Saturday, December 12, 2015

ஷங்கர் இயக்கத்தில் விஜய்-அஜித்?

தமிழ் சினிமாவில் எப்போதும் வட துருவம் தென் துருவம் என்றால் அது விஜய் மற்றும் அஜித் என்று தான் சொல்லணும் அதாவது விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் எப்போதும் இந்த இருவருக்கும் சண்டை இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு மிக பெரிய முயற்சி என்று கூட சொல்லலாம்

சில ஆச்சரியங்கள் எப்போதாவது ஒருமுறை தான் நடக்கும். அதிலும் அந்த அதிசயம் முன்னணி ஹீரோக்கள் பற்றி என்றால் அது இன்னும் விசேஷம்தானே? இந்த தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இதேபோல விஜய்யின் தெறி படமும் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது எவ்வளவு பெரிய சவால். அந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடிக்க தயாராகி வருகிறாராம் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.

எஸ்.ஏ.சியின் உதவியாளராக இருந்தும் ஷங்கருக்கு பல வருடங்களுக்குப் பிறகுதான் விஜய்யை வைத்து நண்பன் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அந்தப்படமும் ஹிட்டானதால் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க நினைத்தவர் கூடவே அஜித்தையும் நடிக்க வைத்தால் என்ன என்று யோசித்து வருகிறாராம்.

இப்போது மருத்துவ ஓய்வில் இருக்கும் அஜித் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அதையடுத்து ஷங்கரின் இயக்கத்தில் அவரும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கலாம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்…

அப்படி ஒரு படம் வந்தால் அதன் கவனிப்பே ரசிகர்கள் மத்தியில் ரொம்பப் ஸ்பெஷலாக இருக்கும் என்பது மட்டும் உண்மை .ஷங்கர் நினைத்தால் மட்டுமே இது நடக்கும் என்பதால், அப்படி ஒரு படம் வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கலாமே?

பல முறை ரஜினி கமலை வைத்து படம் பண்ண பலர் முயற்சித்து அது பலிக்கவில்லை இப்ப சமீபத்தில் கூட ஷங்கர் இந்த முயற்சி செய்து பார்த்து விட்டு விட்டார் . அதற்கு அடுத்து விஜய் அஜித் ஜோடியை நடிக்க வைக்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம் ..

0 comments:

Post a Comment