
பீப் சாங் விவகாரத்தில் இருந்து சிம்புவை விடுவிக்க வேண்டும் என சிம்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையில் சிம்புவை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. பீப் சாங் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து எழுந்துள்ள பிரச்னைகளில் இருந்து சிம்பு விடுபடுவதற்காக அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பு யாகமும், சிறப்பு பூஜையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். சிக்கலான வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு பரிகாரம் செய்வதற்கு புகழ்பெற்றது இந்த வழக்கறுத்தீஸ்வரர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment