Tuesday, December 22, 2015

அம்மாவான நடிகை அமலாபால்!

தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க மாட்டார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. விஜய்யும் அதைத்தான் கூறிவந்தார். ஆனால் அமலாபால் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முன்புபோல் இல்லாமல் அழுத்தமான கேரக்டர் உள்ள படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். குழந்தைகள் படம் என்பதாலும், சூர்யா கேட்டுக் கொண்டதாலும் பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சூர்யாவின் மனைவியாகவும், ஆசிரியையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் அவர் இந்தி ரீமேக் படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்தியில் வெளியாகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சனட்டா என்ற படம் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இது அம்மாவுக்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை சொல்லும் படம். இதில் நடிகை அமலாபால், அம்மா கேரக்டரில் நடிக்கிறார், அவரது மகளாக புதுமுகம் ஒருவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஜனவரி முதல்வாரத்தில் துவங்க உள்ளது.

தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டரில், நடிப்பேன் என்று அமலாபால் கூறியது, இப்போது அவர் தொடர்ந்து நடித்து வரும் படங்களின் மூலம் நிரூபணமாகிறது.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது ஏன் ?

 மனிதனினுக்கு மிக முக்கியான தூக்கத்தில் நாம் எப்படி தூங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவியல் ரீதியாக அன்றே வகுத்துள்ளனர்.
 
இந்த உலகில் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தேவை முறையான ஒய்வும் நல்ல தூக்கமும் தேவை. எனவே தான் பலரும் ஓய்வுக்காக கோடை வாசஸ்தலத்திற்கும், குளுகுளு இடங்களை தேடிச் செல்கின்றனர். அங்கு நல்ல ஓய்வு எடுத்து மீண்டும் உற்சாகமாக திரும்புகின்றனர்.

நாம் நன்கு துங்கி எழும் போழுது, நாம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், அன்றைய பணி மிகவும் உற்சாகமாக இருக்கும். எனவே, நாம் தலை வைத்து படுக்கும் திசை மிகவும் முக்கியமானது ஆகும்.

நாம், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், பூமியின் காந்த கல ஓட்ட திசையில் நம் உடல் இருப்பதால் நம்முடைய உயிர்ச் சக்தியை அது கனிசமாக இழுத்துக் கொள்ளும். இதனால், நாம் வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் நம் உயிர்ச் சக்தி தேவையின்றி விரையம் ஆகும். காலையில் உற்சாகமாக எழுந்திருக்க முடியாது. அவ்வாறு எழுந்தாலும், அன்றைய பொழுது புத்துணர்ச்சியாக இருக்காது.

அதே போல, நம் மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் காலையில் நாம் எழுந்து கண்விழிக்கும் போது, சூரியனின் ஒளிகதிர்கள் நமது கண்களில் பட்டு கூசும். எனவே, மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், நாம் கிழக்கு திசை பக்கம் தலை வைத்து படுத்தால்,நாம் பூமியின் காந்த ஓட்டத்தின் குறுக்காக இருப்பதால் நமது உடல் ஒரு டைனமோ போல் திகழ்ந்து உயிர்ச் சக்தியாக்கம் பெறும். இதனால், உற்சாகம் கிடைக்கும். எனவே, கீழக்கு திசையில் தலை வைத்து படுப்பதுவே மிகவும் சிறந்தது ஆகும்.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

உடல் பருமன் உடைய அனைவருக்குமே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க என்ன வழி என்று யாரையாவது கேட்டால் உடனே உடற் பயிற்சி செய்யத்தான் சொல்வார்கள். உடற்பயிற்சி என்ற வார்த்தையைக் கேட்டதுமே கொஞ்சம் ஷாக் ஆகிவிடும் உடல் பருமன் உடையவர்கள் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுகிறார்கள். அதற்கு மாற்றாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள் இருந்தால் எப்படி இருக்கும். சித்த மருத்துவம் சொல்கிறது உடல் எடையை இப்படியும் குறைக்கலாம் என்று.
body-weight-loss
முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து போகும்.

துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக் கொண்டால் தேவையில்லாத உடல் எடை மெல்ல காணாமல் போகும்.

இலந்தைமர இலையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடிக்க உடல் எடை அப்படியே மெல்ல மெல்ல குறையும்.

சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு(கல் உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலிவதுடன் உடல் பலமும் அதிகமாகும் கிடைக்கும்.

அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் இவைகளை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறைவதை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

ஓமத்தை கறுக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும்.

அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும். அப்படின்னா உடல் எடையும் காணாமல் போயிடும்தானே!

கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும்.

உடல் எடை குறைய கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இதை இரவு வேளைகளில் சாப்பிடக் கூடாது.

ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

சிறிதளவு மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடல் இளைக்கும்.

சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

இளையராஜா மீதான விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் வருத்தம்

 ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய கருத்தால் காயமுற்றதால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.

முன்னதாக, சிம்புவின் 'பீப் பாடல்' குறித்து இளையராஜாவிடம் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.இதனால் கோபமடைந்த இளையராஜா, ''உனக்கு அறிவு இருக்கா?'' என்று எதிர் கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், இளையராஜா குறித்து விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபத்தில் நான் ராஜா சார் பற்றி கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.

இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம்'' என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு… கொண்டாடு’ என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட முத்தரப்பும்! இங்குதான் அந்த தப்பும்!

இவ்வளவு பெரிய வெற்றியை குந்தாமல் கூசாமல் அறுவடை செய்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இன்னமும் வேதாளம் படத்தின் டைரக்டருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை. அது ஏதோ கொஞ்ச நஞ்சமல்ல. அவரது சம்பளத்தில் கிட்டதட்ட அறுபது சதம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள். எப்போது கேட்டாலும், தர்றேன் தர்றேன் என்று கூறி வரும் ரத்னம், தனது மகன் ஜோதிகிருஷ்ணாவை மீண்டும் இயக்குனராக்கிவிட்டார். கோபிசந்த் நடிக்கும் தெலுங்குப்படம் ஒன்றை இயக்குவதற்காக பூஜை போட்டுவிட்டார் ஜோதி.

இப்படி தன் பிள்ளை ஜோதியை ஜெகஜ்ஜோதியாக்கிய ஏ.எம்.ரத்னம், டைரக்டருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தருவதுதானே முறை? விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கெல்லாம் வெயிட்டான அட்வான்ஸ் கொடுத்து அவர்களை ரிசர்வ் செய்து வைத்திருக்கும் அவர், ஏன் சிவாவை மட்டும் கைகழுவி வருகிறார் என்பதுதான் மர்மமாக இருக்கிறது என்கிற புலம்பல் சப்தம் ஒலிக்கிறது இயக்குனர் சங்க ஏரியாவில்.

“பேசாம அஜீத் சார்ட்ட சொல்லிப்பாருங்களேன்” என்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள். “ம்ஹும்… அவரே ஆபரேஷன் பண்ணிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கார். இந்த நேரத்துல நம்ம பிரச்சனையை அவர் காதுக்குக் கொண்டுபோய் அவருக்கு தர்ம சங்கடம் தரக்கூடாது” என்கிறாராம் சிவா.

பஞ்சாயத்தை கூட்டலேன்னா பஞ்சுமிட்டாய் கூட கிடைக்காது என்பதுதான் கடந்தகால களேபரம்!

பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன் -வெளிவந்த உண்மை


சிம்பு பாடிய பீப் பாடலால் அவர் பெயர், புகழ் அனைத்தும் வீணாகிவிட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது இந்த பீப் பாடல் விவகாரம்.

இதில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி கூறுகையில் சிம்பு ஜனவரி 2ம் தேதி ஆஜராக தேவையில்லை என கூறினார்.

இவை சிம்பு தரப்பிற்கு சந்தோஷம் என்றாலும், பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவை கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என கூறியது அவர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி இப்பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன் என ஒரு சிலர் கூறினர், அவர் அப்படி செய்யவில்லை என சிம்புவே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். தற்போது அந்த பாடலை வெளியிட்ட வேறு நடிகர் யார்? என்பது தான் சமூக வலைத்தளங்களில் பலரின் கேள்வியும்

ரஜினிகாந்தின் 'ப்ரியா'வை மறக்க முடியுமா ?

