Thursday, December 3, 2015

அவசர காலத்தில் மின்சாரமின்றி போனினை சார்ஜ் செய்வது எப்படி.??

ஊர் முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் அனேக இடங்களில் பாதுகாப்பு நலன் கருதி மின்சாரம் துன்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் மின்சாரம் இன்றி தகவல் தொடர்பு முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதால் இந்த தொகுப்பு பகிரப்படுகின்றது.

கரண்ட் இல்லாமல் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்யாமல் இருப்போர், வீட்டில் இருக்கும் சிறிய 9 வோல்ட் பேட்டரி, நாணயம், கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் பயன்படுத்தி நிமிடங்களில் சார்ஜரை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் டேட்டா கேபிள் அல்லது கார் சார்ஜரை மொபைல் போனுடன் இமைத்து, பின் 9 வோல்ட் பேட்டரியின் + டர்மினலில் நாணயத்தை அழுத்தி பிடித்து கார் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் வயர்களை அந்த நாணயத்தில் வைத்தால் மொபைலில் சார்ஜ் ஏறும். தொடர்ந்து 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவாவது உதவும்.

0 comments:

Post a Comment