Sunday, December 27, 2015

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்

ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்

ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்

ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்
ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்

ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
 பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
 என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
 என்று சொல்லலாம் என்றாலும்,
 "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
 மகன் + மகள்
 பெயரன் + பெயர்த்தி
 கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
 எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

 நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை

 தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

 ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

 சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

 பரன் + பரை - ஏழாம் தலைமுறை
 ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
 என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
 (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
 பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
 என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
 இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 

பூலோகம் தன்னை தானே சுற்றி, ரசிகனையும் சுற்ற வைத்து மகிழ வைக்கிறது-திரை விமர்சனம்.

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

ராசமாணிக்கம் பரம்பரைக்கும், நாட்டு மருந்து பரம்பரைக்கும் நடுவே நடக்கும் குத்து சண்டை போட்டிதான் இரு கோஷ்டிகளுக்கான கவுரவம்! போட்டியினால் ஏற்பட்ட தோல்விக்கு வெட்கப்பட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார் ஜெயம் ரவியின் அப்பா. குழந்தையாக இருக்கும்போதே, சாவுக்கு காரணமான மற்றொரு பரம்பரை குத்து சண்டை வீரனை ஜென்ம எதிரியாக நினைக்கிறார் ரவி. வளர்ந்து பெரியவனாகி (?) (நிஜமாகவே மனுஷன் கட்டுமஸ்தாக தளும்பி நிற்கிறார்) தன் அப்பா சாவுக்கு காரணமானவரின் மகனை போட்டுத் தாக்குகிறார். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த சண்டையே அவரை போரில் மனம் திருந்திய அசோக சக்கரவர்த்தி போலாக்குகிறது. இனி சண்டையே வேண்டாம் என்று கிளம்புகிறவரை, வம்புக்கு இழுக்கிறது லோக்கல் சேனல் ஒன்று.

திட்டமிட்டு வேறொரு சாம்பியனுடன் மோத வைத்து, அதை லைவ் டெலிகாஸ்ட் செய்கிறார்கள். அங்கும் தான் ஏமாற்றப்பட, வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார குத்துசண்டை வீரன் ஒருவனுடன் மோத வேண்டிய சூழலை வலிய உருவாக்குகிறார் ஜெயம் ரவி. எருமை கிடா வெயிட்டும், ஒட்டகத்தின் உயரமும் கொண்ட அந்த வெள்ளைக்காரனை இவர் எப்படி வெற்றி கொண்டார் என்பதுதான் க்ளைமாக்ஸ். நடுவில் வரும் ஜெயம் ரவி த்ரிஷா காதல், பற்பசை ட்யூபின் மூடியளவுக்கு கூட பிரயோஜமில்லை என்பதெல்லாம் இந்த படத்திற்கு தேவையில்லாத ஒன்று. காதலே இல்லையென்றாலும் இந்த படத்தின் சுவாரஸ்யம் குன்றிமணியளவுக்கு கூட குறைந்திருக்கப்போவதில்லை!

உள்ளூர் மேளத்திற்கு பிறகு பூ வைக்கலாம். முதலில் வெளிநாட்டு வில்லனை பற்றி பேசிவிடுவோம். நாதன் ஜோன்ஸ்! ஏர்போர்ட்டில் வந்து இறங்கும்போதே, நம் உள்நாட்டு மியூசிக்குக்கு லேசாக தலையாட்டியபடி நடந்து வரும் அழகென்ன? தனக்கு பார்சலில் பெண் உடையை அனுப்பிய ரவியை தேடி, அதே பெண் உடையில் தேடி வந்து ஏரியாவை கதிகலங்க அடிப்பதென்ன? வேர் இஸ் பூலோகம்… என்று வெறிகொண்டு திரிவதென்ன? ஒட்டவே ஒட்டாத முகமாக இருந்தாலென்ன? நமக்கும் பிடித்துப் போகிறது அவரை. சண்டையில் இந்த மாமிச மலையை ஜெயம் ரவி புரட்டி எடுப்பது போல நினைப்பதே கூட பொருத்தமற்றதுதான். ஆனால் அதையும் நம்ப வைக்கிறார்கள் திரைக்கதையாளரும், பைட் மாஸ்டரும்!

ஜெயம் ரவிக்கு பனிரெண்டு ஜாதக கட்டத்திலும், வெற்றி மாதா உட்கார்ந்து அருள் பாலிக்கிறாள் போலும்! சொல்லி சொல்லி அடித்திருக்கிறார் பூலோகத்தில். போட்டியில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட தன்னுடன், நாதன் ஜோன்சை மோத வைக்க அவர் செய்யும் தந்திரங்கள் எல்லாமே ‘கிளாப்ஸ்’ ஏரியா. அதே போல அந்த குத்துசண்டை போட்டிக் களத்தில், சற்றே துள்ளலாக குதித்து பல வருஷ பகையை கண்களில் காட்டி, முரட்டு வேகத்துடனும், அசுர பலத்துடனும் அவர் மோதுவதெல்லாம் நார் தசைப்பிடிப்பு சமாச்சாரம்! (ஷுட்டிங் நடந்த தினங்களில் ஐயோடெக்சில் குளித்து, அமிர்தாஞ்சன் ஸ்டிராங்கில்தான் பல் விளக்கியிருப்பார் போல) நடுவில் ஒரு பாடலில் இவர் மயான கொள்ளையில் சாமியாடுவதாக வேறு காட்டுகிறார்களா? ஏதோ அம்மனே நேரடியாக வந்து குத்து சண்டை போட்டியில் இறங்கிவிட்டதை போல திடுதிடுக்கிறது தியேட்டர்.

நீ பொறுக்கின்னா, நான் எச்சப் பொறுக்கி… என்று பிரகாஷ்ராஜ் டயலாக் பேசினால், எப்படியிருக்கும்? ஆரவாரமாகிறது தியேட்டர். அதற்கேற்ற கேரக்டர்தான் அவருக்கும். கார்ப்பரேட் முதலாளிகள், எப்படியெல்லாம் நெருக்கடி தந்து தன் வசம் இழுக்கிறார்கள் என்பதை, கம்யூனிச சிந்தனையோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். காற்றைலையை எப்படி பணமாக்கலாம் என்று அவர் போடுகிற கணக்குகளை, நிகழ்கால போட்டிகளோடு ஒப்பிடத் தயங்காது மனசு.

மச்சம் காட்டுகிறார் த்ரிஷா. நடுநடுவே, ஆமாம்… இந்த படத்துக்குன்னு ஒரு ஹீரோயின் இருக்காருல்ல? என்று நினைத்துக் கொண்டு காண்பிக்கிறார்கள் அவரை. பட்… ஓ.கேம்மா!

வசனம் பிரபல இடதுசாரி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆயுதத்தை தீட்டி மார்க் போட்டுக் கொண்டேயிருக்கிறார். அவ்வளவும் நியாயம். “சந்தேகப்படணும், நமக்கு நல்லது செய்றோம்னு சொல்லிட்டு செய்ற எல்லா விஷயங்களையும் நாம சந்தேகப்படணும்” போன்ற வசனங்கள் ஒரு ஸ்மால் உதாரணம். முக சிவப்பழகு கிரீம் கம்பெனியையும் விட்டு வைக்க வில்லை ஜனநாதனின் வசனங்கள்.

மரண கானா, மயானக் கொள்ளை பாட்டு என்று ஸ்ரீகாந்த் தேவாவுக்கு பொறுத்தமான கொலக் குத்துப்பாடல்கள்தான் படத்தில். பின்னணி இசையிலும், லேசாக கவனிக்க வைக்கிறார் சன் ஆஃ தேவா!

சதீஷின் ஒளிப்பதிவு, திரைக்கதையோடு சேர்ந்து கொண்டு விறுவிறுவென நகர்கிறது. படத்தையும் நகர்த்துகிறது.

இப்படியொரு விறுவிறு ஆக்ஷன் படம் ஏன் இத்தனை நாட்கள் பொட்டியில் உறங்குச்சு என்பதுதான் பெரிய சந்தேகம்… ஒருவேளை பிரகாஷ்ராஜ் மாதிரியான கார்ப்பரேட் கலகங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.

எனிவே… பூலோகம் தன்னை தானே சுற்றி, ரசிகனையும் சுற்ற வைத்து மகிழ வைக்கிறது.

ஒரு பீப் பாடல் திசை திருப்பி விடும் என்று நான் நினைக்கவில்லை' சீமான்

சிம்பு மன்னிப்பு கேட்டால் பீப் பாடலை மன்னித்து, மறந்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் வழக்கில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் முற்றுப்புள்ளி பெறாத இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறும்போது 'பீப் பாடல் தவறானது. இதற்காக தமிழக மக்களிடம் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து இந்த பீப் பாடலை மறந்து விடலாம்' என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக தமிழக மக்களை மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து இந்த விவகாரம் திசை திருப்புகிறதா? என்ற கேள்விக்கு 'இந்த ஒரு பாட்டு மக்களை திசை திருப்பும் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கையில் நமது மக்களின் இனப்படுகொலையின் போது பதறாத மக்கள், இந்த ஒரு பாடலுக்கு இவ்வளவு பதறுகிறார்களே என்பதை நினைக்கும் போது சற்று வேதனையாக உள்ளது.

இந்தப் பாடலை கேட்காவிட்டால் நாளடைவில் மறைந்து விடும். இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பேச வேண்டியதில்லை.

ஆனால் ஒரு பாடல் இவ்வளவு பெரிய செயலை திசை திருப்பி விடும் என்று நான் நினைக்கவில்லை' என்று சீமான் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ.....

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க தூ..' எனக் காறித் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ.........' எனக் காறித் துப்பினார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போல் பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர்.

கோபத்தில் எகிறிய கேப்டன்... கடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உனக்கு பதில் சொல்ல முடியாது... அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார். பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.

நாய்... நாய்... சென்னை விமான நிலையத்தில் ‘ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை ‘நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

மீண்டும் டெல்லியில்... இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை இந்தாண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆங்கிரி பேர்டாக மாறினார்.

தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... அப்போது அவர் கூறிய, ‘தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாசமாக அழைத்த விஜயகாந்த்... கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை, சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, புரியாத விஜயகாந்த், என்ன கேட்டீங்க... பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார். கோபப்படும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நட்பாக பேசி, டெரர் கிளப்பிய தருணம் அது.

அடி வாங்கியவர்கள்... இது தவிர வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது அடித்தது, ரசிகர்களை அடித்தது என அவரது கோப வரலாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், விஜயகாந்த் மனம் சொல்வது படி கேட்டு இயல்பாகவே நடந்து கொள்வதாக சப்பைக்கட்டு கட்டுபவர்களும் உண்டு.

மீண்டும் சர்ச்சை... இந்த சூழ்நிலையில் தான் இன்று செய்தியாளர்களைப் பார்த்து காறி துப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜயகாந்த். ஏற்கனவே கடந்த வாரம் செய்தியாளர் ஒருவரைப் பார்த்து இசையமைப்பாளர் இளையராஜா, கோபமாகப் பேசியதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

வைரல்... இந்நிலையில், விஜயகாந்த் செய்தியாளர்களைக் காறி உமிந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. ஒரு பக்கம் இது செய்தியாளர்களைப் பார்த்து துப்பியது கிடையாது; ஊடக முதலாளிகளைப் பார்த்து துப்பியது என செய்தியாளர்களே சமாதானப்படுத்துகிறார்கள்....

அவரும் ஓனர்தானே.. மற்றொருபுறம்.. விஜயகாந்த் கூட டிவி சேனல், செய்தி சேனல் நடத்துகிறார்... அப்ப அவர் மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறாரோ தம் மீது? என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. மிகவும் சாதாரணமான அரசியல் கேள்விகளுக்கு  இப்படி துப்பி துப்பியே பதில் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் "துப்பி கெட்ட" கேப்டன் என்றுதான் பட்டம் கிடைக்கும்!

ஸ்மார்ட் போன்கள் வேஸ்ட் ! ஓல்ட் போன்கள்தான் பெஸ்ட் ! – ஆய்வு ரிசல்ட்

சமீப காலமாக சகலர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் புழ ங்குவதைக் முடிகிறது.இப்படி விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலும் சிலருக்கு கவுரவம். ஆனால் தற்போதைய ஸ்மார்ட் போன்களை விட பத்தாண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பழைய போன்களே சிறப்பானது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.சிக்னல்கள் கிடைப்பதில் ஸ்மார்ட்போன்களை விட சாதாரண போன் கள் 7 மடங்கு கூடுதல் செயல் திறன் கொண்டதாம்.கிளாஸ், உலோகங்கள் மற்றும் மெலிதான மேற்புறம் போன்றவை காரணமாக ஸ்மார்ட்போன்கள் சிக்னல்களை பெறுவதில் குறைவான செயல்பாடு கொண்டுள்ளது என் கிறது அந்த ஆய்வு. பிளாஸ்டிக் மேற்புறம் இருந்த பழைய நோக்கியா போன்களில் இந்த சிக்கல்கள் இல்லையாம். அதுபோல பேட்டரிகளின் பயன்பாட்டிலும் பழைய போன்களே சிறப்பாக இருந்தது என்கிறது அந்த ஆய்வு.

இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

mAH குறியீடு எண்: ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.

1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும்.

இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்பு களுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளி கேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும். இரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரி களைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது.

அதிக பிக்ஸெல் கொண்ட திரை: இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது. இந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெசல்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும்.

ஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல. சொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.

ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்: இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது? நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம்.

மிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளி கேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில் மால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும்.

அதிக ‘கோர்’ எனில் கூடுதல் திறன் ப்ராசசர்: சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப் படுத்து கின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றது தான். ஒரு ப்ராசசரில் அதிக ‘கோர்’ இருப்பதனாலேயே, குறைவான ‘கோர்’ இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் ‘கோர்’ என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் ‘கோர்’ (Core) என்கின்றனர். ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது.

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர் களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப் பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும், ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல் திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது. போனுடன் வரும் சார்ஜர்: மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லது தான்.

ஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்ற வினா எழலாம்.உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது.

ஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம். எனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/ 41/43/46. இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டை யும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்…கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம். திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/) தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர் தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.

புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு,  புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது. ஆனால் இந்த புரோட்டா வினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக் கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.

புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக் குறையால் மைதா மாவி னால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.

ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்சாயில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த நச்சு ரசாயனம் மாவில் உள்ள புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.

உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்…

பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் அமிடிசிடம், ராணி எப்போதும் சோகமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், அரசரே மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது என்றார்.

இதனைக் கேட்ட மன்னன், கவலைப்பட வேண்டாம் ராணி, உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார். அரசவையினைக் கூட்டி, பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ஏதேனும் வழி உள்ளதா என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.


அதில் வயதான ஒருவர், மன்னரே, பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும். மாளிகையினருகில் ஏராளமான மரங்களும் வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும். அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்றார். இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின் விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார் மன்னர்.

ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்-பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்-பட்டன. வானத்தைத் தொடுவதற்குப் போட்டி-யிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடி-களிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறை-யில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது.

யூப்ரடீஸ் நதியிலிருந்து ஹைட்ராலிக் என்ஜின்மூலம் நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநரகளின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ்-பெற்றதாகும்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 400 இல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதினார். பாக்தாத்துக்குப் பக்கத்தில் கி.மு. 600 ஆம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் விக்ரம்!

’10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் இயக்குநர் திரு ஆகியோர் படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். ஜனவரி முதல் வாரத்தில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இந்நிலையில், டிசம்பரில் சென்னையை கடுமையாக வெள்ளம் பாதித்தது. மக்கள் பலரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து சென்னை சகஜ நிலைக்கு மீண்டும் திரும்பி கொண்டிருக்கிறது.

கடுமையான வெள்ள பாதிப்பிலும், சென்னை மக்கள் எவ்வாறு மீண்டு எழுந்தார்கள் என்பதைக் கூறும் வகையில் பாடல் ஒன்று தயாராகி இருக்கிறது. அப்பாடலை இயக்க இருக்கிறார் விக்ரம்.

இப்பாடலை சென்னையின் முக்கிய இடங்களில் படமாக்குவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார். இப்பாடலில் தோன்ற தனது திரையுலக நண்பர்கள் பலரிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார் விக்ரம்.

ரத்தப் கொதிப்பை தடுக்க உதவும் உணவுகள்!



நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் மூன்று நபருக்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு உடையவராகத் தான் இருக்கின்றார். இது உலகெங்கிலும் உள்ள ஆய்வு முடிவு. குறிப்பாகச் சொல்லப்போனால், 30 வயதினை அடையும் முன்பே 20-25 சதவீத மக்கள் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூட்டு வலி, முதுகு வலி போல், முதலில் எந்த அறிகுறியும் பலருக்கு ரத்தக் கொதிப்பு காட்டுவது இல்லை. அநேகருக்கு பல காலம் ரத்தக் கொதிப்பு இருந்தும், நலமோடு இருப்பது போலவே இருப்பர். மாரடைப்பு (அ) பக்கவாதம் போன்ற பாதிப்புகள் திடீரென ஏற்படும்போதே ரத்தக் கொதிப்பு பாதிப்பு தெரியவரும்.

இதன் காரணமே நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் ஒருவரையும், மருத்துவர் சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்துக் கொள்ள சொல்கின்றனர். ஒரு 35 வயது மனிதன் சரியான ரத்த அழுத்த நிலையில் வாழும்போது அவன் ஆயுள் சுமார் 75 வயது செல்ல முடியும். இளவயதிலேயே ரத்தக் கொதிப்பு எனும்போது அவன் ஆயுள் சுமார் 20 வருடங்கள் குறைந்து விடுகின்றது. ரத்தக் கொதிப்பிற்கும், சர்க்கரை நோய்க்கும் நிரந்தர தீர்வு என்பது இல்லை. நல்ல கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

40-50 வருடங்கள் முன்பு வரை ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் என்றால், மருத்துவர்கள் அவர்களை டென்ஷன் உள்ள வேலை, கடும் உழைப்புள்ள வேலை இவைகளிலிருந்து கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.

ஆனால், இன்று நிலைமை வேறு. மிக நல்ல மருந்துகள் ஒருவரின் வாழ்க்கை நிலைமையினை காப்பாற்றி விடுகின்றன. ஒருவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு அபாயம் உள்ளதினை அவர்களே தெரிந்துக் கொள்ளும் சில அறிகுறிகள்:

* எதிலும் அதிக ஆர்வமின்மை.

* அதிக எடை.

* ரத்த உறவுகளில் யாருக்கேனும் இந்த பாதிப்பு இருப்பது.

* 35+

* மாதவிடாய் நின்ற பெண்மணிகள்.

* புகை, மது பழக்கம் உடையவர்.

* கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள்.

* உடல் உழைப்பு இல்லாதோர்.

இப்படி அதிக ரத்த அழுத்தம். உணவில் கவனம் செலுத்தினால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்.

முதலாவதாக, சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்துவிட்டுப் பழக வேண்டும். ரத்தக் கொதிப்பு என்பது ரத்தக் குழாய்களையும் இதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் ரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். ரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது உதவி செய்யும். போதுமான ஓய்வு அவசியம். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலால் ரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது.

இறைச்சி உணவுகளைக் குறைத்து, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

வெள்ளைப் பூண்டு, ரத்தக் கொதிப்பைத் தணிக்கும். பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

ரத்தக் கொதிப்புக்கு மன அமைதியின்மையும் ஒரு முக்கியக் காரணம். கோபம், பொறாமை, பகை, கவலை போன்ற எதிர் உணர்ச்சிகள் மூளையைப் பாதிப்பதோடு, ரத்தக்கொதிப்பையும் அதிகமாக்குகின்றன. எனவே எப்போதும் மனதை அமைதியான எண்ணங்கள், மகிழ்ச்சியால் நிரப்புவது அவசியம்.

பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்,

2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;

இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?

கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க

பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்புகிறார்)

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்..

அதற்கும்,

ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க..

ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேர்ம நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்..

உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா... இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க...

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக விஜயகாந்த் காறி துப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சுதந்திர இந்தியாவுக்குள் ஒரு அந்நிய நாடு – பாண்டிச்சேரி அரிய தகவல்!

இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டிருந்தாரு இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே என்று? இந்த பாண்டியை எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது – ஆனால் பாண்டியின் வடிவமைப்பு 1674ல் இருந்து 1962 வரை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசின் கட்டுமான பணி ஆச்சர்யமான ஒன்று.

என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி 1962னு கேட்பவர்களுக்கு முதலில் பதில் கூறிவிடுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் நாம் விடுதலை பெற்றோமே தவிர பாண்டி பிரஞ்சு அரசாங்கத்தின் கண்ட்ரோலில் தான் இருந்தது 1962 வரை. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் இந்த நாட்டை இந்தியாவுக்கு விட்டு கொடுத்த போது அங்கிருந்த அனைவரிடமும் கேட்கபட்ட ஒரே கேள்வி – பிரெஞ்சு நாட்டினராய் பிரெஞ்சு பாஸ்போர்ட்டுடன் இருக்க வேண்டுமா அல்லது இந்திய பாஸ்போர்ட் வேண்டுமா என்று அதனால் தான் இன்று வரை பல பாண்டி நண்பர்கள் பிரெஞ்சு குடியுரிமையில் இருக்கின்றனர்.

1954ல் நாட்டை விட்டு கொடுத்தாலும் இந்தியாவின் கான்ஸ்டிடியூஷனுக்கு வந்தது என்னமோ 1962 ஆம் ஆண்டு தான். அவர்களின் குடியரசு தினம் 16 ஆகஸ்ட் – சுதந்திர‌ தினம் நவம்பர் 1 என்பதாகும். இதுக்கிடையில் பல கோணங்களில் யோசித்து அருமையாக வடிவமைக்கபட்ட பாண்டியில் பல தெருக்கள் ஏன் பீச் முனை கூட நேர் வகிடு எடுத்து வாரினால் போல் ஒரே நேர் கோட்டில் தான் இருக்கும். முதல் வீட்டில் இருந்து பார்த்தால் கடைசி வீடு கரெக்டாய் கோடு கிழித்த மாதிரி இருக்கும் அனேக தெருக்கள்.

ஒரு வீடு கூட ஆக்கிரமிப்பில் கொஞ்சம் முன்னாடி ரோட்டை ஆக்ரமிச்சி அல்லது கொல்லை புறத்தை ஆக்ரமிச்சி கட்டினது இல்லை. அவர்களின் ட்ட்ரெயினேஜ் என்னும் கழிவு நீர் வெளியேற்றம் இன்னும் பர்ஃபெக்ட்டாய் கடலில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு உள்ளது. ஆக்ரமிப்பு அலட்சியம் என்ற ஒன்றே புது பாண்டி குடியிருப்புகளீல் மற்றும் தமிழக நகரங்களில் வெள்ளத்தை உண்டு பண்ணிய உண்மை காரணம். இப்ப தெரியுதா யார் தப்புனு?

இன்னொரு தகவல் :தமிழை தாய் மொழியாய் கொண்ட இரண்டாவது மாநில பெருமை பாண்டிக்கு உண்டு.

இளையராஜாவுக்குக் குவியும் பாராட்டுகள்

தமிழ்நாடும், தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர்களும் கடந்த இரண்டு வார காலமாக 'பீப் சாங்'கைப் பற்றிப் பேசிப் பேசி தங்களது காதுகளை மோசனமான ஒரு பாடலைக் கேட்டு கெடுத்துக் கொண்டுவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது என்று கேட்க நினைத்ததே அதற்குக் காரணம். ஒரு கேவலமான பாடலைக் கேட்ட காதுகளுக்கு இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' பாடல்கள் மூலம் நம் மண்ணின் இசையைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இசை என்பது ஒரு வரம், இசை என்பது என்பது ஒரு தெய்வீகம், இசை என்பது ஒரு கடவுள் என்று இசையைப் பற்றிப் போற்றிப் பேசுபவர்கள்தான் அதிகம். நல்ல இசை என்பதுதான் நம்மையும், நம் குணத்தையும் பேணிப் பாதுகாக்கும். அப்படி ஒரு இசைதான் 'தாரை தப்பட்டை' படத்தில் உள்ளதாக இளையராஜாவின் அனேக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல திரையுலகில் உள்ள பலரும் இந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும் தமிழ் மண்ணின் இசை மீது ரசிகர்களை திரும்ப வைக்கவும் உதவும் என்கிறார்கள்.

சமீபத்திய சில இளம் இசையமைப்பாளர்கள் கரடு முரடான பாதையில்தான் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்மை சாந்தப்படுத்தும், நெகிழ வைக்கும் இசைதான் நீண்ட நாட்கள் நிலைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கிறார்கள்.

இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் பாடல்களைப் பற்றி அவரின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். “தாரை தப்பட்டை - மண்ணின் மனம் அதன் மிகச் சிறப்பில்...'பாருருவாயா...' என்னுடைய தேர்வு...தெய்வீகம் அதன் மிகச் சிறப்பில்...வின்டேஜ் ராஜா...ராஜா ராஜாதான்..” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்கள் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம்!

நம் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது.

இந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின்சார இணைப்புகள், ஓய்வூதியம், கருணை வேலை மனுக்கள் உள்ளிட்டவை ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. மத்திய ஊதிய குழு கடந்த 24.3.2008ல் ஓர் அறிக்கையை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், தேசிய விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களை குறைக்க வேண்டும். விழாக்காலங்களில் மற்ற மதத்தினரும், விருப்பமுள்ளவர்களும் பணிக்கு வரலாம் என்று கூறியுள்ளனர். இதுக் குறித்து சில பொது நல வழக்குகளும் பல்வேறு மாநில கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.

ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம். பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் இதோ:

இந்தியா – 21
பிலிப்பைன்ஸ் – 18
சீனா, ஹாங்காங் -17
தாய்லாந்து -16
மலேசியா, வியட்நாம் – 15
இந்தோனேசியா- 14
தைவான், தென்கொரியா-13
சிங்கப்பூர்-11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து-10
செர்பியா, ஜெர்மனி-9
பிரிட்டன், ஸ்பெயின்-8
மெக்ஸிகோ-7

பீப்-தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்; சட்டரீதியாக சந்திப்போம்

 பீப் பாடல் சர்ச்சைக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று டி.ராஜேந்தர் உறுதிபட தெரிவித்தார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் ‘யூடியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்" என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினார் டி.ராஜேந்தர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் டி.ராஜேந்தர் பேசும்போது, "செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். நான் வாழ்க்கையில் என்ன செய்தாலும், என்னுடைய மனது மட்டும் எப்போதும் உடைந்து போனதில்லை. காரணம், என்னை வாழ வைத்த தெய்வமும், என்னுடைய ரசிகர் பெருமக்களான தமிழக மக்கள் தான். தமிழகத்தில் எவ்வளவோ காலகட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள். எங்களுக்கு பக்கபலமாக நின்று அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்னவர் என் மனைவி. எத்தனை இடி வந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான் குரல் கொடுப்பான்." என்று தெரிவித்தார்

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பூலோகம். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது.

படத்தில் வட சென்னை பாக்ஸர்கள் பற்றி காட்டியிருப்பது சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பூலோகம் கடந்த 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்! அரிய தகவல்கள் இங்கே உள்ளது..!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

ஆன் லைன் மோசடியில் நைஜீரியா தம்பதியிடம் 31/2 லட்சத்தை இழந்த பெங்களூரு ஜட்ஜ்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இன் றளவும் இருக்கவே செய்கின் றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத் தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கில் போலீஸ் எச்சரிக்கை விடுவதும், மீடியாக்கள் அவ்வப்போது நடந்த மோசடி களை வெளிச்சமிட்டு காட்டினாலும் மோசடி தொடர்கதைதான்!

இது குறித்து ஆராய்ந்த போது கல்வி, வியாபாரம், சிகிச்சை, பணி உட்பட பல்வேறு நோக்கங்களுக் காக, இந்தி யாவுக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளில், ஆப்ரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக, நைஜீரியா, காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூரு மற்றும் சென்னை வருகின்றனர்.இவர்களில் பெரும் பாலானோர், விசா காலம் முடிந்த பின்னரும், தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லாமல், போதைப்பொருள் விற்பனை, ‘ஆன்லைன்’ மோசடி, விபசாரம், பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்து உள்ளது. கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்டவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும், சட்ட விரோதமாக தங்கி இருப்பது போலீஸூக்கே தெரிய வந்திருந்தது.

இதை நம்மிடம் தெரிவித்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, “பாஸ்போர்ட் இல்லாதவரை, கைது செய்து பின்னர் நாடு கடத்துவது எளிதான விஷயமில்லை, உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால், அவர்களை மீண்டும் இந்தியா வுக்கு அனுப்பும் வாய்ப்புள்ளது . கஷ்டப்பட்டு அனுப்பப்படும் அவர் கள் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்து விடாமல், ‘கறுப்பு’ பட்டியலில் சேர்க்கும்படி, பரிந்துரை செய்யப் வேண்டும். அத்துடன் இது போன்று ஒரு வெளி நாட்டு பிரஜையை நாடு கடத்த, ஒன்றரை லட்சம் ரூபாய் தேவைப்படும். இச்செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்

இந்நிலையில் அண்மையில் பெங்களூருவில் வசித்து வரும் ஜட்ஜ் ஒருவர் குறைந்த விலைக்கு விலையுயர்ந்த கார் கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான ஒரு விளம்பரத்தை இணைய தளத்தில் பார்த்தார். இதையடுத்து, அவர் ‘ஆன்–லைன்‘ மூலமாக விளம்பரம் செய்திருந்தவர்களை தொடர்பு கொண்டார். அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்திருப்பது தெரியவந்தது.அவர்கள், ‘ரூ.3½ லட்சம் ரொக்கத்தை ‘ஆன்–லைன்‘ மூலமாக எங்கள் வங்கி கணக்கில் செலுத்தினால் நீங்கள் விரும்பிய கார் உங்களுக்கு கிடைக்கும்‘ என நீதிபதி யிடம் கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய நீதிபதி ‘ஆன்–லைன்‘ மூலமாக அவர் களின் வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் ரொக்கப்பணத்தை போட்டுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு கார் கிடைக்கவில்லை.

இது குறித்து நீதிபதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிபதியிடம் மோசடி செய்ததாக நைஜீரியா நாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள், நைஜீரியாவை சேர்ந்த போலாஜி லாவல், அவருடைய மனைவி அவரில், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட சிக்க ஒகேபாலா, ஒகிஜி கூலிங், ஓஜா மற்றும் கிறிஸ்டியன் ஒபினா என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நம்ம தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஹை-டெக் கிராமம் !!!

பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி தாலுகா, குருவி குளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம். இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொது மக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார். இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

“திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங் களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக் களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேமாதிரி இரவு நேரங்களிலும் கண்காணிக்கக் கூடிய வகையில் ‘நைட் விக்ஷன்’ கேமரா வசதியும் உள்ளது. எல்லா தெருக்களிலும் ஒலிப் பெருக்கி அமைத்துள்ளார்கள். தண்ணீர் வரும் தேதி, நேரம் மற்றும் முக்கிய தகவல்களை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்கின்றார்கள். இந்த ஒலிபெருக்கி மூலம் எந்தத் தகவலை யார் வேண்டும்னாலும் தெரிவிக்கலாம்.அலுவலகத்திலுள்ள நோட்டில் பெயர், என்ன காரணத்திற்காக மைக்கில் பேசப்போகிறோம் என்பதை குறிப்பிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பேசலாம்.இதைத்தவிர, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பக்திப்பாடல்களை தினமும் ஒலிபரப்பு செய்கின்றார்கள். எல்லா தெருக்களிலும் மொத்தம் 36 குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சுத்தம் செய்கின்றார்கள். எந்த வீட்டு வாசலில் குப்பைத் தொட்டி இருக்குதோ அதற்கு பக்கத்திலுள்ள இரண்டு வீட்டுக்கரர்களிடம், ‘இன்று குப்பைத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்து வாங்குகின்றார்கள்.

இந்த ஊரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிளாஸ்டிக் இல்லா கிராமமாகவும் இந்த கிராமம் செயல்படுகிறது.ஜமீன்தேவர்குளம் டூ துரைச்சாமிபுரம், ஜமீன்தேவர்குளம் டூ முத்துச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பேருந்து செல்வதற்கு வசதியாக தார்ச்சாலையும், கிராமம் முழுவதும் சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஊர் முழுவதும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நவீனக் கழிப்பறை கள், குளியலறைகள் என பொதுமக்களுக்கு தனியாக கட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சண்டைகள் வந்ததில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளை யாகவே பழகி வருகின்றார்கள். கிராமத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றார்கள்.

இந்த ஊரிலிருந்து படித்து வெளி மாநிலம், வெளிநாடு களில் வேலை பார்க்கும் இளைஞர்களின் உதவியால் தான் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தியிருக்கின்றார்கள். இதுவரைக்கும் சி.சி.டி.வி கேமரா மூலம் 6 திருட்டு சம்பவங்களைக் கண்டு பிடித்திருக் கின்றார்கள்.சிசிடிவி கேமரா மாட்டியிருப் பதால் இது ஒரு வசதியாப் போச்சு. எதுவானா லும் கேமராவுல பதிஞ்சுடும்னு ஒரு பயம் இருக்கு. நைட் விஷன் பதிவு வசதி இருப்ப தால் இரவில் மது அருந்துவது, தெருக்களில் உறங்குவது தடுக்கப்பட்டுள்ளது.108 ஆம்புலன்ஸ் ஊருக்குள் வரத் தாமதமாவதால் மக்கள் அனைவரிடமும் நிதி சேர்த்து ஆம்புலன்ஸ் வாங்கவும் இந்த ஊர் மக்கள் திட்டம் போட்டுருக்காங்க..

கிராமத்துல ஏதாவது குறைன்னா புகார் பெட்டியில புகாரை எழுதி போட்டுடலாம். கிராமத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றார் கள்.பஞ்சாயத்து என்றால் அடிப்படை வசதிகளான பேருந்து, கழிப்பறை, சாலை, தெருவிளக்கு வசதிகள் கட்டாயம் தேவை. ஆனால், ஜமீன் தேவர்குளம் பஞ்சாயத்து அதையும் தாண்டி அசம் பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராவும், பளிச்சிடும் தெருவிளக்குகள் மற்றும் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அமைத்திருக்கும் ஒலிப்பெருக்கி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கவனிக்கத் தக்கவையும் கூட. பல சமூக அமைப்புகளும் இக்கிராமத்தை பாராட்டி யுள்ளது. இந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன..

ஷாருக்கானுக்கு நேர்ந்த சோகம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வருகிறது என்றாலே பல படங்கள் வட இந்தியாவில் பின் வாங்கும்.

இந்நிலையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் தில்வாலே படம் திரைக்கு வர, மிகவும் துணிச்சலாக வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் நடித்த பஜிரோ மஸ்தாணி படமும் திரைக்கு வந்தது.

ஷாருக்கானுடன் போட்டிப்போட முடியுமா என்று எல்லோரும் கேட்ட நிலையில் வெளியான 8 நாட்களில் தில்வாலே ரூ 111 கோடி வசூல் செய்ய பஜிரோ மஸ்தானி ரூ 98 கோடி வசூல் செய்து அதிர வைத்தது.

மேலும், இன்னும் சில தினங்களில் தில்வாலே வசூலையே இப்படம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இவை இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி நல்ல கதை தான் வெற்றி பெறும் நாயகர்கள் பலம் ஒரு போதும் வெற்றியை கொடுக்காது என்று பஜிரோ மஸ்தானி நிரூபித்துள்ளது.

”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள். காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடா வைச் சேர்ந்த ஒரு நிறுவனம். “விட்டாலிட்டி ஏர்’ என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது. இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது.
air sale
சீனாவின் பெய்ஜிங் நகரில் காற்று மாசு தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது சீன நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருவது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வாகன உற்பத்திக் கூடங் கள் போன்றவற்றிலிருந்து பெருமளவு புகை வெளியேற்றப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. குளிர் காய் வதற்காக பெய்ஜிங் நகர வீடுகளில் நிலக்கரித் துண்டுகளை எரிப்பதால் வெளியேறும் அதிக அளவு புகையால் காற்று கடுமையாக மாசடைந்தது. இதனோடு பனிப்புகையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பல்வேறு சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாயினர். இதனால், கடுமையான எச்சரிக்கை விடப்பட்டு பெய்ஜிங்கில் பள்ளிக் கூடங்கள் உள்பட கல்வி நிறுவனங்கள், தொழிலகங்கள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி கனடா வின் விட்டாலிட்டி ஏர் நிறுவனம் சீனாவில் கால் பதித்து காற்று விற்பனையைத் தொடங்கியது. விற்பனை சூடுபிடிக்க உற்சாகமடைந்த அந்த நிறுவனம், சீனாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் நிறுவனத் தயாரிப்பை விற்க முகவர்களை நியமித்தது. ஒரு புட்டி காற்றின் விலை இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதாவது, சீனாவில் ஒரு தண்ணீர் புட்டியின் விலையை விட 50 மடங்கு அதிக விலைக்கு விற்கப் படுகிறது. மலைத்தொடரின் உச்சியிலிருந்து அடைக்கப்பட்ட காற்றுப் புட்டிகளுக்கு மவுசும் விலையும் இன்னும் கொஞ்சம் அதிகம். இந்தக் காற்று 10 முதல் 12 மணி நேரம் வரை தூய்மை யானதாக இருக்குமாம். இப்போது காற்று விற்பனை சீனாவில் கன ஜோராக நடக்கிறது. தூய்மை யான காற்றுப் புட்டிகளை வாங்கி பயன்படுத்துவதை ஓர் அந்தஸ்தாகவே கருதத் தொடங்கி விட்டனர் மேல்தட்டு மக்கள். குறிப்பாக பெண்களும், தொழில் அதிபர்களும் இந்த காற்றுப் புட்டிகளை வாங்கிப் பயன் படுத்துகின்றனர். எங்கு சென்றாலும் தங்கள் கைப்பைகளில் காற்றுப் புட்டிகளை கையோடு எடுத்துச் செல்கின்றனர். காற்று மாசடைந்த பகுதிகளில் எப்போது தேவையோ அப்போது தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கைபேசிகளை எடுத்துச் செல்ல மறந்தாலும் காற்றுப் புட்டிகளை அவர்கள் மறப்பதில்லை.

பெய்ஜிங்கில் சீனர்களின் நிலை அந்த அளவுக்கு பரிதாபகரமாகி விட்டது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதைப் பார்த்த கனடா நிறுவனம் தற்போது அதைப் பெருக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது. தூய்மையான காற்றின் அவசியம், மாசடைந்த காற்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளம்பரங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறது. தங்கள் நிறுவனம் தூய்மையான காற்றை எப்படிப்பட்ட இடங்களில் இருந்து எடுக்கிறது? புட்டிகளில் எப்படி அடைக்கிறது? என்பதைப் பற்றி தனது இணைய தளத்தில் புகைப்படங்களுடன் விரிவாக கூறியிருக்கிறது இந்த நிறுவனம். தனது நண்பருடன் சேர்ந்து விளையாட்டாக இந்த நிறுவனத்தை ஆரம்பித்ததாக கூறும் விட்டாலிட்டி ஏர் நிறுவனத்தின் நிறுவனர் மோசஸ் லாம், முதலில் ஒரு பாலிதீன் பையில் பான்ஃப் மலைத்தொடரின் காற்றைப் பிடித்து அடைத்து 50 பென்ஸ் என்ற விலைக்கு விற்றாராம். பின்னர், இரண்டாவது முறையாக ஒரு பாலிதீன் பையில் காற்றை விற்றபோது அதை விட மூன்று மடங்கு கூடுதல் விலை,அதாவது 160 பென்ஸ் கிடைத்ததாம். அப்போதுதான் ஏன் இதையே ஒரு தொழிலாக செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. உடனடியாக செயல்படத் தொடங்கினார்.இப்போது விட்டாலிட்டி ஏர் நிறுவனம் பல நாடுகளில் கிளைகளையும் விற்பனை முகவர்களையும் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டது. உங்கள் ஊரில் நீங்களும் காற்று விற்பனை முகவராகலாம். அதற்கான ஒப்பந்தங்கள் மற்றும் விண்ணப்பங்கள் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது இந்த நிறுவனம் காற்று மற்றும் ஆக்ஸிஜன் புட்டிகளை வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தீவிரமாக களமிறக்கியுள்ளது. சீனாவில் கொடி கட்டிப் பறக்கும் காற்று வியாபாரத்திற்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வரவேற்பு இல்லையாம். ஆனாலும், தண்ணீர் புட்டிகள் இந்தியாவில் பெருமளவில் விற்பனை யாவதால்,காற்றுக்கும் சந்தை கிடைக்கும் என்று காத்திருக்கிறது இந்நிறுவனம்.அப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டால் என்னா கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டு காற்று மாசு,வெப்ப மயமாதல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்கால சந்ததியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். பொருள் களைத் தயாரித்து விற்று வந்த நிலை மாறி, இயற்கையாக கிடைப்பவற்றையும் காசாக்க முயற்சிக்கும் இந்த வணிக உலகத்தின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. ஓர் அளவுக்கு மேல் அவர்களை அனுமதிப்பதும் தவறுதானே!

“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………”

உலகத்திலே ஐரோப்பாவை அடுத்து இந்திய நேபாள் நாட்டினர் மட்டுமே இரண்டு நாட்டுக்கும் பாஸ்போர்ட் கூட இல்லாமல் போய் வர வேலை செய்ய குடியமர முடியும். அப்படி ஒரு அன்னோன்ய நாடாக இருந்த இந்திய நேபாள் ரிலேஷன் 2001 மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து நேபாளுக்கு கெட்ட நேரம் ஆரம்பதித்தது. அதற்க்கு பிறகு 2006 ஆம் ஆன்டு வரை உள் நாட்டு போர் 2006 ஆம் ஆண்டு ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும் பிரச்சினை நேபாளுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது.

சமீப கால அதாவது 2015 ஆம் ஆண்டு நேபாளுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஏற்கனவே நில நடுக்கம் காத்மன்டு மற்றும் பல நேபாள் முக்கிய நகரங்களுக்கு வந்து அனேக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றது குறிப்படதக்கது. அதன் பிறகு 20 செப்டம்பர் 2015 கொண்டு வர அரசியல் சட்ட மாற்றத்தை இந்தியா எதிர்த்தது. அதாவது மாதேஷி என்னும் ஒரு இனத்துக்கு இந்த புது கான்ஸ்டிடியூஷனில் மிகுந்த பாதிப்புகள் உண்டு பண்ணியது. நேபாள் பெண்ணை மனப்பது, நேபாள் நாட்டின் குடியுரிமை மற்றூம் அவர்களுக்கான சம உரிமை மற்றூம் உள்ளூர் போலீஸின் அட்ராசிட்டியை எதிர்த்து இந்தியா கோரிக்கை வைத்த போது நேபாள் இதை மாற்ற இயலாது என உறுதியுடன் கூறியதால் இந்தியா தன் சானக்யதனத்தை காட்ட தொடங்கியது.

ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு நேபாள் சைனாவிடம் ஆயுதம் வாங்க எத்தனித்த போது 21 நேபாள் இந்தியா பார்டர்களில் 19 பார்ட்டர்களை இந்தியா மூடி நேபாளை ஸ்தம்பிக்க வைத்தது. இப்போதும் அது போல அனைத்து எல்லைகளையும் இந்தியா மூடியதால் இந்தியாவை பெட்ரோல் டீஸல் மற்றூம் காய்கறி முதல் மருந்துகள் வரை இந்தியாவை நோக்கி எதிர்பார்த்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தும் நேபாளுக்கு சோதனைகாலம் ஆரம்பம் ஆகியது. 104 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோல் என விற்ற பெட்ரோல் 300 – முதல் 500 வரை லிட்டருக்கு விற்க ஏற்கனவே 400 கோடி அமெரிக்க டாலர்கள் நேபாளின் நில நடுக்க பேரிடருக்கு வந்த உதவியை அரசு மக்களூக்கு வழங்காமல் பெரும் போராட்டம் எங்கும் வெடிக்க நேபாள் இனிமேல் தனியார் கார், வண்டிகள் தொழிற்சாலைக்கு பெட்ரோல் இல்லை என அறிவிக்க அக்டோபர் 1 2000க்கு மேற்பட்ட தொழிற்ச்சாலைகள் முட, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்றூ முதல் நாலு நாள் வரை வரிசையில் காக்கும் கொடுமை இன்றூ அந்த நாட்டில் காணமுடியும். அனைத்து வெளி நாட்டின் விமானங்களுக்கு பெட்ரோல் இல்லாமல் போக அனைத்து உள் வெளி நாட்டி சர்வீஸ்களும் 85% போக்குவரத்தை நிறுத்த மக்கள் நடராஜா மற்றூம் சைக்கிள் சவாரி மூலம் தான் பயணத்தை தொடர முடிந்தது.

நேபாள் சைனாவுடன் பெட்ரோல் ஒப்பந்தத்தை போட இந்தியா இன்னும் இறுக்கி இருந்த கொஞ்ச நஞ்ச முக்கிய எல்லைகளையும் மூடி நெருக்கடி கொடுக்க கடைசியில் நேபாள் மண்டியிட்டு இந்தியாவின் வழிக்காட்டுதலின் படி ஆட்சி நடத்துவதாக அறிவித்து கையேந்தி நிற்பது தான் ஆக லேட்டஸ்ட் செய்தி. போன மாதம் இந்தியாவின் போலீஸ் நாலு நேபாள் கடத்தல் காரர்களை அந்த நாட்டுகுள் துரத்தி சென்று சுட்டு கொன்று நேபாளை மிரள வைத்தது. ஐ நா, அமெரிக்கா, பிரிட்டன் என அத்தனை நாட்டுக்கும் நேபாள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுங்கள் என கூறியும் எந்த ஒரு நாடும் இதை கண்டுகொள்ளவே இல்லை என்றாலும் இந்தியாவின் பீகார் தேர்தல் பிஜேபிக்கு சாதகாமாக இல்லாமல் போனது இதுவும் ஒரு விஷயமே.

சென்னையில் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் இந்த வருடத்தில்- லிஸ்ட் இதோ

இந்த வருடம் வெளிவந்த படங்களில் சுமார் 20 படங்களே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்திருக்கும். இதில் 6 அல்லது 7 படங்கள் தான் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் தந்த படங்கள்.

அந்த வகையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கும் என்பதன் லிஸ்ட் இதோ...

    ஐ- ரூ 9.67 கோடி
    பாகுபலி- ரூ 8.29 கோடி
    தனி ஒருவன்- 6.68 கோடி
    வேதாளம்- ரூ 6.63 கோடி
    காஞ்சனா-2 ரூ 6.27 கோடி

இதில் வேதாளம் இன்னும் சென்னையில் சில திரையரங்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல் எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... இந்த கொழுப்பு ஏன் தேவை?உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு.

இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச் சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய் களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல… அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.மொத்தத்தில் உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

இன்னும் கொஞ்சம் விளக்காக சொல்வதென்றால் உடலை என்றும் இளமையுடனும் பளபளப் பாகவும் புத்துணர் வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணைக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய் களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாது காக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்கா எண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்ட மின்கள் குறிப்பாக அண்டி ஆக்சி டண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட் கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் .இவை தான் எண்ணெய் யின் உண்மையான குணங்கள் .

அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர் என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் யை குறை சொல்ல தொடங்கி விட்டோம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் (Ex : GoldWinner ,Sundrop, Fortune ,SVS ,Porna, Sunland , Saffola , Palmolein )என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை .

சமையல் எண்ணெய் களை எபப்டி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நாம் சொன்னதில் உள்ள உண்மை தெரிய வரும் பல உள் நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இய்ற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசயமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை யும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடு கிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதி யாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்தி ருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார் கள் சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண் ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்கு லைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. இந்த பிசு பிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள நல்ல செல்களில் இணையந்து அந்த செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இதனால்தான் இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற் படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்தி கரிக்கப் பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .

அப்படியானால்… பாரம்பரிய எண்ணெய்தான் நல்லது!

நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணை யையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவை யுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் சேர்ந்து விட்ட தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய் பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை அனப்படும் ஆமனெக்கு எண்ணெ யில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது

இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன் படுத்தினால் சருமம் அழகாவதோடு ,கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும் .குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )

செக்கில் அட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் “லெக்சீதீன்” என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம் .அதனாலையே இதற்கு ” குயின் ஆப் ஆயில் ” என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள்,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .

அது சரி.. மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது.ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற் பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்க படுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்

செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குக ளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .மரசெக்கில் கருபட்டி யுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது .அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் அனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் …அதன் ருசி கால கால காலத் திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்.குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

சிடி ஸ்கேன்

தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

கலர் டாப்லர் ஸ்கேன்.

ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

எக்கோ

இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

இசிஜி


இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

டிஜிட்டல் இசிஜி

இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



டிஜிட்டல் எக்ஸ்ரே

சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

மோமோ கிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

மாஸ்டர் ஹெல்த செக் அப்

மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பொது இடத்தில தும்மவோ, இருமவோ சிரமமா இருக்கா?

நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்றவைகளோடு அடிக்கடி சிறுநீர் தொற்றுகோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.

மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

மெனோபாஸ் பெண் உறுப்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு அதன் சுவர்களில் பாக்டீரியாக்கள் குடியேறுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதுவே சிறுநீர் தொற்றின் ஆரம்பமாகிறது. பின்னர் படிப்படியாக அரிப்பு, வலி, சிறுநீர் பிரியும் போது எரிச்சல், சிறுநீர் கலங்கலாக இருத்தல் போன்றவை காணப்படும் என்கின்றனர் பிரபல மகப்பேறு மருத்துத்துறை மருத்துவர்கள்.

சத்தான ஜூஸ்

சிறுநீர் தொற்று ஏற்பட்டவர்கள் தினசரி ஒரு பழரசம் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இது 35 சதவிகிதம் வரை சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். பெர்ரீ பழ ஜீஸ் அருந்தினால் சிறுநீர் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் நோய் தொற்று பாக்டீரியாக்களை கொல்கிறது.

பால் பொருட்கள்

மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றினை தடுக்க பால் பொருட்கள் நன்மை தருகின்றன. யோகர்டு, சீஸ் போன்றவை வாரத்திற்கு மூன்று முறையாவது உண்ணவேண்டும். இது 80 சதவிகிதம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும். இதில் உள்ள நன்மை தரும் லாக்டோசில்லி பாக்டீரியாக்கள் தீமை தரும் பாக்டீரியாவை எதிர்த்து போரிடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் பழங்களை சாப்பிட வேண்டும். வைட்டமின், தாது சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்று ஏற்படுவதை தவிர்க்கலாம். நல்ல உறக்கமும், ஓய்வும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தண்ணீர் அதிகம் அருந்துங்கள்

அதிக அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீர் தொற்று ஏற்படுவதை தடுக்கும் என்கின்றர் மருத்துவர்கள். தினசரி 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். மிதமான சுடுநீரை பாட்டிலில் ஊற்றி அடி வயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். இது நோய் தொற்றினால் ஏற்படும் வலியை தவிர்க்கும்.

காபி குடிக்காதீங்க

மெனோபாஸ் பருவத்தில் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சிட்ரஸ் பழ ஜூஸ்களை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல் காஃபின் சேர்க்கப்பட்ட உணவுகள், சில சாக்லேட்கள், காபி, ஆல்கஹால் போன்றவைகள் மெனோபாஸ் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் காரமான உணவுகளையும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

ரெயிலில் காணாமல் போன இளையராஜாவின் ஆர்மோனியம்!

கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

'மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை.

எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.

முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த 'பெர்த்'தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது.

ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.

நாங்கள் ஏறிய ரெயிலில் கொடைக்கானல் போகவேண்டிய வெளி நாட்டுக்காரர் ஒருவர் அவரது மரப்பெட்டி ஒன்றை `கொடைக்கானல் ரோடு' ஸ்டேஷனில் இறங்கும்போது எடுக்க மறந்துவிட்டிருக்கிறார். இதனால் உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து தெரியப்படுத்தி இருக்கிறார்.

இதனால் அந்த மரப்பெட்டியைத் தேடிய ரெயில்வே ஊழியர்கள் நாங்கள் படுத்திருந்த பெட்டிக்கும் வந்திருக்கிறார்கள். எங்கள் கம்பார்ட்மென்டில் நான் ஆர்மோனியத்தை பூட்டி வைத்திருந்த மரப்பெட்டியை பார்த்து, அது அந்த வெள்ளைக்காரர் தவறவிட்ட பெட்டி என்று எண்ணிக்கொண்டார்கள். இருந்தும் சிறு சந்தேகம். வேறு யாருடைய பெட்டியாகவும் இருந்தால்?

சந்தேகத்தை சரி செய்ய, உரத்த குரலில் 'இந்த மரப்பெட்டி யாருது?' என்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்குள் தூங்கிவிட்டோமே. அந்தக் குரல், எங்கள் தூக்கத்தை தாண்டி காதுகளை எட்டவே இல்லை.

அவர்களும் பெட்டியில் பூட்டு இருந்ததால், திறந்து பார்க்க முற்படவில்லை. பெட்டியை இறக்கிவிட்டு, பெட்டி கிடைத்து விட்டது என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

மறுநாள் காலை 6 மணிக்கு ரெயில் கோவில்பட்டி வந்தபோதுதான் அரக்கப் பறக்க விழித்தோம். வாத்தியங்களை இறக்கி வைக்க முற்பட்டபோதுதான், ஆர்மோனியம் காணாமல் போய்விட்டது தெரிந்தது.

எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடிவயிற்றை ஏதோ கவ்வியது போன்ற உணர்வு.

இப்போது ஆர்மோனியம் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும். ஒவ்வொரு ஆர்மோனியமும் வெவ்வேறு அமைப்பில் இருக்கும்.

பெட்டிக் கட்டைகளில் ஆக்ஷனுக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் டென்ஷன், `கட்டை'யை அழுத்தியவுடன் அது கீழே இறங்கும் அளவு, அதிலிருந்து புறப்பட்டு வரும் நாதம் எல்லாமே பெட்டிக்கு பெட்டி மாறுபடும்.

இங்கே கச்சேரிக்கென எனக்குத்தரப்பட்ட ஆர்மோனியத்தை வாசித்துப் பார்த்தேன். திருப்தியில்லை. இருந்தாலும் வேறு வழி? ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டேன்.

ஆனால் என்னுடைய ஆர்மோனியம், `இந்தக்கால கட்டத்தில் இவன் என்னை வாசிக்கக்கூடாது' என்று முடிவு செய்து பிரிந்துபோய் விட்டபிறகு, நான் என்ன செய்ய முடியும்? இந்த சோகத்துடன் இன்னொரு சோகமும் சேர்ந்தே வந்தது.

கோவில்பட்டியில் ஒரு வார கச்சேரிக்கு அண்ணன் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ரெயிலில் கோவில்பட்டி போய்ச்சேர, பண்ணைபுரத்தில் இருந்து அண்ணன் பஸ் ரூட்டில் வந்து எங்களுடன் கோவில்பட்டி கச்சேரியில் கலந்து கொள்வதாக ஏற்பாடு.

நாங்கள் கோவில்பட்டிக்கு வந்துவிட்டோம். இப்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. மாலையில் கச்சேரி. பாவலரோ வரவில்லை.

சரி, மாலையில் எப்படியும் அண்ணன் வந்து விடுவார் என்று உள்ளூர் கம்ïனிஸ்டு தோழர்களை சமாதானப்படுத்தினோம்.

கட்சியின் செயலாளருக்கு விஷயம் போயிற்று. அவர் யதார்த்தவாதி. பாவலர் வரவில்லை என்பதை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதே நேரம் பாவலரை அதுவரை அந்த ஊர் மக்கள் பார்த்ததில்லை.

இந்த விஷயத்தை மனதில் கணநேரம் கூட்டிக்கழித்தவர், பாஸ்கரை அழைத்தார். 'பாவலர் என்று சொல்லி நீங்களே கச்சேரியை நடத்திவிட முடியுமா?' என்று கேட்டார்.

எங்களுக்கு அதிர்ச்சி. நாங்களாக கச்சேரியை நடத்திவிட முயன்று பார்க்கலாம். ஆனால் பாவலராக நடிப்பதாவது? சினிமாவை விடத் தமாஷாக இருக்கிறதே?

சரி, பாவலராக பாஸ்கர் நடிக்கட்டும். அப்படியானால் பாஸ்கராக நடிப்பது யார், நானா?

அண்ணன் பாவலரோடு பாட்டுக்கு இடையே காமெடியாக பாஸ்கர் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு அண்ணனின் பதில்கள் மக்களிடம் கைதட்டல் பெறும்.

இப்போது பாஸ்கர் இடத்தில் நான் இருந்து கொண்டு, பாவலராக பாஸ்கரை கருதிக்கொண்டு கேள்விகள் கேட்கவேண்டும்.

கச்சேரியில் அத்தனை பாடல்களும், உரையாடல்களும் எங்களுக்கு மனப்பாடம். எதை, எப்படி ஏற்றி, இறக்கிப் பேசவேண்டும் என்பதும் அத்துப்படியான பாடம்.

என்றாலும் மாலை வரையில் அண்ணன் பாவலர் வந்து விடமாட்டாரா என்ற ஒரு கவலை ஓடிக்கொண்டிருந்தது. எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாறுவேடம் புனைந்து நாங்கள் நடித்தாக வேண்டும் என்றிருக்கும்போது, அண்ணன் எப்படி வருவார்? வரவேயில்லை.

கோவில்பட்டியில் இருந்து ஒரு வாடகைக்காரில் நானும் பாஸ்கரும் சென்றோம். கூடவே கட்சித்தோழர் ஒருவரும் வந்தார்.

சூரங்குடி என்ற கிராமத்தில் முதல் நாள் நிகழ்ச்சி.

அன்றைக்கென்று பார்த்து எந்த ஊரிலும் நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்த ஊரிக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். அங்கிருந்து பாவலருக்கு வரவேற்பு அளித்து மேடை அமைக்கப்பட்ட மைதானம் வரை கிராமத்தெருக்களில் ஊர்வலமாகப் போய் கூட்டம். அதைத்தொடர்ந்து கச்சேரி.

மைதானம் வந்ததும் காரைவிட்டு இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் 'பாவலர் வரதராஜன்' என்று  ஒருவர் உரத்த குரலாய் ஒலிக்க, மக்கள் 'வாழ்க' என்று கோஷம் போட்டார்கள்.

இருபெரும் கோபுர வாயில்கள்தான்.....!

தஞ்சை கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் கோயில் கருவறையின் நேர் கிழக்கே அமைந்திருந்த "கேரளாந்தகன்" வாயில், "ராச(ஜ) ராச(ஜ)ன்" வாயில் ஆகிய இரு பெரும் கோபுர வாயில்கள் தான் தமிழ்நாட்டிலேயே பெரிய கோபுரங்களாக அப்போது திகழ்ந்தன, இதை மையமாய் வைத்து தான் இதற்கு பின்னர் கட்டப்பட்ட கோயில்களில் 13 நிலைகள் வரை கோபுரங்கள் உயர்ந்தது.

இந்த இரு வாயில்களையும் கடந்து நாம் உள்ளே சென்றதும் விண்ணை முட்டி நிற்கும் விமானத்தின் உயரமும் அகலமும் பல பகுதிகளாலான பாறைகளை, இணைத்தது தெரியாமல் ஒரே கல்லை போன்று இணைத்து விமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கும் அந்த 80 டன் எடையுடைய பாறையும் நம் கண்ணில் பட்டதும் கோயிலை சுற்றி இருக்கும் மற்ற விசயங்கள் நம் கண்களுக்கு சாதராணமாக தோற்றமளிக்கும், இதனால் சுற்றி இருக்கும் நிறைய விடயங்களை தவறவிடுவோம், அது நம்முடைய தவறல்ல அந்த விமானத்தின் பிரம்மாண்டம் அப்படி!.

அப்படி நாம் தவறவிடுவதில் முக்கியமானவை திருமதிலை சுற்றி தெற்கு, மேற்கு, வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் மற்ற மூன்று வாயில்கள், அதிலும் முக்கியமானவை கோயில் திருமதிலின் வடமேற்கே இருக்கும் "அணுக்கன் வாயில்".

அப்படி என்ன சிறப்பு இந்த வாயிலுக்கு? இந்த திருவாயிலின் வழியே தான் மாமன்னர் ராச ராசன் இறைவனை வழிபட வந்திருப்பார் என்பதற்கு சில ஆதாரங்கள் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அய்யா அவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

திருமதிலில் இணைத்துள்ள நான்கு வாயில்களில் இந்த அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்கிறது என்பதை அங்கு காணப்படும் மற்ற வாயிகளை வைத்தும், அணுக்கம் வாயிலின் எச்சங்களை வைத்தும் நாம் உணர முடிகிறது. நம் வீடுகளில் மரத்தில் செய்வதைப் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ்வாயில் நிலைக் கல் அமைந்துள்ளது.

இந்த வாயிலின் இருபக்கமும் சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுருப்பதையும் காணமுடிகின்றது.

இந்த நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசைகளில் துவாரங்களை காணலாம், அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் கூடிய தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. மேலே காணப்படும் இந்த துவாரங்களில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும், செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.

அதெப்படி அவ்வளவு உறுதியாக இவை இதற்கு தான் பயன் பட்டவை என்று எப்படி கூற முடியும் என்று கேட்பவர்கள், இவ்வகை அமைப்பை அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரசு(ஸ்)கோ ஓவியங்களிலேயே இது போன்ற அமைப்பை காணலாம், அதே போன்று தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத் தான் இருந்தன என்பதை ராசராசன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் ராசராச சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே இன்றைக்கு உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பதை வீடு கட்ட ஒருவர் நிலத்தை தோண்டும்போது கிடைத்த தூண்களும், அதில் உள்ள கல்வெட்டுகளை வைத்தும் தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "சுந்தர பாண்டியன்" படை எடுப்பின் போது தஞ்சை அழிக்கப்பட்டது என்பது கல்வெட்டுகளின் மூலம் உறுதியாகின்றது, அப்போது இங்கிருந்த அரண்மனையும் அழிவுற்றிருக்கலாம் .

மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் (சண்டிகேஸ்வரர் சன்னதி அருகில்) மட்டுமே அட்ட மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதும் நாம் இங்கு கவனிக்க வேண்டியவை.

செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின் போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் ராசராசன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது.