Sunday, December 20, 2015

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி!

பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ?

கடந்த  30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன்.  அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, என் உருவபொம்மையை எரிக்கிறீர்கள். அப்படி என்ன தப்பு பண்ணிவிட்டேன். கற்பழிப்பு வழக்கில் கைதாகிறவர்கள் சுலபமாக வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனா இவ்வளவு வருசம் தமிழ் சினிமாவிற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உழைச்சிருக்கேன். யரோ சொல்லுறாங்கனு பாட்டைக் கூட கேட்காம, என்ன சொல்லிருக்கேன்னு கூட கேட்காம எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் யாருமே எனக்கு ஆதரவாக பேசவில்லை. என கூட இருந்தவங்க ஒதுங்கிட்டாங்க. ஆனால் இன்றும் சொல்கிறேன், தமிழ் மக்கள் என்றுமே என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சிம்பு என்கிற தனி மனிதனை டார்கெட் பண்ணி என்ன இழிவு படுத்திருக்காங்க, நான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் பண்ற பாட்டுக்கு கேள்வி கேட்டிங்கனா நியாயம்.

நான் ரிலீஸே பண்ணாத பாட்டுக்கு என்னை ஏன் கஷ்டப்படுத்துறீங்க. என்னை இழிவு படுத்தி, காயப்படுத்திட்டாங்க. இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகும் ஒரு சிம்புவா உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் என்றால் தமிழ் மக்களிடம் எனக்கு இருக்குற ஆதரவுதான் காரணம் '' என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment