Saturday, December 26, 2015

'2.0' அப்டேட்ஸ்: சென்னையில் களமிறங்கிய ரோபோக்கள்

 '2.0' படத்துக்காக வெளிநாட்டில் இருந்து ரோபோக்கள் களமிறங்கியுள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து ரோபோக்கள் வந்துள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1-ம் தேதி வரை நடத்த ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரோபோக்கள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட இருக்கிறார்.

'கபாலி' படப்பிடிப்பு முடிந்து ரஜினி திரும்பியவுடன், அக்‌ஷய்குமார் - ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் என படப்பிடிப்பு தொடர இருக்கிறது.

இப்படத்தை 2017 ஆண்டு வெளியாகும் என்றும், படத்தின் பணிகள் முடிவு பெறுவதைப் பொறுத்து படத்தை வெளியீட்டை அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

0 comments:

Post a Comment