Sunday, December 27, 2015

நிதியமைச்சர் விமர்சித்த போது கமல் ஹாஸனுக்கு நடிகர் சங்கம் ஏன் ஆதரவு தரவில்லை? - ராதிகா

நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தபோது ஏன் கமல் ஹாஸனை நடிகர் சங்கம் ஆதரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ராதிகா.

பீப் பாடல் தொடர்பாக நடிகை ராதிகா சில ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்புவுக்காக விமான நிலையங்களில் கண்காணிப்பா? நாட்டில் பற்றி எரியும் பல விஷயங்கள் உள்ளன. இதுதான் முக்கியமா?

கற்பழித்தவர் சுதந்தரமாக வெளியே உள்ளார். ஏன் இந்தப் பிரச்னை பெரிதாக்கப்படுகிறது? அல்லது கவனத்தைத் திசைதிருப்பவா?

நடிகர் சங்கம் ஒரு முடிவெடுங்கள். பாத்ரூமில் பாடுபவர்கள், செல்ஃபி எடுப்பவர்கள் என உங்களில் யாருக்கு வேண்டுமானால் இது நடக்கலாம்.

நடிகர் கமல்ஹாசனை நிதி அமைச்சர் (எஃப்.எம்.) விமரிசித்தபோது ஏன் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை? என்று அவர் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment