Monday, December 28, 2015

பீப் பாடல் - குட்டையைக் குழப்பிய ராதிகா...!

பீப் பாடல் என்கிற ஆபாசப்பாடலை பாடிய விவகாரத்தில் சிம்பு மீது பல வழக்குகள் பாய்ந்துள்ளன. தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவரது எதிர்காலமே சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. நடிகர் சங்கம் சார்பில் இப்பிரச்சனையில் தலையிட்டு சிம்புவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதுபோல் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சிம்புவிடம் கேட்கப்பட்டது. எப்படியாவது இந்தப் பிரச்சனையிலிருந்து மீள வேண்டும் என்று நினைத்து சிம்புவும் அதற்கு ஒப்புக்கொண்டார். கடிதத்தை நடிகர் சங்கம் சார்பில் டிராப்ட் செய்து அனுப்பினர்.

இதைக் கேள்விப்பட்ட ராதிகா, இடையில் புகுந்து சிம்புவிடம் எதைஎதையோ சொல்லி அவரை குழப்பிவிட்டுள்ளார். அதன் பிறகு சிம்பு நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவே இல்லை. என் பிரச்சனையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று தகவல் சொல்லி அனுப்பினாராம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதை மறைமுகமாக கூறினர் நடிகர் சங்க நிர்வாகிகள்.

0 comments:

Post a Comment