Monday, December 14, 2015

ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்!

பீப் பாடலுக்காக செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிக்க எனக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லிக் கொண்டுள்ள அனிருத்துக்கு, இந்த மாதிரி சர்ச்சைகள் புதிதல்ல.

ஏற்கெனவே இருமுறை ஆபாச சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கோரியவர் இந்த அனிருத்.

ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் அனிருத்து சினிமா உலகில் ஸ்பெஷல் மரியாதை. பெரிய வாய்ப்புகள். அவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும்தான். இன்று வரை தனுஷின் படங்களுக்கு அனிருத்தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.

அனிருத்தை தன் தம்பி என்று கொண்டாடி வருகிறார் தனுஷ்.

ஆனால் அந்த அனிருத் செய்யும் வேலைகள் பெரும்பாலும் சில்லியானவை. பரபரப்பான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த நேரத்தில்தான் தன்னைவிட பல ஆண்டுகள் வயது மூத்த ஆன்ட்ரியாவின் உதட்டைக் கடித்தபடி இருந்த படங்களை ஆன்லைனில் கசியவிட்டார். முதலில் யாரோ லீக் பண்ணிவிட்டதாகக் கூறியவர், பின்னர் அந்தப் படங்களுக்காக வருத்தம் தெரிவித்தார். செய்யாத வேலைக்கு இவர் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் உடலுறவைக் குறிக்கும் மோசமான ஆங்கில வார்த்தையை வைத்து கொச்சையான ஆங்கிலப் பாடலை வெளியிட்டார். அதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அனிருத்தைக் கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்கள் குவிந்தன.

அனிருத் கைதாகும் சூழல் ஏற்பட்டபோது, அப்போதைய கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ராகவேந்தர். மகனின் கேவலமான காரியத்துக்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். எச்சரித்து அனுப்பினார் ஜார்ஜ்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. மீண்டும் தன் ஆபாச தாண்டவத்தை பீப் பாட்டு என்ற பெயரில் ஆடி முடித்துவிட்டு, 'அப்படியெல்லாம் நான் செய்யவே இல்லைய.. நல்ல பிள்ளையாக்கும்' என்று சீன் போடுகிறார்!

உங்கள் தொப்பையை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.

இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர் குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள் மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள் இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள் சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள் அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள் இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

கொள்ளு ரசம்
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள:

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

மருதநாயகம் மீண்டும் தொடக்கம்- தயாரிப்பாளர் இவரா?

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மருதநாயகம். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து, பட்ஜெட் காரணமாக நின்றது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட்ரை ஐங்கரன் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.

இதன் மூலம் ஐங்கரன் நிறுவனமே இப்படத்தின் மீதமிருக்கும் பகுதியை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. மேலும், லண்டனில் உள்ள நண்பர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை! கவனம் தேவை...!

மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.

கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.

ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. நீண்ட நாட்களுக்கு...

 நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.

8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.

10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.

சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.

மெலிந்த உடல் குண்டாக... குண்டான உடம்பு மெலிய...

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும்.

மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

 உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மன தும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப் பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக் கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடை க்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கிய மும் ஏற்படும்.

 அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத்தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்க லாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங் களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.

 இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோ ப்பு இல்லை என்றாலும் அந் த தன்மை உடைய ஷாம்பு வோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்ற னர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச் சாறு கல ந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

 இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கல வையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளி த்தால் சருமம் மெருகே றும். அழ கு என்றால் அதில் தலைமுடி தான் மிக முக்கிய மாக கருதப்படு கிறது. அதற்காக இப்போதெல்லா ம் டை அடிக்கின்றனர் பலர்.

 டை அடிப்பதற்கு பதிலாக 100 கி ராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்­ணீர் சேர் த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல் லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.

 கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகு க்கு காரணம். சீப்பு, டவல் ஆகிய வற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண் ணை தேய்த்து தலை முடியை அலசவும். ஆரோக்கிய  மான உணவுகளை சாப் பிடவும்.

 இன்றைக்கு நடுத்தர வயதுள்ள வர்களில் பெரும்பாலும் டை அடி க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும். இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடி கள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண்மை யை பயன்படுத்தி முடியை கறுப் பாக்கலாம்.

 நிறைய காய்கறிகள் சாப்பிடுவோ ருக்கு சருமம் பளபளப்பாக இருக் கும். இதனால் அவர்கள் எப்போ தும் அழகாக இருப்பார்கள். கேரட், கரு ணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.

 உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளி தாக குண்டா கலாம்.

 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மே சைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொட ர் ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகி விடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்த யத்துக்கு உண்டு.

 குண்டான உடம்புடன் கஷ்டப் படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறு த்து… பொடியாக்கி தினமும் சாப் பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடை யை குறைத்துவிடும். உங்களுடைய உடல் சரியான நிலை க்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உட லுக்கு நல்லதே.

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????

அல்வா - To cheat
ஆத்தா - Mother
அபேஸ் - Loot adiththal
அல்பம் - A silly/cheap dude
அண்ணாத்தே - The elder brother
அண்ணி - Anna's figure
அப்பீட்டு - Unsuccessful
அசத்தல் - Kalakkal
பஜாரி - A not-so-friendly figure

பந்தா - Pillim
பேக்கு - Fool
பாடி - Muscular Machi
சித்தீ - Aunty Figure
டப்ஸா/டூப் - Lie
தேசி குஜிலி - An Indian figure in US
தில் - Courage
தூள் - Super
தம் - To smoke
டாவு - Site seeing

டிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)
டமாரம் - Deaf
டோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
ப்ரீயா வுடு மாமே - Forget it
காலி - Appeettu
குஜிலி - Figure
குரு/தல - Head of the gang
குஜால்ஸ் - Having fun with Gujilis
கானா - Rap song sung by Machis
கலீஜ் - Dirty

கில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude from
ஆந்திரா ஜக்கு - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
ஜொள்ளு - Bird watching
ஜில்பான்ஸ் - Gujaals
ஜூட்டு - Escape when caught up by girlfriend's father.
ஜுஜிபி - Easy
ஜில் - An exclamation on seeing a Takkar figure
ஜல்சா - Same as Gujaals
காட்டான் - Uncivilized/ Rude Machi
கேணை - Idiot
கிக்கு / மப்பு -Intoxicated/under influence

கலக்கல்ஸ் - To cause a flutter
கேணை பக்கிரி - Friend of ushar pakri
கிண்டல் - To make Fun
காக்கா அடிக்கிறது - Putting soaps to someone
கே.எம்.எல். - Kedacha Mattum Labam
குட்டி - Figure
குடும்ப பிகர் - Homeloving Gujli
குடும்ப பாட்டு - A song with which machis identify themselves
குள்ளுஸ் - A short machi
லட்டு - Allva

லூட்டு -to steal
மாம்ஸ் - One cool dude
மாங்காய் - Fool
மச்சி - Maams
மண்டை - A sharp guy
மேரி - feminine of Peter
மாவு - refer O B.
நச்சுன்னு - Bull's eye
நம்பிட்டேன் - I don't believe you
நாட்டு கட்டை - A well-built village figure
நாட்டான் - Villager

நாமம் - To cheat
நைனா - Father (courtesy Telugu)
கடலை - Machi talking to a Gujili or vice versa
ஓபி - To waste time
ஒண்ணரை அணா - Worthless
பட்டாணி - Machi talking to Machi or Gujli talking to Gujli
பீட்டர் பார்ட்டி - Machi trying to show off by talking in
ஹை-பி - english
பத்தினி - A figure who goes around the block
பக்கிரி - A shrewd dude
பேட்டை - Area
பிசாத்து - Cheap
பிலிம் - Show-off

பீலா - To lie
ராம்போ - A manly figure
சிஸ்டர் - Often used by Machis while Approching Figures for the first time
சொங்கி - Lazy
சாந்து பொட்டு -Possibility of getting beaten by a stick
(courtesy Movie:Thevar Magan)
டக்கர் பிகர் - Semma figure
தண்ணி - Liquor
தலைவர் - Leader
டின் கட்டறது - Getting into trouble (courtesy Movie: Anjali)
உஷார் பக்கிரி - Smart pakri
வெண்ணை - Fruit
வெயிட் பிகர் - A very attractive/rich figure
ராங்கு காட்டுறது -Acting indifferently

தமிழகராதியில் இல்லாத சொல்லுக்கு விளக்கம்

டகால்டி
திருட்டுத்தனம்

இந்த‌ சொல் தமிழகராதியில் இல்லை. Dacoity என்ற ஆங்கிலச் சொல் மருவி டகால்டி என்று வழங்கப்படுவதாக (அம்பட்டன் வாராவதி போல) கேள்விப்பட்டிருக்கிறேன். Dacoity என்றால் அதாவது கூட்டமாக கொள்ளை அடித்தல் என்று தெரிகிறது.
பல்கலை அகராதியில் இதற்கு தீவட்டிக்கொள்ளைக்காரன் என்று பொருள் உள்ளது. எனவே ‘டகால்டி வேலை' என்றால் ‘திருட்டுத்தனம்’என்று கொள்ளலாம்.

