Tuesday, December 8, 2015

அசைவப்பிரியர்களே...இது உங்களுக்கான டிப்ஸ்!

கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது.

ஒமேகா 3 உள்ள உணவுகள்

ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது.

இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும்.

சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு.
முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும்.

உடலில் எரிச்சல்,சிவப்பாவது, மிகவும் சென்சிடிவ் ஆவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த ஒமேகா 3 குணமாக்கிவிடும்.

நம்புகளை வலிமைப்படுத்துகிறது, கண் மூளை செயல்பாடுகள் மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது.
மனச்சோர்வு, இதர மனநோய்களில் சிகிச்சை பயன்படுகிறது.

மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும்.

உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் பணியை செய்கிறது.

வலிப்பு, மாரடைப்பு இந்த இரண்டு நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒமேகா 3 சாப்பிட வேண்டும்.

மீனுடன் தயிரோ அல்லது கீரை வகைகளோ சேர்க்கக்கூடாது, செரிமானப்பிரச்சனைகள் மட்டுமின்றி தோல் நோய்கள் வரக்காரணமாகின்றன.

வீதி வீதியாக அலைந்து உதவி செய்த இளையராஜா

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.

தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.

இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்!

 இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

மக்களிடம் சென்று அதை மட்டும் செய்யாதீர்கள்- ஜெயம் ரவி வேண்டுக்கோள்

தனி ஒருவன் 100வது நாள் வெற்றியெல்லாம் ஓரங்கட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தார். அதில் அவர், ஒரு செய்தியை குறிப்பிட்டுயிருந்தார்.

அது என்னவென்றால், 'உதவி செய்யுங்கள், ஆனால், அவர்களிடம் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளாதீர்கள்' என கூறியிருந்தார்.

சென்னையில் இப்போ ஆபீஸ் போறவங்க நிலைமையை படிக்காதவன் படத்திலேயே பாடிய சிவாஜி..!

ஒரு வாரமாக ஆபீசுக்கு செல்லாத சென்னைவாசிகள், வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் நேற்றுமுதல் அலுவலகம் செல்ல தொடங்கியுள்ளனர்.

மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எப்போது மழை பெய்யும், எப்போது ஏரிகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் ரோட்டில் சுனாமி போல பாய்ந்தோடி வரும் என்பதெல்லாம் தெரியாமல், உயிரை கையில் பிடித்தபடி வாகனங்களில் பணிகளை கவனிக்க பறந்துகொண்டுள்ளனர் சென்னைட்டிஸ்.

இந்த ரணகளத்துக்கு நடுவேயும், அவர்களை கிளுகிளுப்பூட்டும் வகையில், வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ வலம் வருகிறது.

இன்னிக்கு சென்னையில், ஆபீஸ் போற எல்லோருக்கும் என்று ஒரு குரல் ஒலிக்கிறது, அதைத் தொடர்ந்து, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி ஒன்று ஒலிக்கிறது.

ஒரு கூட்டு கிளியாக... என தொடங்கும், அந்த பாடலின் நடுவில் வரும் வரி இதுதான், "செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம், உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம். நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடைபோடுங்கள், ஞானம் பெறலாம்".

கவிஞர் வைரமுத்து எழுதிய இப்பாடலை, சிவாஜி கணேசன் கதாப்பாத்திரம் பாடுவது போல காட்சியமைப்பு இருக்கும். இந்த பாடலை வாட்ஸ்சப்பில் கேட்டதும், தங்கள் நிலைமையை அப்போதே சிவாஜி கணேசன் பாடிவிட்டாரே என்று நினைத்து, துன்பத்திற்கு நடுவேயும், விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

தனுஷ் இப்போ ஷங்கர் ரஹ்மான் மாதிரி?

இசையமைக்கப் போறாரா? அல்லது படம் இயக்கப் போறாரா? உங்க யூகம் சரியா இருக்க வாய்ப்பேயில்ல. அதனால் நாமே புதிரை விடுவிக்க வேண்டியதுதான். யெஸ்… நம்ம தனுஷ் புதுசா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை பணம் வச்சிருக்கிற எல்லாரும் வாங்கிட முடியாது என்று மூணு வேளையும் பணத்தையே கரைச்சுக் குடிக்கிற கூட்டம் ஒன்று பீதி கிளப்பி வருகிறது. அது பொய்யா? நிஜமா? யாராவது விளக்குங்களேன் பாஸ்…

இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சினிமாக்காரர்களில் முதலில் வாங்கியவர் ஷங்கர்தான். அதற்கப்புறம் ரஹ்மான். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் சுமார் மூன்று கார்களை வைத்திருக்கிறார்கள். (ஆளுக்கொன்று?) விஜய்யும் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கி வீட்டிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். அதை வெளியே எடுப்பதில்லை. ஆனால் தினந்தோறும் அதை கழுவி குளிப்பாட்டி டவல் போட்டு துடைத்து அதே ஷெட்டில் வைத்து அழகு பார்ப்பது அவரது பிரியங்களில் ஒன்றாக இருக்கிறது.

தனுஷின் அந்தஸ்து இவர்களைப் போல வளர்ந்ததில் எல்லாருக்கும் மகிழ்ச்சி. அப்படியே ஒரு தகவல். காரின் விலை 2 கோடியே 48 லட்சமாம். அதை இந்தியாவுக்கு கொண்டுவர கூடுதலாக 2 கோடி செலவு செய்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, சென்னை வெள்ளத்திற்காக கை கொடுத்திருக்கும் ஆந்திரா ஹீரோக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார் தனுஷ். அண்ணே… ஐஞ்சோட நிறுத்திட்டீங்க. இருந்தாலும் நன்றி.

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

இதுவரை முட்டை பொரியலில் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் சேர்த்து தான் பொரியல் செய்திருப்பீர்கள். ஆனால் அதோடு ஏதேனும் காய்கறிகளை சேர்த்து பொரியல் செய்ததுண்டா? ஆம், முட்டை பொரியலில் பீர்க்கங்காயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த பீர்க்கங்காய் முட்டை பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பீர்க்கங்காய் - 1 (தோலுரித்து நறுக்கியது)
முட்டை - 4
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கையளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளைத் தூவி, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, மூடி வைத்து 8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் ரெடி!!!

எஸ்.ஜானகியை கண்ணீர் விட வைத்த இளையராஜா - விசாரனை..?

இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. பூஜையன்றே பாடல் பதிவு.

பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது. இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல. ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது. பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில். பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது. "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது.

எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது! ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார். இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த 'ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம். ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது.

ஜானகி வந்தார். 'மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.

இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், 'கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று கேட்டேன். அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

அடுத்த டேக். மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

"பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார். "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

பொதுவாக 'டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் 'வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் 'வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டியூனும் வார்த்தையும் கலந்து 'பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.'' ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் 'அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது 'பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது. கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான 'சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது. அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் 'பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது. கமல் 'பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை 'பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார். யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை 'தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார். அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

"ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''
- என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம். மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார். இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங். ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு. "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் 'ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது! இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன்னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். 'டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன். அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந்தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.