Sunday, December 20, 2015

பெண்களிடம் மன்னிப்பு கேட்டு டி.ராஜேந்தர் உருக்கமான பேட்டி!

கூடா நட்பிருந்தால் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கவேண்டிவரும் என்று பீப் பாடல் பற்றியான பிரச்னைக்கு டி.ராஜேந்தர் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்லமுடியவில்லை. இதை சதி என்று சொல்லவா இல்லை விதி என்று சொல்லவா? கூடா நட்பு இருந்துவிட்டாலே வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகள் நிச்சயம் வரும்.

என்ன வாழ வைத்த தமிழ் மொழி இது. சினிமாவில் கூட எந்த கதாநாயகியையும் தொட்டு நடிக்காத கதாநாயகனாக இத்தனை வருடம் வாழ்ந்திருக்கிறேன். எந்த விதமான கிசுகிசுகளுக்கும், முறைப்படி வாழக்கூடியவன். ஒரு தலை ராகத்தில் தொடங்கி இன்று வரையிலும் பெண்களுக்காவே படம் எடுத்தவன்.

தாய்மார்களின் ஆதரவுடன் வளர்ந்தவன் சிம்பு. சிம்புவுக்கு எந்த பெண்களையும் வேண்டுமென்று புண்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கிடையாது” என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment