
கரகாட்டம் என்பதே நள்ளிரவு ஆட்டம்தானே? ஊர் அடங்கி, குழந்தை குட்டிகளெல்லாம் தூங்கிய பின் தெரு தெருவாக ஆடிக்கொண்டே வருவார்கள். அவர்கள் பேசும் சில டயலாக்குகள் கூடியிருக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வயாக்ராவை ஊட்டி ஊட்டி வீட்டுக்குள் அனுப்பும். இப்படி கால காலமாக நடந்து வரும் வழக்கத்தை இந்த படத்தில் பாலா எப்படி கையாண்டிருப்பார்?
அதைதான் லேசு பாசாக உணர்த்தியிருக்கின்றன மேற்பட் கட்டுகள்! சென்சார் அமைப்பினர் சில வசனங்களை நீக்க சொல்லி கேட்டார்களாம். அப்படி நீக்கினால் படத்திற்கு யு சான்றிதழ் தருவதாகவும் சொன்னார்களாம். பாலாதான் பிடிவாதமாக, ஒரு இடத்திலும் கை வைக்க விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். வேறு வழியில்லாமல் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்கள். அப்படியிருந்தும் 18 இடங்களில் கட் என்கிறார்கள். இந்த கட்டுகள் அத்தனையும் காட்சியிலிருந்த ஆபாசத்திற்காக.
நிலைமை ஓரளவு ‘கட்’டுக்குள் அடங்கிவிட்டது. இருந்தாலும் படம் பார்க்கிற ரசிகர்களுக்கு விட்டு விட்டு கொதித்தால் அதற்கு சென்சார் மட்டும் பொறுப்பல்ல!
0 comments:
Post a Comment