
இந்த நிலையில்தான் இயக்குனர் சீனுராமசாமி தனது முகப்புத்தகத்தில் சௌந்தர்ராஜா பற்றி நாலே நாலு வரி எழுதியிருக்கிறார். வேறு பல ஜன்னல்களை திறந்துவிடுகிற அளவுக்கு படு ஸ்டிராங்காக இருக்கிறது அந்த நாலு வரி.
“கதாநாயகனாக ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், உங்கள் படத்தில் நடித்தே தீருவேன். ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை என்று அடம் பிடித்து இதயத்தில் இடம் பிடித்த தம்பி நடிகர் சௌந்தரராஜா. ஒளிமயமான எதிர்காலம் இவனுக்கு உண்டு என்கிறது தர்மதுரையில் இவனை இயக்கிய பிறகு என் கணிப்பு! ” இதுதான் சீனுராமசாமியின் அந்த பதிவு.
விஜய்சேதுபதியும் இவரும் ஒரு காலத்தில் அறைத்தோழர்களாம். தனது நண்பன் வளர்ந்து உயர்ந்து நிற்கிற படத்தில் எவ்வித ஈகோவுக்கும் இடமில்லாமல் முகம் காட்ட ஆசைப்பட்ட இன்னொரு நண்பனை வாழ்த்துவதில் வஞ்சகம் எதற்கு? அள்ளுங்க அள்ளுங்க…!
0 comments:
Post a Comment