Friday, December 18, 2015

இதை தான் 20 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்- பீப் சாங் குறித்து தாமரை

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் சமீபத்தில் பீப் சாங் குறித்து தன் முகநூலில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் இவர் ‘கடந்த 4 நாட்களாக பலரும் என்னிடம் பீப் சாங் கேட்டீர்களா என்று கேட்டனர். நானும் ஒரு வழியாக கேட்டேன்.

இத்தனை வருடங்களால எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருந்தனர். அவர்களை பார்த்து எத்தனை பேர் பாடல் எழுத வேண்டும் என்று ஓடி வந்தார்கள்.

இதற்கு முன்பு இதுப்போன்ற பாடல்களை தொடர்ந்து கைத்தட்டி ரசித்ததால் தான் தற்போது இந்த பாடலில் வந்து நின்றுள்ளது. இதை தான் நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கூறி வருகிறேன்.

மாற்றம் முதலில் நம்மிடையே தேவை, நான் மட்டும் இதை கூறினால் போதாது, அனைவரும் இதை எதிர்த்து போராட வேண்டும்’ என கோபமாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment