Sunday, December 27, 2015

ஷாருக்கானுக்கு நேர்ந்த சோகம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வருகிறது என்றாலே பல படங்கள் வட இந்தியாவில் பின் வாங்கும்.

இந்நிலையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் தில்வாலே படம் திரைக்கு வர, மிகவும் துணிச்சலாக வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் நடித்த பஜிரோ மஸ்தாணி படமும் திரைக்கு வந்தது.

ஷாருக்கானுடன் போட்டிப்போட முடியுமா என்று எல்லோரும் கேட்ட நிலையில் வெளியான 8 நாட்களில் தில்வாலே ரூ 111 கோடி வசூல் செய்ய பஜிரோ மஸ்தானி ரூ 98 கோடி வசூல் செய்து அதிர வைத்தது.

மேலும், இன்னும் சில தினங்களில் தில்வாலே வசூலையே இப்படம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இவை இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுமட்டுமின்றி நல்ல கதை தான் வெற்றி பெறும் நாயகர்கள் பலம் ஒரு போதும் வெற்றியை கொடுக்காது என்று பஜிரோ மஸ்தானி நிரூபித்துள்ளது.

0 comments:

Post a Comment