Friday, December 25, 2015

விரைவில் திரையில் நடிக்கவரும் டைரக்டர் ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயமாக இருக்கும் பாரதிராஜா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தவர். ஆனால், பதினாறு வயதினிலே படத்தை இயக்கி அந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக முன்னணி இயக்குனராகி விட்டார். ஆனபோதும், அவருக்குள் இருந்த நடிப்பு ஆர்வம் காரணமாக கல்லுக்குள் ஈரம், ரெட்டைச்சுழி, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான். அதனால் சில படங்களை இயக்கியதும் நியூ, அன்பே ஆரூயிரே படங்களில் இருந்து நடிகரானார்.

இவர்கள் வரிசையில்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர். ஆனால் அவரது நடிப்பு கனவு நனவாகவில்லை. மாறாக, மிகப்பெரிய இயக்குனராகி விட்டார். ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் தமிழில் பிரமாண்டமான படங்களை இயக்கி வருகிறார். அதோடு தனது படங்களில் ஏதேனும் கேரக்டர்களில் அவர் முகம் காட்டுவதுமில்லை. டைரக்சனில் மட்டுமே அவரது கவனம் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது.

ஆனபோதும், அவருக்குள்ளும் ஒரு நடிகன் இருப்பதால், சரியான நேரம் வரும்போது அவரும் நடிப்பார் என்கிறார்கள். அதுபற்றி தனது உதவியாளர்களிடம் சொல்லும்போது, இப்போதைக்கு நடிக்கிற ஆசையில்லை. ஆனபோதும், அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது எதுவும் நடக்கலாம். அப்போது எனக்குள் இருக்கிற நடிகன் வெளியில் வரலாம் என்று புதிர் போடுகிறாராம் ஷங்கர்.

0 comments:

Post a Comment