடைவெளியை நிரப்புவதில் இருக்கும் உண்மையான சவால் இது. உங்களின் ஆதரவுக்கு நன்றி திரு.பாட்ரிக் ஸ்வார்ஷ்நெகர்” என்று லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா- பரபரப்பு தகவல்

சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இதுக்குறித்து பாடலாசிரியர்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் இளையராஜா சென்ற போது அங்கு ஒரு நிருபர் பீப் சாங் குறித்து கருத்து கேட்டார்.

உடனே கோபமான இளையராஜா ‘உனக்கு அறிவு இருக்கா....எங்கு வந்து எதைப்பற்றி கேட்கிறாய்’ என கோபமாக திட்ட, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

எந்திரன் 2வில் ஈழக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர். ரகுமான்

ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பாட வேண்டும் என்று பலர் ஆசைப்பட இக்கலைஞர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து இவர்கள் பல வெற்றி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து இன்னும் மென்மேலும் வளர சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

    MC SAI, Rapper (UK) - Theme Music (Title)
    Olynn Thanasingh (Germany) - Roja Kadhal (Title)
    Arjun, Singer (London) - Tune in Baby (Title)

தமிழர்கள் செய்யும் வீண் செலவும் தவிர்க்கும் வழிமுறையும்!

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். இவர் கூறும் இந்தத் தத்துவத்தின் ஆழத்தை அறியாமல் இருப்பவர்களே வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழப்பவர்கள் ஆவார்கள். தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை அனைவரின் மனதிலும் தனக்கு இப்பொருள் இருந்தால், இந்த வசதி இருந்தால் நான் மகிழ்வாக இருப்பேன் என்ற மனநிலை ஆணிவேராய் வேரூன்றி இருக்கிறது.

தன் வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க அடிப்படை பணம். இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது? அப்படி சம்பாதித்த பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவு செய்வது? என்ற திட்டமிட்டு செயல்படும் மனப்பான்மை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை என்றே கூறலாம். அவ்வாறு இல்லை என்றால் தமிழர்கள் கொஞ்சமும் அறியாத, தெரியாத, பழக்கப்படாத அயல்நாட்டுப் பொருட்களை வாங்கி நுகரும் தன்மைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மளமளவென சரிந்த போது, அதற்கு முக்கியக் காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அமெரிக்க மக்களின் ஊதாரித்தனமான செலவைத்தான். அம்மக்கள் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி வாங்கி குவித்ததால் வந்த அவல நிலையே இது என்றனர். ஒரு தனி மனிதனின் வீண் செலவுகள் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை எப்படி வீழ்த்தக் காரணமாக இருந்தது என்பதற்கு உதாரணமே அமெரிக்கா.

தற்போது அந்தச் செயல்பாடு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள் அடைந்துள்ளன.

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்றைய மக்கள் சில ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு பணத்தைச் செலவு செய்யாமல் இருப்பதில் நமக்கென்ன நன்மை? என இன்றைய சமுதாய மக்கள் கேள்வி கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இவ்வாறு கூறிக்கொண்டு நம் இளைய சமுதாயத்தினர், செய்யும் செலவு கணக்கைப் பார்க்கும் போது கொஞ்சம் மலைப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இன்றைய நிலையில் வாழும் தலைமுறையினர் மூன்றில் ஒரு பங்கை அனாவசியச் செலவிற்காக பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் சொல்வது நமக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது.

தமிழர்களின் எந்தெந்த வகையில் செலவு செய்கின்றனர் என்று பார்த்தால் மலைப்பு அதிகரிக்கிறது.

1. பொருட்கள் வாங்குதல் (ஷாப்பிங்):
தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதைப் பிடிக்காத மனிதர்களே இல்லை எனலாம். காரணம் தனியார்மயம், தாராளமயம் ஆனதின் விளைவாக அனைவரும் இன்று அறிமுகம் இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கிராமம் முதல் நகரம் வரை இருக்கும் ஆண்,பெண் இரண்டு தரப்பும், சம்பளம் வாங்கிய முதல் நாளே தனக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
இதில், நகரத்தில் வசிக்கும் மக்களே குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுகளும், ஆடம்பரமான செலவுகளும், அழகுசாதனப் பொருட்களை வாங்கும் செலவுகளையும் கூட்டிக் கொள்கின்றனர்.

2.அலைபேசி:
பெண்ணுக்கும் அலைபேசிக்கும் எப்போதும் பெற அவசரம் காட்டக்கூடாது. ஏனென்றால் ஒன்றுபோனால் வேறு நல்ல வகை வரும் என நகைச்சுவையாக ஆண்கள் மத்தியில் ஒரு புதுமொழி உண்டு. அந்த வகையில் அலைபேசியைப் பயன்படுத்தாதவர்களை இன்று காண்பதே அரிதாகி விட்டது. இதில் அலைபேசிக்கு (recharge) செய்வதிலேயே முக்கால்வாசி பணம் செலவாகிவிடுகிறதென்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதல் (recharge) தவிர இணைய இணைப்பு கொடுத்து, பாடல்களை பதிவிறக்கும் செய்வது, காணொளிகளை பதிவிறக்கம் செய்வது, (caller tune) மாற்றுவது, ஏன் அலைபேசிகளையே மாற்றுவதென சம்பாதித்தப் பணத்தை இவ்வழியில் வீணடித்துக்கொண்டு இருப்பவர்களே இங்கு அதிகம்.

3. திரைப்படம்:
திரைப்படம் என்பது இன்று மக்கள் அதிகம் விரும்பிய பொழுது போக்குகளில் ஒன்று. இதில் இருபிரிவினர் உள்ளனர். வீட்டில் வரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் படத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு பிரிவினர். திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்கள் மற்றொரு பிரிவினர். இதில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்களே அதிகம். இதில் ஆண்களே முதலிடம் வகிக்கின்றனர். தனக்குப்பிடித்த கதாநாயகனின் படத்தை முதல்நாளே காண வேண்டும் என்பதற்குப் பல நூறு ரூபாய் செலவு செய்கின்றனர். ஏன் திரும்பத்திரும்ப அதே படத்தைக் காணும் ஆட்களும் உண்டு. இவ்வாறான வழியில் பணத்தை வீண் விரயம் செய்வதே வாடிக்கையான ஒன்றாகி விட்டது இன்றைய இளம் தலைமுறையினருக்கு.

4. உணவகம்:
வீட்டில் அம்மா கையாலோ, மனைவி கையாலோ சமைத்து சாப்பிட்டு வந்த மக்கள், இன்று அதை விட நல்ல சாப்பாடு உணவகத்தில் தான் கிடைக்கிறது என்றெண்ணி இதற்காகப் பணத்தை வீண் செலவு செய்பவர்கள் அதிகம். முன்பெல்லாம் எப்போதாவது உணவகத்திற்குச் சென்றவர்கள், இன்று வாரத்தில் 2,3 நாட்களிலும், கட்டாயமாக வாரத்தின் இறுதி நாட்களிலும் உணவகத்திற்குச் சென்று ஆரோக்கியமற்ற உணவை உண்டு உடலைக் கெடுத்துக்கொள்ளும் கூட்டம் நாட்டில் ஏராளமாய் உள்ளது.

5. நொறுக்குத் தீனிகள்:
இதில் இரு பாலினமும் இந்தச் செலவுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிகமாக இருக்கிறது. டீ,காபி,வடை,பஜ்ஜி,பர்கர்,பீட்சா,பேல்பூரி,கெண்டகி சிக்கன் என நொறுக்குத் தீணிக்காகச் செலவு செய்யும் உணவுப் பட்டியல் நிகழ்கிறது. இதில் பாக்கெட் பணத்தைக் காலி செய்வதில் டீ கடைகளின் பங்கே பிரதானமாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் இதற்காகச் செலவு செய்வதை இங்கிருக்கும் எவரும் தவிர்க்க முடியவில்லை என்பதை விட, தவிர்க்க விரும்பவில்லை என்றேதான் கூற வேண்டும்.

ஆதலால் கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை நமக்கு எது தேவையோ, நம் பண வரவுக்கு எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதே வீண் பண விரயத்தைத் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாகும். மேலும் நமக்கு செய்யவிருக்கும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.
இதில் மின் கட்டணம், பள்ளி, கல்லூரிக் கட்டணம், வருமான வரிக் கட்டணம் இவ்வாறு செலுத்த வேண்டிய பல கட்டணங்களை நேரத்திற்குக் கட்டாவிட்டால் பின்னாளில் அபராதத் தொகையும் சேர்த்துக் காட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறோம்.

