Tuesday, December 22, 2015

ரஜினிகாந்தை நான் இயக்கினால்- ராஜமௌலியின் அதிரடி பதில்

தென்னிந்தியத் திரையுலகில் ஷங்கர், மற்றும் ராஜமௌலி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்றவர்கள்.

ஷங்கர் ரஜினிகாந்தை வைத்து ஏற்கெனவே சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கி விட்டார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது.

ஆனால் இயக்குனர் ராஜமௌலி இன்னும் ரஜினிகாந்தை இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினார் என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு

அவர் அளித்த பதில் “அவருக்கு நான் என்ன கதாபாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி பத்து நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது.

அந்த அளவிற்கு ரசிகர்களோட ஆரவாரம்தான் அதிகமா இருக்கும்” என்று பதிலளித்துள்ளார். அப்படி ஒரு ஆர்பாட்டமான படத்தைத்தான் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமௌலியின் பாகுபலி 2 க்குப் பிறகு ரஜினியுடன் ராஜமெளலி இணைவார என்று பார்ப்போம்.

0 comments:

Post a Comment