Thursday, December 3, 2015

மழை எதிரொலி: திரைப்படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த மழையால் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், வரும் 4ம் தேதி வெளியாக இருந்த ‘ஈட்டி’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு இப்படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment