Thursday, December 24, 2015

பீப் பாடல் விவகாரம், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் - சிம்பு தாயார் கண்ணீர் பேட்டி

பீப் பாடல் பிரச்சனை தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் சேனலுக்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

சிம்பு தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி பேசுவது தவறு. ஒருவர் அவரை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறார், சிம்பு சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது.

எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம். தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment