

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னை மக்களின் சோகத்தை தொலைக்காட்சி வாயிலாகவும் பத்திரிகைகளின் மூலமாகவும் அறிந்த அக்ஷ்ய் குமார், தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாய் செலுத்த விரும்பி பிரபல இந்திப்பட இயக்குனர் பிரியதர்ஷனை தொடர்பு கொள்ள அவரது வழிகாட்டுதலின் படி நடிகை சுஹாசினி வழியாக ஜெயேந்திராவிடம், (விளம்பர பட இயக்குனர் மற்றும் பூமிகா அறக்கட்டளை தலைவர்) வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்கு வந்து சேர்ந்த தொகையிலேயே மிகப்பெரிய தொகை இதுதான் என்பதை எண்ணி பெருமைப்படுவதா? இதற்கப்புறமும் சும்மாயிருக்கும் ‘சூழ்நிலை நழுவி’ ஹீரோக்களை நினைத்து வெட்கப்படுவதா?
0 comments:
Post a Comment