Thursday, December 24, 2015

வள்ளலார் அருளிய காயகல்பம் உங்களுக்காக..!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்

2. சிவக்குமார் - ஓவியர்

3. விஜயகாந்த் - அரிசிக் கடை

4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை

5. ரகுவரன் - உணவு விடுதி

6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்

7. விசு - டி .வி.எஸ். ஊழியர்

8. மோகன் - வங்கி ஊழியர்

9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்

13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர

முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்!! சிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல்! அதுவும்

தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல் பற்றி ஒரு கருத்தை தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சற்றேறக்குறைய சிம்புவுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

‘யூ டூ ப்ரூட்டஸ் பதிவு ‘இது:

ஆம் சாட்சாத் பீப் பாடல் விவகாரம் தான். இதன் வெறும் ஒரு சினிமா பாடல் விவகாரம் என்பதை தாண்டி நமது சமூக விழுமியங்களின் மீதான கண்ணோட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முதல் மாற்றமோ என்று ஒரு சின்ன நப்பாசை எட்டி பார்ப்பதை தடுக்க முடியவில்லை. ஏன் இதற்கு முன் எழுதாததா? காட்டாததா? என்று வீம்பு கேள்விகளை நாம் நிராகரித்து விட முடியாது. கிழ நரை எய்திய ரிக்‌ஷாக்கார ஹீரோ பதினாறைக் கூட தாண்டியிருக்காத பெண் குழந்தையை (இந்தியாவின் தற்போதைய வயது வரம்பை எடுத்து கொள்கிறேன்) மடியில் அமர்த்தி தொடையை தடவிய ஒருவகை fetish கலா ஸ்ருஷ்டியை பார்த்து புரியாமல் கைத்தட்டியவர்கள்,

கோவில் திருவிழாவில் ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒரு/பல பெண்களின் அரை நிர்வாணத்தை ஆர்பரித்து (அட,வீட்டு பெண்களுக்கும்,பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாமல் தான்) பார்த்தவர்கள், இன்றளவும் கூட டவுன் பஸ்ஸில் ஏறினால் சத்தமாய் ஒலிக்க விடும் காது கூசும் சினிமா பாடல்களை கள்ள மவுனத்துடன் பயணத்தை கடப்பவர்கள்,

நம் வீட்டு குழந்தைகள் , ‘மன்மத ராசா என்ன கணக்கு பன்னேன் டா’ என்று பாடிய போது , என்னமா உச்சஸ்தாயில பாடுறாப்பா என்று வாரியணைத்து கொண்டவர்கள் , ‘அடிடா அவள, ஒத டா அவள’ சுத்துது ‘சுத்துது தலையும் சுத்துது குப்புனு அடிச்ச பீர் ல’ என்று அலறும் பாடல் நம் வீட்டு இளசுகளின் ரிங்டோன் ஆனபோது பொறுத்தவர்கள் , இவ்வளவு ஏன்? தொப்புளில் பம்பரம் விட்ட போதும், பெண்ணின் பின்புறத்தில் ரப்பர் பந்தை அடித்த போதும்,வயசு பெண்ணை தண்ணீர் தொட்டியில் முக்கி அங்கங்களை தெரிய விட்டு ‘மறைச்சாலும் தெரியாதா இளமாங்காய் முன்னே’ என்று பாட்டு பாடி ஹீரோயிஸத்தை காட்டிய போதும் சகிப்பு தன்மையை காத்தவர்கள் நாம்.

அறுபதுகளின் மாஸ் திரைப்படங்கள் தொடங்கி இன்று வரை நாம் குழந்தையின் இருப்பு பற்றி சலனமும் இன்றி தலையில் இரசித்த விஷயங்கள் தான் இவை. இன்று ஏனோ உங்கள் கண்களை உறுத்துகிறது. அல்லது உங்கள் கண்களை உறுத்த இத்தனை காலம் ஆகி இருக்கிறது என்றும் கூறலாம். வீடு முற்றுகை, கைது என்று இந்த அதிதீவிர எதிர்வினையை பார்க்கும் போது உங்கள் சமூக பொறுப்புணர்வை எல்லாம் காட்டும் ஒரே வடிகாலாக இதை பிரயோகித்து விட்டு ஓய்ந்து விடுவீரோ என்ற அச்சம் தான் எழுகிறது.

இது சினிமா என்பது சூப்பர் மார்கெட் போல ஆகிவிட்ட காலம். உங்களுக்கு தேவையானதை எடுத்து கொண்டு உங்களுக்கு ஆகாதவை (பெரும்பாலும்)என்று நினைப்பதை புறக்கணிக்கலாமே ஒழிய உற்பத்தியாளரை தாக்குவது வேண்டாத வேலை. யார் எந்த பொருளை நுகரலாம் என்பதை விட எந்த வயதினரை இது போன்ற நுகர் எல்லைக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் கட்டுபாடுகள் இறுக்கமாகும் போது இது போன்ற சீரழிவு அபத்தங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது. நான் சினிமாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை . நான் சொல்ல வருவதெல்லாம் சினிமா எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. உங்கள் உணர்திறன் இந்த பாடலில் தூண்டபட்டு இருக்கிறது. அவ்வளவே!

கெட்டது செய்தால் சாமி கிராஃபிக்சில் வந்து சாமியாடிய படியே கண்ணை குத்தி கொல்லும் திரைப்படங்களை பார்த்து எப்படி யாரும் திருந்தி விடவில்லையோ அதேபோல் இந்த பாடலால் ஒரு சமூகம் வீழ்ந்திடாது. வீழ்ச்சியின் நிஜமான வேர் ‘ பாட்டில்’ அல்ல “பாட்டிலில்” உள்ளது என்றே நினைக்கிறேன். என் வீட்டு குழந்தையின் விழுமியம் ,கபடமின்மை பாதிக்கிறது என்று முழங்கும் திடீர் சீர்திருத்தவாதிகளே, தயவு செய்து அப்படியே உங்கள் எதிர்ப்பை ,கதாநாயகன் எதிரிகளை ஓட ஓட வெட்டி, சுட்டு , ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சத்தமாக பேசி, அடித்தே கொன்று பழிவாங்கும் இரத்தம் தெறிக்கும் திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரிடமும் காட்டுங்கள். அடுத்த தலைமுறை உங்களுக்கு கடன்பட்டதாய் இருக்கட்டும்!!

நான் முன்பு குறிப்பிட்டது போல சினிமா என்பது ஒரு பல்பொருள் அங்காடி. அதில் சாக்லெட் பாக்கெட்டுகளும் கிடைக்கும் , காண்டம் பாக்கெட்டுகளும் கிடைக்கும் . உங்கள் குழந்தைகள் கையில் எடுப்பது என்ன என்பதை கண்காணிக்கும் கடமை உங்களுக்கு உண்டு!!

நன்றி – சரண்யா சுந்தர்ராஜ் முகப்புத்தகத்திலிருந்து…

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான்.

அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல...

அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன?
வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்...

ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது. இதன் விளைவாக விருந்திற்காகச் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அப்படியே தேங்கிவிட்டன.டாலிமேடிசன் மேற்பார்வையாயினும், விருந்துக்கான சமையற் பொறுப்பில் பணியாற்றியவர் ஸெட்டீ ஜான்ஸன் எனும் நீக்ரோ பெண்.

தேங்கிவிட்ட உணவுப் பொருட்கள் வீணாகிவிடக்கூடாது என்று ஏங்கிவிட்ட ஸெட்டீ ஜான்ஸன், தயாரிக்கப்பட்டடிருந்த தின்பண்டங்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக ஒரு ஐஸ்பெட்டியில் வைத்த மூடிவிட்டாள்.
அந்தப் பண்டம் நன்றாக மென்மையாகச் சலிக்கப்பட்ட மாவும் இனிப்பும் கலந்து, வர்ணமும் சுவைப் பொருட்களுமாகப் பிசைந்து தயாரிக்கப்பட்ட மிருதுவான கட்டிப் பொருள்.

ஒரு சில நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகையில் விருந்து நடைபெற ஏற்பாடாயிற்று.

விருந்து துவங்கும்போதுதான் சமையலறைப் பணிப்பெண் ஜான்ஸனுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட தின்பண்டங்கள் நினைவுக்கு வந்தது. வெளியே எடுத்துப் பார்த்தால் அது பனிக்கட்டிபோல் நன்றாக இறுகி விட்டிருந்தது. அவற்றை விருந்தினர்க்குப் பரிமாறத் தயங்கினாள். ஆயினும் அதன் சுவை நன்றாக இருக்கவே எடுத்து வழங்கி விட்டாள். விருந்துக்கு வந்தோர் அந்தப் பண்டத்தைப் பார்த்துத் தயங்கினார். ஒருவர் மட்டும் அதை வாயில் வைத்தவுடன் குளிர் தாங்காமல் கத்திவிட்டார். “விஷம் விஷம்’ என்று அலறினார்.

கூட்டத்தில் குழப்பம் உண்டாகிவிட்டது. யாரும் எந்தப் பொருளையும் உட்கொள்ளவில்லை. பணிப்பெண் ஸெட்டீயைச் சிறையிலிட்டனர். ஜனாதிபதியின் மனைவிக்கு அதிர்ச்சி. உணவுப் பொருளில் விஷம் கலந்திருக்காது என்பதில் உறுதியாக இருந்த அவர், அதில் துளியூண்டு மட்டும் எடுத்துத் தின்று பார்த்தார். இதற்குள் பனிக்கட்டிபோல் இறுகியிருந்த அந்தத் தித்திப்பான சுவைமிக்க மாவுப் பொருள் சற்று குழைவாக ஆகி, வாயில் வைக்கின்ற அளவுக்குக் குளிர்விட்டுப் போயிருந்தது.

“அட என்ன சுவை!’ என்று மகிழ்ந்து போனார். உடனே, தன் பணிப்பெண்ணைச் சிறையிலிருந்து விடுவித்தார். இதுவரை எவரும் தின்று சுவைத்திராததால் அந்த விருந்தினர்கள் பயந்து போயிருந்திருக்கின்றனர்.அதன் பின் ஓராண்டிற்குள் வேகமாகவே ஐஸ்கிரீம் உலகப்புகழ் பெற்றிவிட்டது.அத்தியாவசியப்பொருளாகக் கோடைகாலம் மட்டுமல்ல; குளிர்காலத்திற்கும் எந்த விருந்திலும் தவிர்க்க முடியாதப் பண்டமாகிவிட்டது.