Saturday, December 5, 2015

ஸ்டிக்கரா ஒட்டுறீங்க ஸ்டிக்கரு: அதிமுகவினரை சமூகவலைதளத்தில் காரித் துப்பும் மக்கள்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிறர் அளிக்கும் நிவாரணப் பொருட்களில் அம்மா ஸ்டிக்கரை ஒட்டும் அதிமுகவினரை மக்கள் சமூக வலைதளங்களில் காரித் துப்பி வருகிறார்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லாரி, லாரியாக நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி மிரட்டி பொருட்கள் உள்ள பைகளில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டி அனுப்புகிறார்கள்.அதிமுகவினரின் அடாவடி தாங்க முடியாமல் நிவாரணப் பொருட்களை கொண்டு வருவோரும் ஸ்டிக்கர் ஒட்ட சம்மதிக்கிறார்கள். இந்நிலையில் நிவாரண பணியை மேற்கொள்ளாமல் நல்ல மனதோடு உதவுவோருக்கு...

தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்....

'கருத்து கந்தசாமி' 'குழப்பப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்' நடிகர் கமல்..: ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையை புரட்ட பெருவெள்ளம் குறித்து பேட்டியளித்திருந்த கமல்ஹாசன் தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி...

கதை சொல்லும் ஜெயலலிதாவின் கார்

 சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னாள் சென்னை வீதிகளில் ஒரேயொரு ஃபோர்ட் கார் மட்டுமே ஓடியது. அந்தக் காருக்கு சொந்தக்காரர் அன்று முன்னணி திரைநட்சத்திரமாக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்தக் கார் அன்றைய ஜெயலலிதாவை - காரின் பாஷையில் பேபி - குறித்து பேசினால் எப்படியிருக்கும்? இப்படியொரு ஐடியா அந்தக் காலத்திலேயே எழுந்து தனி கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். மினுக்கி எழுதப்பட்ட ஜிகினா கட்டுரைதான் என்றாலும் படிப்பதற்கு தமாஷாகவே இருக்கும். இனி ஓவர் டு ஃபோர்ட் கார்.முதன் முறையாக சென்னைக்கு வந்தபோது எனக்கு ஒரே பெருமை. நான் சுமந்து செல்ல வேண்டியது ஒரு பிரபல நடிகை. நடிகையின் கார் என்ற முறையில் எவ்வளவு பெரிய விழாக்களிலும் ஆடம்பர விருந்திலும் இந்த...

180 பேரை தன் வீட்டில் தங்க வைத்த அஜித்!

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களு,ம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று ரஜினி மற்றும் விஜய் தங்களின் கல்யாண மண்டபங்களை மக்களுக்காக திறந்து வைத்துள்ளனர். மேலும் இளையதளபதி விஜய் அவர்கள் 5 கோடிக்கு மதிப்பிளான பொருட்களை வழங்கிவருவதாக செய்திகள் வெளிவந்தன.தற்போது தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவயும் அவரே அளிப்பதாக...

அகதிகள் ஆகிவிட்டோம் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு உதவும் வகையில் பல நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.உறவினர்களுக்கு டுவிட்டர் மூலம் தகவல் பரிமாற்றம், உணவு சப்ளை, முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு உதவி போன்றவை அளித்துள்ளனர்.அதேசமயம் பல நட்சத்திரங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.‘மக்கள் கொடுக்கும் வரிப்பணம் எங்கு போகிறது.மழை வெள்ளத்தில் இந்த பாதிப்புக்கு காரணம் அரசு நிர்வாகம்தான்’ என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார் கமல்ஹாசன்.இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு கோடம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு மற்றும் ஒலிப்பதிவு ஸ்டுடியோவுக்குள் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து அவர் கூறியது:நண்பர்களும், நலம் விரும்பிகளும்...

சளி பிரச்னையால் அவஸ்தைப்படுகிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம்.அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும்.சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.ஆவி பிடித்தல் தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.தண்ணீர் கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.சுத்தமான மூக்கு தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.உப்புத் தண்ணீர் சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும்.இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும்.யூகலிப்டஸ்...

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்...

ரஜினி 10 லட்சம் கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம் : ராம்கோபால் வர்மா கிண்டல்

 வெள்ள நிவாரண நிதி அளிக்கும் நடிகர்களை கிண்டல் செய்திருக்கிறார் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா. தமிழகம் மற்றும் சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.நடிகர்கள் சூர்யா சார்பில் 25 லட்சம், விஷால் 10 லட்சம், சிவகார்த்திகேயன் 5 லட்சம், நடிகர் தனுஷ் 5 லட்சம், நடிகர் ரஜினிகாந்த் 10 லட்சம் என நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கும்  ராம்கோபால் வர்மா “ஐயோ, ரஜினிகாந்த்...

சென்னையில் படகு மூலம் நடமாடும் ஏடிஎம் இயந்திரம்: நிதியமைச்சகம் உத்தரவு

 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் பொது மற்றும் தனியார் வங்கி பிரதிநிதிகளின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.கனமழை மற்றும் வெள்ளத்தினால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுத்தவில்லை. சில வங்கிகள் சரியாக செயல்படாமல் முன் அறிவிப்புமின்றி மூடப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மற்றும் பிற சேவைகள் மூலம் நடமாடும் மொபைல் ஏடிஎம் இயந்திரங்களை உடனடியா செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.வங்கிகள் ஞாயிற்று கிழமைகளில் செயல்படுத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வங்கிகளின்...