
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகில் பாடுவதை எப்போது நிறுத்துவேன் என்பது குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒரு பாடலுக்கு நியாயமாக இல்லாத போது நானாகவே பாடுவதை நிறுத்திக் கொள்வேன் என அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்போதும் ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேலாக பாடிக் கொண்டிருக்கிறேன் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார். 80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பலருக்கு எஸ்பிபி பாடிய பாடல்களை இன்றும் இசை ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எஸ்பிபி பாடிய பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும் என்பதே உண்மை.
0 comments:
Post a Comment