டப்பா
இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு தமிழ்ப்பாட்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.

நான் கூட 'டப்பா டான்ஸ் ஆடிரும்' என்றால் சும்மா 'எகனை மொகனை' ஆக சொல்லப்பட்டது என்று நினைத்தேன். டப்பா என்பதற்கு பொருளே ஒரு வகையான 'எசப்பாட்டு' என்று தெரிகிறது.
அதனால் 'டப்பா டான்ஸ் ஆடிருச்சு' என்று சொன்னால் தப்பே இல்லை.

குஜிலி
பெண், குஜராத்தி, குஜிலிக்கடை
- அந்திக்கடை

குஜிலி என்னும் சொல் பொதுவாக
அதிகப்படியாக அலட்டும் (மேனாமினுக்கி) பெண்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. குறத்தியைக் கூட குஜிலி என்று சென்னையில் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். குஜிலிக்கடை என்பது மாலையில் மட்டும் நடத்தப்படும் அந்திக்கடை வகையறா என்று உள்ளது. ஒருவேளை பெண்க‌ள் அல்ல‌து குஜ‌ராத்திய‌ர் ந‌ட‌த்தும் க‌டையை குஜிலிக்க‌டை குறிப்பிட‌லாம்.

டங்குவார்
குதிரையைப்பிணிக்கும் தோற்பட்டை

ட‌ங்குவார் அந்து போச்சு
‘டங்குவாரறுதல்’
என்ற‌ சொல் அப்படியே அக‌ராதியில் இருக்கிற‌து. ‘வேலை மிகுதியாற் களைத்துப் போதல்’ என்ற‌ பொருள் ‘டங்குவாரறுதல்’க்கு உள்ள‌து. அதிக‌ வேலை செய்து நொந்து போன‌வ‌னை இங்க‌ன‌ம் நையாண்டி செய்த‌ல் சென்னைய‌ர் வ‌ழ‌க்க‌ம். குதிரையின் தோற்ப‌ட்டை அறுத‌ல் என்று‌ம் இத‌ற்குப் பொருள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.

சோமாறி
பொருள் : சோம்பேறி

‘ஏனாதிப‌ர்வகை’ என்றும் சோமாறி எனும் சொல் குறிக்க‌ப்ப‌டுகிற‌து. இங்கு ‘ஏனாதி’ என்றால் வட ஆர்க்காடு, நெல்லூர் ஜில்லாக்களில் வசிக்கும் ஒரு பழைய சாதியினரைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.

ஏனாதி என்றால் நாவிதன், புறம்போக்கு, ப‌டைத்த‌லைவ‌ன், ம‌ற‌வ‌ன், என்று ப‌ல‌ வித‌ங்க‌ளில் பொருள் கிடைக்கிற‌து.

பன்னாடை
பொருள் : மூடன்

கீசிடுவேன்
பொருள் : கிழிச்சிடுவேன் என்பதே இங்கனம் மருவியது.

தாராந்துடுவே
தாரா என்ப‌து விண்மீன், வாத்து, ஒருவ‌கை நாரை என்ப‌ன‌வ‌ற்றையெல்லாம் குறிக்கிற‌து என‌த் தெரிகிற‌து. இதற்கும் ‘தாராந்துடுவே’க்கும் சம்பந்தம் இல்லையென்றும் தெரிகிறது.

தாரன் என்பது உடையவனைக் குறிக்குஞ் சொல்; வார்சுதாரன். என‌வே, தாராந்துடுவே என்று திட்டப்படுதல் வாரிச‌ற்றுப் போகும் ஒரு நிலையை நினைவுப‌டுத்தும் என்று ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌லாம்.

இந்தியில் ‘டர்’ என்றால் பயம். ‘டர் ஆயிட்டான்பா’ என்று பயந்து போனவனைச் சொல்வது வழக்கம். தாராந்துடுவே இதிலிருந்து வந்திருக்கலாம்.

வீட்டாண்டை
அண்டை என்பது பக்கத்தில், சமீபத்தில் என்று பொருள் தரும் ஒரு சொல். எனவே கடையாண்டை, வீட்டாண்டை என்று குறிப்பிடப்படுவதை கொச்சை என்று சொல்ல இயலாது. ஆனால் வூட்டாண்ட‌, கோயிலாண்ட‌, க‌டியாண்ட‌ என்று சொல்வ‌தெல்லாம் கொஞ்ச‌ம் அதிக‌ம்தான்.

டபாய்த்தல் (மூலம் : இந்தி)
பொருள் : ஏமாற்றுதல் மற்றும் பரிகசித்தல் (நக்கல்) என்று பொருள் சுட்டப்பட்டுள்ளது.

பேமானி (மூலம் : உருது)
பொருள் : நாணமற்றவன.

மொள்ளமாறி (முல்லைமாறி)
முடிச்சவிக்கி, (முடிச்சவிழ்க்கி)
முடிச்சுமாறி

இம்மூன்று சொற்களுமே ஒரே பொருள் தருவன என்று அகராதியில் காட்டப்பட்டுள்ளது. மூட்டை போன்றவற்றின் முடிச்சை அவிழ்த்துத் திருடும் திருடனைக் குறிக்கும் சொற்களாகும்.

கேப்மாரி, கேப்பமாறி
பொருள் : திருடன்

‘கேப்பை’ என்பதற்கு ‘ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற் பிழைக்கும் தெலுங்கச்சாதியார்’ என்று பொருள் கிடைக்கிறது. எனவே இச்சொற்கள் திருடுபவனைக் குறிக்கின்றன.

பிகில்
பொருள் : சீட்டியடித்தல்

பீச்சாங்கை
இது ‘இடது கை’ என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கசுமாலம்
பொருள் : ஆபாசம், ஒழுக்கக்கேடு
கசுமாலர் :அசுத்தர்
கசுமாலி : அசுத்தமுள்ளவள், சண்டைக்காரி

கசுமாலம் என்பது கஸ்மாலம் என்றும் பிரயோகிக்கப்படுவதால் இதுவும் உருது மொழி மூலம் உடையது என்று பலர் எண்ணலாம். ஆனால் இது ஒரு தமிழ்ச்சொல் (அல்லது வட‌ மருவல்) என்று தெரிகிறது (உபயம் : திருப்புகழ், சொல் : கசுமாலர்)

சாவுகிராக்கி (மூலம் : உருது)
கிராக்கி (உருது) என்பதற்கு அதிகவிலை என்று பொருள். சாவுகிராக்கி என்பது பிணத்தின் முன் நின்று பேரம்பேசும் இழிமையைக் குறிக்கிறது.

பேஜார்
பொருள் : சோர்வு, தொந்தரவு

மாஞ்சா (உருது)
மாஞ்சம் (தமிழ்) : மாமிச‌ம்
பொருள் : காற்றாடிக்கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின்வகை

‘நெஞ்சிலேகீற மாஞ்சாசோத்தை தோண்டி எடுத்துருவேன்’

(நெஞ்சைப் பிள‌ந்து இத‌ய‌த்தை தோண்டி எடுக்கும் கொடூர‌த்தை எவ்வ‌ள‌வு அழ‌காக‌ச் சொல்கின்ற‌ன‌ர் சென்னைத் த‌மிழில்)

புருடா
பொருள் : ப‌ய‌முறுத்துத‌ல்

திரை வெளிச்சம்: பேரன்பின் பிரதிபலிப்பு!

 ‘ஆபத்துன்னா ஒடி வந்து உதவுறது சினிமாவுல மட்டும்தாம்பா’ என்ற கிண்டலைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த மாமழை. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஓடி வருவோம் என்று செயலில் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார்கள் நம் திரையுலகினர்.

கனமழையில் நகரே சிக்குண்டு கிடக்கையில் அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.300, குடிநீர் கேன் ரூ.100 என்று முறையற்று சிலரின் அடாவடித்தனம் தொடரவே செய்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கள் கார்களையும், நண்பர்களின் வாகனங்களையும் கொண்டு வந்து கொஞ்சமும் விளம்பரம் இல்லாமல் மழையில் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து நிஜ ஹீரோக்களாக வெளிப்பட்டார்கள் பல நடிகர்கள்.

தன் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, ‘ நான் நடிகன். வசதி படைத்தவன். எனக்கே இந்த நிலை என்றால், ஏழைகளின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று ட்விட்டரில் பதிவிட்டு நண்பன் ஆர்.ஜே.பாலாஜியை சேர்த்துக்கொண்டு களத்தில் இறங்கினார் நடிகர் சித்தார்த்.

“நடப்பதை வீட்டில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியலை. அதனாலதான் தெருவில் இறங்கினோம். இரண்டு பேராக இருந்தோம். நான்கு நாட்களில் 500 பேராக மாறினோம். உடனடியாக என்ன தேவையோ அதைத்தான் செய்தோம். இனி, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். மக்களை இயல்பு நிலைக்கு மாறச் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கு நாம் எல்லோரும் சேர வேண்டும்” என்று 5 நாட்கள் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு சித்தார்த்தும், ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்து சொன்னபோது ‘நடிகர்களை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிகிறதா?’ என்று முகநூலில் ரசிகர்கள் வாழ்த்து மழை தூவத் தொடங்கினார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு படகு முழுக்கப் போர்வையோடும், உணவுப் பொட்டலங்களோடும் பள்ளிக்கூட விடுதிகளை நோக்கியும், மத்திய சென்னை, வட சென்னைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடியும் பயணம் செய்தார். விஷால், கார்த்தி இருவரும் நடிகர் சங்க சகாக்களை அழைத்துக் கொண்டு ‘ரெஸ்க்யூ சென்னை’ என்ற பெயரில் குழுவை உருவாக்கித் தெருக்களில் இறங்கினார்கள்.

வாத்துகளை வாங்கி, தான் நடைப்பயிற்சி செய்யும் சாலிக்கிராமம் பூங்காவில் விட்டு அனுதினமும் அதற்கு உணவளித்துவரும் நடிகர் மயில்சாமி இப்படி ஒரு பேய் மழைக் காலத்தில் ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடுவாரா என்ன? கலங்கிய கண்களோடு களத்தில் நின்று உதவிகள் தொடர்ந்தார். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விதார்த், பார்த்திபன், சேரன், மோகன், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், சசிகுமார், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகை குஷ்பு, ஆர்யா, கோவை சரளா, வரலட்சுமி, ஹன்சிகா, ஷாலினி அஜித், இயக்குநர் இரா. சரவணன் இப்படி அடுக்கடுக்காகத் திரைப் பட்டாளங்கள் சென்னை மழை வெள்ளத்தில் ராணுவம்போல் இறங்கி மனதைக் குளிரச் செய்தனர்.

‘அப்பாவுடைய ஆசீர்வாதத்தாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் வீட்டைச் சூழ்ந்த வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிகிறது!’ என்றார் நடிகர் பிரபு. நடிகர் ராஜ்கிரண், நடிகை லட்சுமி உள்ளிட்ட திரையுலகினர் இந்த வெள்ளத்தில் சிக்கி சினிமாவில் மீட்கப்படுவதைப் போலத்தான் மீட்கப்பட்டனர்.

மின்சாரம் இல்லாமல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான இடங்களை அடையாளம் காட்டியது சமூக வலைதளம்தான். ‘ஜாபர்கான் பேடடையை அடுத்த சூளைப்பள்ளம் பகுதிக்கு உடனடியாக 500 உணவுப் பொட்டலங்கள் வேண்டும்’, ‘அனகாபுத்தூர், பொழிச்சலூர் பக்கம் யாருமே உதவிக்குப் போகலையாம்... உடனே அங்கு ஒரு குழுவை அனுப்புங்க...’ இப்படி உடனடி நிவாரணத் தேவைகள் எங்கெங்கு, என்னென்ன வேண்டுமோ அதைச் சரியாகப் பட்டியலிட்டுத் துரிதப்படுத்தினார்கள் நம் திரைப் பட்டாளங்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் நின்று குழுக்களாக வேலை செய்ய வைத்தது முகநூல், டிவிட்டர் ஆகியவைதாம்.

வெளி மாநில நடிகர்களிடமிருந்தும் உதவிகள் குவிந்தன. சென்னையில் இருக்கும் தன் வீடுகளையும், நண்பர்கள் வீட்டு முகவரியையும் கூறி, ‘அங்கே சென்று தங்கிக்கொள்ளுங்கள்’ என்று மனமார ஆதரவுக் கரம் நீட்டினார், நடிகர் மம்முட்டி. ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துவரும் தெலுங்குத் திரையுலகின் உதவி மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கே சித்தார்த் இறங்கி வேலை பார்ப்பதைப்போல அங்கே ராணா, நானி உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகினருடன் சேர்ந்து நிதி திரட்டுவது, அத்தியாவசிய பொருட்களை சேகரிப்பது போன்ற வேலைகளை நடிகை சமந்தா கையில் எடுத்துக்கொண்டுள்ளார். ‘சென்னையில் இருக்கிற அப்பாகிட்ட பேசவே ஒரு வாரம் ஆச்சு. எப்படி எங்க மக்களை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுக் களத்தில் இருக்கிறார் சமந்தா. தெலுங்குத் திரையுலகிலிருந்து முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நீண்ட முதல்கரம் அழகான நடிகர் என்று புகழப்படும் அல்லு அர்ஜுனுடையது.

பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக் கான் மழை பாதிப்புக்காக ஒரு கோடி நிவாரண நிதி கொடுத்திருக்கிறார். ‘இன்னைக்கு பால் வாங்கக்கூட முடியலை. பாலாபிஷேகம், வானுயர கட் அவுட் என்று நம்ம தலைவனை கொண்டாடித் தீர்த்தோம்’என்று எட்டிப் பார்க்காத முன்னணி நடிகர்கள் சிலர் மீது ரசிகர்களுக்கு ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, இந்த கன மழை.

முதல்வர் நிவாரண நிதிக்குக் காசோலை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தானும் பங்கெடுத்திருக்கிறோம் என்பது பதிவாகிவிடும் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி வேலை பார்த்த நடிகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது, இந்த மழை.

‘மனைவி, குழந்தைகளோடு 15 நிமிடங்கள் செலவிட்டதில்லை’, ‘அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எதிர் வீட்டுக்காரர் என்ன பிசினஸ் செய்கிறார் என்பதுகூட தெரியாது’ என்று ஓடிக்கொண்டே இருந்த சென்னை வாசிகளை இந்த மழை ஒன்று சேர்த்து உலுக்கி உறைய வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் முதலீடு போட்டு, ஒவ்வொரு மணி நேரமும் வேலை வேலை என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பவர்தான் திரை நட்சத்திரங்களும். அவர்களில் ஒரு சிலர் இந்த மழைப் பொழுதுகளை ஓய்வுக்கான நேரமாக எடுத்துக்கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களோடு நின்றது, தொடர்ந்து நிற்பது ரசிகனுக்கும், நடிகனுக்கும் இடையே உள்ள பேரன்பின் பிரதிபலிப்பே.

கேமரூன் சொல்லும் ரகசியம் நம்ம ஸ்டார்களுக்கும் பொருந்தும்தானே!

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான கேமரூன் டயஸ் வெளியிட்டிருக்கும் ஒரு நிமிட வீடியோவான “ஹூயூமன்” (HUMAN) செம லைக்ஸ் குவித்துக் கொண்டிருக்கிறது.

 அந்த வீடியோவில், “ என்னை ரசிகர்கள் சந்திக்கும் போதெல்லாம் உங்களைப் போலவே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைவரிடமும் நான்,  “ஏன்?” என்றுதான். பொதுவாக அமெரிக்கர்கள் பிரபலங்கள் அனைவருமே வெற்றியும், மகிழ்ச்சியும் கொண்டவர்கள்” என்று அமெரிக்க வாசிகள் எண்ணுகிறார்கள், இவ்வாறு எண்ணுவது தவறு. நான் நடிகையாக இருப்பதால் புகழுடன் இருக்கிறேன் என்பது கிடையாது. புகழ் நம்முடைய வேலையின் ஒரு அங்கம்.

அதே நான் வீட்டில் குடும்பத்துடன், நண்பர்களுடன் இருக்கும்போது புகழுடன் இருக்க விரும்புவதில்லை. நானாக இருக்கவே விரும்புகிறேன். என் புகழும் பெருமையும் என்னை முன்னிலைப்படுத்துவதில்லை.

பெயரும் புகழும் உங்களை பற்றி கூறவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் உங்களால் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சந்தோஷத்தை என்றும் தேடிக்கொண்டே அழைய நேரிடும். புகழடைந்துவிட்டால் மகிழ்ச்சியென்பது கிடைக்காது.

எதனால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீகளோ, நீங்கள் எதை விரும்புகிறீகளோ அதையே செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் முழுமையடைவீர்கள். அதுவே உங்கள் தனித்துவப்படுத்தும்.

- எனவே புகழைத் தேடி அழையாதீர்கள்!”


20 வருடங்களுக்கு மேலாக ஹாலிவுட்டின் டாப் ஸ்டாரா இருக்கும் கேமரூன் டயஸின் வார்த்தைகள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. புகழைத்தேடி நாம் அழையவேண்டாம், தானாக நம்மைத்தேடி வரும் என்று கூறும் இவ்வார்த்தைகள் நம்ம ஊரு சினிமாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும் கூட பொருத்தும் தானே!..

மாச்சர்யம் மறைந்தது! ஆச்சர்யம் பிறந்தது! அதாண்டா நடிகர் சங்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன் விஷால், மற்றும் நாசர் உள்ளிட்டோர் தலைமையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அங்குதான் சில ஆச்சர்யங்கள் அரங்கேறின. நடிகர் சங்கத்தில் விறுவிறுப்பான தேர்தல் வருவதற்கு முதல் காரணமாக இருந்தது ராதாரவியும் அவரது காரம் தடவிய டங்க்கும் என்றால், விஷாலை மேலும் தரக்குறைவாக திட்டியவர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மூத்த கலைஞரான கே.என்.காளை.

நாவினாற் சுட்ட வடுவை வெற்றியை கொண்டு அழித்துக் கொண்டார் விஷால். ஆனால் சுட்ட அந்த தீப்பந்தத்தை என்ன செய்வது? சம்பந்தப்பட்ட ராதாரவியும், காளையுமே அந்த நெருப்பை தணித்துக் கொண்டார்கள் அன்றைய தினம்! கே.என்.காளை நேரடியாக ஸ்பாட்டுக்கு வந்து வரிசையில் நின்று தனக்கான அன்பளிப்பை பெற்றுக் கொண்டார். இது அங்கிருந்த அத்தனை பேரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.

அதற்கப்புறம் ராதாரவி? அடிப்படையிலேயே செல்வந்தராக இருந்தாலும், சங்கம் கொடுக்கும் உதவிப் பொருட்களை வாங்குதில் மரியாதை குறைவில்லை என்று நினைத்திருக்கலாம். தனது மகனை அனுப்பி அந்த பொருட்களை வாங்க வைத்திருக்கிறார்.

இது குறித்து பொன்வண்ணன் கூறியிருப்பதென்ன?

மூத்த கலைஞர்… நாடக கம்பெனி நடத்தியவர்… பல வருடங்கள் நடிகர் சங்கத்தில் பொறுப்பில்இருந்தவர் கடந்த தேர்தலில் நம்மை மிகப்பெரிய அளவில் விமர்சித்தவர்- திரு. காளைஅண்ணன்அவர்கள் ஆனால் நடிகர் சங்க நிவாரணத்தை உறுப்பினர்களோடு ஒருவராக வந்து நின்று “ஈகோ’ பார்க்காமல் வாங்கியதை கண்டு நான் அவருக்கு பெரிய சல்யூட் அடித்து மதிக்கிறேன் ! ஆத்மார்த்தமாக உதவும் மனதுடன் வந்துள்ள நம்மை தடுக்காத அனைவரையும் நாம் மதிப்போம்! என்று கூறியிருக்கிறார்.

வட துருவமும் தென் துருவரும் இணைந்தால் அது ஆச்சர்யம்தானே?

பீப் பாடல் குறித்து டி.ஆர் கிளப்பிய சர்ச்சை- முற்றுகிறதா சண்டை?

தமிழகத்தில் மழை வெள்ளத்தை மறந்து எல்லோரும் பீப் பாடலுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இப்பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று அனிருத் நேற்று கூறினார்.

சமீபத்தில் டி.ஆர், இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

இதில் அனிருத் தான் அப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிம்பு-அனிருத்துக்கும் இடையே சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

பீப் பாடலுக்கு வைரமுத்து, கங்கை அமரன் அதிரடி கருத்து

பீப் பாடல் தான் தற்போதைய வைரல். சிம்பு-அனிருத் இருவரையும் பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விட்டது இந்த பீப் பாடல்.

அனிருத் 'நான் இசையமைக்கவில்லை' என்று சொன்னாலும், டி.ஆர் கூறுகையில் அனிருத் தான் இசையமைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, ‘நான் அந்த பாடலை இன்னும் கேட்கவில்லை, அதனால் எந்த கருத்தும் கூற இயலாது.

ஆனால், பாடல் எழுதும் அனைவரும் தங்களுக்குள் ஒரு சென்ஸாரை வைத்துக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி பாடலாசிரியர்+இசையமைப்பாளர் கங்கை அமரனும், ‘ஆபாசமான பாடல் வரிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் இது போல் பல பாடல்கள் வெளிவரும்’ என கோபமாக கூறியுள்ளார்.

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

ரவுடியிடம் ஏமாந்த ஹீரோ!

நாமக்கட்டி சாத்துறதுல பேர் போன ஊர் எதுவோ? ஆனால் நெத்தியில புள்ளி வச்சு, புத்தியில கொள்ளி வைக்கிற இடம்தான் நம்ம கனவுத் தொழிற்சாலை இயங்குகிற கோடம்பாக்கம். ‘நானெல்லாம் பத்து ஊர் பஞ்சாயத்தை ஒத்தையா நின்னு சமாளிச்சவன்’னு மார்தட்டி வந்தவங்களையெல்லாம் கூட, மாருவலி வந்து படுக்க வைச்ச கடோத்கஜன்கள், இங்க தெருவுக்கு 100 பேரு இருக்கா(னு)ங்க.

இங்கதான் கனவுக்கு தீனி போடுறேன்னு கிளம்பி வந்து அது முடியாம வயித்துக்கு பட்டினி போட்டுகிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆர்வ கோளாறுகளை பார்க்க முடியும். இதுல ஏமாந்தவன் பாதி பேரு. புத்தி தெளிஞ்சவன் மீதி பேருன்னு வரலாறு சுமக்குது வடபழனி ஏரியா. தனியா வர்றவன் கண்ணுல தெரியுற ஆர்வத்தை அப்படியே உள்வாங்கி கறவை மாட்டு காம்புலேர்ந்து பால் கறக்கிற ஆசையோடு நெருங்கி, பையில இருக்கறது கொஞ்சம், கை கால்ல மினுக்கறது கொஞ்சம்னு அடிச்சுகிட்டு கிளம்புறவங்களும் இருக்கா(னு)ங்க.

வடபழனியில் இயங்கி வரும் ஒரு தனியார் நடிப்பு கல்லூரி வாசலில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில், ‘இங்கு படிக்க வரும் மாணவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பி பணமோ பொருளோ கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் கீறினால் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் ரத்தமாக கொட்டும் போல தெரிந்தது.

அங்கு ஏமாந்தவர்களை போல, நமக்கு தெரிந்த ஒரு ஹீரோ, டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரவுடியிடம் பணம் கொடுத்து பரிதவித்த கதைதான் இப்போது நாம் சொல்லப் போவது. இவர் நடித்த முதல் படம் பிளாப். ஆள் மூக்கும் முழியுமாக இருந்தாலும், முதல் படம் பிளாப் என்றால் அடுத்த படத்தை பிடிப்பதற்குள்தான் ஆவி போய் விடுமே? எப்படியோ போராடி ஒரு படத்தில் நடித்துவிட்டார். அந்த இரண்டாவது படமும் கடந்த வாரம்தான் ரிலீஸ் ஆனது. எழுபத்தைந்து பெரியவர் தன் லவ்வரை தேடி அலையும் கதை அது. அதில் வரும் சின்ன வயசு பெரியவர்தான் இந்த எபிசோடின் ஹீரோ.

கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருந்தாலும், தன் முதல் பட அனுபவத்தை அவரால் இப்போதும் கதற கதற ஒப்பிக்க முடியும். ஏனென்றால், ரிலீஸ் ஆன முதல் படத்திற்கு முன் அவர் கமிட் ஆன, முதல் படம் ஒரு ஏமாற்று நாடகம் மட்டுமல்ல, கண்ணோரத்தில் வழியும் சுடு கஞ்சியும் கூட!

நம்ம ஹீரோவுக்கு சொந்த ஊர் மதுரை. நல்ல சிவப்பு. முக லட்சணம். என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே, ‘பேசாம சினிமாவுல நடிடா ’ என்று நாடி நரம்பை உசுப்பிவிட்டார்கள் நண்பர்கள். இருந்தாலும் படிப்பு முடிந்ததும் குடும்ப சூழ்நிலை கருதி பெங்களுருவுக்கு வேலைக்கு போனார் தம்பி. போன இடத்திலும் சும்மா விட்டார்களா? டீக்குடிக்க போன இடத்தில் கூட, ‘சாரு ஆக்டருங்களா?’ என்று கேட்டு மனசுக்குள் மைனாவை கூவ விட்டார்கள். நெசமாவே நாம ஹீரோதானோ? என்றெல்லாம் அடிமனசில் ஆலங்குயில் பாட,. ஒரு சுபயோக சுபதினத்தில் தன் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு ரயிலேறினார் ஹீரோ.

பருந்து கண்ணில் சிக்கிய எலிக்குஞ்சு மாதிரி வந்த வேகத்திலேயே ஒருவரிடம் சிக்கினார். அவர்தான் அந்த டெல்டா மாவட்டத்தின் முக்கிய தாதா.. சில முறை குண்டர் சட்டத்தில் உள்ளேயும் போயிருக்கிறார். கழுத்து நிறைய பளபள சங்கிலிகள், பருத்த உருவம். இடுப்பு வேட்டியில் துருத்திக் கொண்டிருக்கும் துப்பாக்கி. பென்ஸ் கார், ஆள் அம்பு படை பரிவாரம் என்று அவரை பார்க்கும் போதே ‘அண்ணேய்…’ என்று நமஸ்காரம் போட்டு அந்த பருத்த சமஸ்தானத்தை மண்டியிட்டு விடுவார்கள். மாயா மாயா… எல்லாம் மாயா என்பது புரியாத நம்ம ஹீரோ எப்படியோ யார் மூலமாகவே இவரிடம் சிக்கினார்.

தம்பி… எனக்கு சினிமா எடுக்கணும்ங்கறது ஆசையில்ல. நமக்கு ரெண்டு என்ஜினியரிங் காலேஜ் இருக்கு. லோக்கல்ல நல்ல செல்வாக்கு இருக்கு. முன்னாள் ஜனாதிபதி மிஸ்டர் வி எனக்கு நல்ல நெருக்கம். அவர் சிபாரிசுல எப்படியும் எம்.பிஆகிடுவேன். இவ்ளோ செல்வாக்கா இருந்துட்டு ஒரு படம் கூட எடுக்கலேன்னா எப்படின்னு வீட்ல சொல்லிகிட்டேயிருக்காங்க. அதுக்காகதான் எடுக்கிறேன். இன்னொன்னு… நாம எப்ப பி.ஜி.எம் சரவணன் ஆகுறது?’ என்று கேட்டு உடம்பென்கிற இரும்பு லாரி மீது ஒராயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பி விழுந்த மாதிரி குலுங்கி குலுங்கி சிரித்தார். ‘தம்பி… ஆனா ஒரு கண்டிஷன். நான் முதல்ல பணம் போடவே மாட்டேன். ஏன்னா என்னோட சென்ட்டிமென்ட் அப்படி’.

‘எந்த தொழில் செஞ்சாலும் ஒரு சின்ன தொகையை வேறொருத்தரிடம் வாங்கிதான் முதல் செலவா செய்வேன். அப்புறம் அந்த தொழிலை வேகமா கொண்டு போய் ஏணியில ஏத்தி வைக்க எத்தனை கோடி ஆனாலும் அதுக்கு அஞ்சுறவன் நான் இல்ல. காலேஜ் ஆரம்பிச்சவும் அப்படிதான். பேக்டரி ஆரம்பிச்சவும் அப்படிதான்னு சொல்லிக் கொண்டே போக, எவ்ளோ கேட்டாலும் கடன் வாங்கியாவது கொடுத்துரணும் என்கிற உறுதியை அந்த ஸ்பாட்டிலேயே எடுத்துக் கொண்டார் ஹீரோ. ‘முதல்ல ஆகுற சின்ன சின்ன செலவு… அதாவது தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர் ஆகுறதுக்கு சில லட்சங்கள், அழைப்பிதழ் செலவு, தனியா சினிமா ஆபிஸ் போடுற அட்வான்சுன்னு ஏழு லட்சத்தை எடுத்துகிட்டு வந்துரு. பதினைஞ்சு நாள் டைம் தர்றேன். நடுவுல எவனாவது நல்ல முகவெட்டோட வந்தா… தம்பி கோவிச்சுக்கக் கூடாது’ என்று செக் வைத்து அனுப்பினார் தாதா.

அவசரம் அவசரமாக ஊருக்கு ஓடிய ஹீரோ, நண்பர்கள் உறவினர்கள்னு கையேந்தி, தனது சேமிப்பையும் துடைத்துக் கொண்டு வந்தார். ஏழு லட்சம் ரெடி. சுட சுட பணம் கைமாறியது. அடுத்த வாரம் எல்லாம் ரெடியா இருக்கும். ஷுட்டிங் போயிரலாம் என்று கூறிய தாதா, சிரித்த முகத்தோடு இவரையும் இவரால் அழைத்துவரப்பட்ட இயக்குனரையும் வழியனுப்பி வைக்க, ஆட்டுக்காலும் நாமதான். சூப்பும் நாமதான் என்பதே புரியாமல் அறைக்கு திரும்பினார் ஹீரோ.

அடுத்த வாரம்… அதற்கடுத்த வாரம் ஆனது. அதற்கப்புறம் மாதங்கள் ஆனது. பிறகு மாயாவை ரீச் பண்ணவே முடியவில்லை நம்ம ஹீரோவால். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு டெல்டா மாவட்டத்துக்கே போய் இறங்கி அவரது வீட்டை விசாரித்து சிங்கத்தின் குகைக்கே போய்விட்டார்.

‘அண்ணன் வந்துருவாரு. உட்காருங்க’ என்றார்கள் அல்லக்கைகள். காலையிலிருந்து இரவு வரை காத்திருந்த ஹீரோவுக்கு நள்ளிரவில்தான் சாமி தரிசனம் கிடைத்தது. ‘அடடா… தம்பியா? கொஞ்சம் பிசியாயிட்டேன். சாப்பிட்டியா? டேய்… சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்களாடா ?’ என்றெல்லாம் அன்பொழுகி, ‘ரெண்டு நாள்ல அண்ணன் சென்னைக்கு வர்றேன். டைரக்டரையும் வெயிட் பண்ண சொல்லு’ என்று அன்றிரவே பஸ் ஏற விட்டார் மாயாவி. சுமார் ஆறு மாதங்கள்… ஏதேதோ சால்ஜாப்புகள், காரணங்கள், ஒரு சந்தர்ப்பத்தில் நம்ம வாயில எலித்தின்ன மசால் வடைதான் என்பதை புரிந்து கொண்டார் ஹீரோ.

குண்டர் சட்டத்துல உள்ளே போனவர் என்கிற தகவல்கள் எல்லாம் அதற்கப்புறம்தான் தெரியவந்தது அவருக்கு. மோதி பிரயோஜனம் இல்லை. இனி சாதுர்யம்தான் முக்கியம் என்பதும் புரிந்தது. சினிமா வாய்ப்பு கேட்டு அலைவது போச்சு. பெங்களூர்ல வேலையும் போச்சு. கடன் கொடுத்தவர்கள் கழூத்தை நெரிக்க, மீண்டும் மதுரைக்கு கிளம்பினார். அதுவும் ஒரு தீர்மானத்துடன். தன் நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து நடந்ததை சொன்னார். ‘எப்படியாவது அவனை வெட்டிப்போடணும். இல்லேன்னா பணத்தோட வீட்டுக்கு போகணும். இரண்டே முடிவுதாண்டா’ என்றார் நண்பர்களிடம். பேசி பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது நண்பர் கூட்டம்.

