Thursday, December 3, 2015

உப்பு நிறைந்த உணவுகள் எப்படி உங்கள் குழந்தையைப் பாதிக்கிறது என்று தெரியுமா?

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் அதிக அளவில் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தைப் பருவத்திலேயே சோடியம் உடலில் அதிகமாகிறது என்று பொருள். இது மிகவும் ஆபத்தான மற்றும் கவலை தரக்கூடிய விஷயம். ஏனென்றால் உப்பினால் உடல் நலனுக்கு விளையும் கேடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் உப்புச் சுவைக்கு ஈர்க்கப்பட்டு அதற்கு வாடிக்கையை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.

நல்ல பழக்கங்களோ அல்லது தீய பழக்கங்களோ சிறுவயதில் இருந்து தான் தொடங்குகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதனை நாம் குழந்தைப் பருவத்தில் செய்யத் தவறினால் பிற்காலத்தில் வருந்த நேரிடும்.

0 comments:

Post a Comment