சிலர் முக்கிய நிகழ்வுகளுக்கு பயணப்பட வேண்டியிருக்கும் சூழலை வைத்துக்கொண்டு பொறுமையாக இருப்பர். நிகழ்வு நெருங்கிவரும் இறுதி நேரத்தில் டிராவல்ஸ் மற்றும் தட்கல் முறையில் பயணச்சீட்டை அதிக விலை கொடுத்து வாங்கி பயணப்படுவர். இதுபோன்று திட்டமிடாமல் இருத்தலின் விளைவால் வீண் பணவிரயம் செய்வதையும் பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

நேர்மையாக உழைத்து வரும் உன்னதமான பணத்தை வீண் செலவுக்கு விரயமாக்குவதை விட அதைச் சேமித்து வைப்பதே சிறந்த முறையாகும். பணத்தைச் சேமித்து வைப்பதே சேமிப்பு இல்லை, பணத்தைச் சிக்கனமாக செலவு செய்வதும் ஒரு சேமிப்புதான் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டாலே பொருளாதாரத்தில் தமிழகம் முன்னடைவு பெறும் என்பதில் ஐயமில்லை.

காலையிலும் இரவிலும் தொலைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கலாம் !!

ஒரு படத்தில் வடிவேல் கிட்ட மயில்சாமி சொல்லுவார் இந்த தாயத்தை கட்டிக்கிட்டு நீ இரவு 12 மணிக்கு கூட சுடுகாட்டிற்கு போகலாம் என்று சொல்லுவார் அதற்கு வடிவேலு நாங்க ஏண்டா 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போறோம் காச தாட போறேன் என்று சொல்லுவார் இது ஒரு நகைசுவையாக இருந்தாலும் நிறைய சிந்திபதற்கு விடையம் இருக்கிறது அதை போல இரவு 12 மணிக்கு மேலதான் இந்த மாதிரியான ராசிக்கல் போன்ற விளபரங்கள் வருகிறது சில முன்னணி தொலைகாட்சிகளில் அதை பற்றிய ஒரு பார்வை.

ராசிக்கல் உடம்பு இளைக்க ஏற்ற, செக்ஸ் பிரச்சனையா இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று நம்பர் தந்திருக்கும் தெரியாமல் மிஸ்கால் குடுத்துவிட்டால் அடுத்த நிமிடமே நமக்கு அழைப்பு வரும் முதலில் ராசிக்கல் விளம்பரத்தை பார்த்தவுடன் ஏமாந்து வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 2000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் அதன் உண்மையான மதிப்பு 5 ரூபாய் மட்டுமே மந்திர தந்திரங்கள் செய்தது என்று கூறி விற்கப்படுகிறது. உடம்பு இளைக்க ஏற்ற தரப்படும் மருந்து சாதாரண எதிர்ப்பு சக்தி கூட இல்லாத மருந்து.செக்ஸ் பிரச்சனை பலருக்கும் இருக்கிறது 52 வகையான ஆயுர்வேத மூலிகையால் செய்யப்பட்டது இதை நீங்கள் சாப்பிட்டால் அறை மணி நேரத்திற்கும் மேல் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லுவார்கள் வாங்கிய பின்பு 5 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத மருந்து என்று அவர்களுக்கு தெரியும் ஆனால் இதன் விலை 4000

இவர்கள் அனைவரும் வடநாட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னயில் ஏதாவது ஒரு பெரிய வீட்டை வாடகை எடுத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்துபவர்கள் ஆனால் நீங்கள் போனில் கேட்டால் டெல்லியில் இருக்கிறோம் உங்கள் முகவரியை அனுப்பினால் உங்கள் வீட்டுக்கே ஒரு வாரத்தில் அனுப்பி வைத்து விடுகிறொம் என்பார்கள் அங்கு வேலை செய்யும் நபர்கள் பெரும்பாலும் உண்மையை சொல்ல மாட்டார்கள் சென்னயில் ஏதோ மூலையில் தான் இருப்பார்கள் ஆனால் டெல்லியில் இருப்பதாக சொல்லுவார்கள் இதில் அனுப்பப்படும் தரமில்லை மாற்றி அனுப்புங்கள் என்று கூறினால் பதிலே இருக்காது.

இதில் ஏமாறுவது அப்பாவி ஏழை மக்கள் தான் அதுவும் அன்றாடங்காய்ச்சிகள் என்பது தான் வேதனையான விஷயம்

சித்தார்த்தின் கருத்து எவ்வளவு உண்மையாகிவிட்டது - 5 வருடம் கழித்து வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் தீவிரமாக உதவிகள் செய்தனர்.

சென்னை மட்டுமின்றி கடலூர் பகுதிகளிலும் சித்தார்த் சென்று உதவிகள் செய்தார். மழையால் சித்தார்த்தும் பெரிதாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தத் தடையும் சித்தார்த்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் சித்தார்த் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இளைஞர்கள் மத்தியில் இடம்பிடிக்க பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோக்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் என இப்போது வாட்ஸப், முகநூல் உள்ளிட்ட தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் முகநூல் குழுக்களை இணைப்போம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ தற்போது மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. நாம் வாழும் உலகம் எவ்வளவு அவசரமாக இருக்கிறது, எவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது என்பதை மும்பையில் நடந்த குண்டு வெடிப்பை மேற்கோள் காட்டி சித்தார்த் பேசிய ஆங்கிலப் பேச்சு இப்போதைய நிலைக்கு அப்படியே பொருந்தும்படி இருக்க அதை அதிகம் பகிர்கிறார்கள்.



மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது எல்லா மீடியாக்களும், டிவிக்களும் விடாது பேசினார்கள் அப்படியே சில நாட்கள் கழித்து நானும் என் நண்பர்களும் அதே மும்பையில் அதிகாலையில் நடந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்,உண்மையில் இவர்கள் மறந்துவிட்டார்கள்’; என்பதுதான் எனக் கூறும் போது கண்டிப்பான உண்மையாகவே படுகிறது அந்த வீடியோ. நாம் வாழும் தலைமுறைகள் வயதை அடிப்படையாகக் கொண்டு இடைவெளியில் இல்லை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. ஒரு நிகழ்வுக்கு சில மணி நேரங்களோ, அல்லது நாட்களோ தான் அங்கீகாரம் என்பதை விளக்கும் வீடியோவாக வெள்ளம் - பீப் பாடலால் மறைக்கப்பட்ட நிலையைக் கொஞ்சம் அதிகமாகவே உணர்த்துகிறது எனலாம்.

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கவிஞர் பட்டத்தை வைத்துக்கொண்டு கல்யாண மண்டபம் முதல் எத்தனை வழிகளில் சம்பாதித்துக்குவிக்கமுடியுமோ அத்தனை வழிகளில் கோடிகள் குவித்தவர் வைரமுத்து. ஆனால் தன் வாழ்நாளில் பொதுப்பிரச்சினைகளுக்காக சல்லிக் காசை வெளியே எடுக்கமாட்டார்.

இதோ கோரமுகம் காட்டி சென்னை மக்களை சூரையாடிச்சென்றதே மழை, இதற்கும் கூட தன்னிடமுள்ள பழைய துணிகளைக்கூட தரமனமில்லை அவருக்கு.
இந்த நிலையில் டெல்லியில் வைத்து அவருக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்களாம்
அது தொடர்பாக வைரத்தின் மக்கள் தொடர்பாளர் அனுப்பியிருக்கும் அறிக்கை இதோ;

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள்.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 16ஆம் தேதி பிற்பகல் விமானத்தில் கவிஞர் வைரமுத்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

அனிருத்தை வேண்டாம் என்றார் ஹரி! அவரது சாபம்தானோ இதெல்லாம்?

ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார் டீல் பண்ணுவது போலவே பண்ணுவார். கோவில் படத்தில் கூட சிம்பு இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டார். அவரது சட்டாம்பிள்ளை கதைகளை கேட்டால், மனுஷனுக்கு இவ்வளவு சூடு ஆகாதுப்பா என்று ஹீரோக்களுக்கு மனது பரிதாப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இப்போது ஹீரோக்கள் வரிசையில் ஹரியிடம் சிக்கி, கழண்டு ஓடியவர் அனிருத்! சிங்கம் 3 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். ஆனால் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அனிருத்துதானாம். ராவெல்லாம் கண் விழிச்சு, பகலெல்லாம் குட்டித்தூக்கம் போடுகிற அன்வான்ட்டட் அக்லி பழக்கம் அனிருத்தையும் ஒட்டிக் கொண்டது. அதற்கெல்லாம் காரணம், இப்போது கூடா நட்பில் சிக்கி குழி எது பழி எது என்று தெரியாமல் ஓடக் காரணமாக இருந்த ‘அவர்’தான்.

கம்போசிங்குக்காக தொடர்ந்து மூன்று நாட்கள் அனிருத் ஆபிசுக்குப் போன ஹரிக்கு அனிருத் போட்ட ட்யூன்கள் எதுவுமே செட் ஆகவில்லை. உறங்கியும் உறங்காமலும் ட்யூன் போட்டால், ராகமா வரும்? மாறாக ஹரிக்கு கோபம்தான் வந்தது. தம்பி… உனக்கும் எனக்கும் சரிபட்டு வராது என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம்.

அது கிடக்கட்டும்… ஒரு ஜோக்! சமீபத்தில் பேஸ்புக்கில் வந்தது. “அனிருத் கொடும்பாவி எரிப்பு” என்பதுதான் தலைப்பு. பக்கத்தில் ஒரு படம் போட்டிருந்தார்கள். அதில் ஒரு ஸ்டேண்டில் ஒரே ஒரு ஒல்லி ஊதுவத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. (கிரிகேட்டர்லாம் சினிமாவுக்கு வெளியில்தான் இருக்காங்க போலிருக்கு!)

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?பழைய கைத்தொலைபேசிகளை விற்கவோ தானமாக கொடுக்கவோ வேண்டாம் ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்கள் கண்டிப்பாக படித்து உங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்

நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில்
மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல்
தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது
தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.

நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஷங்கரின் எந்திரன்2 அக்ஷய்குமார்தான் வில்லன்!

இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன் அதிகாரபூர்வமான ஷுட்டிங் துவங்கிவிட்டது. எந்திரன் முதல் பகுதியை விட, இந்த பார்ட் 2 செம ஸ்டிராங்காக வரும் போலிருக்கிறது. காரணம்… எந்திரன் 2 ன் தயாரிப்பு நிறுவனம் அப்படி. லைக்கா என்றால் சொல்லவே வேண்டாம். எளிதில் ‘பொருள்’ விளங்கும். அதற்கேற்றார் போல இந்தப்படம் 300 கோடி செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று அந்த நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் புகைப்படத்தில், ஷங்கருக்கும் ரஹ்மானுக்கும் நடுவில் நிற்பது பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். ரஜினிக்கு வில்லனாக நடிப்பதும் அவர்தானாம். முதலில் கமலிடம் கேட்கப்பட்டு, அதற்கப்புறம் ஆர்னால்டு வரைக்கும் வலை விரித்து, கடைசியில் அக்ஷய்குமாரிடம் வந்து நின்றுவிட்டார் ஷங்கர்.

தெறி படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி, அவரை சூப்பர் ஸ்டார் என்று பாராட்டிவிட்டு, நிஜ சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வந்துவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் இவரை என்னவென்று பாராட்டி ட்விட் போடுவாரோ?

லைக்கா நிறுவனத்திடமிருந்து வந்த பத்திரிகை செய்தி கீழே-

Please find below the Press Release for Lyca Productions, Superstar Rajinikanth Starring, Director Shankar’s 2.0 (Sequel of Enthiran the Robot)

The Much Awaited Shooting of India’s Biggest Movie Superstar Rajinikanth Starrer Director Shankar’s next magnum opus “2.0”, the sequel of Enthiran the Robot has finally started in chennai 0n 16th of December (Wednesday).

The producer of this film Lyca productions were planning a grand launch for the film, but due to the recent chennai floods, the film makers decided to start the shoot in extremely simple manner.

Superstar Rajinikanth and the lead lady Amy Jackson were shooting for the film when Mr. Akshay Kumar who is doing the equally important role in the film and Chairman of Lyca Group Mr. Subas Karan, Oscar Award Music Director AR Rahman and other joined the crew consisting of cinematographer Nirav Shah, Art Director Muthuraj, VFX Supervisor Srinvas Mohan at the first day shoot.

Ace dialogue writer jayamohan (Tamil) is paring up with shankar for the first time. Editing handled Antony while Oscar Award Winner Rasool Pookutty handling the Sound Designing.

The movie is being shot in 3D made with top techinicians from all over the globe making it a complete world class film. Legacy Effects from USA, the world No.1 Animatronics company who worked on movies like Jurassic Park, Iron Man, Avengers has been signed in for this movie.

Special costumes are being designed by Mary.E.Vogt (Quantm Effects) who has done famous costumes for Tron, Watchman are also the part of 2.0.

This team also consists of Transformers fame Action Director Mr.Kenny Bates, VFX are handled by Life of Pi fame John Huges, Walt from Taufilms.