பிரமுகரை கடத்தி மதுரைக்கு கொண்டு வந்துவிடுவது. இதுதான் திட்டம். நைசாக தன் நண்பனை டெல்டா மாவட்டத்துக்கு அனுப்பினார் ஹீரோ. அவனும் சாமர்த்தியமாக மாயாவியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தான். சந்தேகம் வராதபடி மூன்று மாதம் ஓடியது. ஆனால் ஒவ்வொரு நாளும் செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். ஒரு முறை தஞ்சாவூருக்கு கிளம்பினார் மாயாவி. அதுவும் ஆள் அம்பு படை பரிவாரம் இல்லாமல். டிரைவர் நம்ம ஹீரோவோட ஃபிரண்டு எல்லா தகவலும் உடனுக்குடன் பரிமாறப்பட்டது. அங்கு வைத்து மடக்குவது என்று நண்பர்கள் உடடினயாக தீர்மானிக்க, மதுரையிலிருந்து ஒரு காரில் கிளம்பினார்கள் தஞ்சைக்கு.

குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்த சொல்லி முதல் நாளே சமிக்ஞை அனுப்பியிருந்தார் ஹீரோ. எல்லாம் சரியாக நடக்க, சினிமாவில் வருவது போலவே அண்ணனை பென்ஸ் காரில் வைத்து மடக்கியது நண்பர் கூட்டம். இடுப்பு துப்பாக்கிக்கெல்லாம் ஒரு வேலையுமில்லை. பொத்தேர் பொத்தேர் என்று விழுந்த அடியில், ‘டேய்… பணம்தானடா வேணும். ஆள விடுங்கடா’ என்று கதறவே ஆரம்பித்துவிட்டார் மாயாவி.

அதற்கப்புறம் மதுரையில் வைத்து லாக் பண்ணிய நண்பர் கூட்டம், ‘யாராவது பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு உன்னை மீட்டுட்டு போ சொல்லு’ என்றது. எப்படியோ பேசி கடைசியில் ஆறு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு சிறை மீண்டது (அ)சிங்கம்.

ஒரு லட்சம் லாஸ். போனா போவட்டும்… நல்ல அனுபவம் கிடைச்சது. அதற்கப்புறம் பேராடி போராடி வாய்ப்பு வாங்கிதான் முதல் படத்தில் நடிச்சேன். பத்து பைசா செலவில்ல. என்னோட முதல் படத்தை அவன் பார்த்தானான்னு தெரியல. அந்த நேரத்துல எந்த ஜெயில்ல களி தின்னுகிட்டு இருந்தானோ? ஒழியட்டும்… ஆனால் குண்டா கழுத்துநிறைய சங்கிலி போட்டுகிட்டு இடுப்புல ஃபிக்ஸ் பண்ணிய சலவை வேட்டியோட எவனையாவது பார்த்தா ஓங்கி அடிக்கணும் போல இருக்கு . அதுக்கு முதல்ல ஒரு நல்ல டாக்டரிடம் வைத்தியம் பார்க்கணும் என்று சிரியாய் சிரிக்கிறார் ஹீரோ.

கோடம்பாக்கத்தில் இதுபோன்ற பொன்னிற பணியாரங்களை கொத்தி கடிப்பதற்கென்றே கருநிற ஓநாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. புத்தியுள்ளவர்கள் பிழைக்கக்கடவது…!நாமக்கட்டி சாத்துறதுல பேர் போன ஊர் எதுவோ? ஆனால் நெத்தியில புள்ளி வச்சு, புத்தியில கொள்ளி வைக்கிற இடம்தான் நம்ம கனவுத் தொழிற்சாலை இயங்குகிற கோடம்பாக்கம். ‘நானெல்லாம் பத்து ஊர் பஞ்சாயத்தை ஒத்தையா நின்னு சமாளிச்சவன்’னு மார்தட்டி வந்தவங்களையெல்லாம் கூட, மாருவலி வந்து படுக்க வைச்ச கடோத்கஜன்கள், இங்க தெருவுக்கு 100 பேரு இருக்கா(னு)ங்க.

இங்கதான் கனவுக்கு தீனி போடுறேன்னு கிளம்பி வந்து அது முடியாம வயித்துக்கு பட்டினி போட்டுகிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆர்வ கோளாறுகளை பார்க்க முடியும். இதுல ஏமாந்தவன் பாதி பேரு. புத்தி தெளிஞ்சவன் மீதி பேருன்னு வரலாறு சுமக்குது வடபழனி ஏரியா. தனியா வர்றவன் கண்ணுல தெரியுற ஆர்வத்தை அப்படியே உள்வாங்கி கறவை மாட்டு காம்புலேர்ந்து பால் கறக்கிற ஆசையோடு நெருங்கி, பையில இருக்கறது கொஞ்சம், கை கால்ல மினுக்கறது கொஞ்சம்னு அடிச்சுகிட்டு கிளம்புறவங்களும் இருக்கா(னு)ங்க.

வடபழனியில் இயங்கி வரும் ஒரு தனியார் நடிப்பு கல்லூரி வாசலில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில், ‘இங்கு படிக்க வரும் மாணவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பி பணமோ பொருளோ கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் கீறினால் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் ரத்தமாக கொட்டும் போல தெரிந்தது.

அங்கு ஏமாந்தவர்களை போல, நமக்கு தெரிந்த ஒரு ஹீரோ, டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரவுடியிடம் பணம் கொடுத்து பரிதவித்த கதைதான் இப்போது நாம் சொல்லப் போவது. இவர் நடித்த முதல் படம் பிளாப். ஆள் மூக்கும் முழியுமாக இருந்தாலும், முதல் படம் பிளாப் என்றால் அடுத்த படத்தை பிடிப்பதற்குள்தான் ஆவி போய் விடுமே? எப்படியோ போராடி ஒரு படத்தில் நடித்துவிட்டார். அந்த இரண்டாவது படமும் கடந்த வாரம்தான் ரிலீஸ் ஆனது. எழுபத்தைந்து பெரியவர் தன் லவ்வரை தேடி அலையும் கதை அது. அதில் வரும் சின்ன வயசு பெரியவர்தான் இந்த எபிசோடின் ஹீரோ.

கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருந்தாலும், தன் முதல் பட அனுபவத்தை அவரால் இப்போதும் கதற கதற ஒப்பிக்க முடியும். ஏனென்றால், ரிலீஸ் ஆன முதல் படத்திற்கு முன் அவர் கமிட் ஆன, முதல் படம் ஒரு ஏமாற்று நாடகம் மட்டுமல்ல, கண்ணோரத்தில் வழியும் சுடு கஞ்சியும் கூட!

நம்ம ஹீரோவுக்கு சொந்த ஊர் மதுரை. நல்ல சிவப்பு. முக லட்சணம். என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே, ‘பேசாம சினிமாவுல நடிடா ’ என்று நாடி நரம்பை உசுப்பிவிட்டார்கள் நண்பர்கள். இருந்தாலும் படிப்பு முடிந்ததும் குடும்ப சூழ்நிலை கருதி பெங்களுருவுக்கு வேலைக்கு போனார் தம்பி. போன இடத்திலும் சும்மா விட்டார்களா? டீக்குடிக்க போன இடத்தில் கூட, ‘சாரு ஆக்டருங்களா?’ என்று கேட்டு மனசுக்குள் மைனாவை கூவ விட்டார்கள். நெசமாவே நாம ஹீரோதானோ? என்றெல்லாம் அடிமனசில் ஆலங்குயில் பாட,. ஒரு சுபயோக சுபதினத்தில் தன் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு ரயிலேறினார் ஹீரோ.

பருந்து கண்ணில் சிக்கிய எலிக்குஞ்சு மாதிரி வந்த வேகத்திலேயே ஒருவரிடம் சிக்கினார். அவர்தான் அந்த டெல்டா மாவட்டத்தின் முக்கிய தாதா.. சில முறை குண்டர் சட்டத்தில் உள்ளேயும் போயிருக்கிறார். கழுத்து நிறைய பளபள சங்கிலிகள், பருத்த உருவம். இடுப்பு வேட்டியில் துருத்திக் கொண்டிருக்கும் துப்பாக்கி. பென்ஸ் கார், ஆள் அம்பு படை பரிவாரம் என்று அவரை பார்க்கும் போதே ‘அண்ணேய்…’ என்று நமஸ்காரம் போட்டு அந்த பருத்த சமஸ்தானத்தை மண்டியிட்டு விடுவார்கள். மாயா மாயா… எல்லாம் மாயா என்பது புரியாத நம்ம ஹீரோ எப்படியோ யார் மூலமாகவே இவரிடம் சிக்கினார்.

தம்பி… எனக்கு சினிமா எடுக்கணும்ங்கறது ஆசையில்ல. நமக்கு ரெண்டு என்ஜினியரிங் காலேஜ் இருக்கு. லோக்கல்ல நல்ல செல்வாக்கு இருக்கு. முன்னாள் ஜனாதிபதி மிஸ்டர் வி எனக்கு நல்ல நெருக்கம். அவர் சிபாரிசுல எப்படியும் எம்.பிஆகிடுவேன். இவ்ளோ செல்வாக்கா இருந்துட்டு ஒரு படம் கூட எடுக்கலேன்னா எப்படின்னு வீட்ல சொல்லிகிட்டேயிருக்காங்க. அதுக்காகதான் எடுக்கிறேன். இன்னொன்னு… நாம எப்ப பி.ஜி.எம் சரவணன் ஆகுறது?’ என்று கேட்டு உடம்பென்கிற இரும்பு லாரி மீது ஒராயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பி விழுந்த மாதிரி குலுங்கி குலுங்கி சிரித்தார். ‘தம்பி… ஆனா ஒரு கண்டிஷன். நான் முதல்ல பணம் போடவே மாட்டேன். ஏன்னா என்னோட சென்ட்டிமென்ட் அப்படி’.

‘எந்த தொழில் செஞ்சாலும் ஒரு சின்ன தொகையை வேறொருத்தரிடம் வாங்கிதான் முதல் செலவா செய்வேன். அப்புறம் அந்த தொழிலை வேகமா கொண்டு போய் ஏணியில ஏத்தி வைக்க எத்தனை கோடி ஆனாலும் அதுக்கு அஞ்சுறவன் நான் இல்ல. காலேஜ் ஆரம்பிச்சவும் அப்படிதான். பேக்டரி ஆரம்பிச்சவும் அப்படிதான்னு சொல்லிக் கொண்டே போக, எவ்ளோ கேட்டாலும் கடன் வாங்கியாவது கொடுத்துரணும் என்கிற உறுதியை அந்த ஸ்பாட்டிலேயே எடுத்துக் கொண்டார் ஹீரோ. ‘முதல்ல ஆகுற சின்ன சின்ன செலவு… அதாவது தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர் ஆகுறதுக்கு சில லட்சங்கள், அழைப்பிதழ் செலவு, தனியா சினிமா ஆபிஸ் போடுற அட்வான்சுன்னு ஏழு லட்சத்தை எடுத்துகிட்டு வந்துரு. பதினைஞ்சு நாள் டைம் தர்றேன். நடுவுல எவனாவது நல்ல முகவெட்டோட வந்தா… தம்பி கோவிச்சுக்கக் கூடாது’ என்று செக் வைத்து அனுப்பினார் தாதா.

அவசரம் அவசரமாக ஊருக்கு ஓடிய ஹீரோ, நண்பர்கள் உறவினர்கள்னு கையேந்தி, தனது சேமிப்பையும் துடைத்துக் கொண்டு வந்தார். ஏழு லட்சம் ரெடி. சுட சுட பணம் கைமாறியது. அடுத்த வாரம் எல்லாம் ரெடியா இருக்கும். ஷுட்டிங் போயிரலாம் என்று கூறிய தாதா, சிரித்த முகத்தோடு இவரையும் இவரால் அழைத்துவரப்பட்ட இயக்குனரையும் வழியனுப்பி வைக்க, ஆட்டுக்காலும் நாமதான். சூப்பும் நாமதான் என்பதே புரியாமல் அறைக்கு திரும்பினார் ஹீரோ.

அடுத்த வாரம்… அதற்கடுத்த வாரம் ஆனது. அதற்கப்புறம் மாதங்கள் ஆனது. பிறகு மாயாவை ரீச் பண்ணவே முடியவில்லை நம்ம ஹீரோவால். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு டெல்டா மாவட்டத்துக்கே போய் இறங்கி அவரது வீட்டை விசாரித்து சிங்கத்தின் குகைக்கே போய்விட்டார்.

‘அண்ணன் வந்துருவாரு. உட்காருங்க’ என்றார்கள் அல்லக்கைகள். காலையிலிருந்து இரவு வரை காத்திருந்த ஹீரோவுக்கு நள்ளிரவில்தான் சாமி தரிசனம் கிடைத்தது. ‘அடடா… தம்பியா? கொஞ்சம் பிசியாயிட்டேன். சாப்பிட்டியா? டேய்… சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்களாடா ?’ என்றெல்லாம் அன்பொழுகி, ‘ரெண்டு நாள்ல அண்ணன் சென்னைக்கு வர்றேன். டைரக்டரையும் வெயிட் பண்ண சொல்லு’ என்று அன்றிரவே பஸ் ஏற விட்டார் மாயாவி. சுமார் ஆறு மாதங்கள்… ஏதேதோ சால்ஜாப்புகள், காரணங்கள், ஒரு சந்தர்ப்பத்தில் நம்ம வாயில எலித்தின்ன மசால் வடைதான் என்பதை புரிந்து கொண்டார் ஹீரோ.

குண்டர் சட்டத்துல உள்ளே போனவர் என்கிற தகவல்கள் எல்லாம் அதற்கப்புறம்தான் தெரியவந்தது அவருக்கு. மோதி பிரயோஜனம் இல்லை. இனி சாதுர்யம்தான் முக்கியம் என்பதும் புரிந்தது. சினிமா வாய்ப்பு கேட்டு அலைவது போச்சு. பெங்களூர்ல வேலையும் போச்சு. கடன் கொடுத்தவர்கள் கழூத்தை நெரிக்க, மீண்டும் மதுரைக்கு கிளம்பினார். அதுவும் ஒரு தீர்மானத்துடன். தன் நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து நடந்ததை சொன்னார். ‘எப்படியாவது அவனை வெட்டிப்போடணும். இல்லேன்னா பணத்தோட வீட்டுக்கு போகணும். இரண்டே முடிவுதாண்டா’ என்றார் நண்பர்களிடம். பேசி பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது நண்பர் கூட்டம்.

பிரமுகரை கடத்தி மதுரைக்கு கொண்டு வந்துவிடுவது. இதுதான் திட்டம். நைசாக தன் நண்பனை டெல்டா மாவட்டத்துக்கு அனுப்பினார் ஹீரோ. அவனும் சாமர்த்தியமாக மாயாவியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தான். சந்தேகம் வராதபடி மூன்று மாதம் ஓடியது. ஆனால் ஒவ்வொரு நாளும் செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். ஒரு முறை தஞ்சாவூருக்கு கிளம்பினார் மாயாவி. அதுவும் ஆள் அம்பு படை பரிவாரம் இல்லாமல். டிரைவர் நம்ம ஹீரோவோட ஃபிரண்டு எல்லா தகவலும் உடனுக்குடன் பரிமாறப்பட்டது. அங்கு வைத்து மடக்குவது என்று நண்பர்கள் உடடினயாக தீர்மானிக்க, மதுரையிலிருந்து ஒரு காரில் கிளம்பினார்கள் தஞ்சைக்கு.

குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்த சொல்லி முதல் நாளே சமிக்ஞை அனுப்பியிருந்தார் ஹீரோ. எல்லாம் சரியாக நடக்க, சினிமாவில் வருவது போலவே அண்ணனை பென்ஸ் காரில் வைத்து மடக்கியது நண்பர் கூட்டம். இடுப்பு துப்பாக்கிக்கெல்லாம் ஒரு வேலையுமில்லை. பொத்தேர் பொத்தேர் என்று விழுந்த அடியில், ‘டேய்… பணம்தானடா வேணும். ஆள விடுங்கடா’ என்று கதறவே ஆரம்பித்துவிட்டார் மாயாவி.

அதற்கப்புறம் மதுரையில் வைத்து லாக் பண்ணிய நண்பர் கூட்டம், ‘யாராவது பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு உன்னை மீட்டுட்டு போ சொல்லு’ என்றது. எப்படியோ பேசி கடைசியில் ஆறு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு சிறை மீண்டது (அ)சிங்கம்.

ஒரு லட்சம் லாஸ். போனா போவட்டும்… நல்ல அனுபவம் கிடைச்சது. அதற்கப்புறம் பேராடி போராடி வாய்ப்பு வாங்கிதான் முதல் படத்தில் நடிச்சேன். பத்து பைசா செலவில்ல. என்னோட முதல் படத்தை அவன் பார்த்தானான்னு தெரியல. அந்த நேரத்துல எந்த ஜெயில்ல களி தின்னுகிட்டு இருந்தானோ? ஒழியட்டும்… ஆனால் குண்டா கழுத்துநிறைய சங்கிலி போட்டுகிட்டு இடுப்புல ஃபிக்ஸ் பண்ணிய சலவை வேட்டியோட எவனையாவது பார்த்தா ஓங்கி அடிக்கணும் போல இருக்கு . அதுக்கு முதல்ல ஒரு நல்ல டாக்டரிடம் வைத்தியம் பார்க்கணும் என்று சிரியாய் சிரிக்கிறார் ஹீரோ.

கோடம்பாக்கத்தில் இதுபோன்ற பொன்னிற பணியாரங்களை கொத்தி கடிப்பதற்கென்றே கருநிற ஓநாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. புத்தியுள்ளவர்கள் பிழைக்கக்கடவது…!

Keyboard-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று தெரியுமா??

Mouse என்ற ஒரு அமைப்பு 1946ஆம் வருடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போ அதற்கு முன்பு எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா?

Keyboard தான் அப்போது Mouse ஆகப் பயன்படுத்தப்படது. எனினும், அப்போது இருந்த கணிப்பொறிகள் இன்றைய கணிப்பொறி அளவு வேகம் கிடையது என்பதால் Keyboad தொழில்நுட்பம் போதுமானதாக இருந்தது.

நாம் பயன்படுத்தும் Mouse செயலிழந்து விட்டால் தற்சமயத்திற்கு என்ன செய்வது என்று முழிக்காமல் பழைய முறையையே பயன்படுத்தலாம்.
உங்கள் Keyborad-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று பார்க்கலாம். Windows 7,8 போன்றவற்றில் எப்படி இதனை மாற்றுவது என்பது குறித்து கீழே காணலாம்.
முதலில் கன்ட்ரோல் பேனலை ஓபன் செய்து, அதில் Ease of Access Center என்ற செயலியை கிளிக் செய்யவும்.

பின்னர் அதில் Make the mouse easier to use என்ற ஆப்ஷனை கிளிக் செய்க.

Turn on Mouse Keys என்பதை டிக் செய்து ஒகே கொடுத்தால் அவ்வளவு தான்.உங்கள் Keyboard ஆனது Mouse போல செயல்பட தயாராகி விட்டது.மேலும், இதனை left Alt+ left Shift+ Num Lock போன்றவற்றை ஒரு சேர அழுத்தியும் ஆக்டிவேட் செய்யலாம்.

Numeric Keypad மூலம் நீங்கள் Mouse ஆப்ஷனை பயன்படுத்தலாம். 6 பட்டன் மூலம் நீங்கள் Cursor-ஐ வலது பக்கம் நகர்த்தலாம். 4 பட்டனை பயன்படுத்தி இடது பக்கமாகவும், 8-ஐ பயன்படுத்தி மேல் பக்கமாகவும், 2-ஐ கீழ் பக்கமாகவும் நகர்த்தலாம். 5 மற்றும் + பட்டன்களை வலது கிளிக்காவும், 0 இடது கிளிக்காகவும் பயன்படுகிறது.

பம்பாய்' படத்தின் முதல் நாயகன் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் நடிப்பில் வெளியான 'பம்பாய்' திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.

ஆனால், அப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானது விக்ரம் தான் என்பது தெரியுமா?

'புதிய மன்னர்கள்' படத்துக்காக தலைமுடி எல்லாம் வளர்த்து நடித்துக் கொண்டிருந்தார் விக்ரம். அப்போது மணிரத்னம் "'பம்பாய்' என்ற தலைப்பில் ஒரு படம் பண்ணுகிறேன். அதில் ஹீரோவாக பண்றியா" என்று கேட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து விக்ரம், மனிஷா கொய்ராலா இருவரையும் வைத்து போட்டோ ஷுட் எல்லாம் பண்ணினார்கள். 'புதிய மன்னர்கள்' படப்பிடிப்பு பாதி தான் முடிவடைந்து இருந்தது. அச்சமயத்தில் "'பம்பாய்' கதைப்படி உனக்குத் தாடி இருக்கக் கூடாது" என்று மணிரத்னம் கூறியிருக்கிறார்.

அச்சமயத்தில் 'புதிய மன்னர்கள்' படத்தையும் பாதியில் விடமுடியாது. ஆனால், மணிரத்னம் தாடி இருக்கக் கூடாது என்று சொல்லுகிறாரே என்று விக்ரமுக்கு மிகப்பெரிய நெருக்கடி. மணிரத்னம் "சரி, அங்கே பாதி படம் பண்ணிட்டே. அதில் நடிப்பதுதான் முறை. அப்புறம் பார்ப்போம்" என்று கூறிவிட்டு, அரவிந்த்சாமியை ஒப்பந்தம் செய்து 'பம்பாய்' படத்தை இயக்கினார்.

அப்படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், 'ராவணன்' படத்தில் நடித்தார். இருப்பினும் 'பம்பாய்' படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து, இப்போது வரை மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் விக்ரம்.

இது பெட்ரூமு இங்க நீங்க… – ரியல் எஸ்டேட்காரர்களின் ரவுசு!

முன்பெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் லோக்கல் சேனல்களில் கவுண்டமனி செந்தில் காமெடி போடுவாங்க ! சிரிச்சிகிட்டே நிம்மதியா தூங்குவோம் !

எப்ப பார்த்தாலும், ரியல் எஸ்டேட்காரங்க உட்கார்ந்துகிட்டு உசுர வாங்கறாங்க ! அதிலும் கம்பெனியில் வேலை செய்யும் மொக்கை பீஸ்களை காம்பியர் பண்ண விட்டுடறாங்க ! அதுங்க “செம எடம் வெச்சிருக்கோம்.. இப்பா பாத்திங்கன்னா, நீங்க பாக்கற எடம்… இப்ப வந்து இங்க பஸ்டாண்டு வருது, அங்க சைக்கில் ஸ்டாண்டு வருதுன்னு அடிச்சி விடுதுங்க..

கொடுமைடான்னு அடுத்த சேனல் மாற்றினால்.. ஒரு காட்டுகுள்ள ஒரு வீட்ட கட்டி வெச்சிகிட்டு, இதான் கிச்சன் இங்க நீங்க சமைக்கலாம்..! ( வாவ்வ்வ்) இதான் ஹால் இங்க நீங்க ஜாலியா டிவி பாக்கலாம், இது பெட்ரூமு இங்க நீங்க….. இது கக்கூசு இங்க நீங்க………….. இப்படியெல்லாம் டெமோ காட்டி உசுர வாங்கறானுங்க !

இப்பலாம் ஆப் ஆன டிவி ஸ்க்ரீன பார்த்தாலே அங்கு ரியல் எஸ்டேட்காரனுங்க உட்கார்ந்துகிட்டு “வா… வா”ன்னு கூப்பிடுற மாதிரியே இருக்கு ! நீண்ட நாட்களுக்கு பிறகு நேத்து டிவிய போட்டேன் ! ஆச்சர்யம் ! அந்த வழக்கமான குரூப் அலப்பறை இல்லை, ( வேறு குரூப் காமெடி பண்ணிட்டு இருந்தது வேறு விஷயம்) எங்கடா வழக்கமா வர பீஸுங்கள காணோம்ன்னு நினைச்சிகிட்டே குழப்பதில் சேனல் மாத்தினேன் !

ஒரு சேனலில் “வாங்க சார் செம்ம ப்ளாட்டு சிங்கப்பூர்ல இருக்க மேரி” என்ற குரலை கேட்டு நிறுத்தினேன்… அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்…. படுபாவிங்க.. கம்பெனி பேர்ல தனியா சேனலே ஆரம்பிச்சிருக்கானுங்க ! இனி டிவிய ஆன் பண்ணுவ ??????

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்..

.
இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!


சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


புரோட்டா: பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!


சால்னா : சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!


ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க... தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.



சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக்கணும்.

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்
சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.
வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.

மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.

மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கி ற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பி னார்கள். அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.

கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நே ரங்களில் தெய்வீகசூழ் நி லைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவ னிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.
கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டு வதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றி த்தனமாக ஏதே தோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறி யாமையால் சொல் வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வே ண்டிய அவசியம் இறைவனுக்கு இல் லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுண ர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆய த்தம் தான் மணியை  அடிப்பதன் உண்மைப் பொருள்.

பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்ப டும் பூஜைகளின் போது கோ யில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல் ல முடியாது. வே லை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.

கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர் கள் தங்கள் வேலையை அப் படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொ ழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங் குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவ னைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக் கிறது. ஊருக்கே கேட்கும் வண் ணம் பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.

கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட் க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங் கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோ ம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவ னிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்