Sunday, December 6, 2015

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த வார இறுதியில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:



நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப்
புதினா - 1/2 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

சிக்கன் - 1/2 கிலோ
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா பொடிக்கு...

சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.



சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,  அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

சுந்தர் சி.யின் அருணாச்சலம் மலரும் நினைவுகள்

 யுடிவி தனஞ்செயன் நடத்திவரும் பாஃப்டா கல்லூரியில் உரையாற்ற சுந்தர் சி. வந்திருந்தார்.

நான் ஒரு மினிமம் கியாரண்டி இயக்குனர், அப்படி இருக்கவே ப்ரியப்படுகிறேன் என்று சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலம் முதல் சொல்லி வருகிறவர். அபூர்வமாக சொன்னதை இன்றுவரை நிலைநாட்டியும் வந்திருக்கிறார்.

நகைச்சுவை படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள சிறந்த குருகுலம், சுந்தர் சி. காமெடிக் காட்சிகளை அவர் எப்படி உருவாக்குகிறார் என்பதை கவனித்தாலே ஒருவர் சிறந்த நகைச்சுவை படத்தை எடுத்துவிட முடியும்.

சுந்தர் சி.யின் படங்கள் பார்வைக்கு எளிதாக தெரியும். ஆனால், அதனை அவர் சாத்தியப்படுத்த எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். முக்கியமாக ரஜினியை வைத்து அருணாச்சலம் படத்தை எடுத்த அனுபவம்.


முப்பது வயதுக்குள் அருணாச்சலம் படத்தை ரஜினியை வைத்து எடுத்தார் சுந்தர் சி. எப்படி இதனை அவரால் சாதிக்க முடிந்தது? சுந்தர் சி.யின் மறக்க முடியாத அந்த மலரும் நினைவு சினிமாவில் சாதிக்க விரும்பும் அனைவருக்கும் பாடமாக இருக்கும்.

பஞ்சு அருணாச்சலம் ஒருமுறை சுந்தர் சி.யிடம் ஏதோ பேச்சுவாக்கில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஒத்த கருத்து உள்ளவர்களிடம் மட்டுமே ரஜினி பணிபுரிவார். மற்றவர்களை அவர் தவிர்த்துவிடுவார் என்றிருக்கிறார். பேச்சுவாக்கில் கடந்து போகும் ஒரு விஷயம்தான் அது. ஆனால், சுந்தர் சி. அதனை மறக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து ரஜினியிடமிருந்து சுந்தர் சி.க்கு அழைப்பு வருகிறது. போகிறார். ஒரு கதை இருக்கு கேட்கிறீர்களா என்று, கோவிலில் மணியடிப்பவன் ஒருவனின் கதையை ரஜினி கூறுகிறார். கதை சரியில்லை என்று சுந்தர் சி.க்கு தெரிகிறது.

கதையை சொல்லி முடித்த பிறகு, கதை எப்படி என கேட்கிறார் ரஜினி..

 பஞ்சு அருணாச்சலம் சொன்னதை மட்டும் சுந்தர் சி. மறந்திருந்தால், சுமாரான கதை என்று சொல்லியிருப்பார்.

ரஜினியும். எஸ்.. எஸ்... என்று சொல்லி அனுப்பியிருப்பார். ஆனால், என்றோ பஞ்சு அருணாச்சலம் சொன்னது அவரது மனதில் இருந்தது. அவர் அந்த சுமார் கதையையும், சூப்பர் நல்லாயிருக்கு என்றார். ரஜினிக்கு மகிழ்ச்சி.

அந்தக் கதையைத்தான் பிறகு கதைவிவாதத்தில் மாற்றி அருணாச்சலமாக்கியிருக்கிறார்கள். ஆக, எதையும், எடுத்த உடனேயே மறுக்கக் கூடாது என்பது சுந்தர் சி. அன்று கற்றுக் கொண்ட பாடம்.

அதேபோல், கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் லாஜிக் பார்க்க தேவையில்லை என்பதையும் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக மாணவர்களிடம் சுந்தர் சி. கூறினார்.

கதைப்படி ரஜினி பணத்தை செலவு செய்வதற்காக நட்சத்திர ஹோட்டலின் பிரமாண்ட சூட்டில் அறை எடுத்திருக்கிறார். நாளொன்றுக்கு பல லட்சங்கள் வாடகை உள்ள சூட் அது.

முப்பது நாள்கள் முடியும்போது ரஜினியிடமுள்ள காசு காலியாகிவிடும். அப்போது, ஹோட்டல் மேனேஜர் வந்து ரஜினியை தட்டி எழுப்பி, முப்பது நாள் முடிந்தது என அனுப்பி வைப்பதாக காட்சி. அதாவது, முப்பது தினங்கள் ஆடம்பரமாக இருந்த ரஜினி, ஒன்றும் இல்லாதவராக ஹோட்டலில் இருந்து இறக்கிவிடப்படுகிறார் என்பதுதான் காட்சியின் மையம்.

முப்பது நாள்கள், பல லட்ச ரூபாய் செலவளித்து ஹோட்டலில் தங்கியிருக்கும் ஒருவரை, தூங்கிக் கொண்டிருக்கும் போது, அதுவும் ஹோட்டல் மேனேஜரே வந்து தட்டி எழுப்பி அனுப்ப மாட்டார்கள் என்று சுந்தர் சி. கூறியிருக்கிறார்.

ஆனால், ரஜினி அதனை மறுத்துள்ளார். தட்டி எழுப்பி அனுப்புவது போலவே எடுங்கள். யாராவது படத்தைப் பார்த்து, இது சரியில்லை, லாஜிக் இடிக்கிறது என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள், மாற்றிவிடலாம் என்றிருக்கிறார். அரைகுறை மனதுடன் ரஜினி சொன்னது போல் எடுத்தார் சுந்தர் சி.

இன்றைய தேதிவரை குறிப்பிட்ட அந்தக் காட்சியை யாரும் குறை சொல்லவில்லை. கதையோட்டத்தை பாதிக்கும் என்றால் சில நேரம் லாஜிக் பார்க்கத் தேவையில்லை என்பதை ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்றார்.

திரைப்படத்தில், திரைப்படங்களைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவைப்படுகிறது என்பதை அழகாக எடுத்துரைத்தார் சுந்தர் சி.

வெள்ளை விஷம் – சர்க்கரை ( சீனி ) !! வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம் !!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.