Tuesday, December 22, 2015

அம்மாவான நடிகை அமலாபால்!

தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது.இந்த நிலையில்...

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் ?

 மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.  இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை. எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.நாம், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம்...

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

உடல் பருமன் உடைய அனைவருக்குமே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க என்ன வழி என்று யாரையாவது கேட்டால் உடனே உடற் பயிற்சி செய்யத்தான் சொல்வார்கள். உடற்பயிற்சி என்ற வார்த்தையைக் கேட்டதுமே கொஞ்சம் ஷாக் ஆகிவிடும் உடல் பருமன் உடையவர்கள் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். அதற்கு மாற்றாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள் இருந்தால் எப்படி இருக்கும். சித்த மருத்துவம் சொல்கிறது உடல் எடையை இப்படியும் குறைக்கலாம் என்று.body-weight-lossமுருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து போகும்.துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக் கொண்டால் தேவையில்லாத உடல் எடை மெல்ல காணாமல் போகும்.இலந்தைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள்...

இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம்

 ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய கருத்தால் காயமுற்றதால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.முன்னதாக, சிம்புவின் 'பீப் பாடல்' குறித்து இளையராஜாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு அறிவு இருக்கா?'' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.இந்நிலையில், இளையராஜா குறித்து விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்...

அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு… கொண்டாடு’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட முத்தரப்பும்! இங்குதான் அந்த தப்பும்!இவ்வளவு பெரிய வெற்றியை குந்தாமல் கூசாமல் அறுவடை செய்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இன்னமும் வேதாளம் படத்தின் டைரக்டருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை. அது ஏதோ கொஞ்ச நஞ்சமல்ல. அவரது சம்பளத்தில் கிட்டதட்ட அறுபது சதம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள். எப்போது கேட்டாலும், தர்றேன் தர்றேன் என்று கூறி வரும் ரத்னம், தனது மகன்...

பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன் -வெளிவந்த உண்மை

சிம்பு பாடிய பீப் பாடலால் அவர் பெயர், புகழ் அனைத்தும் வீணாகிவிட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த பீப் பாடல் விவகாரம்.இதில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி கூறுகையில் சிம்பு ஜனவரி 2ம் தேதி ஆஜராக தேவையில்லை என கூறினார்.இவை சிம்பு தரப்பிற்கு சந்தோஷம் என்றாலும், பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என கூறியது அவர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுமட்டுமின்றி இப்பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன் என ஒரு சிலர் கூறினர், அவர் அப்படி செய்யவில்லை என சிம்புவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். தற்போது அந்த...

ரஜினிகாந்தின் 'ப்ரியா'வை மறக்க முடியுமா ?

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பட்டியலில் மறக்க முடியாத ஒரு படம் 'ப்ரியா'. 1978ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த இத்திரைப்படம் இன்று 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எஸ்பிடி பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிங்கப்பூர் அஸ்னா, அம்பரீஷ் மற்றும் பலர் நடித்த படம்.ரஜினிகாந்த் நடித்து முதன் முதலில் 175 நாட்கள் ஓடிய சிறப்புப் பெற்றது இந்தப் படம். இதற்கு முன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் முதன் முதலாக முற்றிலுமான ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நடித்த படம். ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் 22 நாட்களில் படமாக்கப்பட்ட...

'2.0' "எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது-எழுத்தாளர் ஜெயமோகன்

 '2.0' படத்தில் சிட்டி பாத்திரம் விரிவாகியிருப்பதாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.'2.0' படத்தில் ஷங்கருடன் இணைந்து முதன் முறையாக வசனம் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். '2.0' குறித்து ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் இதுவரை எதுவும் தெரிவிக்காமல்...

ரஜினிகாந்தை நான் இயக்கினால்- ராஜமௌலியின் அதிரடி பதில்

தென்னிந்தியத் திரையுலகில் ஷங்கர், மற்றும் ராஜமௌலி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்றவர்கள். ஷங்கர் ரஜினிகாந்தை வைத்து ஏற்கெனவே சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கி விட்டார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது.ஆனால் இயக்குனர் ராஜமௌலி இன்னும் ரஜினிகாந்தை இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினார் என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்குஅவர் அளித்த பதில் “அவருக்கு நான் என்ன கதாபாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி பத்து நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களோட ஆரவாரம்தான் அதிகமா...

சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது பிரபல கதாநாயகனா?

சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை தற்போது முடியாது போல. சிம்பு மற்றும் அனிருத்தை ஜனவரி 2ம் தேதி ஆஜராஜ வேண்டும் என்று முன்பே கூறினர்.இந்நிலையில் தற்போது பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு(சிம்பு) ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நடந்தது.விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்துள்ளனர், இதை தொடர்ந்து சிம்புவின் ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2 காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.மேலும், இந்த பாடலை முதன் முதலாக யார் லீக் செய்தது என்று சைபர் கிரேம் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த...

ரகுமானுக்கும் எனக்கும் செட் ஆகாது, ஏனெனில்? ராஜமௌலி அதிரடி பதில்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருடன் பணிபுரிய பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ராஜமௌலியிடம் சமீபத்தில் ரகுமானுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என கேட்கப்பட்டது.அதற்கு அவர் நான் தினமும் காலை 4 மணிக்கு விழிப்பேன், பின்பு காலை 7 மணியிலிருந்து என் பணிகளை தொடங்குவேன். அந்த நேரத்தில் தான் என் கற்பனைக்கு ஏற்ற நேரமாக நான் ஒதுக்குவேன்.ஆனால், இந்த நேரத்தில் தான் ரகுமான் உறங்குவார். அதனால், அவருடன் பணிபுரிவேனா? என்பது தெரியவில்ல...

பொடுகு பிரச்சனையை தீர்த்திடும் சிறந்த வழிமுறைகள்

 அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பொடுகு  இருந்தால் முடி கொட்டுதல், முகப்பரு, நரைமுடி, தோல் பிரச்சனை போன்றவை ஏற்படும்.1. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தயிருடன் கலந்து ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து , மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.2. 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து, தலையி தடவி ஊற வைத்து முடியை அலச வேண்டும். இவ்வாறுதொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிபடியாக நீங்கிவிடும்.3. ஆலிவ் ஆயிலை லேசாக சூடேற்றி, இரவில் தேய்த்து விட்டு காலையில் எழுந்து ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும்.4. ஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும்.  சீயக்காய் தலையை வறண்டு போகாமல் பாது காக்கும்.5. ஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன்...

''தில்வாலே'' - திரை விமர்சனம் - சற்று வருத்தமே. ஷாரூக்கான் - கஜோல்-க்காக வேண்டுமானால் பார்க்கலாம்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், ரோகி்த் ஷெட்டியுடன் இணைந்துள்ள படம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-கஜோல் ஜோடி சேர்ந்துள்ள படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ரொமான்ட்டிக் திரைப்படம் ''தில்வாலே''. இந்த தில்வாலே ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...கதைப்படி, ராஜ் எனும் ஷாரூக்கானும், வீர் எனும் வருண் தவானும் சகோதரர்கள். வீர், இஷிதா எனும் கீர்த்தி சனோனை காதலிக்கிறார், அவரை திருமணம் செய்ய எண்ணி, தனது விருப்பத்தை அவரது அண்ணனான வீர் எனும் ஷாரூக்கானுடன் சொல்கிறார். தம்பியின் காதலை நிறைவேற்ற அவரும் ஓ.கே. சொல்கிறார். ஆனால் கீர்த்தி சனோனின் அக்காவான இசிதா மீரா எனும் கஜோல் இந்த...

நெருப்பு நெருங்காத மரம் - ஒரு அதிசய செய்தி..!

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும்...

சூர்யா அளவாகதான் பேசுவார். ஆனால் இன்று நிறைய பேசினார். அவ்வளவும் முக்கியமானவை

சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாத சமூக அக்கறைக்கு பெரிய உதாரணமாக இருக்கப் போகும் படம் பசங்க2. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், படத்தின் தீம் அப்படி. ஏற்கனவே பசங்க படத்தில் கிராமத்து பள்ளிக்கூடத்தை காண்பித்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் நகரம் சார்ந்த குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார். முக்கியமான விஷயம் ஒன்று… இப்படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்ட, சூர்யா படம் முழுக்க வருகிறார் என்பதுதான்!ஏற்கனவே ஒரு அறிக்கை மூலம், இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் யாரும் தியேட்டர்களில் பேனர் கொடிகள் கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டார் சூர்யா. வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியாமலும், மக்கள் முகத்திலிருந்து சோகம் வடியாமலும் இருக்கும் நேரத்தில் இது தேவையா என்பது அவரது எண்ணம். அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசியதும். அது அப்படியே இங்கே-“சென்னைக்கு...