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பட்டியலில் மறக்க முடியாத ஒரு படம் 'ப்ரியா'. 1978ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த இத்திரைப்படம் இன்று 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எஸ்பிடி பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிங்கப்பூர் அஸ்னா, அம்பரீஷ் மற்றும் பலர் நடித்த படம்.

ரஜினிகாந்த் நடித்து முதன் முதலில் 175 நாட்கள் ஓடிய சிறப்புப் பெற்றது இந்தப் படம். இதற்கு முன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் முதன் முதலாக முற்றிலுமான ஒரு கமர்ஷியல் ஹீரோவாக நடித்த படம். ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் 22 நாட்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்குப் பிறகு வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்ட படமாக அமைந்தது.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய கணேஷ் - வசந்த் நாவல்களைக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை, வசனம், பாடல்களுடன் உருவான படம் இது. இளையராஜாவின் இசையில் உருவான ''ஹே பாடல் ஒன்று..., அக்கரை சீமை அழகினிலே..., என் உயிர் நீதானே..., டார்லிங்..டார்லிங்..., ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே...” என அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஸ்டீரியோ முறையில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. வெளிநாடுகளின் அழகை தன்னுடைய காமிராவால் அழகாகப் படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர் பாபு.

ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பும், ஸ்ரீதேவியின் கிளாமரான நடிப்பும் இன்று வரை ரசிகர்களைக் கவர்ந்த ஒன்று. ரஜினிகாந்திற்கனெ தனி நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்த பெருமை 'ப்ரியா' படத்திற்கு உண்டு. இப்படம் 1979ம் ஆண்டு கன்னடத்திலும் வெளியானது.

'2.0' "எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது-எழுத்தாளர் ஜெயமோகன்

 '2.0' படத்தில் சிட்டி பாத்திரம் விரிவாகியிருப்பதாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

'2.0' படத்தில் ஷங்கருடன் இணைந்து முதன் முறையாக வசனம் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். '2.0' குறித்து ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தார்.

இப்போது முதன் முறையாக '2.0' குறித்து தனது வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அப்பதிவில், "எந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அர்னால்ட் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச் சிக்கல்களால் நடக்கமுடியாமல் போயிற்று.

அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.

உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரேசமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு, வேகம், சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது.

ஷங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒரு படி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக 'எந்திரன்' முதல் பகுதியைவிட இது தீவிரமானது. நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல் புனைவு படங்களுக்கும் ரசிகன்.

என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச் செய்த கதை இது. இதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது" என்று கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்தை நான் இயக்கினால்- ராஜமௌலியின் அதிரடி பதில்

தென்னிந்தியத் திரையுலகில் ஷங்கர், மற்றும் ராஜமௌலி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்றவர்கள்.

ஷங்கர் ரஜினிகாந்தை வைத்து ஏற்கெனவே சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கி விட்டார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது.

ஆனால் இயக்குனர் ராஜமௌலி இன்னும் ரஜினிகாந்தை இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினார் என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு

அவர் அளித்த பதில் “அவருக்கு நான் என்ன கதாபாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி பத்து நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது.

அந்த அளவிற்கு ரசிகர்களோட ஆரவாரம்தான் அதிகமா இருக்கும்” என்று பதிலளித்துள்ளார். அப்படி ஒரு ஆர்பாட்டமான படத்தைத்தான் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமௌலியின் பாகுபலி 2 க்குப் பிறகு ரஜினியுடன் ராஜமெளலி இணைவார என்று பார்ப்போம்.

சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது பிரபல கதாநாயகனா?

சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை தற்போது முடியாது போல. சிம்பு மற்றும் அனிருத்தை ஜனவரி 2ம் தேதி ஆஜராஜ வேண்டும் என்று முன்பே கூறினர்.

இந்நிலையில் தற்போது பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு(சிம்பு) ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நடந்தது.

விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்துள்ளனர், இதை தொடர்ந்து சிம்புவின் ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2 காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், இந்த பாடலை முதன் முதலாக யார் லீக் செய்தது என்று சைபர் கிரேம் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த பாடலை நண்பர்களிடம் பகிர்ந்தது ஒரு பிரபல தமிழ் சினிமா கதாநாயகன் தான் என ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றது.

இதையெடுத்து போலிஸாரும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ரகுமானுக்கும் எனக்கும் செட் ஆகாது, ஏனெனில்? ராஜமௌலி அதிரடி பதில்

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருடன் பணிபுரிய பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ராஜமௌலியிடம் சமீபத்தில் ரகுமானுடன் எப்போது இணைந்து பணியாற்றுவீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் நான் தினமும் காலை 4 மணிக்கு விழிப்பேன், பின்பு காலை 7 மணியிலிருந்து என் பணிகளை தொடங்குவேன். அந்த நேரத்தில் தான் என் கற்பனைக்கு ஏற்ற நேரமாக நான் ஒதுக்குவேன்.

ஆனால், இந்த நேரத்தில் தான் ரகுமான் உறங்குவார். அதனால், அவருடன் பணிபுரிவேனா? என்பது தெரியவில்லை.

பொடுகு பிரச்சனையை தீர்த்திடும் சிறந்த வழிமுறைகள்

 அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பொடுகு  இருந்தால் முடி கொட்டுதல், முகப்பரு, நரைமுடி, தோல் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

1. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தயிருடன் கலந்து ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து , மைல்டு ஷாம்பு
போட்டு அலச வேண்டும்.

2. 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து, தலையி தடவி ஊற வைத்து முடியை அலச வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிபடியாக நீங்கிவிடும்.

3. ஆலிவ் ஆயிலை லேசாக சூடேற்றி, இரவில் தேய்த்து விட்டு காலையில் எழுந்து ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும்.
4. ஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும்.  சீயக்காய் தலையை வறண்டு போகாமல் பாது காக்கும்.

5. ஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்க்ல்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

6. சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து, 30 நிமிடம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்ரீலும் போய்விடும்.

 7. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடேற்றி, தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தீரும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் பொடுகு வர வாய்ப்புகள் அதிகம்.

''தில்வாலே'' - திரை விமர்சனம் - சற்று வருத்தமே. ஷாரூக்கான் - கஜோல்-க்காக வேண்டுமானால் பார்க்கலாம்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், ரோகி்த் ஷெட்டியுடன் இணைந்துள்ள படம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-கஜோல் ஜோடி சேர்ந்துள்ள படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ரொமான்ட்டிக் திரைப்படம் ''தில்வாலே''. இந்த தில்வாலே ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

கதைப்படி, ராஜ் எனும் ஷாரூக்கானும், வீர் எனும் வருண் தவானும் சகோதரர்கள். வீர், இஷிதா எனும் கீர்த்தி சனோனை காதலிக்கிறார், அவரை திருமணம் செய்ய எண்ணி, தனது விருப்பத்தை அவரது அண்ணனான வீர் எனும் ஷாரூக்கானுடன் சொல்கிறார். தம்பியின் காதலை நிறைவேற்ற அவரும் ஓ.கே. சொல்கிறார். ஆனால் கீர்த்தி சனோனின் அக்காவான இசிதா மீரா எனும் கஜோல் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அதற்கு காரணம் வருண் அண்ணனான ஷாரூக்கை கஜோலுக்கு பிடிக்கவில்லை. எதனால் ஷாரூக்கை கஜோல் வெறுக்கிறார், அவர்களுக்கு இடையேயான உறவு என்ன.? வருண்-கீர்த்தியின் காதல் கைகூடியதா...? இது எல்லாவற்றுக்கும் விடை தெரிய தியேட்டரில் போய் மீதி படத்தை பாருங்கள்.

இளம் காதலர், மாபியா கும்பலின் தலைவன் என இரண்டு விதமான ரோல்களில் நடித்துள்ளார் ஷாரூக்கான். அதிலும் மாபியா கும்பல் ஷாரூக்கானின் ரோல் தான் வாவ் சொல்ல வைக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள கஜோல், இந்தப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்த அசத்தியிருக்கிறார்.

ஷாரூக்-கஜோலை போன்று வருண் தவான், கீர்த்தி சனோனும் தங்களது ரோலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரோகித் ஷெட்டி அற்புதமான இயக்குநர் தான், ஆனால் தில்வாலே படம் முழுக்க தன் இயக்குநர் ரோலை முழுமையாக பூர்த்தி செய்ய தவறிவிட்டார். அண்ணன் - தம்பி பாசத்துடன் காதல், ஆக்ஷ்ன், சென்ட்டிமென்ட், ரொமான்ஸ் உள்ளிட்ட எல்லா விசயங்களையும் படத்தில் கொடுத்துள்ளார் இயக்குநர், ஆனால் புதிதாக ஒன்றும் இல்லை, ஏற்கனவே பல படங்களில பார்த்து பழகிய காட்சிகளை தான் கொடுத்துள்ளார். மேலும் ஷாரூக்-கஜோல் இடையேயான கெமிஸ்ட்ரியும் சிறப்பாக இல்லை.

படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் ஸ்டைலாக சர்வதேச தரத்தில் எடுத்திருக்கிறார்கள், படத்திற்கு இசையும், ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளது. ஆனால் இத்தனை இருந்தும் படத்தில் புதிய விசயங்கள் எதுவும் இல்லாததால் தில்வாலே பெரிதாக கவரவில்லை.

''தில்வாலே'' ஒரு பேமிலி என்டர்டெயின்ட்மென்ட் படம் தான், ஆனால் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லாதது சற்று வருத்தமே. ஷாரூக்கான் - கஜோல்-க்காக வேண்டுமானால் ''தில்வாலே'' படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

நெருப்பு நெருங்காத மரம் - ஒரு அதிசய செய்தி..!

காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.

பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்-படுகிறது.

இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.

இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

சூர்யா அளவாகதான் பேசுவார். ஆனால் இன்று நிறைய பேசினார். அவ்வளவும் முக்கியமானவை

சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாத சமூக அக்கறைக்கு பெரிய உதாரணமாக இருக்கப் போகும் படம் பசங்க2. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், படத்தின் தீம் அப்படி. ஏற்கனவே பசங்க படத்தில் கிராமத்து பள்ளிக்கூடத்தை காண்பித்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் நகரம் சார்ந்த குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார். முக்கியமான விஷயம் ஒன்று… இப்படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்ட, சூர்யா படம் முழுக்க வருகிறார் என்பதுதான்!

ஏற்கனவே ஒரு அறிக்கை மூலம், இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் யாரும் தியேட்டர்களில் பேனர் கொடிகள் கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டார் சூர்யா. வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியாமலும், மக்கள் முகத்திலிருந்து சோகம் வடியாமலும் இருக்கும் நேரத்தில் இது தேவையா என்பது அவரது எண்ணம். அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா பேசியதும். அது அப்படியே இங்கே-

“சென்னைக்கு எது அடையாளமாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒருவேளை கடற்கரை, டிசம்பர் மாத நிகழ்ச்சிகள் என இருந்திருக்கலாம். இந்தியாவில் உள்ள அனைவருமே திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னையின் சமீபத்திய வெள்ளம் ஓர் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

ஒருவருக்கு கஷ்டம் என்றால் நாங்க இருக்கோம் என்று போர்க் குணத்தோடு வெளியே வந்த தன்னார்வலர்களை நினைத்துப் பார்க்கிறேன். நிறையப் பேர் தன்னார்வலர்களைப் பற்றி பேசிவிட்டார்கள். ஆனால் எனக்கு இது தான் முதல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் கழுத்தளவு தண்ணீரில் கூட போய் பால் பாக்கெட் போட்ட ராதா அம்மாவில் இருந்து, முகம்மது யூனுஸ் காப்பாற்றிய தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து அவர்களை அக்குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டிருப்பது வரை.. இவ்வாறு முகம் தெரியாத அத்தனை தன்னார்வலர் நாயகர்களுக்கு தலை வணங்குகிறேன். இவர்கள் சென்னையின் புது அடையாளமாக ஆகிவிட்டார்கள். புதிய அடையாளத்தை தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மும்பையில் ஒரு நாள் என்ன சம்பவம் நடந்தாலும், அடுத்த நாள் மக்கள் அவர்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இத்தனை நாட்களாக வெள்ளத்தைப் பற்றி பேசுவதா, இல்லையென்றால் ‘பசங்க 2′ பற்றி பேசுவதா என்று தெரியாமல் இருந்தது. ஏனென்றால் இரண்டு வேலைகளும் ஒரே சமயத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது ‘பசங்க 2′ படத்தை டிசம்பர் 24ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

2டி நிறுவனத்துக்கு முதல் அடையாளமாக இருக்க வேண்டிய படம் ‘பசங்க 2′ தான். கோவாவில் இருக்கும் போது எனக்கு வந்து கதை சொன்ன பாண்டிராஜ் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கதை சொன்ன உடனேயே இப்படத்தை பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன். குழந்தைகள் படம், சமுதாயத்துக்கான படம் போன்றவைகளில் ஏதாவது ஒன்று முதல் படமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அனைத்தும் சேர்ந்ததாக ‘பசங்க 2′ அமைந்திருக்கிறது. எப்படி பாண்டிராஜ் சார் ஒரே படத்தில் அத்தனை விஷயங்களையும் இணைத்தார் என்று தெரியவில்லை.

‘பசங்க’ என்று ஒரு படம் எடுத்துவிட்டு, மீண்டும் அதே குழந்தைகள் களத்தில் வேறு ஒரு படம் பண்ணுவது இயக்குநர் பாண்டிராஜ் சாருக்கு தான் சவாலாக இருந்திருக்கும். இரண்டு பேருமே சேர்ந்து தயாரித்து, வெளியிடலாம் என்று சொன்னது பாண்டிராஜ் சாரின் பெருந்தன்மையைக் காட்டியது.

நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது, அப்பா, அம்மா நம்முடன் இல்லை என்று கோபப்பட்டு இருக்கிறேன். ஆனால், இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. குழந்தைகளோடு தற்போது நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வேலைகளில் மும்முரமான அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அம்மாகளுக்குத் தான் தெரியும். நாங்கள் சிறுவயதில் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவோம், நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். நிறைய நேரம் வீட்டுக்கு வெளியே இருப்போம். இப்போது அப்படியில்லை. வீட்டுக்குள் தான் அடைத்து வைத்துவிடுகிறோம்.

குழந்தைகளிடம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கிறோம். இப்படி அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைந்து சொல்லும் ஒரு படமாக ‘பசங்க 2′ படத்தைப் பார்க்கிறேன்.

நகரத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடைய வாழ்க்கையை அவ்வளவு அழகாக சொல்ல முடியும் என்று சொல்லியிருக்கிறோம். இப்படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் இதில் நிறைய இருக்கிறது. பாடம் எடுப்பது போல் அல்லாமல், இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது, இப்படி இருக்கலாமே என்று சொல்லும் படமாக ‘பசங்க 2′ படத்தைப் பார்க்கிறேன்.

இயக்குநர் பாண்டிராஜின் படங்களில் அவருடைய வசனங்கள் அவருக்கு பெரிய பலம். இந்த படத்திலும் அதே போன்று நிறைய வசனங்கள் இருக்கின்றன. “பசங்களின் மனதில் மதிப்பெண்களை விட மதிப்பான எண்ணங்களை தான் விதைக்க வேண்டும்”, “70 கிலோ உருவம் 10 கிலோ உருவத்தை அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை!” என்பது மாதிரியான நிறைய வசனங்கள் இப்படத்தில் இருக்கிறது”

சூர்யா அளவாகதான் பேசுவார். ஆனால் இன்று நிறைய பேசினார். அவ்வளவும் முக்கியமானவை.