பாலா இயக்கத்தில் எம். சசிகுமார் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ள படம் - தாரை தப்பட்டை. வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. இது இளையராஜாவுக்கு 1000 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் மிகப்பெரிய விழா நடத்தி அந்த விழாவிலேயே தாரை தப்பட்டை படத்தின் பாடல்களையும் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார் பாலா. அந்த விழாவை ஒளிபரப்பும் உரிமை சில கோடிகளுக்கு தனியார் சேனலுக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இளையராஜாவுக்கு நடைபெற இருந்த அந்த பாராட்டு விழாவை கேன்சல் செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்தநிலையில் இளையராஜாவுக்கு இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் மக்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்று சிலர் இயக்குநர் பாலாவிடம் சுட்டிக்காட்டியதாகவும், அதன் காரணமாக இளையராஜா பாராட்டுவிழாவை பாலா ரத்து செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு தரப்பினரோ வேறு ஒரு காரணத்தை சொல்கின்றனர். நேற்று ஒரு நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இளையராஜா மீது ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபமும் திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் அவருக்குப் பாராட்டுவிழா நடத்தினால் தாரை தப்பட்டை படத்தை ஊடகங்கள் கிழித்துவிடும் என்ற பயம் காரணமாகவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டாராம் பாலா.
இந்நிலையில், இளையராஜாவுக்கு நடைபெற இருந்த அந்த பாராட்டு விழாவை கேன்சல் செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்தநிலையில் இளையராஜாவுக்கு இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் மக்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்று சிலர் இயக்குநர் பாலாவிடம் சுட்டிக்காட்டியதாகவும், அதன் காரணமாக இளையராஜா பாராட்டுவிழாவை பாலா ரத்து செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு தரப்பினரோ வேறு ஒரு காரணத்தை சொல்கின்றனர். நேற்று ஒரு நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இளையராஜா மீது ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபமும் திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் அவருக்குப் பாராட்டுவிழா நடத்தினால் தாரை தப்பட்டை படத்தை ஊடகங்கள் கிழித்துவிடும் என்ற பயம் காரணமாகவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டாராம் பாலா.
0 comments:
Post a Comment