Saturday, December 19, 2015

பீப் பாடல் விஷயத்தில் நடிகர் சங்க தலைவரை வம்புக்கு இழுத்த சரத்குமார்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று, நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சரத்குமார் தன் அரசியல் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பீப் பாடல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, ‘பெண்களை பற்றி தவறாக யார் பாடினாலும் கண்டிக்கத்தக்கது தான்.

மேலும், சிம்பு இதை நீதிமன்றம் வாயிலாக சந்திப்பதாக கூறிவிட்டார். ஆனால், நான் நடிகர் சங்க தலைவராக இருந்த போது சின்ன பிரச்சனைக்கு கூட சரத்குமார் என்ன செய்கின்றார் என கேட்டார்கள், தற்போதைய நடிகர் சங்க தலைவர் என்ன செய்கின்றார், அவரிடம் நீங்கள் கேட்டீர்களா?’ என்று பேசினார்.

0 comments:

Post a Comment