அழகான குழந்தை தன்னுடையதுதான் என்று போலிசாரிடம் நிரூபிக்க ஒரு பிச்சைக்காரி போரட வேண்டியிருந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோலிகோடு மாவட்டத்தில், நாடபுரம் என்று ஊருக்கு அருகில் உள்ள கலாச்சி என்னும் பகுதியில், கடந்த திங்கள் கிழமை, ஒரு பிச்சைச்காரி காண்பவரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் ஒரு அழகான 4 மாத குழந்தையை வைத்திருந்தார்.
அதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஏனெனில் தாயின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும், குழந்தையின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது.
எனவே அக்குழந்தையை அவர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்தனர்.
ஆனால் அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று வாதாடினார். போலிசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில், போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.
அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று அழுது புரண்டிருக்கிறார். அவரின் உறவினர்கள் சிலர், அதே பகுதியில் வசிப்பதாக கூறியதால், போலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்தார்கள்.
அப்போது அவரின் உறவினர்கள், ஒரு ஏழு வயது சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அந்த சிறுமி, அக்குழந்தையின் சகோதரி என்று கூறப்பட்டது. அவர்களும், அந்த குழந்தை அவருடையதுதான் என்று கூறினர்.
மேலும் அந்த குழந்தை அவரின் சகோதரியிடமும், உறவினர்களிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதை பார்த்த போலிசார், கொஞ்சம் இறங்கி வந்தனர்.
அதன் பின், அவரையும், அக்குழந்தையும் அவரின் உறவினரோடு அனுப்பி வைத்தனர்.
தான் பெற்ற குழந்தை தன்னுடையதுதான் என்று நீரூபிக்க அந்த தாய் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
கேரளாவின் கோலிகோடு மாவட்டத்தில், நாடபுரம் என்று ஊருக்கு அருகில் உள்ள கலாச்சி என்னும் பகுதியில், கடந்த திங்கள் கிழமை, ஒரு பிச்சைச்காரி காண்பவரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தன் கையில் ஒரு அழகான 4 மாத குழந்தையை வைத்திருந்தார்.
அதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
ஏனெனில் தாயின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும், குழந்தையின் நிறம் மற்றும் தோற்றத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தது.
எனவே அக்குழந்தையை அவர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்தனர்.
ஆனால் அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று வாதாடினார். போலிசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில், போலிசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.
அவரோ அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று அழுது புரண்டிருக்கிறார். அவரின் உறவினர்கள் சிலர், அதே பகுதியில் வசிப்பதாக கூறியதால், போலிசார் அவர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்தார்கள்.
அப்போது அவரின் உறவினர்கள், ஒரு ஏழு வயது சிறுமியுடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
அந்த சிறுமி, அக்குழந்தையின் சகோதரி என்று கூறப்பட்டது. அவர்களும், அந்த குழந்தை அவருடையதுதான் என்று கூறினர்.
மேலும் அந்த குழந்தை அவரின் சகோதரியிடமும், உறவினர்களிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டதை பார்த்த போலிசார், கொஞ்சம் இறங்கி வந்தனர்.
அதன் பின், அவரையும், அக்குழந்தையும் அவரின் உறவினரோடு அனுப்பி வைத்தனர்.
தான் பெற்ற குழந்தை தன்னுடையதுதான் என்று நீரூபிக்க அந்த தாய் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
0 comments:
Post a Comment